Search This Blog

Wednesday, March 30, 2011

6 மந்திரிகள் அவுட்... 7 பேர் டவுட்! - தி.மு.க வேட்பாளர்கள் ஒரு பார்வை


வீரபாண்டி ஆறுமுகம் (சங்ககிரி): 'வழக்கமாகப் போட்டியிடும் தொகுதியில் நின்றால், அல்வா கொடுத்துவிடுவார்கள்’ என சங்ககிரிக்கு வந்திருக்கிறார் ஆறுமுகம். இதுநாள் வரை அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் சாதாரண ஆட்களாக இருந்ததால், எளிதில் ஜெயித்தார். இந்த தடவை அப்படி இல்லை. சித்தப்பாவை 'விடாது கருப்பாக’த் துரத்திக்கொண்டே வந்திருக்​கிறார் அ.தி.மு.க-வின் விஜய​லட்சுமி பழனிசாமி. இருவரும் வன்னியர். ஆனால், சங்ககிரி தொகுதியில் கவுண்டர்கள் அதிகம் என்பதால், அவர்களது வாக்குகள்தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும். நில அபகரிப்பு, ஆறு கொலைகள் விவகாரம், கடந்த ஐந்து வருடங்களில் கட்சிக்காரர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டதெல்லாம் விஸ்வரூபம் எடுத்து வீரபாண்டியாரை மிரட்ட ஆரம்பித்து இருக்கிறது. அண்ணன் மகளைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், சித்தப்பா ரொம்பவே மெனக்கெட வேண்டும்!

துரைமுருகன் (காட்பாடி): கருணாநிதியின் இடது கரமான துரைமுருகனுக்கு மீண்டும் காட்பாடி. அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை முடிந்த வரை காட்பாடிக்குக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார். மக்கள் யாரும் எளிதில் நெருங்க முடியாதவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. அ.தி.மு.க. வேட்பாளர் அப்பு... ஒரு புதுமுகம். மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர். இதுதான் துரைமுருகன் பலம். செல்வாக்கான ஆளைப் போட்டு இருந்தால் திணறி இருப்பார். ஆனாலும், குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெறக்கூடும்!.

பொன்முடி (விழுப்புரம்):அதிரடி அமைச்சர் பொன்முடி நிற்பது, விழுப்புரத்தில். எதிர்ப்பாளர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். அவரும் அதிரடிப் பேர்வழிதான். யாருக்கும் மரியாதை கொடுக்காமல் பேசுவதும், கட்சிக்காரர்​களிடம்கூட நெருங்கிப் பழகாமல் விலகி இருப்பதும் பொன்முடியின் பலவீனம். வன்னியர் எதிர்ப்பாளர் என்ற இமேஜும் உண்டு. பெரும்பாலான வாக்காளர்கள் வன்னியர்கள் என்பதும், தி.மு.க-வில் இருக்கும் வன்னியர்களே பொன்முடிக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதும், அவரை டேமேஜ் பண்ணிவிடும்போலத் தெரிகிறது. ஆனால், அவரோ தன் பண பலத்தை நம்புகிறார்!

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி): பன்னீருக்கு தொடர்ந்து மூன்று முறை வெற்றியைத் தந்த தொகுதி குறிஞ்சிப்பாடி. தொகுதிக்கு நிறையவே செய்திருக்கிறார். தொகுதியில் அதிகப்​படியாக வன்னியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். பா.ம.க-வும், விடுதலைச் சிறுத்தை​களும் கை கோத்து இருப்பது பன்னீருக்குக் கூடுதல் பலம். எதிர் அணி வேட்பாளரான சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலிப் பகுதியில்தான் செல்வாக்கானவர் என்பதால், குறிஞ்சிப்பாடியில் பன்னீருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை!
பெரிய கருப்பன் (திருப்பத்தூர்): அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், 'தான் உண்டு தனது சொந்த வேலை உண்டு’ என்று இருப்பவர். அதற்காக தொகுதி மக்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் எப்படி? கடந்த ஐந்து வருடங்களில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தவிர வேறு எந்த சிறப்புத் திட்டத்தையும் பெரிய கருப்பன் கொண்டுவரவில்லை. அ.தி.மு.க - வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன். 1991-96-ல் இங்கே வெற்றி பெற்று அமைச்சராக இருந்த இவர், தன்னை வளப்படுத்திக்கொண்டதோடு, கட்சியினரையும் சாதிக்காரர்களையும் கை தூக்கிவிட்டார். அதுதான் இப்போது ராஜ கண்ணப்பனைக் கை தூக்கிவிடும் சக்தியாக மாறி இருக்கிறது. பெரிய கருப்பன் மறுபடியும் சட்டமன்றத்துக்குப் போவது கொஞ்சம் கஷ்டம்தான்!

தமிழரசி (மானாமதுரை): தான் பெரிதும் எதிர்பார்த்த சோழவந்தான் தொகுதியை பா.ம.க. தள்ளிக்கொண்டு போனதால், மானா மதுரையில் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறார் தமிழரசி. தொகுதி மாறி வந்ததுதான் அவருக்கு ஏழரை. வழக்கமாக காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதி என்பதால், ஸீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த காங்கிரஸார் ஏக அதிருப்தியில் இருக்கிறார்கள். அதே நேரத்தில், அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான குணசேகரனுக்கும் சொந்தக் கட்சிக்குள் ஏகப்பட்ட அதிருப்திகள். அதை எல்லாம் தாண்டி, கூட்டணி பலத்தோடு தொகுதியை ரவுண்டு வருகிறார் குணசேகரன். இருக்கும் நிலைமையைப் பார்த்தால், தமிழரசிக்கு மானாமதுரை மல்லி மணக்காது!


பொங்கலூர் பழனிசாமி (கோவை தெற்கு): கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமி, தொகுதிக்கு 'ஆஹோ... ஓஹோ’ என்று செய்துவிடாவிட்டாலும், மக்கள் டென்ஷனாகும் வகையில் எந்த வம்பையும் இழுக்கவில்லை. தொகுதிக்குள் இருந்து யார் போன் பண்ணினாலும், தானே அட்டெண்ட் செய்து பொறுப்பாகப் பதில் சொல்வதில் ஆரம்பித்து, சிம்பிளாக நடந்துகொள்வதன் மூலம் சம்பாதித்துவைத்த நல்ல பேர்தான் அவருக்கு இப்போது ரொம்பவே கைகொடுக்கிறது!

இளித்துரை ராமச்சந்திரன் (குன்னூர்): நீலகிரி மாவட்டம் குன்னூரில் போட்டியிடும் ராமச்சந்திரனுக்கு ஆரம்பமே ஆறுதல் தருவதாக இருக்கிறது. குன்னூரின் பலம் வாய்ந்த தி.மு.க. புள்ளியான முபாரக்குக்கு ஸீட் கிடைக்காததால், அவரது ஆதரவுப் பட்டாளம் கடும் அதிருப்தியில் சோர்ந்துகிடக்கிறது. ஆனால், அவர்களிடம் வெள்ளைக் கொடி நீட்டி வழிக்குக் கொண்டுவந்திருக்கும் ராமச்சந்திரன், கூடவே தன் மீது மாளாத வருத்தத்தில் இருந்த படுக இனத் தலைவர்களிடமும் சமரசம் செய்திருக்கிறார். இதன் மூலம் ராமச்சந்திரனின் பாதை தெளிவாக இருக்கிறது!

எ.வ.வேலு (திருவண்ணாமலை): வேலுக்கு எதிராக நிற்பது அ.தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன். இருவருமே மக்களுக்கு நன்கு அறிமுகமனாவர்கள். தொகுதியில் இருக்கும் அடிப்பொடிகளில் தொடங்கி, அத்தனை பேரையும் தெரிந்துவைத்து இருப்பது, வேலுவின் பிளஸ். வன்னியர் எதிர்ப்பாளர் என்பது அவருக்குக் கெட்ட பெயர். தொகுதியில் அதிகம் இருக்கும் முதலியார்களைப்பற்றி இவர் ஏதோ ஒரு கமென்ட் அடித்ததாகவும், அதனால் அவர்கள் கோபம்கொண்டு கூடிப் பேசி வருவதாகவும் தகவல். தலித் வாக்குகள் பெரும்பாலும் விஜயகாந்த் பக்கம் இருக்கின்றன. இதைவைத்துப் பார்க்கும்போது வேலு வெல்வது டவுட். எனவே, அனைவரையும் குறிவைத்து விலைக்கு வாங்கி வருகிறார்கள் தி.மு.க-வினர்!

ஐ.பெரியசாமி (ஆத்தூர் - திண்டுக்கல்): எதிர்க் கட்சியில் இருக்கும் ஆட்களைக்கூட பெயர் சொல்லிக் கூப்பிடுவதுதான் ஐ.பெரியசாமியின் வழக்கம். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே, தொகுதியில் ரேஷன் கார்டு, டி.வி. என பெண்டிங்கில் இருந்த அத்தனையும் அள்ளி வழங்கி, நல்ல பெயரைத் தக்கவைத்துக்கொண்டார் ஐ.பி. எதிர்த்து நிற்கும் தே.மு.தி.க. வேட்பாளருக்கு அவரின் கட்சிக்குள்ளேயே சில எதிர்ப்புகள் கிளம்பி இருப்பதால், பெரியசாமியின் வெற்றி உறுதியாகிவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்கள் தி.மு.க-வினர்!

மதிவாணன் (கீழ்வேளூர்): புதிய தொகுதியான கீழ்வேளூரில் பால் வளத் துறை அமைச்சர் மதிவாணன். அவரை எதிர்த்து நிற்பவர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாலி. திருவாரூர் தொகுதியில் கருணாநிதி போட்டியிடுவதால் ஒட்டுமொத்த உடன்பிறப்புகளும் திருவாரூரே கதியெனக் கிடக்கிறார்கள். மதிவாணனைக் கண்டுகொள்ளக்கூட, தொகுதிக்குள் ஆள் இல்லை. கம்யூனிஸ்ட்கள் அதிகம் உள்ள தொகுதி என்று சொல்லக்கூடிய பட்டியலில் இந்தத் தொகுதியும் உண்டு. தே.மு.தி.க-வுக்கும் இங்கே குறிப்பிட்ட அளவு செல்வாக்கு உண்டு. ஆகவே, மதிவாணணுக்கு பால் பொங்குவது கஷ்டம்!
சுப.தங்கவேலன் (திருவாடானை): திருவாடானை தொகுதி தனக்குத்தான் என முடிவு செய்த தங்கவேலன், கடந்த ஆறு மாதங்களாக அரசின் நலத் திட்டங்கள் அத்தனையும் திருவாடானைத் தொகுதியிலேயே செயல்படுத்த ஆரம்பித்தார். எதிர்த்து நிற்கும் தே.மு.தி.க. வேட்பாளர் முஜிபுர் ரகுமான் வெளியூர்க்காரர் என்பதால், அதையே சாதகமாக்கி பிரசாரத்தில் குதித்திருக்கிறார் தங்கவேலன். தொகுதி முழுக்க வைட்டமின் 'ப’வும் நிறையவே போகிறது. எனவே, கடலில் தத்தளிப்பவனுக்கு ஒரு பிடி கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் தங்கவேலன். 'அதற்காக’ ஓட்டு போட்டால் மட்டும்தான், இவரால் தேற முடியும்!
மைதீன்கான் (பாளையங்கோட்டை): கடந்த இரண்டு முறை டி.பி.எம்.மைதீன்கான் வெற்றி பெற்ற தொகுதி இது. 'தமிழக அமைச்சர்களில் எளிதாக அணுகக்கூடியவர் யார்?’ என்று போட்டிவைத்தால், மைதீன்​கானுக்கே முதல் இடம். தொகுதி வளர்ச்சிக்காக தனது மேம்பாட்டு நிதியுடன்,  கனிமொழி, சண்முகசுந்தரம், திருச்சி சிவா போன்ற ராஜ்ய சபா எம்.பி-க்களின் நிதியையும் பெற்றுத் தந்து நிறையத் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். கடந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் மைதீன்கான். பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ள தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி நிற்பதும், வேட்பாளர் முஸ்லிம் அல்லாதவராக இருப்பதும் அ.தி.மு.க. அணியில் தோல்விக்கு முழுக் காரணமாக இருக்கும்.

பூங்கோதை (ஆலங்குளம்): ஆலடி அருணாவின் வாரிசு என்ற ஒரே தகுதியுடன் கடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பூங்கோதை, அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்க​மானவர். அது மட்டுமே போதும் என்று நினைத்ததால், கட்சிக்காரர்கள் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்தார். தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை, இங்கு இருக்கவில்லை என்ற வருத்தம் மக்களிடம் பரவலாக இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பில் கடையம் போன்ற தி.மு.க. ஆதரவு ஏரியாக்கள் உள்ளே வந்து இருப்பது மட்டும்தான் பூங்கோதைக்கு கை கொடுக்கும். எதிர் அணியில் நிற்பவர், பூங்கோதையைவிட வீக்கான வேட்பாளர். இருவருமே நாடார்கள். எனவே, வாக்குகள் பிரியும். மற்ற சாதியினர் பூங்கோதைக்கு எதிராக இருக்கிறார்கள். உழைத்துக்கொண்டே இருந்தால் மட்டும்தான் தேறலாம். இல்லை என்றால் டவுட்!

கீதாஜீவன் (தூத்துக்குடி): அரசு நலத் திட்டங்களைத் தொகுதிக்காக நிறைய செயல்படுத்தி இருக்கிறார் கீதா ஜீவன். அப்பா பெரியசாமியின் தலையீடு நிறைய இருப்பதுதான் அவருக்கு மைனஸ். அதேபோல, அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் ஜெனிஃபர் சந்திரனை அறிவித்தார்கள். பிறகு பால் என்பவரைக் கொண்டுவந்தார்கள். அவரையும் மாற்றி செல்லப்பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த காமெடி, கீதா ஜீவனுக்கு சாதகம். ஜெனிஃபருக்கு ஸீட் அறிவித்து பிடுங்கிக்கொண்டதால், மீனவர்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறது. அந்த அதிருப்தி தி.மு.க-வுக்கு சாதகமாகி, கீதா ஜீவனை வெற்றிக் கோட்டுக்கு அருகே கொண்டுபோய் உள்ளது!

சுரேஷ்ராஜன் (கன்னியாகுமரி): சுற்றுலா வளர்ச்சியை மட்டுமே நம்பி இருக்கும் தொகுதி. நம்பிக்கையை ஓரளவுக்கு நிறைவு செய்திருக்கிறார். எதிர்ப்பு என்று பெரிய அளவில் ஏதும் இல்லை. அ.தி.மு.க-வில் தளவாய் சுந்தரத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதால், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இவை எல்லாம் சுரேஷ்ராஜனுக்குப் பலமாக... கன்னியாகுமரியில் காற்று தி.மு.க. பக்கமே வீசுகிறது!

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை): சாத்தூரில் இருந்து தொகுதி மாறி அருப்புக்கோட்டையில் வேட்பாளர் ஆகி இருக்கிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இவரை எதிர்த்து நிற்பது அ.தி.மு.க-வின் மாநில நிர்வாகியான வைகை செல்வன். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு இருந்தே, தொகுதி முழுக்க பணத்தை அள்ளி இறைக்கிறார் அண்ணாச்சி. மாவட்டம் முழுக்க செய்திருக்கும் நலத் திட்டங்களுடன் அண்ணாச்சி கொடுக்கும் பணத் திட்டங்களும் சேர்ந்து இருப்பதால் வெற்றி உறுதி என்று நினைக்கிறார். ஆனால், சாந்தமாக தொகுதிக்குள் வலம் வரும் வைகை செல்வனின் தேவாங்கர் சமூகத்தினரது வாக்குகள் முழுமையாகப் போனால், இரட்டை இலைக்கு வெற்றி கிடைக்கவும்கூடும். மற்ற சமூகத்து வாக்குகளை அள்ள பகீரத வேலைகளில் இறங்கி இருக்கிறார் சாத்தூரார்!

தங்கம் தென்னரசு (திருச்சுழி): குற்றச்சாட்டுக்கள் எதிலும் சிக்காமல் இருக்கிறார் தங்கம் தென்னரசு. அதே நேரத்தில், தொகுதிக்கு புதிதாக திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை என்பதே இவர் மீதான குற்றச்சாட்டு. எதிர்த்து நிற்பவர் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த இசக்கி முத்து. ஓர் இடைத் தேர்தலின்போது தனியாக நின்றே இந்தக் கட்சி 20 ஆயிரம் வாக்குகளை அள்ளிய வரலாறும் உண்டு. அகமுடையர் அதிகம் உள்ள இந்தத் தொகுதியில் அந்த சமூகத்தவரை நிறுத்தி இருந்தால், தங்கம் வெற்றி சந்தேகத்துக்கு உரியதாக மாறி இருக்கும். எதிர் வேட்பாளரின் பலவீனம் இவரை இம்முறை ஜெயிக்கவைத்துவிடும்!


கே.என்.நேரு (திருச்சி மேற்கு): திருச்சி மேற்குத் தொகுதியில் களம் இறங்குகிறார் கே.என்.நேரு. கூட்டணி இழுபறியில் அ.தி.மு.க. திணற... அப்போது இருந்தே, சட்டென்று வேலைகளை ஆரம்பித்துவிட்டார் நேரு. இவரது பலமே சுறுசுறுப்புதான். நள்ளிரவு 12 மணிக்கு கட்சியின் முக்கியப் பிரமுகர்களுடன் பிரசார வியூகம்பற்றி ஆலோசனை நடத்துகிறார் என்றால், அதிகாலை நேரத்தில் கட்சிக்காரர்கள் யாரையாவது தொலைபேசியில் விரட்டுகிறார். நேருவுக்கு  எப்போதும் ஒரு ராசி உண்டு. ஒரு தேர்தலில் வெற்றி என்றால் அடுத்த தேர்தல் அவரது காலை வாரிவிட்டுவிடும். பெரிய அரசியல் பின்புலன் இல்லாத நபர்களிடம் தோற்ற அனுபவமும் அவருக்கு உண்டு. இந்த முறை தனது உழைப்பு மற்றும் பண பலம் மூலமாக வெற்றியை அடையலாம்!

என்.செல்வராஜ் (மணச்சநல்லூர்): வனத் துறை அமைச்சரான என்.செல்வராஜ், மணச்சநல்லூர் தொகுதி வேட்பாளர். செல்வராஜின் மகன் கருணைராஜா, முத்தரையர் சங்க செயல்​பாடுகளில் பெரும் ஈடுபாடுகொண்டவர். ஆகவே, அந்த வாக்குகள் செல்வராஜ் பக்கம் சாயவே அதிக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம், நேருவும் இவரும் தனித் தனி கோஷ்டியாக செயல்படுபவர்கள் என்பதால், அதுவே தலைவலி. அதனால், நேரு கோஷ்டி ஆட்களை சமாதானப்படுத்தி தேர்தல் வேலை செய்யவைப்பதில் முனைப்பாக இருக்கிறார். எதிர் அணி வேட்பாளர் சரி இல்லை என்பதால், செல்வராஜ் வெல்வார்! 

உபையதுல்லா (தஞ்சாவூர்): தொடர்ந்து மூன்று முறை தொகுதியின் எம்.எல்.ஏ.வான உபையதுல்லா எளிமையானவர். மக்களிடம் நல்ல பெயர் நல்ல பெயர் இருந்தாலும், மாவட்டச் செயலாளர் பழனிமாணிக்கத்துக்கும் இவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்.  அதுதான் உபையதுல்லாவுக்குப் பிரச்னையாக இருக்கும். ஆனால், நல்ல மனிதர் என்ற இமேஜ் இவரை கை தூக்கிவிடலாம்!

வெள்ளகோயில் சாமிநாதன் (மடத்துக்குளம்): தொகுதி மாறி மடத்துக்குளத்துக்கு வந்து இருக்கிறார் சாமிநாதன். தொகுதிக்குப் புதியவர். முழுக்க முழுக்க பணத்தையே நம்பி களத்தில் குதித்திருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகவேலு, தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். எளிமையானவர் என மக்களிடம் பெயரெடுத்தவர். தொகுதி முழுக்க சண்முகவேலுக்கு சொந்த பந்தங்கள் அதிகம். சுத்தி வளைத்துப் பார்த்தால், சண்முகவேலுவின் கைதான் ஓங்கி இருக்கிறது! 

கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்): கே.பி.பி. சாமிக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் கே.குப்பன். முன்னாள் எம்.எல்.ஏ-வான குப்பன், தற்போது திருவொற்றியூர் அ.தி.மு.க. நகரச் செயலாளர். சாமியைவிட செல்வாக்கு​கொண்டவர். கடந்த ஐந்து ஆண்டு​களில், தொகுதிக்கு பல்வேறு நலத் திட்டங்களை சாமி வலை வீசிக் கொண்டுவந்து குவித்து இருந்தாலும், தொகுதி மக்கள் மத்தியில் அவருக்கு எதிரான எதிர்ப்பு அலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அமைச்சர் சாமியின் தம்பி சாமியாடிய விவகாரங்களைப் பயத்துடன் மீண்டும் நினைத்துப் பார்த்தபடி,  பொது ஜனம் இலைத் தரப்பை இரு கரம் கூப்பி வரவேற்கிறார்கள். மணலி, சேக்காடு, எண்ணூர் என இதுவரை சாமிக்கு சர்வ பலத்தைக் கொடுத்த மீனவ ஏரியாவாசிகளும், இப்போது தி.மு.க-வின் மீது திடீர் கோபம்கொண்டு சாமிக்கு எதிராக வரிந்து கட்டத் தொடங்கி உள்ளனர்!

க.அன்பழகன் (வில்லிவாக்கம்): 88 வயதுக்காரர் பேராசிரியர் க.அன்பழகன், தி.மு.க-வின் பொதுச் செயலாளர். தமிழக நிதி அமைச்சர். இந்தப் பெருமைகளை உடைய பேராசிரியர், இந்த முறை வில்லிவாக்கம் தொகுதியில் அ.தி.மு.க-வின் ஜே.சி.டி.பிரபாகரனை எதிர்த்துக் களம் இறங்கி இருக்கிறார். இதற்கு முந்திய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில், துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பேராசிரியர் 336, 409 என்கிற ஓட்டு வித்தியாசத்தில்தான் ஜெயித்தார். அதனால்தான், தனக்கு சேஃப்டியான தொகுதி இது என்கிற வகையில் வில்லிவாக்கம் வந்து இருக்கிறார். ஆனால், வில்லிவாக்கமும் அவருக்கு சாதகமாக இல்லை!ஜே.சி.டி.பிரபாகரன் 1980-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தவர். இவரது ஆளுமையைவைத்து 'வில்லிவாக்கம் எம்.ஜி.ஆர்' என்று மக்கள் செல்லமாக அழைப்பார்கள். தொகுதிக்குள் ஒன்றரை மாதங்கள் பாத யாத்திரை சென்று மக்கள் குறை கேட்டவர். கடந்த 27 ஆண்டுகளாக விளையாட்டுப் போட்டிகள், சமூகப் பணிகள் எனத் தொகுதி மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறவர். இவருக்குக் கை கொடுப்பவர் - தே.மு.தி.க. கவுன்சிலர் பிரபாகரன். கடந்த உள்ளாட்சியில் தி.மு.க. முக்கியப் பிரமுகரை வீழ்த்தி இவர் ஜெயித்தார். இதை எல்லாம் வைத்து அன்பழகன் அவுட் என்கிறார்கள்!

பரிதி இளம்வழுதி (எழும்பூர்): ஐந்தாவது முறை எழும்பூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்தெடுக்கப்பட்டவர் பரிதி இளம்வழுதி. இந்த முறை ஆறாவது தடவை... தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும் மக்கள் நலப் பணிகளுக்காக செலவிட்டவர். சாலை வசதி, புதிய கட்டடங்கள் என்று மக்கள் பணியை ஏகத்துக்கும் செய்திருந்தாலும், ஒரு சில கட்சி நிர்வாகிகளின் குறைகளைக் கேட்கவில்லை என்கிற புலம்பல் உட்கட்சியில் ஒலிக்கிறது. பரிதியை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் நிற்பவர் தே.மு.தி.க-வின் புரசை கு.நல்லதம்பி. இவருக்கும் நடிகர் விஜயகாந்த்துக்கும் 30 வருடப் பழக்கம். ரசிகர் மன்றத்திலும், கட்சியிலும் மாவட்டப் பொறுப்பில் இருக்கிறார். 20 வருடங்களுக்கு முன்னால், 15 சைக்கிள்களை வாங்கிக் கொடுத்து, இவருக்கு சைக்கிள் கடை வைத்துத் தந்ததே விஜயகாந்த் தானாம். ஆனால், இவருக்குப் பரிதியை எதிர்கொள்ளும் அளவுக்கு படை, பண பலம் இல்லாததால், பரிதியின் பக்கம் வெற்றிக் காற்று! 

தா.மோ.அன்பரசன் (பல்லாவரம்): கடைசி நிமிஷம் வரையில்கூட, 'முதல்வர் கருணாநிதி போட்டியிடும் தொகுதி இது’ என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், திடீரென்று கருணாநிதி திருவாரூருக்கு இடம்பெயர, இங்கே தா.மோ.அன்பரசனுக்கு உறுதியானது. குரோம்பேட்டை தாண்டி சாலையில் வரும்போது, எதிர்ப்படும் மேம்பாலங்கள், பழைய மகாபலிபுர ரோட்டைத் தொடும் துரைப்பாக்கம் ரேடியல் மேம்பாலம், மீனம்பாக்கம் விமான நிலைய மேம்பாலம்... இரண்டையும் கடக்கும் பல்லாவரம்வாசிகள் உதயசூரியன் சின்னத்தை மறக்க மாட்டார்கள் என்று தி.மு.க-வினர் சொல்லி ஓட்டு சேகரிக்கிறார்கள். தர்ஹா ரோடு சுரங்கப் பாதை, மீனம்பாக்கம் பி.வி.நகர் சுரங்கப் பாதை... இரண்டையும் கட்டி முடித்ததும் இவர்களே. ஆனால், மக்கள் வசிக்கும் சில இடங்களை தொல்பொருள் துறை கைப்பற்றி, அங்கே எல்லாம் புதிய கட்டடம் எதுவும் கட்டக் கூடாது. பூமியைத் தோண்டக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறது. அந்த உத்தரவைத் திரும்பப் பெறவைப்பதாக அன்பரசன் மக்களிடம் உத்தரவாதம் தந்திருந்தார். ஆனால், மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஓர் அறிவிப்பும் வரவில்லை. அன்பரசனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் தன்சிங் போட்டியிடுகிறார். முன்னாள் பல்லாவரம் நகரசபைத் தலைவர். இவருக்கும் செல்வாக்கு இருக்கிறது. கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் சுமார் 12 ஆயிரம் ஓட்டுகளை வாங்கினார். அந்த வகையில், இந்த ஓட்டுகள் மீண்டும் தன்சிங்குக்கு சாதகமாக விழும் என்று எதிர்பார்கிறார்கள். இது தா.மோ.அன்பரசனை டவுட் பட்டியலில் சேர்க்கவைக்கிறது!


தி.மு.க வேட்பாளர்கள் ஒரு பார்வை

- ஜூ.வி


Tuesday, March 29, 2011

குள்ளநரி கூட்டம் - சினிமா விமர்சனம்


பெயரை பார்த்தவுடன்  கண்டிப்பா இது மொக்கை படம்தான் என்று என்னை போல் முடிவு பண்ணி இருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றுங்கள். கதை களம் மதுரை. சரி இரண்டு குத்து பாட்டு, நான்கு நண்பர்கள், வெட்டி அரட்டை, மற்றும் அடிதடி என்று எதிர்பார்த்து போனால் பல்பு வாங்குவது நிச்சயம்.

வெண்ணிலா படக்குழு நாயகன், மற்றும் அப்படத்தில் நடித்த சில நடிகர்களை கொண்டு வெளி வந்துள்ள திரை படம் தன இந்த குள்ளநரி கூட்டம் . என் ரொம்ப நாட்களுக்கு பிறகு நாட்களுக்கு பிறகுவெளிவந்துள்ள  ஒரு சிறந்த பொழுதுபோக்கு படம்.


கதை  

போலீஸ் என்றாலே பிடிக்காத அப்பா, முதுநிலை படித்து  வேலை தேடும் நாயகன், அன்பான அண்ணா மற்றும் அம்மாவின் அரவணைப்பில்  அழகான குடும்பம் என முதல் பாதி நகருகிறது. அப்பாவின் நம்பர் ரீ சார்ஜ் பண்ணுவதற்கு பதில் வேறொரு நம்பருக்கு தவறுதலாக பண்ணி, அதன் மூலம் காதல் பண்ணி, அந்த காதல் கல்யாணத்தில் முடிய தன தந்தைக்கு பிடிக்காத போலீஸ் வேளையில் சேர்வதே இந்த குள்ளநரி கூட்டம்.

திரைக்கதை 

இயக்குனர் பெயரை சரியாக கவனிக்க வில்லை. மனுஷன் சும்மா அசால்ட்ட எடுத்து இருக்கிறார் முழு படத்தை. எந்த ஒரு இடத்திலும் சிறு அலுப்பு வர வில்லை. கதையுடன் வரும் நகைசுவையும் அதனை சார்ந்த கட்சி அமைப்பும் படம் முழுக்க மிக அழகாக நம்முடன் பயணம் செய்கிறது. சில positive காட்சிகள், இயல்பான வசனத்தில் நமக்கு தெரியாமல் எட்டி பார்கிறது.காதல் மற்றும் போலீஸ் செலக்‌ஷன் ஸ்டோரி என அனுபவ இயக்குனர் போல எடுத்துள்ளார்.


ஹீரோ விஷ்ணு

அலட்டி கொள்ளாமல் இயல்பாக நடித்து உள்ளார் . அவர் பேசியே சில காட்சியை நகர்த்தி உள்ளார். இவர் முன் பத்தியில் செய்யும் சில விஷயங்கள் பின் பாதியில் கதை உடன் பொருந்து கையில் அட போடா வைக்கிறார்.  

ரம்யா 

நடிப்பு ஓக்கே. படம் முழுக்க வருகிறார் கதையுடன்!!! அவரின் தோழி செம வாய்ஸ்..

பிரண்டு - கல்யாணம் பண்ணிக்கப்போறவனையும் இப்படித்தான் சொல்றீங்க.. கழட்டி விடப்போறவனையும் இப்படித்தான் சொல்றீங்க... இது போல இன்னும் நிறைய வசனம் மிக அருமை.

போலீஸ் வேலைக்கு தேர்வு செய்வதை கொஞ்சம் விவரித்து கட்டி உள்ளனர். நாயகனின் தந்தை மற்றும் தாய் மிக நன்றாக நடித்து உள்ளனர்.


க்ளைமேக்ஸ் வழக்கம் போல ,ஆனாலும் ரசிக்க முடிந்தது.  ஒரு யதார்த்தமான படம் பார்த்த திருப்தி.

குள்ளநரி கூட்டம் - A feel Good Family entertainer..

Sunday, March 27, 2011

முத்துக்கு முத்தாக


குடும்ப உறவுகள் பற்றிய படங்கள்  நம் தமிழ் சினிமா வில் மிக குறைவு. சில படங்கள் அத்தி பூ போல் வருவது உண்டு.  கோரிப்பாளையம, பாண்டி படத்தை எடுத்த ராசு மதுரவனின் படம் தான்முத்துக்கு முத்தாக.

இறந்த பிறகு பெற்றொரின் படத்தை வைத்து அதற்கு மாலைப்போட்டு, சாப்பாடு போட்டு தெய்வமாக வணங்குவதைவிட, அவர்கள் இருக்கும்போதே அவர்களை பொக்கிஷமாக நினைத்து நல்லபடியாக பார்த்துகொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் படம். 

கதை 

ஐந்து ஆண் பிள்ளைகளை பெற்று, அவர்களை வளர்த்த பெற்றொர் அவர்களின் திருமணத்திற்குப் பிறகு மருமகள் என்ற புது உறவால் உதாசினப்படுத்தப்பட்டு தனிமையில் வாடும் ஒரு பெற்றொரின் சோகமான கதைதான் படத்தின் மையக்கரு. 

இப்படத்தில் நாயகன், நாயகி என்றால் அது சரண்யா , இளவரசு ஆகியோர்தான். நிஜ அம்மா வாக வாழ்ந்து உள்ளார்கள். ஐந்து பிள்ளைகளுக்கு அப்பாவாக நடித்திருக்கும் இளவரசுவின் நடிப்புக்கு  சொல்லியாக வேண்டும். 

சில வசனம் அட போடா வைக்குறது . 

அடுத்த ஜென்மத்திலேயாவது நீ ஆம்பளை பொறக்கணும்டி.. அப்பத்தான் ஒரு ஆம்பளையோட வலி தெரியும்

நம்ம பசங்க எப்படி வாழறாங்கன்னு தான் பார்க்கனும்.. எங்கே வாழறாங்கன்னு பார்க்கக்கூடாது

இத்தனை வருஷம் என் கூட வாழ்ந்ததில கொஞ்சமாவது சந்தோஷமாய் வைத்திருந்தேனா? 

இது போல் சில நல்ல வசனங்கள் படத்தை  தூக்கி நிறுத்துகிறது  

முதல் பாதி நீளம் மற்றும் எதோ மெகா சீரியல் பார்ப்பது போல உள்ள உணர்வில் இருந்து வெளி வர முடியவில்லை .. சிங்கம் புலி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். இரண்டு பாடல்கள் ரொம்ப நல்லா இருக்கு கேட்பதற்கு..
 முத்துக்கு முத்தாக - பார்க்கலாம்

Saturday, March 26, 2011

கதிர்வீச்சு - ஓ பக்கங்கள் (ஞாநி)


எந்தக் கட்சியும் எந்தத் தலைவரும் ஒருபோதும் அறிவிக்காத ஒரு பிரம்மாண்டமான இலவசம் வாக்காளர்களான நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் இலவசக் கதிர்வீச்சு. அதற்கு ஆணவம் மிகுந்த ஜெயலலிதாவா, தியாகதீபம் வைகோவா, சூழ்ச்சிக்கார கருணாநிதியா அப்பாவியான வாக்காளர்களா என்றெல்லாம் பாரபட்சமே கிடையாது. எல்லோரையும் அழித்து விடும். 

தமிழ்நாட்டை அழிக்க வடக்கே கல்பாக்கத்திலும் தெற்கே கூடன்குளத்திலும் அமைந்துள்ள அணு உலைகளே போதுமானவை.பெரும் விபத்துக்குள்ளான அணு உலையிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டோக்கியோவில் கதிரியக்க அளவு 20 மடங்கு அதிகமாகிவிட்டது. சென்னைக்கும் கல்பாக்கத்துக்கும் இடையில் வெறும் 80 கிலோமீட்டர்தான். சென்னையில் சுனாமி வந்தபோது கல்பாக்கம் உலையும் பாதிக்கப் பட்டது. பெரிய பாதிப்பு இல்லாததால் தப்பித்துக் கொண்டோம். ஜப்பான் உலைக்கு நேர்ந்தது போல இங்கே நேர்ந்தால் இப்போது இதை எழுத நானும் படிக்க நீங்களும் இருக்க மாட்டோம்.


உடனடியாக சில லட்சம் பேரும் மெல்ல மெல்ல புற்று நோயில் மேலும் பல லட்சம் பேரும் அழிவது இவற்றில் விபத்து ஏற்பட்டால் நிச்சயம். அணு உலையில் பெரும் விபத்து ஏற்பட்டால் அது பல தலைமுறை களுக்கு நிலம், நீர், காற்று, மனிதர்களை நாசமாக்குகிறது. அணுக்கழிவுகளிலிருந்து கதிரியக்கம் ஏற்படாமலும் பரவாமலும் கட்டுப்படுத்தி வைக்க, போதுமான தொழில் நுட்பம் உலகில் எங்கேயும் இன்னமும் நூறு சதவிகித உத்தரவாதத்துடன் உருவாக்கப் படவே இல்லை. விபத்து ஏற்படாது என்ப தற்கு எந்த உறுதியும் கிடையாது. ஏற்பட்டால் தீர்வுகள், நிவாரணங்கள் சாத்தியமும் இல்லை.  

ஓர் எழுத்தாளனுக்கு மிகுந்த அலுப்பு தருவது ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருப்பதுதான். 1986லிருந்து அணுசக்திக்கு எதிராகப் பேசியும் எழுதியும் வருகிறேன். அதற்கு இது வெள்ளி விழா! மின்சாரம் தயாரிக்க அணு உலைகளை விட்டால் இனி வேறு வழி கிடையாது என்ற விதண்டாவாதம் செய்பவர்கள் சில அடிப்படை உண்மை களைப் புரிந்துகொள்ள வேண்டும். ஐம் பதுக்கு மேற்பட்ட அணு உலைகளை வைத் திருந்தும் ஜப்பானின் மொத்த மின்சாரத்தில் அது வெறும் 30 சதவிகிதம்தான். இந்தியாவில் இப்போது சூர்ய சக்தி, காற்றாலை போன்ற ஆபத்தற்ற மின் தயாரிப்பு முறை களுக்கு அரசு வெறும் 600 கோடி ரூபாய்தான் செலவிடுகிறது. ஆனால் அவை 5 சதவிகிதம் மின்சாரத்தைத் தருகின்றன. அணுசக்திக்கோ 3897 கோடி ரூபாய் ஒதுக்கி, வெறும் 3 சதவிகித மின்சாரம்தான் கிடைக்கிறது.


நில நடுக்கம், சுனாமி போன்றவற்றி லிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உலகிலேயே மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துவைத்திருக் கும் நாடு ஜப்பான். அங்கே நேர்மையும் ஒழுக்கமும் நம்மை விடப் பல மடங்கு அதிகம். அதனால் தான் நம் சுனாமி யைப் போல பல மடங்கு பெரிய அழிவு அங்கே ஏற்பட்டும்கூட ஒப்பீட் டளவில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் நமது விகிதங்களில் அங்கே இல்லை. அழிவு ஏற்பட்ட எந்த ஊரிலும் ஒரு சிறு கடை கூட சூறையாடப்படவில்லை. கடும் பஞ்சத்துக்கு நடுவிலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒழுங்காக கியூவில் நின்று கிடைத்ததை வாங்கிக் கொள்கிறார்கள். 

பள்ளிக்கூடத்திலேயே நில நடுக்கத் தற்காப்பு பயிற்சிகள், ஒத்திகைகள் மாதந் தோறும் குழந்தைகளுக்குத் தரப்படுகின்றன. அணு உலை விபத்து ஏற்பட்டதும் அருகி லிருக்கும் லட்சக்கணக்கானவர்களை இன் னொரு பகுதிக்கு ஒரே நாளில் குடி பெயரச் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது. அதுவே போதாது என்று அங்கே விமர் சிக்கப்படுகிறது. நம்மால் கூவம் கரை குடி சைவாசிகளுக்கு மாற்று இடம் தருவதைக் கூட ஒழுங்காகச் செய்ய முடிவதில்லை. இலவச வேட்டி சேலை கொடுக்கும் இடத்தில் நெரிசல் தள்ளுமுள்ளுவில் சாகத் தயா ராக இருக்கும் சமூகம் நம்முடையது. தலைவர் செத்தால், கடைகளைச் சூறை யாடுவது நம் மரபு. தீர்வுள்ள சாயப்பட்ட றைக் கழிவையே தீர்க்காமல் ஊரையும் ஆற்றையும் விவசாயத்தையும் நாசமாக்கி யிருக்கிறோம். 


கல்பாக்கத்தில் விபத்து ஏற்பட்டால் அருகே உள்ள பகுதி மக்களைப் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு அழைத்துச் செல்வது பற்றிய ஒத்திகை சில வருடங்கள் முன்பு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடத்தப் பட்டது. எந்த லட்சணத்தில் தெரியுமா? அழைத்துச் செல்ல வேண்டிய பஸ்கள் பிரேக் டவுன் ஆகிவிட்டன! காவல் அதிகாரிகளின் வயர்லெஸ் கருவிகள் வேலை செய்யவில்லை!இந்திய அணு உலைகளில் முழு நேரத் தொழிலாளர்களும் அன்றாடக் கூலிகளும் கடுமையான கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்படு கின்றனர். எந்த அளவுக்கு கதிர் வீச்சு என்பதை முறையாக ஊழியர்களுக்குத் தெரியப்படுத்துவதில்லை. விபத்துகளில் தினக் கூலிகள் செத்திருக்கிறார்கள் கல்பாக் கத்தில் உள்ளே நடந்த பல கதிர்வீச்சு விபத்துகள் பற்றி அங்குள்ள தொழிற்சங்கம் பட்டியலிட்டு நிர்வாகத்திடம் பல வருடங் கள் முன்பே கொடுத்திருக்கிறது. ஆனால் எதற்கும் முறையான பதில்கள் இல்லை. 

நம் அணு உலைகள் பலவும் அணுகுண்டு தயாரிக்கும் இடங்கள் என்பதால், அரசு அவற்றை ராணுவ இடங்களாகக் கருதி எல்லாவற்றையும் ரகசியமாக வைத்துக் கொள்கிறது. வேலை பார்ப்பவர்களுக்கும் சரி, பொது மக்களுக்கும் சரி எதையும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் உரிமை இல்லை. குற்றவாளியே நீதிபதியாக இருப் பது போலத் தவறுகளுக்குப் பொறுப்பான அரசாங்கமே எல்லாம் சரியாக இருப்பதாக முடிவையும் அறிவித்துவிடுகிறது. அணு உலை வியாபாரத்தில் இருக்கும் அரசுகளும் சரி, தனியாரும் சரி தொடர்ந்து முழு உண்மைகளைச் சொல்லாமல் அரை உண்மைகளையும் முழுப்பொய்களையும் தான் சொல்லி வந்திருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்றில் நிறைய சம்பவங்கள் உள்ளன. 

ஜப்பானில் அணு உலை நடத்தும் ஒரு தனியார் கம்பெனியான டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் கம்பெனிக்கு அதற்கான கருவிகள் அனைத்தையும் அமெரிக்க ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனி விற் றது. அப்படி விற்ற போது, அந்தக் கருவிகளின் தொழில்நுட்ப சிக்கல்கள் பற்றி முழுமையான தகவல்களை ஜெனரல் எலெக்ட்ரிக் தரவில்லை என்று அதில் வேலை பார்த்த சுகோகா என்ற ஜப்பானியர் அம்பலப் படுத்தி னார். அவருக்கு வேலை போயிற்று. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்களை ஜெனரல் எலெக்ட்ரிக், டோக்கியோ கம்பெனி இருவருமாக அரசின் அணு உலைக் கண்காணிப்பாளர்களிடமிருந்து மறைத்தார்கள் என்று பின்னர் தெரியவந்தது.

இந்தியாவில் அமெரிக்கத் தனியார் கம்பெனிகள் அணு உலை விற்பதற்கு வழி செய்யும் ஒப்பந்தத்தைத்தான் மன்மோகன் சிங் இடது சாரிகள், பி.ஜே.பி ஆகியோரின் எதிர்ப்பை மீறி அமெரிக்காவுடன் செய்தார். அப்போது ஆட்சி கவிழாமல் இருப்பதற்கு எம்.பி.கள் விலை கொடுத்து வாங்கப்பட்டார்கள் என்பது இப்போது விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கும் அமெரிக்க தூதர் களின் ரகசியச் செய்திகளால் நிரூபண மாகியிருக்கிறது. ஊழலும் லஞ்சமும் ஒழுக்கக் கேடும் மலிந்து கிடக்கும் இந்தியச் சூழலில், எந்த அமைச்சருக்கு எந்த இலாகா, எந்த இலா காவுக்கு யார் அமைச்சர் என்பதை தொழி லதிபர்களின் தரகர்கள் தீர்மானிக்கும் கேடுகெட்ட அரசியலில், மனித குலத்தா லேயே இதுவரை தீர்வு காணப்படாத ஆபத்தான அணு தொழில் நுட்பத்தை அமலாக்கு வது மிக மிக ஆபத்தானது. 


அணு உலைகளின் பாதுகாப்பை மறு பரிசீலனை செய்வோம் என்று மன்மோகன் சிங் அறிவித்திருப்பது போதாது. அந்த மறு பரிசீலனை நடவடிக்கையில் தன்னார்வக் குழுக்கள் முதல் உச்ச நீதி மன்றம் போன்ற அமைப்புகள் நியமிக்கும் சுயேச்சையான அறிஞர்கள் பங்கு பெறச் செய்ய வேண்டும். புதிதாக எந்த அணு உலையும் தேவை யில்லை என்ற முடிவை எடுக்க வேண்டும். மூன்று சத தயாரிப்பில் இருக்கும் போதே முடிவெடுப்பது அவசியம். அணு உலைக்கு இறைக்கும் கோடிக்கணக்கான பணத்தை மாற்று முயற்சிகளுக்கு ஒதுக்க வேண்டும்.

வீட்டுக்கு வீடு இலவச டி.வி.பெட்டி, கிரைண்டர், மிக்சி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் கிடைத்தால் போதும் என்று ஏங்கிக் கிடக்கும் முட்டாள்களாகிய நாம், சொல் லாமல் கொள்ளாமல் வரவிருக்கும் இலவசமான கதிர்வீச்சு பற்றி இப் போதே விழித்துக் கொள்ளாவிட்டால் பேரழிவுக்கு வழிவகுப்பது உறுதி. இன்னும் பிறக்காத கொள்ளுப் பேரன்களுக்கெல்லாம் இப்போதே சொத்து சேர்க்கும் தமிழினத் தலைவர்களும் உடன்பிறப்புகளும் உடன் பிறவாத கொள்ளைக் கூட்டாளிகளும் ஒன்றை மறக்க வேண்டாம். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை ஒரே ஒரு பேரக் குழந்தைக்கு உருவாக்கி வைத் தாலும், அந்தப் பேரக் குழந்தையும், ஒற்றை தம்படி கூட இல்லாத தெருவோரக் குழந்தையும் அணு கதிர் வீச்சினால் சமமாகவே பாதிக்கப்படுவார்கள்.

இந்தியாவின் எல்லா அணு உலை திட்டங்களையும் உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும், இருக்கும் அணு உலைகள் பற்றிய பகிரங்கமான விசாரணைகள் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை நாம் எல்லோரும் எழுப்பியாக வேண்டும். 

ஞாநி..  


இலவசமோ இலவசம்!

ரசியலில் எதுவும் எப்போதும் நிகழலாம். அதன் அழகே அதுதான்! கருணாநிதியின் இலவசத் திட்டங்களுக்குப் போட்டியாக, இதோ ஜெயலலிதாவின் இலவசத் திட்டங்களும் அணிவகுத்து வந்துவிட்டன!

லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், தாலிக்குத் தங்கம், இலவச பஸ் பாஸ், குறைந்த கட்ட​ணத்தில் கேபிள் என்று கேட்கும் இடத்தில் எல்லாம் இலவசங்கள் பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. இப்படி வழங்குவது சாத்தியம்தானா  ???  

தமிழருவி மணி

''ஜெயலலிதா வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் பாராட்டத்தக்க அம்சங்கள் பல  இருக்கின்றன. அதே நேரத்தில், 'தி.மு.க-வின் இலவசத் திட்டங்​களைவிட கூடுதலான இலவசத் திட்டங்கள் இருந்தால்தான் வாக்குகளைத் தன் பக்கம் ஈர்க்க முடியும்’ என்கிற கட்டாயத்தின் காரணமாகவே நிறைய இலவசங்களை அறிவித்து இருக்கிறார். ஒட்டுமொத்தமாக, இரண்டு திராவிடக் கட்சிகளின் இலவசத் திட்ட அறிக்கைகளையும் பார்க்கும்போது, ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை 'சமூக நலன் சார்ந்ததாக’ இருக்கிறது. விவசாயம், கல்வி, மின்சாரம், சுகாதாரம் எனப் பல தரப்பட்ட துறைகளிலும் ஆக்கபூர்வமான பார்வையோடு வாக்குறுதிகளைத் தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக, மாநில அரசின் திட்டக் குழு உறுப்பினராக நான் இருந்தபோது, விவசாயத் துறையின் வளர்ச்சிக்காக திரும்பத் திரும்ப நான் வலியுறுத்திய அம்சங்கள் அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது. முதலாவதாக, சொட்டு நீர்ப் பாசன வசதியின் மூலம்தான் நீர் மேலாண்மையை ஒழுங்குபடுத்த முடியும் என்பதை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரிவித்து இருப்பது பாராட்டுக்கு உரியது. இரண்டாவதாக, குளிர்பதனக் கிடங்குகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க ஏற்பாடு செய்வது. மூன்றாவதாக, விவசாய விளை பொருட்கள் சேமிப்புக் கிடங்குகள் அமைப்பது. இப்படி விவசாய வளர்ச்சிக்குப் பல நல்ல திட்டங்களை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.


 ரூபாய் 2,500 விலை நிர்ணயம் செய்யப்படும்’ என்றும், 'அரசு கரும்பாலைகள் நவீனமயமாக்கப்படும்’ என்று சொல்லி இருப்பதும் நல்ல அம்சங்கள். மக்கள் நலனைப் பொறுத்த வரையில், நம் நாடு மிகவும் பின்தங்கி இருக்கிறது. தமிழகத்தில், ஏழைகளுக்கு 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ கொண்டு வரப்பட்டது. ஆனால், அதில் ஆயிரம் குறைகள். இந்தத் திட்டத்தை முழுதாக நீக்கிவிடாமல், அதில் உள்ள குறைகளைக் களைந்து சீரமைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் ஜெ. மாவட்டம் தோறும் அதிக எண்ணிக்கையில், மிக உயர்ந்த மருத்துவ வசதிகள்கொண்ட அரசு மருத்துவமனைகளை அமைத்தாலே, மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகள் கிடைக்கும் என்பதுதான் உண்மை. அதே சமயத்தில், கிராமங்கள்தோறும் நடமாடும் மருத்துவமனைகள், 24 மணி நேர தொலைதூர மருத்துவச் சேவைகள் போன்றவை வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதும் பாராட்டுக்குரியதுதான்!


'வீடுகளுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்’ என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சி. அதேபோல தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், அதற்கான திட்டங்கள் என்ன என்பதைக் குறிப்பிடவில்லை. மும்முனை மின்சார இணைப்பு வழங்குதல், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் சூரிய ஒளி மூலம் மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்தல், தெரு விளக்குகளை சூரிய ஒளி மூலம் பயன்படுத்துதல் என ஆக்கபூர்வமான அறிவிப்புகளை செய்திருக்கிறார்!

தி.மு.க-வைப்போல 'கோவையில் இருந்து மதுரைக்கு புல்லட் ரயில் விடப்படும்’ என்று சாத்தியமாகாத திட்டங்களை அறிவிக்காமல்,'சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடற்கரை சாலை அமைக்கப்படும்’ என்று ஓரளவு ஆக்கபூர்வமான திட்டங்களை ஜெயலலிதா அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதே! உலக வங்கியின் உதவியுடன் நீர் வழிச்சாலை அமைப்பது, ஈழ அகதி முகாம்களை நன்கு பராமரிப்பது போன்ற விஷயங்களும் இவரது அறிக்கையில் மிகவும் வரவேற்கத்தக்கன!

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் '58 வயதானவர்கள் இலவச பஸ் பயணம் செய்யலாம்’ என்று அறிவித்து இருக்கிறது. ஏற்கெனவே அரசுப் பேருந்துகள் ஆண்டுக்கு 1,000 கோடி நஷ்டத்தில் இயங்கும் சூழலில், இந்தத் திட்டங்கள் எந்த அளவுக்கு சாத்தியம் எனப் புரியவில்லை! ஆனால், கேபிள் டி.வி-யால் தனிப்பட்ட குடும்பம் மட்டுமே அதிக வருமானம் ஈட்டுவதற்குத் தடைபோடும் நோக்கில், 'கேபிள் டி.வி. அரசுடைமை ஆக்கப்படும்’ என்று சொல்லப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

நிறைகுறைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, தி.மு.க. தேர்தல் அறிக்கையைவிட, அ.தி.மு.க-வின் அறிக்கையில் ஆக்கபூர்வமான திட்டங்கள் இருக்கின்றன
'துக்ளக்’ ஆசிரியர் சோ

''ஜெயல​லிதாவைப் பொறுத்த வரையில், செய்ய முடியாத காரியங்களை சொல்லிப் பழக்கம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். எந்த ஒரு கூட்டணியுமே இலவசத் திட்டங்களை அறிவித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டன. மக்களும் அவற்றை ஆர்வமாக எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்! 2001-06 ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் வரி வசூல் சிறப்பாக நடந்தது. அதுபோன்று அதிக அளவில் வரி வசூல் நடந்து, ஊழல் இல்லாத நிர்வாகம் நடைபெற்றால், ஜெ. அறிவித்து இருக்கும் அனைத்துத் திட்டங்களுமே நிறைவேற்றப்படக் கூடியவைதான்!'' என்று சொன்னார்.

''இந்தத் தேர்தலில் கோட்டைவிட்டால்... இனி திரும்பவும் ஆட்சிக்கு வருவோமா என்ற பயம் ஆட்டி​வைக்கிறது. ஆகவே, தங்கள் இஷ்டத்துக்கு 'கிரைண்டர் தருகிறேன், மிக்ஸி தருகிறேன்’ என்று வாக்குறுதிகளை அள்ளிவிடுகிறார்கள்.ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருப்பதைத்தான் எல்லா அரசுகளும் விரும்புகின்றன. சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலும் நம் வளர்ச்சி ஒரு ரூபாய் அரிசியை நம்பித்தான் இருக்கிறது என்றால், அது எத்தகைய கேவலமான விஷயம்? இலவசம் என்பதே பொருளாதார வளர்ச்சி நிலை அல்ல. அதாவது, அடுத்த தலைமுறையில் இருந்து திருடித்தான் இந்தத் தலைமுறைக்கு நன்கொடையாகத் தரப்படுகிறது. பொதுவாகப் பெற்றோர்கள், 'தங்கள் குழந்தைகளுக்குச் சொத்து சேர்த்துவைக்காமல் போனாலும், கடன் வைத்துவிட்டுப் போகக் கூடாது’ என்று நினைப்பார்கள். ஆனால், இன்று ஒவ்வொரு தமிழன் மீதும் சுமார் 15,000 கடன் இருக்கிறது!

முறையான ஆட்சித் திறன் இல்லாததால்தான், இலவசத் திட்டங்களை அறிவிக்கிறார்கள். மாற்று ஆட்சி வந்தாலும்கூட, இந்த நிலை சட்டென மாறிவிடாது. இலவசத் திட்டங்களில் உள்ள பொருட்களை மாற்றலாமே தவிர, இலவசத் திட்டம் என்ற பழக்கம் மாறாது. பொருளாதாரச் சிந்தனை துளியுமற்று இப்படிச் செயல்படும் இந்த அரசியல் கட்சிகளை நம்பி இருக்கும் மக்களை நினைத்தால்தான் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது!'' என்று சொன்னார்.இனி சீர் தூக்கிப்பார்த்து ஓட்டுப் போடவேண்டியது மக்கள்தான்! 

- பொருளாதார நிபுணர் எம்.ஆர்.வெங்​கடேஷ்

ஜூனியர் விகடன் 

Friday, March 25, 2011

அன்று முதல் இன்று வரை தமிழக முதலமைச்சர்...

மிழக சட்டசபைக்கான முதல் பொதுத் தேர்தல் நடந்தது 1920-ம் ஆண்டு! தமிழக முதலமைச்சர்களை 'பிரீமியர்’ என்றும் 'பிரதம மந்திரி’ என்றும் அப்போதெல்லாம் அழைத்தனர். அன்று முதல் இன்று வரை தமிழக முதலமைச்சர்களாக இருந்தவர்கள் யார் யார்? இதோ அந்தக் குறிப்பு: 

'அகரம்’ சுப்பராயலு ரெட்டியார் (17.12.1920 முதல் ஆகஸ்ட் 1921 வரை) 

அந்நாளில் தமிழகத்தில் 'நீதிக் கட்சி’ என்ற 'ஜஸ்டிஸ் பார்ட்டியைச் சேர்ந்த கடலூரைச் சேர்ந்தவரும் பிரபல வழக்கறிஞருமான 'திவான் பகதூர்’ அகரம் சுப்பராயலு ரெட்டியார், 1920-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தமிழக சட்டசபைக்கு முதன்முதலாக முதலமைச்சராகப் பதவியேற்றார். உடல்நிலை காரணமாக, 1921-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் தமது 66-ம் வயதில் காலமானார். இவர் ஏழு மாதங்களே முதலமைச்சராகப் பதவியில் இருந்தார்!

பனகல் ராஜா (17.12.1921 முதல் 3.12.1926 வரை) 

'பனகல் ராஜா’வின் முழுப் பெயர் 'ராஜாராமராயநிங்கர்’, உடல்நிலை காரணமாகத் தமது பதவியை இடையிலேயே ராஜினாமா செய்துவிட்டுச் சென்றார்!

டாக்டர் பி.சுப்பராயன் (4.12.1926 முதல் 27.10.1930 வரை) 

'நீதிக் கட்சி’யின் ஆதரவில் இருந்த டாக்டர் பி.சுப்பராயன், 1926-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 'சுயராஜ்யக் கட்சி’யினரால் (காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு) கவரப்பட்டு, 'பிரீமியரானார்’. 1929- பிப்ரவரி 18-ல் சென்னைக்கு விஜயம் செய்த 'சைமன் கமிஷன் குழு’வை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்தனர். அந்தப் புறக்கணிப்பில் பங்குகொள்ளாமல், 'சைமன் குழு’வுக்கு நீதிக் கட்சியினர் அளித்த வரவேற்பில் சுப்பராயன் கலந்துகொண்டார். பின்பு, சுயராஜ்யக் கட்சியின் ஆதரவில் இருந்து விலகி, மீண்டும் நீதிக் கட்சியின் ஆதரவைப் பெற்று, தொடர்ந்து முதலமைச்சராகப் பதவி வகித்து, 1930-ம் ஆண்டு அக்டோபர் 27-ல் பதவியில் இருந்து விலகினார்!

'பொலினி’ முனுசாமி நாயுடு (27.10.1930 முதல் 4.11.1932 வரை) 

'பொலினி’ முனுசாமி நாயுடு 'நீதிக் கட்சி’யின் பிரமுகராக இருப்பினும், 'காங்கிரஸ் கட்சி’ மீது அவருக்கு அந்தரங்க அபிமானம் இருந்தது. ஜஸ்டிஸ் கட்சி முன்னேற்றம் அடைய வேண்டுமானால், அந்தக் கட்சியின் ஆலோசனைகளில் பிராமணர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று, இவர் கொண்டுவந்த தீர்மானத்தினால், கட்சிக்குள் அபிப்ராய பேதங்கள் வலுத்தன. இதனால் 'பொலினி’ முனுசாமி நாயுடு அதன் பிறகும் முதலமைச்சராகப் பதவி வகிப்பது இழுக்கு என்று கருதி ராஜினாமா செய்தார்!

பொப்பிலி ராஜா (5.11.1932 முதல் 4.4.1936, 25.8.1936 முதல் 31.3.1937 வரை)

'விஜயநகர ராஜ’ குடும்பத்தைச் சேர்ந்த பொப்பிலி ராஜாவின் முழுப் பெயர் ஸ்வேத செலபதி ராம கிருஷ்ண ரங்கராவ். நீதிக் கட்சியைச் சேர்ந்த இவர், சுமார் மூன்றரை ஆண்டுகள் ஆட்சி நடத்திய பிறகு, திடீரென உடல்நலமின்றிப் போய்விட்டது. 1936-ம் ஆண்டு சிகிச்சைக்காக 'ரஜா’வில் சென்றார். சிகிச்சைகள் முடிந்து 1936 ஆகஸ்ட் 25-ல் மீண்டும் பிரீமியராகப் பதவிக்கு வந்தவர், ஏழு மாதங்கள் கழித்து அவராகவே விலகிவிட்டார்!

பி.டி.இராஜன் (4.4.1936 முதல் 24.8.1936 வரை) 

'பொன்னம்பல தியாகராஜன்’ என்பது முழுப் பெயர். பொப்பிலி ராஜா 'ரஜா’வில் சென்ற காலத்தில், இவர் பிரீமியராகப் பதவியில் இருந்தார்!

கே.வி.ரெட்டி (1.4.1937 முதல் 15.7.1937 வரை) 

1937-ம் ஆண்டு மார்ச்சில் நடந்த சட்டசபைக்கான பொதுத் தேர்தலில் சுயராஜ்யக் கட்சி அதிக இடங்களைப் பெற்று வெற்றி அடைந்தது. 'சுயராஜ்யக் கட்சி’யினர் சட்டசபையில் மந்திரி சபை அமைக்கும் வரையில், நீதிக் கட்சியினர் இடைக் கால மந்திரி சபையில் கே.வி.ரெட்டி என்ற கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு மூன்றரை மாதங்கள் பிரீமியர் பதவியில் இருந்தார்!

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்கிற ராஜாஜி (15.7.1937 முதல் 29.10.1939 வரை) 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனைப்படி, சென்னை சட்டசபைக்கு பிரீமியராக சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்ற முழுப் பெயருடைய ராஜாஜி 1937-ம் ஆண்டு பதவிப் பிரமாணம் ஏற்றார். சுமார் இரண்டு ஆண்டுகள் வரை பிரீமியராக ஆட்சி நடத்தினார். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் காரணமாக, பிரிட்டிஷாருக்கும் மகாத்மா காந்திக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு முற்றியது. காந்திஜி, 'எல்லா மாகாண சட்டசபைகளிலும் காங்கிரஸ் கட்சியில் பதவியில் இருப்பவர்கள் மற்றும் டெல்லி சட்டசபையில் உள்ளவர்கள் அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு எதிராகத் தனி நபர் சத்யாகிரகத்தில் ஈடுபட வேண்டும்’ என அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, ராஜாஜி தமது பதவியை ராஜினாமா செய்தார்!

இரண்டாவது உலக மகா யுத்தம்... பிரிட்டிஷார் நாடெங்கும் 'அவசர நிலை’ பிறப்பித்து இருந்தனர். 1939 நவம்பர் முதல் 1946 ஏப்ரல் வரை நாடெங்கும் எந்தத் தேர்தல்களும் நடைபெறவில்லை. இந்தக் காலத்தில் தமிழகத்தில் பிரீமியர் யாரும் இல்லை!

டி.பிரகாசம் (30.4.1946 முதல் 23.3.1947 வரை) 

அடுத்து 1946-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் பிரபலமானவருமான டி.பிரகாசம் சட்டசபைக்கு பிரீமியராகப் பதவி ஏற்றார்.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே டி.பிரகாசம் மந்திரி சபை மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வந்து, சட்டசபையில் வாக்கெடுப்பில் அது நிறைவேற்றப்பட்டது. டி.பிரகாசம் தலைமையிலான அமைச்சரவை கவிழ்ந்தது!

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் (23.3.1947 முதல் 6.4.1949 வரை) 

டி.பிரகாசம் மந்திரிசபை கலைக்கப்பட்ட அதே தினம் பிற்பகல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் சட்டசபைக்குப் புதிய முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நம் பாரதம் சுதந்திரம் அடைந்த திருநாளை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் கொண்டாடியபோது, இவர் தலைமையில் 'தமிழக அமைச்சரவை’ சிறப்புடன் அதைக் கொண்டாடியது!

பி.எஸ்.குமாரசாமிராஜா (7.4.1949 முதல் 7.4.1952 வரை) 

ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா முதலமைச்சராக இருந்த சமயம்தான் பாரதம் 'குடியரசு’ நாடாகியது. 'இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும்’ அமலுக்கு வந்தது. அந்தச் சட்டத்தின்படி 1952-ம் ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலாகப் பொதுத் தேர்தல் நடக்க இருக்கவே, பி.எஸ்.குமாரசாமி ராஜா பதவியில் இருந்து விலகினார்!

சி.ராஜகோபாலாச்சாரியார் (எ) ராஜாஜி (12.4.1952 முதல் 13.4.1954 வரை) 

ராஜாஜி இரண்டாம் முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்றார். 1953-ம் ஆண்டு இறுதியில் ராஜாஜி அவர்கள் கொண்டுவந்த 'புதிய கல்வித் திட்டத்தை’ச் சட்டசபையில் பலர் எதிர்த்தனர். ''இந்தத் திட்டம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், நான் இங்கு முதலமைச்சராகப் பதவியில் இருப்பதும் நியாயம் இல்லை!'' எனக் கூறி ராஜாஜி தம் பதவியை ராஜினாமா செய்தார்!

கு.காமராஜர் (13.4.1954 முதல் 12.4.1957, 13.4.1957 முதல் 14.3.1962, 15.3.1962 முதல் 1.10.1963 வரை) 

மூதறிஞர் 'ராஜாஜி’ அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதுமே, காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிகுந்த, 'பெருந்தலைவர்’ என எல்லோராலும் அழைக்கப்பட்ட கு.காமராஜர், அடுத்த முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 9 ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்து வந்த அவர், 1962-ம் ஆண்டு மூன்றாம் முறையாகவும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலப்படுத்தும் வேலையில் இறங்குவதற்காகப் பாரதப் பிரதமரின் விருப்பப்படி 1963-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார்!

எம்.பக்தவத்சலம் (2.10.1963 முதல் 5.3.1967 வரை)

காமராஜர் விலகியதுமே, அதே அமைச்சரவையில் இருந்து எம்.பக்தவத்சலம் பதவியேற்றார். இவரது ஆட்சியில் அரசியல் இடைஞ்சல்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்தன. 1967-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாட்டில் சட்டசபைக்கான பொதுத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான - வலுவான கூட்டணி யும் ஏற்பட்டது.அந்தச் சமயம், வலுவான அமைப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் குதித்து, அதில் அறுதிப் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. இதனால், 1967-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதியோடு தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்!

சி.என்.அண்ணாதுரை (6.3.1967 முதல் 3.2.1969 வரை) 

அண்ணா என்று அழைக்கப்பட்ட அண்ணாதுரை இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே முதல்வராக இருந்தார். 1968-ல் அவரது உடல்நலன் பாதிப்படைந்தது. அமெரிக்க நாட்டில் சிகிச்சை பெற்று, சென்னை திரும்பிய அவர், 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ல் காலமானார்!


இவர்களைத் தொடர்ந்து தமிழகத்தின் நம்பர் ஒன் நாற்காலியில் அமர்ந்த, இந்தத் தலைமுறைக்கு நன்கு அறிமுகமானவர்கள்...

மு.கருணாநிதி

10.2.1969 முதல் 5.1.1971 வரை
15.3.1971 முதல் 31.1.1976 வரை,
27.1.1989 முதல் 30.1.1991 வரை
13.5.1996 முதல் 14.5.2001 வரை
13.5.2006 முதல் இப்போது வரை

எம்.ஜி.ராமச்சந்திரன் 

30.3.1977 முதல் 17.12.1980 வரை
9.6.1980 முதல் 15.11.1984 வரை,
10.2.1985 முதல் 24.12.1987 வரை.

ஜானகி ராமச்சந்திரன் 

7.1.1988 முதல் 30.1.1988 வரை

ஜெ.ஜெயலலிதா 

24.6.1991 முதல் 13.5.1996 வரை
14.5.2001 முதல் 21.9.2001 வரை
2.3.2002 முதல் 13.5.2006 வரை

ஓ.பன்னீர்செல்வம் 

21.9.2001 முதல் 1.3.2002 வரை

விகடன்

Thursday, March 24, 2011

''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!''

வைகோ  பேட்டி :

வைகோ என்ற விதை நெல்லை வீணடித்துவிட்டார் ஜெ! தனது பசியைக்கூடப் பொறுத்துக்கொண்டு, எதிரிகளுக்கு விருந்து வைக்கும் யதார்த்த நிலைக்கு கருணாநிதி இறங்கி வந்திருந்தார். ஆனால், விசுவாசத்தைக் கொஞ்சம் கூடுதலாகவே காட்டிய வைகோவின் வயிற்றில் அடிக்கும் அளவுக்கு ஜெயலலிதா துள்ளிக் குதிக்கிறார். அ.தி.மு.க. அணி கலகலத்துவிட்டது தெளிவு. கருணாநிதிக்கு எதிரான வாக்குகளை ஜெயலலிதாவுக்குச் சாதகமானதாக மாற்றும் சாமர்த்தியத்துடன் வலம் வந்த வைகோவின் துணை இல்லாமல் தேர்தலைச் சந்திக்க வருகிறார் ஜெயலலிதா. தி.மு.க-வில் இருந்த காலம் முதல் இன்று வரை அனைத்துத் தேர்தல்களிலும் பம்பரமாகச் சுழன்று வந்த வைகோ, இந்தத் தேர்தலில்... வெறும் பார்வையாளர்! 
 
''நீங்கள் விரும்பும் அளவிலான தொகுதிகளை ஜெயலலிதா தர மாட்டார் என்று தெரிந்தது. ஆனால், கூட்டணியைவிட்டு விலகும் அளவுக்கு நிலைமை மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையே?''
 
'மறுமலர்ச்சி தி.மு.க. தங்கள் அணியில் இருக்கக் கூடாது என்று தொடக்கத்திலேயே ஜெயலலிதா முடிவெடுத்துவிட்டார். தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் அமைத்த குழு, நான்கு முறை அ.தி.மு.க-வுடன் பேச்சு நடத்தியது. கடந்த முறை எங்களுக்குத் தரப்பட்ட 35 இடங்களை முதலில் கேட்டோம். இரண்டாவது சுற்று பேச்சில் 30 தொகுதிகளாவது வேண்டும் என்றோம். நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையில்தான் எங்களுக்கு 6 இடங்கள்தான் தர முடியும் என்று சொன்னார்கள்.

பல்வேறு கட்சிகள் வருவதால் 23 தொகுதிகளாவது ஒதுக்கச் சொன்னோம். 7 தொகுதிகள் தருவதாகச் சொன்னார்கள். அதன் பிறகு, 8 தருவதாகச் சொன்னார்கள். பிறகு அவர்களே, 8 தர முடியாது, 7 தான் முடியும் என்றார்கள். பிறகு, 8 தர முடியும் என்றார்கள். அதன் பிறகு 9 இடங்கள் தருவதாகச் சொல்லி, கையெழுத்து போட வரச் சொன்னார்கள்.

ஜெயலலிதா சொல்லி அனுப்பிய எண்ணிக்கைகள் அவரது மன ஊசலாட்டத்தைக் காட்டுவதாக மட்டும் இல்லை. எதைச் சொன்னால் நான் ஏற்க மாட்டேனோ, அதைச் சொல்லி என்னைக் கோபப்படுத்த நினைத்தார். நானாகவே வெளியேறிவிடுவேன் என்று திட்டமிட்டார்.

'நீ இன்னுமா இருக்கிறாய்?’ என்று ஜெயலலிதா கேட்பதுபோல இருந்தது. எங்களுக்கும் அவருக்குமான பிரச்னைக்கு எண்ணிக்கை காரணம் அல்ல... எண்ணமே காரணம்!''


 ''ஜெயலலிதாவுக்கு உங்கள் மீது கோபம் வர என்ன காரணம்?'' 

''2006-ம் ஆண்டு அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைக்கும் முடிவைக் கனத்த இதயத்துடன் நான் எடுத்தேன். பொடாவில் என்னை 19 மாதங்கள் சிறைவைத்த ஜெயலலிதாவுடன் அணி சேரத் தயங்கினேன். ஆனால், குறைவான இடங்களை கலைஞர் ஒதுக்கினார். எனவே, அ.தி.மு.க. கூட்டணிதான் சரியானது என்று கட்சி முன்னணியினர் முடிவெடுத்தார்கள். அதற்கு, நான் கட்டுப்பட்டேன். அப்போது நான், 'அரங்கேற்றம்’ படத்தின் கதாநாயகி, தனது தம்பியைப் படிக்கவைக்கக் கெட்டுப்போவதைப்போல, கட்சி நலனுக்காக இதற்கு உடன்படுகிறேன்!’ என்றேன். அ.தி.மு.க. கூட்டணிக்கு என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துப் போனவர்கள் இன்று தி.மு.க-வில் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்!

அந்த சட்டமன்றத் தேர்தலில், அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில், சட்டமன்ற நடவடிக்கைகளில், இடைத் தேர்தல்களில் எல்லாம் அ.தி.மு.க-வுடன் எந்த முரண்பாடும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கேட்காத நெல்லை, தஞ்சாவூரை ஜெயலலிதா ஒதுக்கினார். போராடித்தான் நான்கு தொகுதிகள் வாங்கினேன். அதிலும் நாங்கள் கேட்காத நீலகிரி, தஞ்சையைத் தந்தார். கொடுத்ததை வாங்கிக்கொள்ளவில்லை என்ற கோபத்தில், தீவுத் திடல் கூட்ட மேடையில் என்னிடம் ஜெயலலிதா பேசவில்லை. அன்று அவரது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நான் போனேன். வாசலில் முறையான வரவேற்பு இல்லை. ஆனால், மற்ற தலைவர்களை வாசலில் வந்து வரவேற்று அழைத்துச் சென்று இருப்பதை ஜெயா டி.வி-யில் பார்த்தபோது, 'இந்த சோற்றைத் தின்றிருக்க வேண்டாம்!’ என்று நினைத்தேன். அது தனிப்பட்ட வைகோவுக்கு இழைக்கப்பட்ட அவமானம். தாங்கிக்கொண்டேன். ஆனால், இன்று, 6, 7, 8, 9... என்பது ம.தி.மு.க-வுக்கு ஏற்பட்ட அவமானம். என்னைவிட இயக்கம்தான் பெரிது.
 
 சிறையில் இருப்பது மட்டும் தியாகம் அல்ல. நிந்தனைக்கும் பழிக்கும் ஆளாகும் நிலையை எடுப்பதும் தியாகம்தான். அதன் பிறகும் அவமானம்தான் பரிசு என்றால், ஏன் அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்?''

''குறைவாக இருந்தாலும், வெற்றி பெறும் தொகுதிகளை வாங்கி, அதில் மட்டும் நின்றுஇருக்கலாமே?'' 

''21 இடங்கள்... அதுவும் நாங்கள் கேட்ட இடங்கள் கொடுத்தாலும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது தவறு என்பதைக் கடந்த 10 நாட்களின் சம்பவங்கள் எனக்கு உணர்த்திவிட்டன!

48 ஆண்டுகள் பொது வாழ்க்கை உடையவன் நான். திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் நான். இந்த அனுபவத்தில் சொல்கிறேன், 'ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை... திருந்தவும் மாட்டார்’ என்பதை இந்த 10 நாட்கள் உணர்த்திவிட்டன. ஜெயலலிதாவின் அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது முற்றிலுமாகப் பொய்த்துவிட்டது. அவருடைய போக்கிலும் அணுகுமுறையிலும் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும், இன்னமும் போகவில்லை. அவருடன் இணைந்து கூட்டணியில் தொடர்வதும் வாக்காளர்களைச் சந்திப்பதும் எந்த வகையிலும் சரியானது அல்ல.


ம.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக வேண்டும் என்பதற்காக, திருந்தாத ஜெயலலிதாவுக்கு நான் வாக்கு கேட்டுச் செல்வது, 'வைகோ நல்லவன்’ என்று நம்பும் தமிழ் மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம். என்னுடைய மனசாட்சிக்குச் செய்யும் துரோகம்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, இவ்வளவு ஆணவம் தலை தூக்குமானால், இப்படிப்பட்டவர் கையில் ஆட்சி போனால் என்ன ஆகும்? முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த ஜெயலலிதா செய்யும் தவறுகளைக் கண்டிக்க, பிரசாரம் செய்ய எனக்கு யோக்கியதை உண்டா? 'உன்னைச் சேர்ந்தவர்களை எம்.எல்.ஏ ஆக்க, ஜெயலலிதாவை நல்லவர் என்று சொல்லி, எங்களை முட்டாள் ஆக்கினீர்களா?’ என்று பொதுமக்கள் கேட்க மாட்டார்களா?
என்னைப் பொறுத்தவரையில், மக்களின் நம்பகத்தன்மையை மட்டும்தான் சொத்தாக நினைக்கிறேன்!''

''மூன்றாவது அணியாவது அமைக்க முயற்சித்து இருக்கலாமே?'' 

''தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்றாவது அணி சாத்தியம் இல்லை. பண பலம்கொண்ட இரண்டு அணிகளை எதிர்த்தால், மூன்றாவது அணி... மூன்றாவது இடத்தில்தான் வரும்!''


''தனியாக நிற்பது..?'' 

''ஒரு தரப்பை வீழ்த்த, இன்னொரு தரப்பிடம் பணம் வாங்கினேன் என்ற பழிச் சொல் மட்டும்தான் அதனால் கிடைக்கும்!''

''தேர்தல் அரசியலில் நம்பிக்கைகொண்ட ஒரு கட்சி தேர்தலைப் புறக்கணிப்பது சரியானது அல்லவே?'' 

''நாங்கள் இந்தத் தேர்தலை மட்டும்தான் புறக் கணித்து இருக்கிறோம். இனி, தேர்தலில் நிற்கவே மாட்டோம் என்று சொல்லவில்லையே! ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டபோது, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தேர்தலில் பங்கேற்கவில்லை. சூழ்நிலைகளைச் சரிப்படுத்தி, கட்சியைப் பலப்படுத்திவிட்டு தேர்தலைச் சந்தித்தது. சீனாவில் மாசேதுங், தனது செம்படையைத் திடீரென்று கலைத்தார். எல்லோரும் இதைக் கடுமையாகக் கண்டித்தார் கள். ஆனால், ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதை உருவாக்கி வென்று காட்டினார்.

ஒரு பக்கம்... தன்னுடைய சுயநலத்தால் தி.மு.க-வைக் கபளீகரம் செய்து தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த கருணாநிதி, இன்னொரு பக்கம் ஆணவப் போக்குகொண்ட ஜெயலலிதா - இந்த இருவர் மீதும் கோபம்கொண்ட பொதுமக்கள்தான் நாட்டில் அதிகம். அந்த வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம். எனக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும், 'தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்... சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்!’ என்றே சொல்கின்றன. இழக்கவில்லை என்பதைத் தேர்தல் புறக்கணிப்பு மூலம் நிரூபித்து இருக் கிறேன்!''

''பதவிகள், பொறுப்புகளுக்காக கட்சிக்குள் வருபவர்கள் ஏமாந்து போவார்கள். கட்சி மாறிவிடுவார்களே?'' 

''எல்லா சூழ்ச்சிகளையும் தாண்டித்தான் ம.தி.மு.க. இயங்கிக்கொண்டு இருக்கிறது. லட்சங்களைக் காட்டி பொதுக் குழு உறுப்பினர்களைப் பிரித்து, 'நாங்கள்தான் உண்மையான ம.தி.மு.க’ என்று ஒரு கும்பல் சதித் திட்டம் தீட்டியபோதே, எங்கள் உறுப்பினர் எவரும் போகவில்லை. லட்சியத்தைப்பற்றி நான் பேசுவதால் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள்!''

''யாருக்கு வாக்களிப்பது என்பதைச் சொல்வீர்கள்தானே?'' 

''ம.தி.மு.க. தொண்டனின் மனசாட்சியே அதை முடிவு செய்யும்!''

''இத்தனை ஆண்டு காலப் பொது வாழ்வில் இந்த இரண்டு வாரங்களில் நீங்கள் பெற்ற படிப்பினை என்ன?'' 

''சிகாகோவில் உள்ள மே நாள் நினைவு அரங்கில், 'மௌனம் சில வேளைகளில் சப்தத்தைவிட வன்மையானது’ என்று எழுதப்பட்டுள்ளது. ஒரு பேச்சாளனான நான், இது சத்தியமானது என்பதை உணர்ந்துகொண்டேன். இந்த இரண்டு வாரமும் நான் மௌனமாக இருந்தேன். ஆனால், ஆயிரம் கூட்டங்கள் பேசினால் கிடைக்கும் பெருமையையும், நற்பெயரையும் இந்த மௌனம் எனக்கு வாங்கித் தந்திருக்கிறது. கடந்த முறை அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்ததால், பழிக்கு ஆளானேன். அந்தப் பழி துடைக்கப்பட்டுவிட்டது. காலம் எனக்குச் செய்திருக்கும் அருட்கொடை இது!''

'' 'என்றும் நான் உங்கள் அன்புச் சகோதரிதான்!’ என்று ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறாரே?'' 

''ம.தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும் அதே அன்புச் சகோதரிதானே! ம.தி.மு.க நடத்தப்பட்ட விதம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் கோபமும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்ட அனுதாபத்தையும் பார்த்துப் பயந்துபோன ஜெயலலிதா, இப்படி ஒரு கடிதத்தை அனுப்பி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்!''

''இந்தத் தேர்தல் களத்தில் நீங்கள் இல்லை...வருத்தமாக இல்லையா?''

''தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் இருப்போம்!''


 விகடன் 

Tuesday, March 22, 2011

இன்வெர்ட்டர்...


எப்படி வாங்கினால் லாபம்?
 
'நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது’ என்கிற ரஜினிகாந்த் பஞ்ச் டயலாக் போல நம்மூரில் கரன்ட் எப்ப போகும் எப்ப வரும்னும் யாருக்கும் தெரியாது! பாத்ரூமில் சோப்பு தேய்த்துக் கொண்டிருக்கும் போதே பட்டென்று போய்விடுகிறது; மிக்ஸியில் சட்னி அரைத்துக் கொண்டிருக்கும் போதே கரன்ட் கட் ஆகி காலை நேர டென்ஷனை கூட்டிவிடுகிறது. எல்லாவற்றையும் விட குழந்தைகள் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் போது கரன்ட் போய்விட்டால் போதும்; பதற்றத்தில் படித்ததையெல்லாம் மறந்து விடுகிறார்கள். வருடம் முழுவதும் இதே கதைதான்; அதுவும் கோடைகாலம் வந்துவிட்டால் போதும், கரன்ட்டுக்கு எக்ஸ்ட்ரா ரெஸ்ட் தேவைப்படுகிறது!
 
சரி, கரன்ட் போவதைத் தடுக்க முடியாது. அப்ப என்னதான் செய்யறது..? அந்த காலத்தைப் போல சிம்னி விளக்கையோ, மெழுகுவத்தியையோ ஏத்தி வைக்கறதெல்லாம் இப்போ சாத்தியப்படுமா என்ன? எமெர்ஜென்ஸி லைட்டுகளும் அரைமணி நேரம் ஒரு மணி நேரம்தான் எரியும். அடுத்து,  குறைஞ்சபட்சம் ஒரு ஃபேனாவது ஓடவேண்டாமா? இதுக்கெல்லாம் என்ன பண்றது..?    

கரன்ட் போயிட்டா பெரிய கம்பெனிகளிலும் சினிமா தியேட்டர்களிலும் உடனே ஜெனரேட்டரைப் போட்டு விடுவார்கள். சின்ன கடைகள், ஓட்டல்களில் அதற்குத் தகுந்த குறைந்த கெபாசிட்டி கொண்ட ஜெனரேட்டர்களைப் போட்டு சமாளித்துக் கொள்கிறார்கள்.
 
ஆனால், பொதுவாக ஜெனரேட்டர்களை யூஸ் பண்றதுன்னா பராமரிப்புச் செலவு அதிகம். கூடவே அது போடும் சத்தமும் அதிகம். ஏறுகிற விலைவாசியில் டீசல் வாங்கிப் போடுவதும் கட்டுபடி ஆகாது என்கிறார்கள். அப்படி என்றால் வீடுகளில் எப்படித்தான் சமாளிப்பது?

''யோசிக்காம இன்வெர்ட்டர் வாங்கிப் போடுங்க'' என்று அட்வைஸ் பண்ணுகிறார்கள் எலெக்ட்ரீஷியன்கள் பலரும். கூடவே,  'மின்சாரம் கட் ஆனவுடன் தானாகவே சுவிட்ச் ஆன் ஆகிடும்; அதுபோலவே கரன்ட் வந்தவுடன் தானாகவே ஆஃப் ஆகிடும்; கம்ப்யூட்டருக்கு பயன்படுத்துற யூ.பி.எஸ். போலதான் இது. பராமரிப்புச் செலவும் நேரமும் குறைவு, சத்தமில்லாமலும் இயங்கும்’ என்று டிப்ஸ்களையும் சொல்கிறார்கள். இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்த சிலரிடம் விசாரித்து கிடைத்த இன்னும் சில விஷயங்கள்...

கரன்ட் போயிட்டாலும் வீடுகளில் லைட், ஃபேன், மிக்ஸின்னு எல்லாத்தையுமே இன்வெர்ட்டர் தயவால் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

மின்சாரத்தைச் சேமித்து வழங்கும் தொழில்நுட்பத்தில் இயங்குவதால்  இன்வெர்ட்டரி லிருந்து செலவாகும் மின்சாரம் நேரடியாகச் செலவாகும் மின்சாரத்தை விட குறைவாகவே இருக்கிறது. எனவே அதிக நேரம் பயன்படுத்த முடியும்.


எல்லாப் பொருட்களைப் போலவே பிராண்டட் இன்வெர்ட்டர்களோடு,  சில லோக்கல் தயாரிப்புகளும் மார்கெட்டில் கிடைக்கிறது. விற்பனையாளர்களே சர்வீஸும் செய்து தருகின்றார்கள்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டிஸ்டில்டு வாட்டர் ஊற்றினால் போதுமானது; பெரிய அளவில் பராமரிப்பு வேலைகள் கிடையாது.

இன்வெர்ட்டரோடு சேர்ந்த  பேட்டரியின் ஆயுட்காலம் மூன்று அல்லது நான்கு வருடங்கள் மட்டுமே; பிறகு வேறொரு பேட்டரி மாற்றிக் கொள்ள வேண்டும்.


இன்வெர்ட்டர்கள் சத்தமில்லாமல் இயங்குவதால் கைக்குழந்தைகள், நோயாளிகள் ஆகியோருக்கு எந்த தொந்தரவும் இருக்காது.

யார், எதை வாங்கினால் லாபம்..? 

கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என்ற சிறு குடும்பத்திற்கு எனில் 650 வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர் போதுமானது. இதில் மூன்று லைட் போடலாம்; மூன்று ஃபேன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நான்கு முதல் ஐந்து வருடங்கள் வரை உழைக்கும். இதன் விலை சுமார் 10,000.  ஒரு வருட வாரன்டி காலம் கொடுக்கப்படுகிறது.
ஆறு பேர் வரை உள்ள குடும்பத்திற்கு  800 வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர் தேவைப்படும். விலை சுமார் 13,500 முதல் 21,000 வரை.  இதில் நான்கு ஃபேன், ஐந்து டியூப் லைட் மட்டுமல்லாமல் மிக்ஸி, டிவியும் உபயோகிக்கலாம். ஆனால் எல்.சி.டி. டிவிகளை இந்த வாட்ஸில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

எட்டு பேர் வரை உள்ள கொஞ்சம் பெரிய குடும்பத்திற்கு 1000 வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர் தேவைப்படும். ஆறு லைட், ஆறு ஃபேன், மிக்ஸி, டிவி உபயோகிக்கலாம். இந்த கெபாசிட்டியில் எல்.சி.டி. டிவியையும் பயன்படுத்தலாம்.

டேபிள் டாப் கிரைண்டர் மற்றும் மோட்டார் ஓட வேண்டுமெனில் 1400 வாட்ஸ் இன்வெர்ட்டரை பயன்படுத்த வேண்டும். ஆனால் மோட்டார் பயன்படுத்தினால் ஒரு மணி நேரத் தில் பேட்டரி காலியாகிவிடும்.

பொதுவாக இன்வெர்ட்டர் வாங்கும்போது மிக முக்கியமாகப் பார்க்க வேண்டிய விஷயம், வாரன்டி காலம் அதிகரிக்க அதிகரிக்க விலையும் அதிகரிக்கும்.

பெரிய அளவிலான வணிகத் தேவைகளுக்கு எனில் நான்கு கிலோவாட்டுக்கு மேல் திறன் கொண்ட  இன்வெர்ட்டர்களை வாங்க வேண்டும்.

மார்க்கெட்டில் உள்ள பிராண்டுகள்:    

வி கார்டு, லுமினியஸ், அமர்ராஜா பேட்டரியின் தயாரிப்பான டிரைபால், மைக்ரோடெக், வேர்ல்பூல், ஏ.பி.சி., டாடா ஷீல்டு போன்ற பிராண்டுகள் மார்க்கெட்டில் உள்ளன.



Monday, March 21, 2011

ஜப்பான்


ஜப்பான்: ஒரு நல்ல குடிமக்களின் தேசம்..!!

ஒரு நெருக்கடியான சூழ்நிலைக்கு மனிதன் தள்ளப்படும் போது முதலில் அவனது நேர்மை காணாமல் போய்விடும்.. அனால் ஜப்பானின் மக்கள்   ஒரு விதிவிலக்கு...இயற்கை சீற்றங்களால் தற்போது ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் அவலங்கள் அனைவரும் அறிந்ததே..அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகலாம்..ஆனால் இப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் ஜப்பானில் எந்த ஒரு சூரையாடலோ, கொள்ளையோ நடக்கவில்லை என்பது தான் மிகவும் பாராட்டுக்குரியது. மாறாக அனைத்து சூப்பர் மார்க்கெட்டிலும் பொருட்களின் விலையைக் குறைத்து விற்கின்றனர்..vending machine உரிமையாளர்கள் இலவசமாக குடிபானங்களை வினியோகிக்கின்றனர். அனைவரது மனதிலும் இருக்கும் ஒரு கொள்கை "people work together to survive”.

ஆயிரக்கணக்கான உயிர்சேதம், குடியிருக்க வீடு இல்லை, சரியான உணவு கிடையாது,குடிக்க தண்ணீர் இல்லை, சரியான மருத்துவ வசதி இல்லை, நகரங்கள் முற்றிலுமாக சிதைந்து போய் விட்டன, அணு உலை வெடித்து கதிரியக்க ஆபத்து...இத்தனை துயரத்திலும் அவர்களது நம்பிக்கையும், நேர்மையும் பாதிக்கப்படவில்லை..மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்றனர். 

அமெரிக்காவில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் காத்ரீனா சூறாவளி துயரத்தின் போது நடந்த கசப்பான சம்பவங்களை நினைவுகூர்கின்றனர். பலர் தமது சொந்த நலனுக்காக கடைகளை சூரையாடியதையும், கைக்கு கிடைத்த அனைத்தும் தம்முடையதாக ஆக்கிக் கொண்ட நிகழ்வுகளும் மிகவும் வேதனைக்குரியதாக தெரிவிக்கின்றனர். இவ்வளவு துயரத்திலும் ஜப்பான் மக்கள் அவர்களது தேசத்தின் பெருமையை நிலைநாட்டுவதாக பாராட்டுகின்றனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பான் மிகவும் மோசமான ஒரு நிலைமையைச் சந்தித்திருக்கிறது. இனி இயல்பு நிலை திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆனாலும் அது ஒரு நல்ல மாற்றமாக அமையும் என்பது துளி அளவு சந்தேகம் இல்லை. எந்த ஒரு நல்ல இயற்கை வளங்களும் இல்லாத ஜப்பான் ஒரு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்தது அந்த நாடு மக்களின் அயராத உழைப்பால் என்பதை யாரும் மறுக்க இயலாது. ஜப்பானியர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நூறில் 99 சதவீத இந்தியர்கள் நம் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி கவலை கொள்வதில்லை, தமது வாழ்க்கையைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொள்கிறோம். ஆனால் ஜப்பானியர்கள் நாட்டிற்கு எது நல்லதோ அதை மட்டுமே செய்கிறார்கள். 

பீனிக்ஸ் பறவை சாம்பலில் இருந்து உயிர் பெற்று மறுபடியும் வரும் என்பது கற்பனைக் கதையாகக் கூட இருக்கலாம். எவ்வளவு துயரம் வந்து வீழ்ந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்கும் ஜப்பான் ஒரு வாழும் பீனிக்ஸ் பறவை..!!