Search This Blog

Friday, January 14, 2011

கவுண்டமணி VS செந்தில்

நண்பர்களே இது ஒரு ஜாலியான டைம்-பாஸ் பதிவு... கதைக்களம் முழுக்க முழுக்க என் சொந்தக் கற்பனையே...யாரையும் குறிப்பிடுவன அல்ல என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

கண்டிப்பாக இது ஒரு நல்ல டைம்-பாஸ் தான் என்பதற்கு 2 years Warranty..
 
கவுண்டமணி வெளியில் கிளம்பும் நேரம் பார்த்து செந்தில் எதிரே வருகிறார்.


கவுண்டமணி: ஆஹா, சாதரணமா இவனப் பார்த்தாலே ஒன்னும் வெளங்காது. வெள்ளிக்கிழமை அதுவுமா இவனப் பார்த்துட்டோமே..!! என்ன ஆகப் போகுதோ...

செந்தில்: என்னண்ணே எங்கண்ணே கெளம்பிட்டீங்க...

கவுண்டமணி:டேய், உன்னப் பார்த்தாலே ஒன்னும் வெளங்காது. இதுல எங்க போறேன்னு வேற கேட்டுட்டியா, இனிமே போற காரியம் உருப்பட்ட மாதிரி தான்.

செந்தில்: அண்ணே சொல்லுங்கண்ணே...
கவுண்டமணி:ஆஆங்...கம்ப்யூட்டர் கத்துக்க...
செந்தில்: போங்கண்ணே வெளயாடதீங்கண்ணே...
கவுண்டமணி:ஆமா இவரு சுனில் கவாஸ்கரு, இவருகிட்ட நாங்க பந்து போட்டு வெளயாடப் போறோம்...நீயே ஒரு அரை டவுசரு...நான் உன்கிட்ட வெளயாடப்போறேனா...

செந்தில்: போங்கண்ணே நீங்க எப்பவுமே இப்டித்தான் வய்யிவீங்க..(செந்தில் சோகமாக ஒரு expression கொடுக்கிறார்.)
கவுண்டமணி: ஆமா...என்னடா அது தலையில, காக்கா ஆய் போடுச்சா..??
செந்தில்: அண்ணே இது ஹேர் கலரிங்ணே..
கவுண்டமணி:ஏண்டா டேய், அந்தா அந்த மொனையில இருக்குற சைக்கிள் கடையில இருந்து செயின் ஆயில் எடுத்து தலையில தேய்ச்சிட்டு வந்து ஹேர் கலரிங்னு பொய்யா சொல்ற...

செந்தில்: போங்கண்ணே நீங்க, எப்பவுமே இப்டித்தான் நான் ஹேர் கலரிங் பண்ணாலும் புடிக்காது, சந்தேகம் கேட்டாலும் புடிக்காது..

கவுண்டமணி: (கனத்த குரலில்) என்னடா உன் சந்தேகம்?? செந்தில்:ஏரோப்ளேன் எப்டிணே பறக்குது..

கவுண்டமணி: ஹஹ்ஹஹ்ஹ.... ஹஹ்ஹஹ்ஹ.......அதுவாடா மண்டையா ... அதுல 6 பெரிய டயர் இருக்குடா, அதுல ஸ்பீடா போய் அப்டியே பறந்து போய்டுது...

செந்தில்: அண்ணே பொய் சொல்லாதீங்கண்ணே...பஸ்-ல கூட தான் 6 டயர் இருக்கு...அது மட்டும் ஏண்ணே பறக்க மாட்டேங்குது...

கவுண்டமணி:(கடுப்பாக) உன்ன மாதிரி பன்னியல்லாம் ஏத்துனா எப்டிடா பறக்கும்....

செந்தில்: போங்கண்ணே என்றபடி சோகமாக தலையை குனிகிறார்....

கவுண்டமணி: டேய்...அதென்னடா கையில,  டப்பாவா..
செந்தில்: புருட்டிணே....
கவுண்டமணி: என்னா டீ..???
செந்தில்: புருட்டீ...

கவுண்டமணி: இது எங்கடா வாங்குன..??

செந்தில்: இதுவாண்ணே...வரும் போது நம்ம அண்ணாச்சி கடைப் பக்கமா வந்தேனா, அவரு கடையில திரும்பி அரிசி எடுத்துகிட்டு இருந்தாரு, அப்டியே வெளில இருந்த புருட்டி டப்பாவ அவருக்கு தெரியாம எடுத்துட்டு வந்துட்டேண்ணே....(சொல்லிவிட்டு சிரிக்கிறார்)

கவுண்டமணி: அதான பார்த்தேன்...நீ காசு கொடுத்து வாங்குனா உலகம் அழிஞ்சுறாது....அத ஏண்டா கையில வச்சி நோண்டிக்கிட்டு இருக்க..?!?!
செந்தில்: அதுவாண்ணே, இத குடிச்சு முடிச்சிட்டு, வாயில வச்சி ஒரு ஊது ஊதி இப்டி டப்-புனு அடிச்சோம்னா...(சொல்லிக் கொண்டே செந்தில் கவுண்டமணி முகத்துக்கு நேராக  புருட்டி டப்பவை உடைத்து விடுகிறார். கவுண்டமணி முகமெல்லாம் புருட்டி தெறிக்கிறது,)

கவுண்டமணி கடுப்பாக செந்திலைப் பார்க்கிறார்....

செந்தில்: இப்பதாண்ணே நீங்க கலர்ரா இருக்கீங்க..

கவுண்டமணி: ஏண்டா டப்பாவ மூஞ்சிக்கு நேரா உடச்சதும் இல்லாம, கலர்ரா இருக்கேன்னு நக்கலா பண்ற, ஒன்னய...என்றபடி கவுண்டமணி ஒரு கட்டையைத் தூக்கிக் கொண்டு செந்திலைத் துரத்துகிறார்.

செந்தில் அவரிடமிருந்து தப்பி தூரத்தில் நின்றபடி கவுண்டமணியைப் பார்த்து சிரிக்கிறார்.


கவுண்டமணி: படவா வா நீய்யி, உன்ன இந்தப் பக்கம் இனிமே பார்த்தேன் உன் மண்டைய கருக்கிபுடுறேன் கருக்கி.... என்றபடி கடுப்புடன் வீட்ற்கு திரும்புகிறார்.

- மணி

6 comments:

  1. //யாரையும் குறிப்பிடுவன அல்ல என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்...//

    இதுக்கு ஏன் வருத்தும் ஜாலியாவே சொல்லி இருக்கலாம்

    ReplyDelete
  2. Very nice psot da...nalla sirichaen...:)

    ReplyDelete
  3. அருமை அசல் காமடி போலவே நன்றாக இருந்ததது

    ReplyDelete
  4. கவுண்டமணி செந்தில் ஜோடி பொருத்த காமடி , சூப்பரா இருக்கும்,

    ReplyDelete
  5. //கவுண்டமணி: ஹஹ்ஹஹ்ஹ.... ஹஹ்ஹஹ்ஹ.......அதுவாடா மண்டையா ... அதுல 6 பெரிய டயர் இருக்குடா, அதுல ஸ்பீடா போய் அப்டியே பறந்து போய்டுது.../

    haahaa

    ReplyDelete