Search This Blog

Sunday, September 30, 2012

அருள்வாக்கு - சாந்தம் பழகு!

ஆசையையும் கோபத்தையும் நம்மால் அடக்க முடியவில்லை. இவை இரண்டுமே நம்மை எப்போதும் துன்புறுத்தி வருகின்றன. எந்தப் பொருளை எவ்வளவு அடைந்த போதிலும், போதும் எனும் மன நிம்மதி நமக்கு ஏற்படுவதில்லை. உலகத் துயரம் நம்மை விட்ட பாடில்லை. சிறு துயரத்தைக் கண்டுவிட்டாலும் மனம் கலங்கத்தான் செய்கிறது. இதனின்றும் கரைஏற வழியென்ன?
நமது மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாகத் தன் இஷ்டப்படியெல்லாமே தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த இந்த மனத்தைத் தன்னுள் அடக்க சிறிது சிறிதாக முயற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும். மனம் அடங்கிவிட்டால் நமக்கு வேறொன்றும் தேவையில்லை. அதுதான் நாம் பெற வேண்டிய பூர்ண சுதந்திரமாகும்.

ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனத்தைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல், கடவுளது தியானத்தில் அமர வேண்டும். வேறு நினைவுகள் இல்லாமல் தியானம் செய்வதால் நாளடைவில் புத்தியானது தெளிவடையும். ஆசையையும் கோபத்தையும் அடக்குவதற்கு இது ஒரு சாதனம். இவ்வித சாதனையைப் படிப்படியாக மேற்கொண்டவனுக்குச் சீக்கிரமாக ஆத்ம ஞானம் உண்டாகும். குறைவில்லாத அந்த ஞானத்தைப் பெறுபவன்தான் உண்மையான சுதந்திரன்.
பிற ஸ்திரீகளைத் தாயார்களாக மதிக்க வேண்டும். பிற உயிரைத் தம்முயிர் போல் மதிக்க வேண்டும். உயிர் போவதாக இருந்தாலும் உண்மையே பேச வேண்டும். சமூகச் சச்சரவுகள், வகுப்புச் சச்சரவுகள் செய்வதை அறவே ஒழிக்க வேண்டும். எல்லோரிடமும் சம அன்பு கொண்டு ஒழுக வேண்டும். மக்களெல்லாம் சுகமாக வாழ வேண்டுமென ஒவ்வொருவனும் நினைக்க வேண்டும். ஒவ்வொருவனும் தமது அறிவு வளர்ச்சிக்கும், ஆத்ம முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும். இவற்றுக்கெல்லாம் புத்தியும் சக்தியும் தருமாறு கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Saturday, September 29, 2012

அருள்வாக்கு - இளைஞர் கடமை!


பிறருக்கு உபகாரம் செய்வதற்கே நமது சரீரம் ஏற்பட்டிருக்கிறது என்பது ஆன்றோர் மொழி. ‘பரோபகாரார்த்த இதம் சாரீரம்’ என்பார்கள். தேகத்தில் நல்ல தெம்பு இருக்கிற போதே, யுவர்கள் சேவை நெறியில் ஈடுபட வேண்டும். பிறருக்குச் சேவை செய்வதற்காகவே தேக பலத்தை நன்கு காத்துக்கொள்ள வேண்டும். தேக பலத்தைவிட ஒழுக்க பலம் முக்கியம். நமது மதம் கூறுகிற சாஸ்திர தர்ம நெறியின்படி சுத்தமான வாழ்வு வாழ வேண்டும். இப்படி நாம் தூய்மையாக இருந்தால்தான் பிறருக்கு நல்ல முறையில் சேவை செய்ய முடியும். காமக் குரோதாதிகளாக இருந்தால் எப்படி நல்ல முறையில் சேவை செய்வது?

சமூகசேவை உண்மையாக இருக்க வேண்டுமாகில் சேவை செய்கிறவர்களுக்குத் தர்மத்திலும், சத்தியத்திலும் தளராத பிடிப்பு இருக்க வேண்டும். அவர்களுக்குப் பயம் என்பதே கூடாது. பயமற்ற நிலை வேறு; ஹிம்ஸை வழியில் நடப்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. யுவர்களுக்கெல்லாம் உதாரணமாக இருப்பவர் ஆஞ்சநேய ஸ்வாமி. அவருக்கு இருந்த பலம் மிகப் பெரியது. சுபாவத்திலோ சாந்தராக இருந்தார். கோபித்து எழவேண்டிய சமயத்தில் மஹாவீரராக எழும்பி ஹதாஹதம் செய்தார். அவருடைய புத்தி பலம் பெரிது. ஆயினும் பக்தியில் தோய்ந்து அடக்கத்துடன், விநயமே ஸ்வரூபமாகச் சேவை செய்து கொண்டிருந்தார். பயமென்பதே அவருக்கு இல்லை. ஆனாலும், தாமாக ஹிம்ஸை வழியில் அவர் சென்றதில்லை. பிறருடைய ஹிம்ஸைக்கு எதிர்மருந்தாகவே தாமும் எதிர்த்தார். அவர் சொந்த நலனுக்காகப் பலத்தைப் பிரயோஜனப்படுத்தவில்லை. துர்பலருக்குக் கொடியவரால் கஷ்டம் ஏற்பட்டால், தம் நலனையும் பொருட்படுத்தாமல் பலவீனரை ரட்சிப்பதில் அஞ்சா நெஞ்சராகச் சேவை செய்தார். லோக கேஷமம் ஒன்றே லக்ஷியமாகக் கொண்டு இந்த தர்மத்தை இளைஞர்களும் நடத்திக் காட்டினால் நாட்டின் ஒழுக்கம் மிக உயர்ந்த நிலை அடையும். அரசாங்கத்தின் தரமும் தானாகவே உயரும்.
- ஜகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Friday, September 28, 2012

சாய்னா நேவால்


லண்டன் ஒலிம்பிக்ஸ் நடக்கவிருந்த சமயத்தில் சாய்னா நேவாலுக்கு கோக் போன்ற பெரிய விளம்பர வாய்ப்புகள் வந்தன. ஆனால், அப்போது ஒலிம்பிக்குக்காக எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டார். ரித்தி ஸ்போர்ட்ஸ் என்கிற நிறுவனம் ரூ. 40 கோடிக்கு சாய்னா நேவாலை 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. லண்டன் ஒலிம்பிக்ஸில், வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னாவின் விளம்பர ஒப்பந்தத்தை ஏற்கெனவே நிதி நெருக்கடியில் இருக்கும் டெக்கான் குழுமம் புதுப்பிக்கவில்லை. இதனால், இப்போது சாய்னாவை ஒப்பந்தம் செய்துள்ளது ரித்தி ஸ்போர்ட்ஸ். 

உலக அளவில் ஆண்/பெண் பேட் மிண்டன் வீரர்களில் அதிகம் சம்பாதிக்கும் வீரர் என்கிற பெருமையும் சாய்னாவுக்குத் தான். விளம்பரங்களில் சல்மான் கான், தோனி, சச்சின், கோலி போன்ற பிரபலங்கள் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்சாய்னா. இன்றைய நிலவரப்படி, வருடத்துக்கு தோனி ரூ. 70 கோடியும் சச்சின் ரூ. 40 கோடியும் கோலி ரூ. 30 கோடியும் விளம்பரம் மூலமாக சம்பாதிக்கிறார்கள். முன்பு டெக்கானிடமிருந்து வருடத்துக்கு ஒன்றரை கோடி மட்டுமே பெற்று வந்தசாய்னாவுக்கு, இனி மேல் வருட வருமானம் கிட்டத்தட்ட ரூ. 14 கோடி. ஒலிம்பிக் சாதனைக்காக சமீபத்தில், ஆந்திரா பேட்மிண்டன் சங்கம்,சாய்னாவுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்தது. அதிகம் சம்பாதிக்க கிரிக்கெட், டென்னிஸ் போன்ற புகழ்பெற்ற விளையாட்டுகளில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் சாய்னா. 

பேட்மிண்டனுக்கு ஆந்திரா அளித்துவரும் கொடைகளுக்கு அளவே இல்லை. ஏற்கெனவே சாய்னா, காஷ்யப், ஜூவாலா கட்டா என நடப்பு பேட்மிண்டன் வீரர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இப்போது, இன்னொரு ஆந்திரப் பெண்ணான 17 வயது பி.வி. சிந்து, அதிரடியான வெற்றி மூலம் பேட்மிண்டன் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சென்ற வாரம், சைனா மாஸ்டர்ஸ் போட்டியில், லண்டன் ஒலிம்பிக் சாம்பியனைத் தோற்கடித்திருக்கிறார் சிந்து. ‘சானா நேவால் போல சிந்துவாலும் சர்வதேச அரங்கில் தொடர்ந்து சாதிக்கமுடியும்’ என்று நம்பிக்கை அளிக்கிறார் அவருடைய பயிற்சியாளர் கோபி சந்த். ஒலிம்பிக் வீராங்கனையைத் தோற்கடித்து, உலக அளவில் 20வது இடத்தைப் பிடித்திருக்கிறார் சிந்து.  

இந்திய டென்னிஸில் நிலவும் சர்ச்சைகள் நாகரிகமான எல்லையைத் தாண்டிச் சென்றுவிட்டது. இந்திய டென்னிஸ் சங்கத்தை (ஏஐடிஏ) மதிக்கவில்லை, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸுடன் இணைந்து ஆடவில்லை என்பன போன்ற காரணங்களால் சமீபத்தில் நடைபெற்ற டேவிஸ் கோப்பைப் போட்டியில் மகேஷ் பூபதி, பொபண்ணா ஆகியோர் சேர்க்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகாலம் இந்தியாவின் சார்பில் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இருவரையும் 2014 ஜூன் 30 வரை இந்திய அணிக்குத் தேர்வு செய்யமாட்டோம் என்று டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) அறிவித்தது. ஆரம்பத்தில் லியாண்டர் பெயஸுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த மகேஷ் பூபதி, இப்போது டென்னிஸ் சங்கத்தின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளார். ஏஐடிஏ தலைவர் அனில்கண்ணா மீது பூபதி வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் அதிரடியாக உள்ளன.

இந்திய டென்னிஸ் சங்கம் இதுவரை ஓர் உருப்படியான வீரரைக் கூட உருவாக்கவில்லை. எல்லோரும் சொந்தத் திறமையால மேலே வந்திருக்கிறோம். ஆனால், மோசமான நிர்வாகத்தால் ரமேஷ் கிருஷ்ணன், லியாண்டர் என பல வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஏஐடிஏவின் தலைவர் அனில் கண்ணா மோசமான அரசியலை நடத்தி வீரர்களிடையே மோதலை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார். லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடர்பான சர்ச்சைகளில், லியாண்டரும் பூபதிக்குமிடையே மோதல் என்றுதான் எல்லோரும் செய்தி வெளியிட்டார்கள். ஆனால், அதன் பின்னால் இருந்த அரசியலை யாரும் கண்டுகொள்ளவில்லை. என்னுடன் சண்டை போட லியாண்டரைப் பயன்படுத்துகிறார். ஏஐடிஏ என்னை என்ன செய்தாலும், அதையெல்லாம் தாண்டி என்னால் சிறப்பாக விளையாட முடியும். லண்டன் ஒலிம்பிக்ஸில், நானும், பொபண்ணாவும் தோற்றபோது, ஏராள மானோர் அதைக் கொண்டாடினார்கள். இது, இந்தியாவின் எதிர்கால டென்னிஸையே அழித்துவிடும்.  

நான் நாடு முழுவதும் டென்னிஸ் மைதானங்களை அமைத்து போட்டிகளை நடத்தி வருகிறேன். டென்னிஸ் அகாடமிகளை திறந்து வருகிறேன். அது மக்களிடையே பேசப்பட்டது. ஆனால், தனியாகச் செய்ய வேண்டாம். சேர்ந்து செய்யலாம் என்றார் அனில் கண்ணா. நான் செய்கிற எல்லா காரியங்களுக்கும் அவர் பெயர் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்." கடந்த இருபது வருடங்களாக இந்திய டென்னிஸ் என்றால் அது லியாண்டரும் பூபதியும்தான். இவர்களுக்கு மாற்றாக இன்னமும் ஒரு வீரர்கூட உருவாகவில்லை என்பதுதான் நிஜம். 

ஏற்கெனவே லியாண்டருக்கும் பூபதிக் குமிடையே பல பிரச்னைகள். இப்போது அனில் கண்ணாவின் அரசியல் வேறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வீரர்களுக்கு மதிப்பளிக்கும், புதிய வீரர்களை உருவாக்கும் நிர்வாகிகளால் இந்திய டென்னிஸை சரிவிலிருந்து காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால், இந்திய ஹாக்கிக்கு நேர்ந்த கதிதான் டென்னிஸுக்கும் ஏற்படும்.

உயிர் பெறுமா பொருளாதாரம்? - அன்னிய நேரடி முதலீடு


அன்னிய நேரடி முதலீட்டை நாங்கள் அனுமதித்தது பற்றிப் பொய்ச் செய்திகளை, பயத்தைப் பரப்பி மக்களைக் குழப்பமடையச் செய்கிறார்கள். நீங்கள் அவர்களால் தவறாக வழிநடத்தப்படக் கூடாது. இதே தந்திரங்களைத்தான் 1991ல் நான் முதன்முதலாக பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தபோதும் கடைபிடித்தார்கள். ஆனால், அவை எடுபடவில்லை. இப்போதும் எடுபடாது" என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கர்ஜித்திருக்கிறார்(?) மன்மோகன் சிங்.

சில்லறை வர்த்தகம், ஒலிபரப்புத் துறை, விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து ஐ.மு.கூ. அரசு எடுத்த முடிவு பெரிய அரசியல் சூறாவளியைக் கிளப்பி விட்டது. திரிணாமுல் காங்கிரஸ், ‘பை’ சொல்லிவிட ஆட்டம் கண்ட அரசை தற்சமயத்துக்குத் தாங்கிப் பிடித்திருக்கிறார் முலாயம்சிங் யாதவ். ஆனால் ‘சுயநல அஜண்டாவோடு செயல்படும் முலாயம் சிங்கை நம்பி எத்தனை காலம் தாக்குப் பிடிக்க முடியும்?’ என்று காங்கிரஸுக்குள் குழப்பம் இருக்கிறது. ‘அரசியல் சூழல் எப்படி இருந்தாலும், இதுபோன்ற பொருளாதார சீர்திருத்தங்கள் நமது நாட்டுக்குக் கண்டிப்பாகத் தேவை. எனவே, எந்த நிலையிலும் அறிவித்த சீர்திருத்தங்களை, மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை’ என்று சொல்கிறார்கள் பிரதமரும், நிதி அமைச்சர் ப.சிதம்பரமும்.

1991-இல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது நிதி அமைச்சர் மன்மோகன் கொண்டு வந்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள் காரணமாகத்தான், இந்த இடைக் காலத்தில் உலக அளவில் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவைச் சந்தித்தபோதும் நம் நாடு உறுதியோடு நின்றது என்பது காங்கிரஸ் தரப்புவாதம். அதுவரை அரசின் வசம் இருந்த பல துறைகள் தனியாருக்குத் திறந்து விடப்பட, வேலைவாய்ப்புகள் பெருகி பொருளாதார வளர்ச்சியும் மேலோங்கியது என்கிறார்கள் காங்கிரஸ் காரர்கள்.  தவறு; அப்போது கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களால் ஏழை மேலும் ஏழையானான். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆனார்கள்" என்பது இடதுசாரிகளின் வாதம். இந்தச் சூழலில் சமீபத்தில் பிரதமரால் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்களை ‘இரண்டாம் அலை’ சீர்திருத்தங்கள் என்கிறார்கள். பொருளாதார வல்லுனர்களும், தொழிலதிபர்களும் இதைக் கைதட்டி வரவேற்க வழக்கம் போல இடது சாரிகள் உட்பட முக்கிய எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. இந்த மன்மோகன் மாஜிக் வரவேற்கத்தக்கதா... இல்லையா என்று நாடு முழுதும் பட்டிமன்ற பாணியில் விவாதம் நடக்கிறது.

1991-க்கு முந்தைய காலகட்டத்தில் நம் நாடு இருந்த நிலை மிகவும் கவலைக்குரியது. தங்கத்தை அடகு வைப்பது, அன்னியச் செலாவணி இருப்பு குறைந்தது, இறக்குமதி செய்த பொருட்களுக்கு அன்னியச் செலாவணியில் பணம் செலுத்த முடியாத நிலை என்ற மோசமான சூழலில் பயணித்தோம் நாம்," என்கிறார் பங்கு வர்த்தக நிபுணர் நாகப்பன்.

மன்மோகன் அப்போது கொண்டு வந்த தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகளால் நம் பொருளாதாரம் தலை நிமிர்ந்தது. வேலை வாய்ப்புகள் பெருகின. அதே சமயம் பர்மிட், கோட்டா, லைசென்ஸ் ராஜ்யத்திலிருந்து நாம் விடுபட முடியவில்லை. அதனால்தான் அலைக்கற்றை ஊழல், இப்போது நிலக்கரி ஊழல் என்று கிளம்புகின்றன" என்கிறார் இவர்.

தாராளமயமாக்கல் தேவைதான். அதே சமயம் அதன் காரணமாக தொழில்கள் நடத்துவதிலும் அரசு செயல் பாட்டிலும் வெளிப்படைத் தன்மையும், சுதந்திரச் சூழ்நிலையும் உருவாக வழி வகுக்க வேண்டும். எல்லா துறைகளிலும் இறுதிக் கட்ட கட்டுப்பாடு அரசைச் சார்ந்ததாக இருக்கலாமே தவிர, உரிமம், குத்தகை விஷயங்களில் அதிக வெளிப்படைத் தன்மை தேவை. ஆனால் இந்த தாராளமயமாக்கல் தறிகெட்டு ஓடக் கூடாது.

பல துறைகள் தனியாருக்கு திறந்து விட்ட காரணத்தால் போட்டிகள் உருவாகி, அரசு மற்றும் தனியார் துறையின் சேவைகள் முன்னேறியுள்ளன. இதனால் பயனடைந்தது மக்களே. தொலைத் தொடர்புத் துறை, விமானப் போக்குவரத்து, காப்பீடு ஆகிய துறைகளில் அரசும் தனியாரும் செயல்படும்போது, மக்கள் தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இடையில் வந்த தகவல் தொழில்நுட்பப் புரட்சியும், அதனால் ஏற்பட்ட வேலைவாய்ப்புகளும் நமது நாட்டின் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்த உதவின. ஆனால் இந்த வளர்ச்சி என்பது ஒட்டு மொத்த மக்களையும் உள்ளடக்கியதாக இல்லை. முன்பு இரண்டு ரூபாய் சம்பாதித்தவன் நான்கு ரூபாய் சம்பாதிக்கிறான். ஆனால் பத்து ரூபாய் சம்பாதித்தவன் நூறு ரூபாய் சம்பாதிக்கிறான் என்பதும் உண்மை. இது சரியான விகிதாசாரம் இல்லை!

இப்போது நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டிய அவசியம் என்ன? கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி செய்ய அன்னியச் செலாவணி தேவை. ரூபாயின் மதிப்பு குறைந்தால் டாலரில் நாம் செலுத்த வேண்டிய தொகை அதிகமாகும். தங்கத்தை வாங்கும் நமது மக்கள் அதை நகைகளாக அணிந்து கொள்வதால் முதலீடுகள் முடங்கி விடுகின்றன. இந்த நிலை பொருளாதாரச் சூழலுக்கு உகந்ததல்ல. எனவே அன்னியச் செலாவணி இருப்பை அதிகரிக்கவும், ரூபாயின் மதிப்பை உயர்த்தவும் சீர்திருத்தங்கள் தேவை. இப்போதைய அறிவிப்புகளை அந்த வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்னிய முதலீட்டுடன் வருபவர்கள் புதிய தொழில் நுட்பத்துடன் வரவேண்டும். அதன் பாதிப்புகள் சிறு, குறு தொழில்களின் மீது விழாமல் இருக்க வேண்டும். அப்போது அவற்றுக்கு சலுகைகள் அளிக்கலாம். வர்த்தகர்களுக்குச் சலுகை கொடுக்கலாம். அதனால் இழக்கும் வருமானத்தை நேரடி முதலீட்டிலிருந்து ஈடுகட்டிக் கொள்ளலாம். இப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்பட்டால் இன்னும் குறுகிய காலத்தில் நாம் பிரச்னைகளைச் சந்திப்போம். நீண்ட கால நோக்கில் சமாளித்து விடுவோம். ஆனால் பிரமிக்கத் தக்க வளர்ச்சி இருக்காது. அன்னிய நேரடி முதலீடுகள் மூலம் வரும் தொழில்களால் ஏற்கெனவே இருப்பவர்கள் பாதிப்புக்குள்ளாகி ஏகபோகத்துக்கு வழிவகுக்கக் கூடாது. இதற்காக சம்பந்தப்பட்டவர்களைக் கொண்டு சுய ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பை நிறுவ வேண்டும். இந்த அறிவிப்புகளுக்குப் பிறகு ரூபாயின் மதிப்பு உயர்ந்து, பங்கு மார்க்கெட் பளிச்சிடுவது நல்ல அறிகுறி," என்கிறார் நாகப்பன்.

முன்பும் இப்போதும் கொண்டு வந்திருக்கும் சீர்திருத்தங்கள் முற்றிலும் நாட்டு நலனுக்கு எதிரானது. ஏழைகளைச் சுரண்டி பணக்காரர்கள் வாழ வழிவகுப்பவை. சூதுவாதுகள் நிறைந்த முதலாளித்துவத்துக்கு ஆதரவானவை," என்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா.

991ல் அறிவித்த சீர்திருத்தங்களால் நாட்டில் பாலும் தேனும் ஓடியது என்றால் இப்போதைய 12ம் ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில், ‘வேகமான, திட்டமிட்ட, நிலையான, ஒட்டுமொத்த வளர்ச்சி’ என்று பிரகடனப் படுத்துவது ஏன்? இன்றைக்குள்ள சமூகக் கொந்தளிப்புக்குக் காரணம், வேலையில்லாத் திண்டாட்டம், பண வீக்கம் மற்றும் லஞ்ச ஊழல்தானே? இதற்குக் காரணம் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள். உலக அளவில் பொதுவான வளர்ச்சி இருக்கிறது. அது இந்தியாவிலும் இருக்கலாம்.

ஆனால் அந்த வளர்ச்சி யாருக்கானது? முன்பு கொண்டுவந்த சீர்திருத்தத்தால் பங்கு மார்க்கெட்டில் மாபெரும் ஊழல் நடந்தது.

1990களில் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய சோஷலிஸ்ட் நாடுகளில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற தன்மைகள் காரணமாக அமெரிக்கா தமது ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொள்ள உலக வங்கி, மற்றும் சர்வதேச நிதி நிறுவனம் மூலமாக வளர்ச்சியடையும் நாடுகளின் மீது திணிக்கும் கொள்கைகளே இந்தச் சீர்திருத்தங்கள். இது அமெரிக்க வல்லாண்மைக்கு அஸ்திவாரம் போடுபவை. இந்தியச் சூழலுக்குப் பொருந்தாதவை. விவசாயிகள் பயனடைவார்கள், வேலை வாய்ப்பு உருவாகும் என்பதெல்லாம் மாயை. தங்களுக்கேற்ற சூழல் உருவாகும்வரை விவசாயிகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர்கள் வைத்ததே சட்டம். ஒரு வேலைவாய்ப்பு உருவானால் பதினைந்து வேலைகள் அடி வாங்கும். சீனா, ஜெர்மனியில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டாலும், அதன் பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற உள்நாட்டுச் சட்டங்கள் உண்டு. மான்யம் கொடுப்பதால் பொருளாதாரம் பாதிக்கிறது என்கிறார்கள். பெரு முதலாளிகள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகை மற்றும் நிதி நிவாரணங்களைக் கணக்கிட்டால், பெட்ரோல், டீசல், எரி வாயு சிலிண்டருக்குக் கொடுக்கும் மான்யம் மிகக் குறைவு. மத்திய அரசு உடனடியாக இந்த அறிவிப்புகளை வாபஸ் வாங்க வேண்டும்" என்கிறார் ராஜா.


எனவே வரும் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்த விவாதமும், ஓட்டெடுப்பும் வருவது நிச்சயம். அரசை ஆதரித்தாலும், அன்னிய நேரடி முதலீட்டை எதிர்க்கிறார் முலாயம் சிங். எனவே அரசின் ஸ்திரத் தன்மை பாதிக்கப்படும் சூழலில் மன்மோகனின் பொருளாதார மேஜிக் அரசியல் பின்பலத்தைப் பெறுமா என்பது முக்கியமான கேள்வி!

‘ஃபிட்ச்’ குழுமம் உலக நாடுகளின் பொருளாதார நிலையைக் கணித்து, தர நிர்ணயம் செய்கிறது. இது கொடுக்கும் தரவரிசை கீழே இறங்கினால் அன்னிய நேரடி முதலீடுகள் வருவதில் சிக்கல் வரும். இந்தக் குழுமத்தின் இந்திய அமைப்பான ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ பிரதமரின் அறிவிப்பைக் குறித்து என்ன சொல்கிறது?

பல சவால்கள் காரணமாக அன்னிய நேரடி முதலீட்டினால் வரும் பலன்கள் மக்களுக்குக் கிடைக்க இரண்டு மூன்று வருடங்கள் ஆகும். இந்திய சில்லறை வர்த்தகம் இப்போது ஆரோக்கியமாக இல்லை. ஆனால் நேரடி முதலீடு நீண்ட கால நோக்கில் மட்டுமே பலன் கொடுக்கும். இந்திய சில்லறை வர்த்தகத்தில் ஏற்கெனவே இருக்கும் பெரு நிறுவனங்கள் தங்களைச் சட்டபூர்வமாக முறைப்படுத்திக் கொண்டு சிக்கலில்லாமல் நேரடி முதலீட்டைப் பெறும் சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நேரடி முதலீட்டாளர்கள் சில்லறை வர்த்தகத்தில் பின் கட்டுமானங்களில் முதலீடு செய்ய வேண்டும். எனவே இது தொடர்பாக மாநில அரசின் உரிமம் பெறுவது போன்றவற்றில் தாமதம் வரும். கொள்கை குழப்பமில்லாமல், சாதகமான சூழல் உருவாக்கினால்தான் திட்டமிட்ட பலன் கிடைத்து வளர்ச்சி சாத்தியமாகும். நமது சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளில் இருந்து முப்பது சதவிகிதம் நேரடி முதலீட்டாளர்கள் கொள்முதல் செய்ய வேண்டுமென்பது சவாலான விஷயமல்ல; நமக்கு அதற்கான உற்பத்தித் திறன் இருக்கிறது."



Wednesday, September 26, 2012

எனது இந்தியா ( சுதேசி மன்னர்கள்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

சுதந்திரம் அடைந்தபோது இந்தியா மூன்று பகுதி​களாக இருந்தது. ஒன்று, பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள். அதாவது சென்னை, பம்பாய், உத்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா, பஞ்சாப், பீகார், வங்காளம், சிந்து அஸ்ஸாம் பகுதிகளை உள்ளடக்கியது. இரண்டாவது, தலைமைக் கமிஷனர் மாகாணங்கள். இவை, பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட பலுசிஸ்தானம், வட மேற்கு எல்லை மாகாணம். மூன்றாவது, 500-க்கும் மேற்பட்ட சுதேசி மன்னர்கள் ஆட்சி செய்த மன்னர் மாநிலங்கள்.

இந்த மூன்று பகுதிகளின் பிரதிநிதிகளைக்கொண்டே அரசியல் அமைப்புச் சட்டமன்றம் அமைக்கப்பட்டது. நேருவின் தலைமையில் செயல்பட்ட இடைக்கால அரசாங்கம், மன்னர் மாநிலங்களை இந்தியாவோடு இணைக்க ஒரு தனி அமைச்சரகத்தை உருவாக்கி இருந்தது. அதற்கு வல்லபாய் படேல் பொறுப்பேற்று இருந்தார். மன்னர் மாநிலங்களை சுதந்திர இந்தியா​வோடு இணைப்பது என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. அன்று இருந்த மன்னர்கள் காலம்காலமாக அனுபவித்த சலுகைகள் மற்றும் ராஜ வாழ்க்கையை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. இதற்காக, 1947-ம் ஆண்டு ஜுலை 25-ம் தேதி இந்திய மன்னர்களின் மாநாடு ஒன்றை நடத்தினார் மௌன்ட் பேட்டன்.  இதில், மன்னர்கள் தங்கள் விருப்பப்படி இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றும், அவர்களின் எதிர்கால வாழ்வுக்கான அனைத்துச் சலுகைகளையும் பிரிட்டிஷ் அரசு முறையாகப் பெற்றுத்தரும் என்றும் அந்த மாநாட்டில் உறுதி அளிக்கப்பட்டது. சுதேசி மன்னர்கள், படேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய உரிமைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், மன்னர்களின் இணக்கத்தைப் பெறுவது எளிதாக இல்லை. படேல் சாம, தான பேத, தண்டம் ஆகிய நான்கு வழிகளைப் பயன்படுத்தியே மன்னர்களின் இசைவைப் பெற்றார். இதற்கு, உள்துறைச் செயலராக இருந்த வி.பி.மேனன் முக்கியத் துணையாக இருந்தார்.



அந்தக் காலத்தில், சுதேச சமஸ்தானங்களில் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றுவது தண்டனைக்​குரிய குற்றமாகக் கருதப்பட்டது. இதை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கம் சுதேசி சமஸ்தானங்கள் அனைத்திலும் இந்திய தேசியக் கொடியை ஏற்றும் போராட்டத்தைத் தொடங்கியது. பி.சி.ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் இதில் கலந்துகொண்டு சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். 550 மன்னர்கள் தங்கள் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதற்காக அதற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போட்டனர். ஆனால், ஜுனாகத் நவாப், ஹைதராபாத் நிஜாம், மற்றும் காஷ்மீர் மன்னர் ஆகியோர் கையெழுத்திட மறுத்துவிட்டனர். அவர்கள் இந்தியாவோடு இணைந்த நிகழ்வு எதிர்பாராத பல திருப்பங்களைக்கொண்டது.

சுதேசி மன்னர்கள், தங்களது ராஜ்ஜியத்தின் வெளியுறவு, பாதுகாப்பு இரண்டையும் ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு உள்ளாட்சியை மட்டுமே தமதாக்கி இருந்தனர்.

சுதேசி மன்னர்களில் காஷ்மீர், ஹைதராபாத் இரண்டும் பரப்பில் மிகப் பெரியவை. அடுத்தபடியாக மைசூர், பரோடா, குவாலியர், புதுக்கோட்டை ஆகிய நடுத்தர அளவிலான ராஜ்ஜியங்கள். சமஸ்தானம் ஒவ்வொன்றுக்கும் 'திவான்’ என்று சொல்லப்படும் ஒரு பிரதம மந்திரி இருந்தார். அவர் மகாராஜாவால் நியமிக்கப்பட்டாலும், வைஸ்ராயின் ஒப்புதல் பெற்ற பிறகே பொறுப்பு ஏற்க முடியும். அத்துடன், 'ரெஸிடென்ட்’ எனப்படும் பிரிட்டிஷ் பிரதிநிதியும் சமஸ்தானத்திலேயே இருந்து பிரிட்டிஷ்காரர்களின் நலன்களைக் கண்காணித்து வருவார். சுதேசி மன்னர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம். விசித்திரமான மனநிலைகொண்டவர்கள். ஆடம்பரப் பிரியர்கள். கபூர்தலா மன்னர் தன்னை 14-ம் லூயி மன்னரின் மறு பிறப்பு என்று நம்பினார். அதற்காக, தனது மாளிகையை வார்செலஸ் அரண்மனையைப் போலவே பிரெஞ்சுக் கட்டடக் கலை நிபுணர்களைக்கொண்டு வடிவமைத்தார்.

அதோடு, 'அனிடா டெல்கோடா’ என்ற ஸ்பானியப் பெண்ணை ஒரு நடன விருந்தில் சந்தித்து, கண்டதும் காதல்கொண்டு, அவளையே தனது மகாராணியாகவும் ஆக்கிக்கொண்டார். மேலும், தனது அரச சபையின் மொழியாக பிரெஞ்சு பேசப்பட வேண்டும் என்று அறிவித்தார். காசி ராஜா எங்கே சென்றாலும் பசுவின் முகத்தில்தான் காலையில் கண் விழிப்பது வழக்கம். அதற்காக, அவர் போகுமிடம் எல்லாம் பசுக்களைக் கூடவே அழைத்துச் சென்றனர். பாட்டியாலா அரசருக்கு சாப்பிடுவதுதான் ஒரு நாளின் முக்கிய வேலை. அவரது ஒரு வேளை உணவு நெய்யில் வறுத்த ஆறு கோழிகள். இரண்டு கிலோ ஆட்டு இறைச்சி. பாலில் செய்யப்பட்ட இனிப்புகள். காடை, கௌதாரி, புறா, மான், மிலா, மீன் என ரகம் ரகமாகப் பொறிக்கப்பட்டு உணவு மேஜையில் அடுக்கப்பட வேண்டும். அவரது எடை 300 பவுண்ட் (136 கிலோ).

 இப்படி, ஆண்டு முழுவதும் சாப்பிட்டுவிட்டு உடம்பு இளைப்பதற்காக ஒரு மாதம் வெறும் எலுமிச்சை சாற்றை மட்டுமே அருந்துவார். எடை குறைந்தவுடன் மீண்டும் உணவு வேட்டை தொடங்கிவிடும். ராம்பூர் நவாப், கன்னிப் பெண்களாகத் தேடித்தேடி சுகித்து அவர்களின் மூக்குத்திகளை நினைவுச் சின்னமாக சேகரித்துக்கொள்வார். அவரிடம் ஆயிரக்கணக்கான மூக்குத்திகள் இருந்தன. டோல்பூர் மன்னருக்கு, சீட்டு விளையாட்டுதான் உலகம். ராஜா பூபிந்தர் சிங், ரோல்ஸ் ராய் கார் பிரியர். இவரது ஆடம்பரக் கார்களின் முகப்பைத் தங்கத்தால் இழைத்து வடிவமைத்து இருந்தார். அத்துடன் இருக்கைகள், காரின் முகப்பு போன்றவற்றில் பதிப்பதற்கெனத் தனியான நகைகள், முத்து மாலைகள் செய்தார்.  இந்தியாவில் இருந்த சுதேசி மன்னர்கள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோல்ஸ்ராய் கார்களை வைத்திருந்தனர். ஒவ்வொரு காரின் விலையும் பல லட்சங்கள். இப்படி, விசித்திர குணங்கள்கொண்ட மகாராஜாக்களில் ஒருவர்தான் குஜராத்தின் தென் மேற்குப் பகுதியில் இருந்த ஜுனாகத்தின் நவாப் மகபத் கான் ரசூல் கான்.

இவருக்கு நாய்கள் என்றால் உயிர். அவரிடம் 800 நாய்கள் இருந்தன. ஒவ்வொரு நாய்க்கும் ஒரு தனி இடம், பராமரிப்பதற்குத் தனி ஆள், மன்னர் நினைத்த நேரம் நாயைக் கொண்டுவருவதற்காக ஒவ்வொரு நாயின் இருப்பிடத்துக்கும் ஒரு போன் இணைப்பு, அத்துடன் நாய்களுக்கான விசேஷ உடைகள், அலங்கார மணிகள், முத்து மாலைகள் ஆகியவை வைத்து இருந்தார். ஏதாவது ஒரு நாய் இறந்துவிட்டால், அதன் நினைவாக சலவைக்கற்களால் மண்டபம் கட்டப்படும்.  நாய்களை நேசித்த அளவில் ஒரு பங்குகூட அவர் தனது ராஜ்ஜியத்தில் இருந்த மக்களை நேசிக்கவில்லை. அவரது படுக்கையில் அவரோடு தூங்குவதற்கு என்றே சில நாய்களை வைத்து இருந்தார். அவற்றைக் கட்டிக்கொண்டுதான் நவாப் தூங்குவார்.

அவரது செல்ல மகள் என்று அழைக்கப்பட்ட 'ரோஷனா ரா’ என்ற நாய்க்கு விமரிசையாகத் திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டார் நவாப். அதற்காக, மணமகன் தேடும் பணி நடந்தது. மங்ரோல் சமஸ்தானத்தைச் சேர்ந்த 'பாபி’ என்ற ஆண் நாய் மணமகனாகத் தேர்வு செய்யப்பட்டது. அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன. திருமண விழா மூன்று நாட்கள் நடந்தன. எல்லா சமஸ்தானங்களைச் சேர்ந்த மன்னர்கள், நவாப்புகள், ஜமீன்தார்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர்.

திருமணத்தின் தலைமை விருந்தினர் கர்சன் பிரபு. அது, இரண்டு நாய்களுக்கு நடக்கும் திருமணம் என்று அறிந்த கர்சன், நிகழ்ச்சிக்கு வரவில்லை. அது, தன்னை அவமதிக்கும் செயல் என்று நவாப் பகிரங்கமாக அறிவித்தார். திருமண நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேருக்கும் மேலானோர் கலந்துகொண்டனர்.


திருமண நாள் அன்று காலையில், மணமகளான 'ரோஷனா ரா’ பன்னீரில் குளிக்கவைக்கப்பட்டாள். பட்டு ஆடை, வைர மாலைகள், முத்து மாலைகள் அணிவிக்கப்பட்டன. மணமகளை, வெள்ளிப் பல்லக்கில் வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். 250 நாய்கள் அந்தப் பல்லக்குக்கு முன்னால் அணிவகுத்து வந்தன. அதன் முன்னால், ராணுவ வீரர்கள் பேண்ட் வாத்தியம் முழங்கி வந்தனர்.

மணமகன் 'பாபி’ ரயிலில் வந்து சேருவதால் ரயில் நிலைய வாசலில் அந்த நாயை எதிர்கொண்டு அழைக்க, அரண்மனையின் முக்கியப் பிரமுகர்கள் மாலையோடு காத்திருந்தனர். மணமகனுக்குப் பட்டாடை, மாலைகள் சூட்டப்பட்டு தங்கக் காப்பு அணிவிக்கப்பட்டது. 


எனது இந்தியா ( திருத்த வேண்டிய வரலாறு! ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


லோதல் நகரத்தின் கிழக்கு முகமாக அமைந்திருக்கும் செங்கல் சுவர் அமைப்பு வர்த்தகக் கலங்கள் வந்து நிற்கக்கூடிய ஓர் அமைப்பு என்கிறார் ராவ். ஆனால், தோர் மற்றும் ஹெய்டர்தால் உள்ளிட்ட மற்ற வரலாற்று ஆய்வாளர்கள் இதை மறுக்கின்றனர். பெரும்பாலான அகழ்வாராய்ச்சியாளர்கள், இந்த அமைப்பு தண்ணீர் சேகரிப்பதற்கான சாதாரணத் தொட்டியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால், ராஜிவ் நிகம் என்ற பரிசோதனையாளர், லோதாலில் கடல்நீர் சார்ந்த நுண்ணுயிரிப் படலங்களைக் கண்டறிந்து ஆய்வு செய்தபோது, அந்தச் செங்கல் சுவரமைப்பு குடிநீர் சேகரிக்கப் பயன்படவில்லை. கப்பல்கள் வந்து நிற்கவே பயன்பட்டது என்கிறார். இந்த வாதப் பிரதிவாதங்கள் இன்றும் தொடர்கின்றன.  

லோதலில் வசித்தவர்கள் அக்னியை வணங்கி இருக்கின்றனர். அங்கே, பலிச் சடங்குகள் நடைபெற்று இருக்கின்றன. கடல் அன்னையை வணங்கி விழா நடத்தி இருக்கிறார்கள். இறந்தவர்களை எரிக்கும் பழக்கமும் லோதலில் இருந்திருக்கிறது. கோலார் தங்கச் சுரங்கத்தில் இருந்து தங்கம் கொண்டுவரப்பட்டு இங்கே தங்க வளையல், மாலைகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

லோதல் கி.மு. 2,400 முதல் கி.மு. 1,900க்கு உட்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்கிறார்கள்.  லோதலுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது எனக் கூறும் ஆய்வாளர் குரூமூர்த்தி, தனது 'சிந்து சமவெளி நாகரிகமும் தமிழர் நாகரிகமும்’ என்ற நூலில் சில விவரங்களைக் குறிப்பிடுகிறார். அதில், ''லோதல் மற்றும் அம்ரா ஆகிய நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஹரப்பா பண்பாட்டுச் சின்னங்களுள், கறுப்பு சிவப்பு நிற மண் கலங்கள் காணப்படுகின்றன. ஹரப்பா பண்பாட்டுடன் கலந்து காணப்படும் இந்த மண் கலங்களை, அந்தப் பண்பாட்டின் இணை பிரியாக் கூறு எனக் கொள்ளலாம். அத்தகைய மண் கலங்கள் தென்னகத்தில் கணக்கிட முடியாத எண்ணிக்கையில் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. எனவே, இந்த இரு பகுதிகளிலும் வாழ்ந்த மக்களிடமும் கருத்துப் பரிமாற்றம் இருந்திருக்க வேண்டும். அண்மையில், மைசூரில் உள்ள அல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி மூலம், கறுப்பு சிவப்பு மண் கல வகைகளின் காலம் கி.மு. 1000 எனத் தெரிய வந்துள்ளது. மேலும், கொற்கையில் இவற்றின் காலம் கி.மு. 785 எனவும், ஆதிச்சநல்லூரில் கி.மு. 1500 எனவும் தெரியவந்துள்ளது. இந்தத் தடயங்களைவைத்து ஒப்பிடுகையில், அந்தக் காலத்தில் திராவிடர் பண்பாடு இந்தியாவின் பல பகுதிகளில் பரவியிருந்தது என்பது புலனாகிறது'' என்கிறார் குரூமூர்த்தி.

சிந்து சமவெளியில் காணப்படாத குதிரை, லோதலில் காணப்படுகிறது. இங்கே கண்டு எடுக்கப்​பட்ட 23 விலங்கு சிற்பங்களில் ஒன்று குதிரையின் உருவம். ஆகவே, இது ஹரப்பா காலத்தின் கடைசி நிலையைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள். லோதலை, சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்வது தவறு. அதை, ஹரப்பா நாகரிகம் என்றே குறிப்பிட வேண்டும் என்று ஒரு பிரிவும், அதை சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று குறிப்பிட வேண்டும் என்று இன்னொரு பிரிவும் வாதம் செய்கின்றனர்.

குஜராத்தில் உள்ள லோதல் போல, தமிழகத்தில் பண்டைய வணிக நகரமாக விளங்கிய ஈரோட்டின் அருகில் உள்ள கொடுமணலும், அதுகுறித்த தொல்லியல் ஆய்வுகளும் இன்றும் முறையாகக் கவனப்படுத்தப்படவே இல்லை. நொய்யல் ஆற்றின் வடகரையில், ஈரோடு நகரில் இருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் உள்ளது கொடுமணல் தொல்லியல் களம். கொடு மணம் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட இந்த இடம் பற்றிப் 'பதிற்றுப்பத்து’ என்னும் சங்க நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. கொடுமணல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அதை உலகுக்கு அடையாளம் காட்டியவர் கல்வெட்டுஇயல் ஆய்வு அறிஞர் புலவர் இராசு.

கொடு மணலை அகழ்வாய்வு செய்து ரோமானியர்​களுடன் தொடர்புடையது நொய்யல் கரை நாகரிகம் என்று வெளிப்படுத்தியது இவர் கண்டுபிடிப்புகளுள் குறிப்பிடத்தகுந்த பணியாகும். தென் இந்தியாவில் மிக அரிதான பாடலுடன் கூடிய பழமங்கலம் நடுகல்லைக் கண்டறிந்தது இவரது இன்னோர் அரிய பணி. கொடுமணலில் 1961-ம் ஆண்டில் புலவர் இராசு, செல்வி முத்தையா ஆகியோர் அகழ்வாய்வு மேற்கொண்டனர். இங்கு உள்ள தொல்லியல் களம் 50 ஹெக்டேர் வரை பரந்துள்ளது. இதில் பெரும்பகுதி புதைகுழிகள் அடங்கிய புதைமேடாகக் காணப்படுகிறது. இதை ஒட்டி, குடியிருப்புப் பகுதிகள் இருந்தமைக்கான சான்றுகளும் காணப்படுகின்றன. பெருங் கற்காலப் பண்பாட்டுக்கு உரிய 300-க்கும் மேற்பட்ட இறந்தோருக்கான நினைவுச் சின்னங்கள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.

கொடுமணல், இன்னமும் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இந்தத் தொல்லியல் களத்தை, தமிழகத்தின் அரிய பண்பாட்டுச் சுரங்கமாகக் கருதுகின்றனர். 'கொடுமணம் பட்ட நெடுமொழி யக்கலொடு’ எனப் பதிற்றுப்பத்தில் குறிப்பு இருக்கிறது. கொடுமணம், பந்தர் ஆகிய இரண்டு கடலோரத் துறைமுகங்கள் பற்றி சங்க இலக்கியத்தில் குறிப்புகள் இருக்கின்றன. கொற்கை, பந்தர் ஆகிய இரண்டும் முத்து வணிகத்தில் புகழ்பெற்று விளங்கி இருக்கின்றன.

கொடு மணத்தில் வசித்த பாணர்கள், பந்தர் சென்று செல்வச் செழிப்பு உள்ள வாழியாதனிடம் தென்  கடல் முத்தும் அணிகலன்களும் பரிசாகப் பெற்று வந்தால், அவர்கள் கடன் தீர்ந்து சுகமாக வாழலாம் என்று கபிலர் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் கொடுமணல் ஆய்வில் நாணயங்கள், முதுமக்கள் தாழி, பாசி மாலைகள், ஆபரணங்கள், மண் கலயங்கள், இசைக் கருவிகள், தொழிற் கருவிகள், பண்டைய தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண் பாண்டங்கள், போர்க் கருவிகள், நெசவுத் தொழிற்சாலை இருந்த இடம், மணிகள் கோக்கும் தொழிற்சாலைகள், சங்கு அறுக்கும் தொழிற்கூடங்கள், இரும்பு உலைகலன் ஆகியவை கண்டறியப்பட்டு இருக்கின்றன.

கொடு மணலில் இரும்பு உருக்கு ஆலைகள் இருந்து இருக்கின்றன. இரும்பு மற்றும் தாமிர தாதுக்கள் இங்கு கிடைத்து இருக்கின்றன. இங்கு கண்டறியப்பட்ட தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்றை வாசித்துள்ள கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன், 'தண்ணீரும் வெந்நீரும் புகும் தாழி’ என எழுதப்பட்டுள்ளதாக கூறுகிறார். இன்று, சாயப்பட்டறைகளில் வெந்நீரும் தண்ணீரும் புகும் தாழி பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, இந்தத் தாழி ஒருவேளை இரும்பு உருக்கும் தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்டு இருக்கக்கூடும் என்கிறார் ஐராவதம் மகாதேவன்.

பண்பாட்டு வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும்​கொண்ட தொன்மையான நகரமாக விளங்கி இருக்கிறது கொடுமணல். பண்டைய தமிழர்கள் இரும்புக் கருவிகளை உருவாக்குவதில் தேர்ந்த அறிவுத் திறனுடன் இருந்திருக்கிறார்கள். கொடு மணலில் நெசவு நெய்யப் பயன்படும் தக்களி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் தண்டு இரும்பாலும் வட்டம் சுடுமண்ணாலும் செய்யப்பட்டிருப்பது அதன் தொழிற்நுட்ப சாதனையைப் பறைசாற்றுகிறது. அதுபோலவே பட்டை தீட்டுதல், கற்கள் பதித்தல், அலங்கார வேலைப்பாடு என அணிகலன் உருவாக்குவதிலும் தேர்ந்தவர்களாக இருந்தனர். ஆப்கானிஸ்தான், ரோம் நகரங்களுடன் வணிக உறவுகள் இருந்தன. இரும்புத் தாதுக்கள், சென்னிமலைப் பகுதியில் இருந்து கிடைத்திருக்கின்றன. அதை உருக்குவதற்கு விசேஷமான உருக்கு உலைகளை அமைத்து இருக்கிறார்கள். உருக்கிய இரும்பைக்கொண்டு ஆயுதங்கள், விவசாயக் கருவிகள் போன்றவற்றை உருவாக்கி விற்பனை செய்திருக்கிறார்கள். இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் முன்னோடிகள் என்பதற்கு கொடுமணல் ஒரு சாட்சி.

இங்கு காணப்படும் புதைமேட்டில் முதுமக்கள் தாழிகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றில், பத்மாசன நிலையில் ஒரு எலும்புக்கூடு காணப்படுகிறது. சுடுமண் பாண்டங்களில் தமிழ் பிராமி மற்றும் பிராகிருத எழுத்து வடிவங்கள் காணப்படுகின்றன. சம்பன், ஸுமநன், ஊரணன், சந்துவன், மாத்தன், ஆதன் முதலான பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வணிக மையமாகக் கொடுமணம் இருந்த காரணத்தால், வட இந்தியாவில் இருந்து வணிகர்கள் வந்திருக்கக்கூடும். ஆகவே, இங்கு காணப்படும் தமிழ் எழுத்துக்களில் பிராகிருதக் கலப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

வரலாற்று ஆய்வாளர் இராம.சுந்தரம் தனது கட்டுரை ஒன்றில், தமிழ்ப் பண்பாட்டைப் புரிந்துகொள்ள கொடுமணல் ஆய்வுகள் எப்படி உதவுகின்றன என்பதைக் குறிப்பிடுகிறார். ''அந்தக் காலத்தில் சமன்செய் கருவிகள், விதைப்புக் கருவிகள், இறைப்புக் கருவிகள், பயிர்காப்புக் கருவிகள், அறுவடைக் கருவிகள், பதன்செய் கருவிகள் என உழவுக் கருவிகளை பாகுபடுத்துவார்கள். பண்டைத் தமிழர்கள் நாஞ்சில் என்ற கலப்பையைப் பயன்படுத்தி உழுதனர். கலப்பையின் நுகத்தடியில் கொழுவும் இருக்கும். கொழு என்பது நிலத்தைப் பிளந்து உழக்கூடியது. பரம்படிக்கப் பயன்படும் கருவியின் பெயர் தளம்பு. ஏத்தம், ஆம்பி, பத்தர், கிழார், முகவை முதலியன நீர் இறைப்புக் கருவிகள். புன்செய் நிலத்துக் களையை நீக்க, துளர் என்ற கருவியைப் பயன்படுத்தினர். தண்ணுமை, குளிர், தட்டை, தழலை, கவண், அடார் முதலியன பயிர் பாதுகாப்புக் கருவிகளாகும். அடார் என்பது கற்பொறி. கருங்கல் பலகையை ஒரு பக்கமாகச் சாய்த்துக் கீழே முட்டுக்கொடுத்து உணவை உள்ளே வைத்திருப்பர். உணவை உண்ண வரும் விலங்கு அந்த முட்டைத் தொட்டவுடன் கல் விழுந்து அதனுள் மாட்டிக்கொள்ளும், இதுபோன்ற விவசாயக் கருவிகள் செய்வதில் தமிழ் மக்கள் முன்னோடியாக விளங்கி இருக்கின்றனர்.

இரும்புத் தொழில்நுட்பம் மனிதகுல வரலாற்றில் ஒரு மாபெரும் வளர்ச்சிப் போக்கை ஏற்படுத்தியது. கி.மு. 1000-த்தை ஒட்டியே இந்தியாவில் இரும்பு அறிமுகம் ஆனது. கர்நாடகத்தில் உள்ள ஹல்லூர் பகுதியில் கி.மு. 950-ஐ ஒட்டிய இரும்புப் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஆதிச்ச நல்லூரிலும், பெருமாள் மலையிலும் இதே காலத்தை ஒட்டிய இரும்புப் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன. தமிழகத்தில் கி.மு. 700 முதல் கி.பி 200 வரை இரும்புக் காலம் எனலாம். சங்க காலத்தில் இரும்பு நன்கு பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதற்குச் சங்கப் பாடல்கள் சான்று தருகின்றன. கொடுமணல் அகழ்வாய்வு இதை முழுமையாக உறுதிப்படுத்துகிறது'' என்கிறார்.

தமிழகத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகள் நடந்து இருக்கின்றன. இதுவரை நடந்த ஆய்வுகளில் கிடைத்த தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுக்கள், ஆவணங்கள் அனைத்தையும் சேர்த்து விரிவாக நேர்மையாக தமிழக வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும். அதுதான் இன்றைய முக்கியத் தேவை.


Tuesday, September 25, 2012

அருள்வாக்கு - தூய்மை!


உடல், எடை இவற்றுக்கு மேலாக ஒன்று இருக்கிறது. அதுதான் உள்ளம், மனம் என்பது. மனச்சுத்தம், உள்ளத் தூய்மைதான் மிகமிக முக்கியம். அது இல்லாமல் உடம்பும், உடுப்பும் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் பயனேயில்லை. மனசிலே அழுக்குப் படியாமல் அதை அவ்வப்போது தேய்த்துக் கழுவிக் குளிப்பாட்டிக் கொண்டே இருக்கவேண்டும்.

மனசுக்கு ஏற்படுகிற அழுக்கு என்பது என்ன? தப்பு, தவறு செய்வதுதான் உள்ளத்துக்கு அழுக்கு. நாம் செய்கிற காரியங்களில் தவறு ஏற்படக் கூடாது. அதாவது கெட்ட நோக்கங்களுக்காகக் காரியம் செய்யவே கூடாது.

ஆனாலும் காரியம் என்று வந்துவிட்டால் நல்லதைச் செய்கிற போதுகூட அதிலே சில தப்பு, தவறுகள் நேர்ந்து விடலாம். இதனால் பெரிய குற்றம், அதாவது தோஷம் இல்லை. ரொம்பப் பெரியவர்கள் கூட எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிறபோது அவர்களையும் கொஞ்சம் சறுக்கிவிட்டிருக்கிறது. நாமே எல்லாம் செய்து கொள்ள முடியும் என்று கர்வப்படாமல், பகவான் துணையால்தான் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் உணருவதற்காகவே இப்படிச் சில தவறுகள் நேர்ந்துவிடுகின்றன. இம்மாதிரி சமயங்களில் நீங்கள் பகவானை வேண்டிக் கொள்வதுதான் சரி. அதுவே அழுக்கைக் கழுவிவிடும்.

- ஜகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Sunday, September 23, 2012

ஓ பக்கங்கள் , சில நேரங்களில் சில உறுத்தல்கள்!! - ஞாநி

ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி முதன்மையாக எழுத வேண்டிய அவசியம் இருந்தாலும், அதே வாரத்தில் பல விஷயங்கள் மனத்தில் உறுத்தலை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. இந்த வாரம் ஒரு சில உறுத்தல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

உறுத்தல் 1:

கீழ்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா என்று பாருங்கள்.

1. மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக:
அ.முருங்கைத்தழை ஆ. முருங்கைக் கீரை இ. முருங்கை இலை ஈ. முருங்கை மடல்.

2. இடன் என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க:
அ. இடைப் போலி. ஆ. ஈற்றுப் போலி. இ. முதற்போலி. ஈ. வினைச்சோல்.

3. நெஞ்சாற்றுப் படை என்னும் பெருமைக்குரிய நூல் எது ?
அ. சிந்தாமணி. ஆ.சிலப்பதிகாரம். இ. குறிஞ்சிப்பாட்டு. ஈ.முல்லைப்பாட்டு.

4. செய்வினைத்தொடரைக் கண்டறிக:
அ. மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர். ஆ. மாணவர்களால் வகுப்பு தூய்மை செயப்பட்டது. இ. மாணவர்களால் வகுப்பு தூய்மை செய்யப்படும். ஈ. மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்வர்.

5. ‘அவன் அவன் மொழியை உயர்த்தினால்தான் அவன் நாடு உயரும் என்று பாரதிதாசன் கூறியுள்ளார்’ - இது எவ்வகை வாக்கியம் என்று சுட்டுக.
அ. எதிர்மறை வாக்கியம். ஆ. அயற்கூற்று வாக்கியம். இ.கலவை வாக்கியம். ஈ.வினா வாக்கியம்.

பதில் சொல்லிவிட்டீர்களா? இது போல இன்னும் பத்துப் பதினைந்து கேள்விகள் இருக்கின்றன. இவையெல்லாம் ஏதோ பள்ளியிலோ கல்லூரியிலோ தமிழ்ப் பாடத் தேர்வில் கேட்கும் கேள்விகள் அல்ல. ஓர் அரசு வேலைக்கு, சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதுபவர் பதில் எழுத வேண்டிய கேள்விகள். எந்த வேலையாக இருக்கும்?

அதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. வி.ஏ.ஓ எனப்படும் வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீசர் ஆகிய கிராம நிர்வாக அதிகாரி (பழைய முன்சீப்) வேலைக்குத் தேர்வு எழுதுவோருக்கான பொதுத்தமிழ் மாதிரி கேள்வித்தாள் இது.

தமிழ் இலக்கியம் படிப்போர், தமிழைப் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்றுக் கொடுப்போரான தமிழாசிரியர்களுக்கான கேள்வித்தாளில் இப்படிப்பட்ட கேள்விகள் இருப்பது நியாயமானது; இயல்பானது. கிராம அதிகாரி வேலை செய்யப் போகிறவருக்கு ஏன் இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்? அதற்கு விண்ணப்பிக்கிறவர்கள் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதும்போது, தமிழ் தவிர இதர பாடங்களின் கேள்வித்தாட்களும் இதே ரீதியில்தான் இருக்கின்றனவா என்று அறிய விரும்புகிறேன். இப்படி கேள்வித்தாள் இருந்தால் நிச்சயம் அவை லீக் ஆனால்தான் ஒருவர் பாஸ் செய்யமுடியும்.

கிராம அதிகாரி வேலைக்கு வர விரும்புபவரிடம் , சிட்டா என்றால் என்ன, அடங்கல் என்றால் என்ன, ஏரிக்கும் கண்மாக்கும் என்ன வித்தியாசம் ( இரண்டும் ஒன்றுதான்!), நத்தம் புறம்போக்கு என்பது என்ன, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒருவருக்கு மொத்தம் அதிகபட்சமாக எத்தனை நாள் வேலை தரலாம், பட்டாவுக்கு விண்ணப்பிக்கும் போது இணைக்க வேண்டிய அடிப்படைச் சான்றுகள் எவையெவை... இப்படியெல்லாம் அல்லவா கேள்விகள் முன்வைக்கப்பட வேண்டும்? தமிழையும் ஆங்கிலத்தையும் பிழையில்லாமல் எழுத முடிகிறதா, புரிந்து கொள்ள முடிகிறதா என்ற அளவில் மட்டும் தானே அவர்களுடைய மொழி அறிவு சோதிக்கப்படவேண்டும்? அன்றாட வேலைக்குப் பயன்படும் அளவில் அவர்களுடைய பொது அறிவு இருக்கவேண்டும் என்பதுதானே முக்கியம்.

எந்த வேலைக்கு ஆளெடுக்கிறோமோ அந்த வேலைக்குத் தேவைப்படும் திறமையும் அறிவும் இருக்கிறதா என்று சோதிக்க உதவக்கூடிய கேள்விகளையே தமிழ், ஆங்கிலம், பொது அறிவு என்று எல்லாத் தேர்வுகளிலும் தயாரிக்கவேண்டும். இந்த அணுகுமுறை இல்லாமல் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்படுவோர் எப்படி அந்த வேலைகளைத் திறமையாகச் செய்யமுடியும் என்ற கேள்வி எழுகிறது.

இல்லையில்லை, சர்வீஸ் கமிஷன் தேர்வுகள் எந்த வேலைக்காக நடத்தப்படுகின்றனவோ அந்த வேலைக்கு ஏற்பத்தான் வடிவமைக்கப்படுகின்றன என்று யாரேனும் எனக்கு நிரூபித்தால் மகிழ்ச்சியடைவேன். ஆனால் டி.என்.பி.எஸ்.சி - வி.ஏ.ஓ தேர்வு மாதிரி வினா விடை என்று தினசரிகளில் வெளிவருபவற்றைப் பார்த்தால் இது உருப்படுமா என்று நிச்சயம் உறுத்தலாகத்தான் இருக்கிறது.

உறுத்தல் 2:


இந்தியாதான் இன்று உலகிலேயே மிகவும் இளமையான தேசம் என்று பலரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதாவது இங்கேதான் இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று அர்த்தம்.

ஆனால் அது பாதி உண்மைதான் என்று இப்போது தெரிகிறது. கூடவே இது கிழட்டு தேசமாகவும் இருக்கிறது. அறுபதைக் கடந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கிறது. 2013ல் வெறும் 10 கோடி கிழட்டு இந்தியர்கள்தான் இருப்பார்கள். ஆனால் 2030ல் இது ஏறத்தாழ இரு மடங்காகிவிடுமாம்.

மூத்த குடிமக்கள் ஆரோக்கியமாக இருந்தால் பரவாயில்லை. மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி நான்கு முதியவரில் ஒருவரேனும் மனச்சோர்வில் அவதிப்படுகிறார். மூன்று பேருக்கு ஒருவர் வீதம் மூட்டு வலியில் கஷ்டப்படுகிறார்கள். ஐந்து பேருக்கு ஒருத்தர் வீதம் காது கேட்காதவர்கள்.

முத்த குடிமக்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கான ஆசிய பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் 100 மாவட்டங்களில் முதியோருக்கான க்ளினிக்குகள் தொடங்கவும் உள் நோயாளி வசதியுடன் முதியோருக்கான தனி மருத்துவமனைகள் தொடங்கவும் மத்திய அரசு திட்டம் தீட்டி மாநில அரசுகளுக்கு பணமும் கொடுக்க முன்வந்திருக்கிறது.

முதல் வருடத்தில் 91 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் 22 மாவட்டங்களில் மட்டுமே க்ளினிக் ஏற்படுத்தப்பட்டது. மருத்துவமனை அமைத்தது வெறும் 12 மாவட்டங்களில்தான். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தாத மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. (இங்கே முன்னாள், இந்நாள் முதல்வர்கள், இளைஞர் அணித் தலைவர்கள் எல்லாரும் அறுபதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

எந்தச் சமூகம் தன் குழந்தைகளையும் முதியவர்களையும் பிச்சை எடுக்க விட்டிருக்கிறதோ அது உள்ளுக்குள்ளேயே அழுகிக் கொண்டிருக்கும் சமூகம் என்று பல வருடங்கள் முன்பு ஜெயகாந்தன் எழுதியது நினைவில் உறுத்துகிறது.

பஸ்சில், ரயிலில் கியூ வரிசையில், சாலைகளில் எங்கேயும் முதியோருக்கு முன்னுரிமை தரும் கலாசாரமே நம்மிடம் இல்லை. ‘பெரிசு... பாத்துப் போமாட்டியா’ என்று கூவுகிற இளைய தலைமுறை பெருகிக் கொண்டிருப்பது இன்னும் உறுத்தலாக இருக்கிறது. பல இளைஞர்கள் தாங்கள் ‘பெரிசு’ ஆகாமலே போய்விடுவோம் என்றே நம்புகிறார்கள் போலிருக்கிறது...!

உறுத்தல் 3:

போலீசை வைத்து அடித்து நொறுக்கினாலும் மாதக்கணக்கில் தடை உத்தரவு போட்டாலும், அடிப்படை வசதிகளை முடக்கினாலும், அயராமல் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து அமைதியாகப் போராடி அணு உலையை எதிர்க்கிறார்கள். கேரளத்திலிருந்து முன்னாள் முதலமைச்சர் அச்சுத மேனன் தன் கட்சி நிலைக்கு விரோதமாக அணு உலையை எதிர்க்கிறார். லோக்பாலுக்கு மட்டுமே குரல் கொடுத்தவர்கள் இப்போது இதற்கும் குரலெழுப்புகிறார்கள்.

ஆனால் இது எதுவும் மத்திய அரசுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை என்பது பெரும் உறுத்தலாக இருக்கிறது. இந்த வாரம் அறிவித்த 12வது ஐந்தாண்டுத் திட்ட ஒதுக்கீட்டில் அடுத்த ஐந்து வருடங்களில் மேலும் 17 அணு உலைகள் தொடங்க 67 ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்குவதாகத் தெரிவித்திருக்கிறது. இதுவரை கட்டியதை விட்டுவிடுங்கள், இனி கட்டவேண்டாம் என்று சொல்வோம் என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது என்ன சொல்வார்கள்?

சூரிய சக்திக்கு ஒதுக்கீடு உண்டா? அதைப்பற்றி அலுவாலியாவும் மன்மோகனும் பேசவே இல்லை. போன ஐந்தாண்டுத் திட்டத்தில் பகட்டாக அறிவித்த தேசிய சோலார் மிஷனுக்கு ஒதுக்கியதே வெறும் 4300 கோடி மட்டும்தான்! ஜெர்மனி அடுத்த 10 வருடங்களுக்குள் தன் 24 சதவிகித மின்சாரத்தை சூரியசக்தியிலிருந்து பெற முயற்சிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

ஏன் நமக்கு வாக்கும் ஆட்சியாளர்களுக்கு மக்களின் உணர்ச்சியும் புரிவதில்லை, மாற்றுக் கருத்துகளில் நியாயம் இருக்கிறதா என்று பார்க்கும் திறந்த மனதும் இல்லை என்பது பெரும் உறுத்தலாக இருக்கிறது. இன்னொரு தலைமுறைத் தலைவர்கள் புதிதாகப் புறப்பட்டு வந்தால்தான் உண்டு போலிருக்கிறது....

உறுத்தல் 4:

ஊழலுக்கெதிரான இந்தியா அமைப்பைச் சேர்ந்த அசீம் திரிவேதி வரைந்த கார்ட்டூன்களுக்காக அவர் கைது செய்யப்பட்டது இந்தியா முழுவதும் ஊடகங்களில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. கைதைக் கண்டித்தவர்களில் கூட பலர் அசீம், பார்லிமென்ட் கட்டடத்தைக் கழிப்பறை போல வரைந்து இழிவுபடுத்தியிருக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.
எனக்கும் அதே கருத்துதான். ஆனால் காரணம் வேறு. கழிப்பறையை இழிவின் சின்னமாகக் கருதி பார்லிமென்ட்டை அதைப் போல வரைந்தது தவறு என்பதுதான் என் கருத்து. கழிப்பறைகள் இழிவின் சின்னங்கள் அல்ல. அவை இல்லையென்றால் மனித வாழ்க்கையே இல்லை. மனிதன் மீதி நேரம் தூய்மையாக ஆரோக்கியமாக இருப்பதற்கு, கழிப்பறை மிகமிக முக்கியமான காரணம். எனவே பார்லிமென்டை, கழிப்பறையாக வரைந்து கழிப்பறைகளை அசீம் இழிவுபடுத்தியிருக்க வேண்டாம்.

கழிப்பறைகள் இழிவின் அடையாளமாகப் பார்ப்பதற்குக் காரணம் நம் சாதியப் பார்வைதான். கழிப்பறையைச் சுத்தப்படுத்து வோரைக் கீழ்சாதியாக்கி தீண்டாமை மூலம் இழிவுபடுத்தி வைத்திருக்கிறோம். அந்தச் சாதிகளின் உழைப்புடன் தொடர்புள்ள கழிப்பறை, செருப்பு முதலியவை எல்லாம் இழிவின் சின்னங்களாக்கப்பட்டிருக்கின்றன. இதுபற்றி நாம் உறுத்தல் இல்லாமல் இருப்பதுதான் ஆபத்தானது.

மற்றபடி கார்ட்டூன்களுக்காக அரசோ யாருமோ பயப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. அவை சிந்திப்பதற்கும் ரசிப்பதற்குமானவை. அநாகரிகமாக, கண்ணியமில்லாமல் போடும் கார்ட்டூன்களைக் கண்டிக்கலாம். சிங்கள ராணுவத்துக்குப் பயிற்சி தரக் கூடாது என்று ஜெயலலிதா உத்தரவிட்டதால் எரிச்ச லடைந்த ஒரு சிங்கள கார்ட்டூனிஸ்ட் ஜெயலலிதாவையும் மன்மோகன்சிங்கையும் ஆபாசமாக கார்ட்டூன் போட்டார். அந்தப் பத்திரிகை சிங்கள அமைச்சருக்குச் சொந்தமானது. தமிழ்நாட்டில் எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்குப் போடும் ஜெயலலிதா ஏனோ இந்த கார்ட்டூனைக் கண்டு கொள்ளவே இல்லை. நியாயப்படி இந்திய அரசு, இலங்கை அரசிடம் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அசீம்களைக் கைது செய்து கொண்டிருக்கிறது. கார்ட்டூனிஸ்ட் கைது பற்றிப் பலரும் கண்டனம் தெரிவித்தபோதும் இதைக் கிண்டல் செய்து, டைம்ஸ் ஆப் இந்தியாவில் அஜீத் நைனன் போட்ட கார்ட்டூன் தான் சூப்பர் (அருகே).

இந்தக் கார்ட்டூன் விவகாரத்தில் எனக்கு இருக்கும் உறுத்தல் ஒன்று உண்டு. அசீம் கைது செய்யப்பட்ட அதே இ.பி.கோ 124 ஏ - பிரிவுதான் கூடங்குளத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீதும் போடப்பட்டிருக்கிறது. அசீம் கைதையடுத்து அந்தப் பிரிவை ரத்து செய்யவேண்டும் என்று கூவிய ஆங்கில ஊடகங்கள், கூடங்குளம் விஷயத்தில் இதுவரை கண்டிக்கவே இல்லையே ஏன்?
 




டி20 உலகக் கோப்பை - யார் புதிய உலக சாம்பியன்?


இலங்கையில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியை எந்த அணி வெல்லும் என்கிற கேள்விக்குச் சுலபத்தில் விடை தேடமுடியவில்லை. ஃபேவரைட்ஸ் என்கிற முத்திரை இல்லாமல் எந்த அணி ஜெயிக்கும் என்பதில் ஒரு ரகசியம் ஒளிந்திருப்பதுதான் இந்த டி20 உலகக்கோப்பையை மேலும் சுவாரஸ்யப் படுத்தியிருக்கிறது. 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மார்க்கெட்டிங் பிரிவைச் சேர்ந்த ஸ்டூவர்ட் ராபர்ட்சன், இங்கிலாந்து லோக்கல் மேட்சுகளில் கூட்டம் வராத காரணத்தால் டி20 விளையாட்டை முதல் முதலாக அறிமுகப்படுத்தினார். உடனடியாக இது தீ போல இதர கிரிக்கெட் நாடுகள் முழுக்க பரவிவிட்டது. இதுவரை 3 டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் நடந்தாலும் முதல் டி20 உலகக் கோப்பைக்கு ஈடுஇணை ஏதுமில்லை. டி20யெல்லாம் உண்மையான போட்டியல்ல என்று அந்த உலகக்கோப்பையில் கலந்துகொள்ளவே இந்தியா மிகவும் யோசித்த காலம் அது. சச்சின், கங்குலி, திராவிட் ஆகிய மூவரும் போட்டியில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவித்ததால் அப்போது ஒருநாள் அணியின் துணைத்தலைவராக இருந்த தோனி, டி20 அணியின் கேப்டனாக்கப்பட்டார். அதன்பிறகு, யுவ்ராஜ் ஆறு பாலிலும் ஆறு சிக்ஸர்கள் அடித்தது, மிஸ்பாவின் ஷாட்டை ஸ்ரீசாந்த் கேட்ச் பிடிப்பதற்குள் கோடிக்கணக்கான இதயங்கள் துடிதுடித்ததெல்லாம் வரலாறு. பிரபலங்கள் இல்லாமல் தென் ஆப்பிரிக்கா டி20 உலகக்கோப்பைப் போட்டி மகத்தான வெற்றி அடைந்தது. அதன் பிறகு, டி20யை இந்தியா வாரி அள்ளிக்கொண்டது. ஐ.பி.எல். பிறந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டுக் குக்கூட டி20 மேட்சுகளிலிருந்துதான் வீரர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள். 

இரண்டாவது உலகக்கோப்பையை பாகிஸ்தானும் மூன்றாவதை இங்கிலாந்தும் (இதன் முதல் உலகக் கோப்பை வெற்றி) கைப்பற்றின. ஆனால், இந்தியா இந்த இரண்டு உலகக்கோப்பைகளிலும் தர்ம அடி வாங்கியது. ஆனாலும், இலங்கைக்குச் சென்றுள்ள இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை. அஸ்வின், கோலி போன்ற புதிய ரத்தங்கள் மிகக் குறைவு. இந்திய அணியின் பலவீனங்கள்தான் மிகவும் உறுத்துகின்றன. ஷாகீர் கானும் ஷேவாக்கும் எப்படி ஆடப்போகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது. அஸ்வின் ஐ.பி.எல்-லில் மிகச்சிறந்த பௌலராக இருந்தாலும் சர்வதேச டி20 மேட்சுகளில் மிகச் சுமாராகவே பந்து வீசி இருக்கிறார். ஹர்பஜனின் ரிட்டர்ன், அணிக்கு எந்தவிதத்தில் உதவப்போகிறது? சென்னையில் நடந்த டி20 மேட்சில் யுவ்ராஜ் அருமையாக ஆடினாலும் ரன்னிங் பிட்வீன் தி விக்கெட்ஸ் மெச்சும்படி இல்லை. கம்பீரின் அவுட் அஃப் ஃபார்ம் இலங்கையிலும் தொடருமா? என பல கேள்விகள் இந்திய அணியின் முன் வைக்கப்படுகின்றன. அரையிறுதி வரை நிச்சயம் முன்னேறும் என்கிற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது. ஆனால், அதற்கே பெரிய சோதனைகளைத் தாண்டியாக வேண்டும்.  

முதல் ரவுண்டில்- ஆப்கானிஸ்தான், இங்கி லாந்துடன் இந்தியா இணைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள சிறந்த 2 அணிகள் சூப்பர் எயிட் போட்டிக்கு நுழையும். சூப்பர் எயிட்டில் இரண்டு பிரிவுகள். நினைத்தபடி முடிவுகள் அமைந்தால் சூப்பர் எயிட்டில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா... ஆகிய நான்கு பலமான அணிகளும் ஒரு பிரிவிலிருந்து அரையிறுதிக்காகப் போட்டியிடும். இன்னொரு பிரிவில் இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவு, இலங்கை, நியூசிலாந்து. 

பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவு, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகள் டி20 ஸ்பெஷலிஸ்டுகளாகப் பார்க்கப்படுகின்றன. தரவரிசைப் பட்டியலில், தென் ஆப்பிரிக்காதான் உச்சத்தில். ஆனாலும், இதுவரை அந்த அணி ஒரு உலகக் கோப்பை கூட வாங்காதது சோக வரலாறு. பாகிஸ்தான் ஒரு சிறந்த டி20 அணியை உருவாக்கியிருக்கிறது. இளமையான, திறமையான வீரர்கள்; பார்க்க அவ்வளவு புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. மேற்கு இந்தியத் தீவு அணி வீரர்கள்தான் ஐபிஎல்-லில் தன்னிகரற்ற நட்சத்திரங்கள். கேல், பொலார்ட், நரேன், பிராவோ போன்ற டி20 ஸ்பெஷலிஸ்டுகள் ஒன்றாக ஓர் அணியில் ஆடுவதென்பது கனவு. மே.இ.தீவு உலகக்கோப்பையை வெல்லாவிட்டால் அது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். முதல் மூன்று உலகக் கோப்பையிலும் யார் சாம்பியன் என்கிற சஸ்பென்ஸ் இறுதிவரை நீடித்தது. டி20யின் தன்மையே அதுதான் என்பதால் இலங்கையிலும் யாரும் எதிர்பார்க்காத ஓர் அதிசயம் நிகழலாம். 


தமிழக முதல்வருக்கு தமிழருவி மணியன் மடல்!



ன்பிற்கினிய தமிழக முதல்வர் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்.
 உங்களுக்கு மீண்டும் ஒரு திறந்த மடல் தீட்டவேண்டிய கட்டாயம் கனிந்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், உங்கள் வெற்றி வாய்ப்புக்கான வியூகம் வகுப்பதில், நீங்கள் ஆழ்ந்திருக்கக்கூடும். தேசிய அரசியலில் நீங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வர வேண்டும் என்று விரும்புவதில் தவறு இல்லை. மம்தாவுக்கும் மாயாவதிக்கும் தலைநகர் தில்லியில் கிடைக்கும் முக்கியத்துவம் உங்களைவிட அவர்கள் அறிவார்ந்தவர்கள், ஆற்றல்மிக்கவர்கள் என்பதற்காக இல்லை. கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் கைகளில் இருக்கிறார்கள் என்பதால்தான் அவர்கள் மீட்டும் ராகத்துக்கேற்ப மன்மோகன் அரசு நாட்டியமாடுகிறது.

தமிழக மீனவர் பிரச்னை குறித்து வாரம் ஒரு கடிதம் நீங்கள் வரைந்தாலும், ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வை அடைவதற்கு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் ராஜபக்ஷே அரசைப் போர்க் குற்றவாளியாக உலக நாடுகள் நீதிமன்றத்தில் நிறுத்தவும் இந்திய அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று ஏகமனதாக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினாலும், 'தானே’ புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி கேட்டுக் கோரிக்கை எழுப்பினாலும், இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தாலும், சோனியா காந்தியின் சொற்படி நடக்கும் மத்திய அரசு உங்கள் பக்கம் பார்வையைத் திருப்பத் தயாராக இல்லை.

ஜார்ஜ் பெர்ணான்டஸும், ஜஸ்வந்த் சிங்கும் கூப்பிட்ட குரலுக்குப் போயஸ் தோட்டத்தைத் தேடி வந்ததும்... பிரணாப் முகர்ஜியும் சிதம்பரமும் கருணாநிதி விரும்பிய போதெல்லாம் கோபாலபுரம் நோக்கி ஓடி வந்ததும் உங்கள் இருவர் மீதும்கொண்ட உயர்ந்த மதிப்பீடுகளால் அன்று. அவர்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள உங்கள் ஆதரவு தேவை. அவ்வளவுதான். உங்கள் மதிப்பு கூடுவதும் குறைவதும் உங்களிடம் இருக்கும் எம்.பி-க்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. இங்கு எண்ணிக்கையே ஜனநாயக தர்மம் என்பதை நீங்கள் அறியாதவர் இல்லை. இன்று நாடாளுமன்றத்தில் 9 பேரை வைத்திருக்கும் நீங்கள், வரவிருக்கும் தேர்தலில் 30 இடங்களையாவது கைப்பற்றினால்தான் மத்திய அரசில் உங்கள் மதிப்பு உயரும். அதற்கான வாய்ப்பை உங்கள் ஆட்சி நிர்வாகத்தின் மூலமும், அரசியல் நடவடிக்கைகள் மூலமும் உருவாக்கி வைத்திருக்கிறீர்களா என்று கொஞ்சம் ஆத்ம சோதனையில் ஆழமாக ஈடுபடுங்கள்.

மக்கள் மனங்களில் எம்.ஜி.ஆர். பெற்றிருந்த இடம் பெரிது. அடித்தட்டு மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கு அளப்பரியது. அந்த எம்.ஜி.ஆரே,  1984 சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்சம் 132 இடங்களைத்தான் பெற முடிந்தது. ஆனால், உங்கள் தலைமையில் அ.இ.அ.தி.மு.க. 1991 தேர்தலில் 163 இடங்களில் வெற்றிக் கனியைப் பறித்துப் புதிய வரலாறு படைத்தது. உங்கள் கூட்டணி 224 தொகுதிகளைக் கைப்பற்றிக் கருணாநிதியைக் கலங்கடித்தது. அதற்குக் காரணம், ராஜீவ்காந்தியின் ரத்தம் இந்த மண்ணில் சிந்தியதுதான் என்பதை உங்களால் மறுக்க முடியாது. சென்ற சரித்திரம் மீண்டும் திரும்பியது. உங்கள் கூட்டணி 2011 தேர்தலில் 203 இடங்களைப் பெற்றது. இரட்டை இலை 150 தொகுதிகளில் வெற்றித் தோரணம் கட்டியது. ஆண்ட தி.மு.க. அடியோடு தடம் புரண்டு, மாண்டு மண்ணில் சாய்ந்து விட்டதோ என்று அனைவரும் வியந்தனர். இந்த மாற்றத்துக்கும் நீங்கள் காரணம் இல்லை. தி.மு.கழகம் தன் தலையில் தானே கொள்ளி வைத்துக்கொண்டது என்பதுதான் உண்மை.

கருணாநிதியின் குடும்ப அரசியலையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருடைய குட்டித் தம்பிரான்கள் அடித்த கூட்டுக் கொள்ளையையும் சகிக்க முடியாத மக்களின் கோபம்தான் உங்கள் கூட்டணிக்கு ஆதரவான காற்றாக அலை வீசியது. சென்னையில் 16 தொகுதிகளில் 14 இடங்களை நீங்கள் பெற்ற அதிசயம் அரங்கேறியதற்கு மக்களின் மாளாத சினம்தான் முழு முதற்காரணம். கருணாநிதி மீதிருந்த எதிர்ப்பும், அவரது கழகத்தின் மேல் படிந்த வெறுப்பும்தான் உங்களை ஆட்சியில் அமர்த்தின. ஆனால், கடந்த கால ஆட்சியில் நிகழ்ந்துவிட்ட தவறுகளில் இருந்து நீங்கள் முழுமையாகப் பாடம் பெறவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

மூன்றாவது முறை நீங்கள் முதல்வரான பிறகு, ஈழத் தமிழர் விவகாரத்தில் மிகச்சரியான அணுகு முறையை மேற்கொண்டதில் உலகத் தமிழர் அனை வரும் உள்ளம் மகிழ்ந்தனர். முல்லை பெரியாறு பிரச்னையில் நீங்கள் காட்டிய கண்டிப்பும், சட்ட பூர்வமாக மேற்கொண்ட முயற்சிகளும் உங்கள் அரசியல் ஆளுமையை அற்புதமாக வெளிப்படுத்தின. கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் தாரை வார்த்த கச்சத்தீவை மீண்டும் தமிழர் பெறுவதற்கு உச்ச நீதி மன்றத்தை நாடி நிற்கும் உங்கள் நடைமுறை உத்தி விவேகம் நிரம்பியது. எப்போது ஆட்சி நாற்காலியில் அமர்ந்தாலும் காவிரி நீரைப் பெறுவதில் நீங்கள் காட்டும் தீவிரம் பாராட்டுக்கு உரியது. மாநில உரிமைகளுக்காக மத்திய அரசுடன் மோதல் போக்கை மேற்கொள்ளும் உங்கள் போர்க்குணம் புகழத்தக்கது. ஆனால், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இவை மட்டும் போதுமா? யோசியுங்கள்.

ஏறிய விலைவாசி இன்று வரை இறங்கவே இல்லை. விண்ணைத் தொட்ட விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் முழுப்பொறுப்பு என்றால், கடந்த ஆட்சியில் நீங்கள் கருணாநிதியைக் குறை கூறியிருக்கக் கூடாது. ஆட்சிக்கு வந்து ஆறு மாதங் களில் மின்பற்றாக்குறை முற்றாகத் தீர்ந்துவிடும் என்றீர்கள். ஆனால், மின்தடையின் கடுமை கொஞ்சமும் குறையவில்லை. காற்றாலைகளும் உங்களைக் கைவிடும்போது நிலைமை மிகவும் கவலைக்குரியதாகி விடும். இதை நீங்கள் பூரணமாகப் புரிந்துவைத்திருப்பதனால்தான் கூடங்குளம். அணுமின் நிலையம் குறித்து உங்கள் கருத்தை மாற்றிக்கொண்டீர்கள். ஆனால், எதிர்ப்பாளர்களைக் களத்தில் நேரில் சந்தித்து, அவர்களுடைய அச்ச உணர்வைப் போக்க நீங்கள் ஏன் முயலவில்லை? அவர்களும் உங்களுக்கு அதீத நம்பிக்கையுடன் வாக்களித்தவர்கள்தானே! வன்முறையின் உச்சத்தில் மனித ரத்தம் ஆறாக ஓடிய நவகாளியில் செருப்பும் அணியாமல் முள் நிறைந்த பாதைகளில் தடி ஊன்றி ஒற்றை மனிதராய் தனித்து நடந்து மத நெருப்பைத் தணிவித்த மகாத்மா வலம் வந்த பொதுவாழ்வில் ஒரு முதலமைச்சர் மக்களைச் சந்திக்கத் தயங்குவது எந்த வகையில் சரியானது?

உங்கள் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்படும் என்ற தோற்றமும் இன்று பொய்த்துப் போனது. முதல்வரானதும் நீங்கள் அளித்த முதல் நேர்காணலில் 'கொள்ளையர் அனைவரும் ஆந்திராவின் பக்கம் அடைக்கலமாகி விட்டனர்’ என்று, சிரித்தபடி சொன்னீர்கள். ஆனால், கொலையும் களவும் மாநிலம் முழுவதும் இன்று பரவிவிட்டதைப் பார்த்தால், ஓடிப் போனவர்கள். தங்கள் கூட்டாளிகளுடன் மீண்டும் திரும்பி விட் டார்களோ என்று திகைப்பு எழுகிறது.

மாண்புமிகு முதல்வரே... நீங்கள் ஆட்சியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகள் முடிவதற்குள் பரமக்குடியிலும் கூடங்குளத்திலும் இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடந்து மொத்தம் ஏழு மனித உயிர்கள் பறிக்கப்பட்டு விட்டன. பூவைப் பறிப்பதற்குக் கோடரி தூக்குபவரை நல்ல தோட்டக்காரர் என்று எப்படிச் சொல்ல முடியும்? பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தலித் வாக்காளர்களின் ஆதரவைக் கேள்விக்குறியாக்கி விட்டது. கூடங்குளம் துப்பாக்கிச் சூடு, மீனவர்கள் மன உணர்வைக் காயப்படுத்தி விட்டது.

பொதுப்பணித் துறையில் இருந்து கல்வித் துறை வரை ஊழல் அரக்கனின் நீள்கரங்கள் ஆக்கிரமித்து இருப்பதை நீங்கள் அறியவில்லையா?

விலைவாசி குறையவில்லை; மின்தடை நீங்கவில்லை; சட்டம் - ஒழுங்கு நிறைவைத் தர வில்லை; ஊழலற்ற நிர்வாகம் நடக்கவில்லை; விமர்சனங்களை வரவேற்கும் ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை. இந்த மோசமான சூழலிலும் தி.மு.கழகம் உயிர்த்தெழுவதைப் பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை. விரும்பி வாக்களிப்பது என்ற நிலையில் இருந்து விடுபட்டு, வேறு வழி இல்லாமல் வாக்களிப்பது என்ற நிலையில் மக்களை நீங்கள் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறீர்கள். இந்த இடத்தில்தான் உங்கள் நடவடிக்கைகளை நீங்கள் தவறாமல் மறுவாசிப்பு செய்ய வேண்டும்.

மாயாவதியிடம் 21 எம்.பி-க்கள், மம்தாவிடம் 19 எம்.பி-க்கள், முலாயம் சிங் யாதவிடம் 23 எம்.பி-க்கள், கருணாநிதியிடம் 18 எம்.பி-க்கள் இருப்பதால் தான், அவர்கள் தயவை மன்மோகன் அரசு நாடுகிறது. நீங்களோ ஒற்றை வரிசையில் 9 பேரை வைத்திருக்கிறீர்கள். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி, சங்கரன்கோவில், புதுக்கோட்டை இடைத்தேர்தல்களில் கையாண்ட செயல்முறைகள் செல்லுபடியாகாது. தேசிய அரசியல் சதுரங்கத்தில் நீங்கள் நினைத்தபடி காய்களை நகர்த்த விரும்பினால், பெரும்பான்மை மக்கள் ஆதரவை நீங்கள் பெற்றாக வேண்டும். அதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டிய மந்திரக்கோல்தான் மதுவிலக்கு அறிவிப்பு.

உங்களுக்குப் பிடித்த மனிதர் மோடியின் குஜராத்தைப் போல் தமிழகத்தை மதுவிலக்கு மாநில மாக நீங்கள் மாற்ற வேண்டும்.

மக்கள் நலனில் நாட்டம் உள்ள எந்த அரசும் மதுவை விற்க முன்வராது. எம்.ஜி.ஆர். டாஸ்மாக்கின் கதவுகளைத் திறந்தபோது அரசின் வருவாய் 183 கோடி ரூபாய். இன்று உங்கள் ஆட்சியில் 20 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. மதுவின் மீது விதிக்கப்படும் விற்பனை வரி, கலால் வரி மூலம் அரசுக்கு வரும் வருவாய் மட்டும் 20 ஆயிரம் கோடி என்றால், டாஸ்மாக் விற்பனை எத்தனை ஆயிரம் கோடி இருக்கும் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். சாராயத்தில் ஈட்டுவது பாவத்தின் சம்பளம் அல்லவா! குடிக்கத் தூண்டுவது அரசு; குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவரைத் தண்டிப்பதும் அதே அரசு என்றால், எவ்வளவு போலித்தனம் முதல்வரே!

இன்று 13 வயது பையன் குடிக்கிறான். கல்லூரி மாணவன் கைகளில் மதுக் கோப்பையுடன் காட்சி தருகிறான். ஏழையும் பாழையும் சாராயம் குடித்துச் சாக்கடையோரம் சரிந்து கிடக்கிறார்கள். எந்த வீட் டிலும் நிம்மதி இல்லை. வாகன விபத்துகள் அதிகரிக்க எது காரணம்? குடும்ப உறவுகள் குலைந்துபோவது எதனால்? விவாகரத்துகள் கூடிவிட்டதற்கு அடிப்படை எது? கூலித் தொழிலாளர்கள் குடல் வெந்து கிடப்பது எந்தக் கொடுமையால்? ஏழ்மை நிரந்தரமாக ஒவ்வொரு வீட்டிலும் பாய் போட்டுப் படுத்துக் கிடப்பது எதனுடைய தயவால்? இவை எல்லாவற்றுக்கும் காரணம் மது அல்லவா? தாய்மை உணர்வோடு இந்த இழிவைச் சந்தியுங்கள்!

அன்பு கூர்ந்து மதுக்கடைகளை மூடுங்கள். அரசு வருவாய்க்கு மாற்று வழி தேடுங்கள். வரி சீர்த்திருத்தத்தில் கவனம் செலுத்துங்கள். அரசு 300 ரூபாய்க்கு அளிக்கும் ஒரு யூனிட் மணல், கடைகளில் 3,000 ரூபாய்க்கு விற்கப்படும் விபரீதத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். மதுவை விற்பதை விட மணலை நேரடியாக விற்பனை செய்யுங்கள். கிரானைட் கொள்ளைக்காரர்களிடம் கையூட்டு பெற்றுக் களியாட்டம் போட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள். இயற்கை அன்னையின் மடி சுரண்டும் மனிதர்களிடம் கருணை காட்டாது கைவிலங்கு பூட்டுங்கள். மது வருவாய் இல்லாத குஜராத் மாநிலத்தில் மோடி உபரி பட்ஜெட் போட முடியும் என்றால், உங்களால் மட்டும் ஏன் முடியாது?

கருணாநிதி கட்டி முடித்த அண்ணா நூலகத்தை இழுத்து மூடினால் அது 'காழ்ப்பு அரசியல்’ என்று விமர்சிக்கப்படும். மதுவின் நிறமும் மணமும் அறியாத ஒரு தலைமுறையின் உயர்நிலைப் பண்பாட்டை மதுக் கடைகளைத் திறந்ததன் மூலம் பாழ்படுத்தியவர் கருணாநிதி. அவர் திறந்துவைத்த மதுக்கடைகளை நீங்கள் மூட முடிவெடுத்தால் தமிழின வரலாற்றில் உங்கள் நடவடிக்கை பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும். லாட்டரி சீட்டுக்குத் தடைவிதித்த நீங்கள் மதுக்கடைகளையும் தயக்கமின்றி மூடத் துணியுங்கள். தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் சரிபாதி பெண்கள். ஆண்கள் வாக்குகள் கட்சி சார்ந்து பிரியக்கூடியவை. பெண்கள் ஒரே உணர்வுடன் வாக்களிக்கும் வழக்கம் உள்ளவர்கள். மதுக் கடைகளை மூடினால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பெண் வாக்காளர்கள் ஒரு தேவதைக்கு வாக்களிக்கும் மகிழ்ச் சியுடன் உங்களுக்கு வாக்களிப்பார்கள்.

அன்பிற்கினிய முதல்வரே... உங்கள் ஆட்சியில் சில நிறைகளும் உண்டு; பல குறைகளும் உண்டு. லண்டன் மாநகரைப் பற்றிப் பாடும் போது‘with all they faults still I love thee’ என்றான் பைரன். மதுக் கடைகளை நீங்கள் மகாத்மா பிறந்த நாளிலோ, பின்னரோ விரைந்து மூட முடிவெடுத்தால், தமிழகத்துப் பெண் மக்கள் அனைவரும் பைரனைப் போல் உங்கள் ஆட்சியை ஆயிரம் குறைகளையும் மீறி நேசிக்கத் தொடங்கி விடுவார்கள். நீங்களும் சூளுரைத்தபடி தகுதிமிக்க தமிழுலகின் இசை மேதைகள் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருதை எளிதில் பெற்றுத் தரும் அளவுக்குத் தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அசைக்க முடியாத ஆளுமையாக உயர்ந்து விடுவீர்கள். இந்த எளியவனின் அரிய ஆலோசனைக்கு உரிய மதிப்பளித்தால், உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது. எவரிடத்தும் எனக்கொன்றும் ஆகப்போவது எதுவும் இல்லை; ஆக வேண்டிய அவசியமும் இல்லை. உள்ளதைச் சொல்கிறேன். இந்த மண்ணின் நலனுக்காக உண்மையைச் சொல்கிறேன்.

என்றும் நிறம் மாறாத நிஜமான அன்புடன்
தமிழருவி மணியன்

சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள்...

1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி... அன்று வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், அதற்கு நிகரான ஒரு போராட்டம் இப்போது இந்தியா முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீட்டை எதிர்க்கும் போராட்டம்தான் அது.
 
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாமா, கூடாதா என கடந்த பல ஆண்டு காலமாக விவாதித்துக் கொண்டிருந்த மத்திய அரசு, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளிலிருந்து பலமான எதிர்ப்பு கிளம்பிய பிறகும், அவர்கள் அளித்துவந்த ஆதரவு போனாலும் பரவாயில்லை, எடுத்த முடிவில் உறுதியாக இருப்போம் என்கிற துணிவோடு கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அரசு அறிவிப்பை முறைப்படியாக வெளியிட்டது. இந்த வர்த்தகத்தில் இது ஒரு பெரும் புரட்சி என்றே விளம்பரம் செய்திருக்கிறது மத்திய அரசாங்கம். இதற்கு நடுவே, அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் மக்களிடம் புழங்க ஆரம்பித்தன. காரணம், மீடியாக்களிலும் சமூக வலைதளங்களிலும் இதுபற்றி கடுமையாக விவாதிக்கப்பட்டன. வால்மார்ட், டெஸ்கோ, கேரிஃபோர் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்கும்பட்சத்தில் சிறு வியாபாரிகள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள்:(
 
முதலில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாகச் சொல்லப்படும் கருத்துகளைப் பார்ப்போம்.
 
 

இந்திய ரீடெய்ல் துறையில் சுமார் 6-8% வரை மட்டுமே ஆர்கனைஸ்டு நிறுவனங்களின் கையில் இருக்கிறது. மீதம் பரம்பரை பரம்பரையாக வணிகம் செய்பவர்களிடமும், சிறுவணிகர்களிடமும்தான் இருக்கிறது. அந்நிய நேரடி முதலீட்டில் தொடங்கப்படும்  கடைகள் பத்து லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை இருக்கும் நகரங்களில் தான் அனுமதிக்கப்படும். அப்படிப் பார்த்தால் 2011 மக்கள் தொகை கணக்கின்படி, இந்தியாவில் 53 நகரங்கள்தான் பத்து லட்சத்துக்கு மேலான மக்கள் தொகையை கொண்டிருக்கிறது. ஒடிஷா உள்ளிட்ட சில மாநிலங்களில் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை இருக்கும் நகரங்களே இல்லை. ஆக, வெறும் 53 நகரங்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தை ஒட்டுமொத்த இந்தியாவுக்கே உரிய பிரச்னையாக பூதாகரமாக ஆக்கிக் காட்டுகிறார்கள்.

இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டது. ஆனால், அங்கு இன்னும் 70 சதவிகிதத்துக்கு மேலான வர்த்தகம் இன்னும் சிறுவணிகர்களிடம்தான் இருக்கிறது. சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் அந்த துறை நன்றாக வளர்ந்திருக்கிறது. மேலும், இந்தியாவில் ஆங்காங்கே அமைக்கப்படும் கடைகள் எப்படி ஒட்டுமொத்த இந்திய ரீடெய்ல் துறையையே மாற்றி அமைக்கும் என்று புரியவில்லை.

மேலும், அந்நிய நிறுவனங்கள் இந்தியாவை மொத்தமாக சுரண்டி லாபம் சம்பாதிக்கும் என்பது உண்மையில்லை. ஏற்கெனவே இப்போது இருக்கும் முக்கியமான பிராண்டட் ரீடெய்ல் நிறுவனங்கள் பல தங்களது கடையை இழுத்து மூடிவருகின்றன. அவர்கள் விரிவாக்கப் பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் லாபமே சம்பாதிக்க ஆரம்பிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து எல்லோரையும் ஒழித்துவிடும் என்று சொல்வதெல்லாம் அதீதமான கற்பனைதான்.

அந்நிய நிறுவனங்கள் பிஸினஸ் செய்வதற்கும் நாம் பிஸினஸ் செய்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இந்தியா ஒரு பரந்துபட்ட நாடு. தினந்தோறும் தேவைக்கு ஏற்ப மளிகை வாங்குபவர்களும் இருக்கிறார்கள். வாரத்துக்கு, மாதத்துக்கு ஏற்ப பொருட்களை வாங்குபவர்களும் இருக்கிறார்கள். அதாவது, ஏழைகளும் நடுத்தர மக்களும்தான் நம் நாட்டில் அதிகம். இவர்களின் தேவையை நிறைவேற்ற எங்களை போன்ற கடைக்காரர்களால்தான் முடியும். பத்து பட்டாணிக் கடை இருந்தாலும் பதினோறாவதாக இன்னொரு கடை போட்டால் இங்கு வியாபாரம் நடக்கும். அது ஒரு பிரச்னையே இல்லை.  

ஆனால், வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லா ஊர்களிலும் வரமாட்டார்கள். ரீடெய்ல் கடைகளுக்கு வரும் மக்கள் அந்தந்த ஏரியாவைச் சேர்ந்த மக்களாகவே இருப்பார்கள். அதிகபட்சம் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் சென்று மளிகை வாங்குவதெல்லாம் நடக்காத காரியம். அவர்களுடன் போட்டி போட்டு ஜெயிக்கும்பட்சத்தில் எங்களுக்கு மக்கள் மத்தியில் இன்னும் நல்ல பெயர் கிடைக்கும்.

என்றாலும் அந்நிய நாட்டு நிறுவனங்களை டாடா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிட முடியாது. காரணம், இந்த நிறுவனங்களின் முக்கிய பிஸினஸ் ரீடெய்ல் ஸ்டோர் நடத்துவது கிடையாது. அவர்களிடத்தில் இருக்கும் பல பிஸினஸ்களில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான். அதனால்தான் அவர்களால் சிறப்பாக நடத்த முடியவில்லை. ஆனால், இப்போதுவரும் அந்நிய நிறுவனங்களுக்கு அதுதான் முக்கிய பிஸினஸ். அதனால் அவர்கள் மிகத் தெளிவாக இருப்பார்கள். இதனால் ஆரம்ப கட்டத்தில் நாங்கள் பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். குறிப்பாக ஆட்களின் சம்பளம், ஷிஃப்ட் முறை கொண்டுவருவது, டெக்னாலஜியில் மாற்றங்களை கொண்டுவருவது உள்ளிட்ட பல வேலைகளை நாங்கள் செய்தாக வேண்டும். இது ஆரோக்கியமானதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் ஊரில் யார் வந்தாலும் எங்களால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது''.


 ''சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடே தேவை இல்லை. இது தேசத்தையே விற்பதற்கான முயற்சிகளில் ஒன்று. 1991-ம் ஆண்டு இந்தியர்களின் சேமிப்பு ஜி.டி.பி.யில் 18%. ஆனால், இப்போது 36%. இத்தனை வருட இடைவெளியில் நமது சேமிப்பு இரட்டிப்பாகி இருக்கிறது. ஆனால், இந்த சேமிப்பு முதலீடாக மாறவில்லை. நம்மிடத்தில் சேமிப்பு இல்லை என்கிறபட்சத்தில் அந்நிய முதலீட்டை வரவேற்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், இவ்வளவு சேமிப்பு இருந்தும், அதை இந்த அரசு முதலீடாக மாற்ற முயற்சிக்கும் வழியை, நம்பிக்கையை உண்டாக்காமல் அந்நிய முதலீட்டை கொண்டுவருவதில் என்ன நியாயம்?

அந்நிய முதலீடு வரும்பட்சத்தில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், சில்லறை வர்த்தகத்தை நம்பி இருக்கும் பத்து கோடி தொழில்முனைவோர்களுக்கு என்ன வேலை கொடுக்கப் போகிறார்கள். மேலும், இந்தியாவின் முக்கியமான நகரங்களில்தான் இந்த நிறுவனங்கள் ஆரம்பிக்க போவதாகச் சொல்கிறார்கள். ரீடெய்ல் துறையின் பிஸினஸ் பெருநகரங்களில்தானே நடக்கிறது? 

இந்தக் கடைகள் வரும்பட்சத்தில் இடைத்தரகர்கள் தேவை இல்லை; விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்கிறார்கள். அந்நிய முதலீடு வரும்பட்சத்தில் விவசாயிகளுக்கு தரும் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துவிடுமா? முடியாதே! மக்களின் வரிப் பணம், விவசாயிகளுக்கு மானியம் என்கிற பெயரில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்குப் போகப் போகிறது.

மேலும், இந்த நிறுவனங்களிடம் இருக்கும் பணபலத்தால் சில பொருட்களை அவர்களிடத்தில் மட்டுமே கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அவர்களிடத்தில் குறைவான அளவுகொண்ட பொருட்கள் இருக்காது. ஆஃபர் என்கிற பெயரில் கிலோ கணக்கில் பல பொருட்களை நாம் வாங்கி வைத்திருப்போம். இப்போதும் அதுதான் நடக்கப் போகிறது. நம்மூர் ரீடெய்ல் நிறுவனங்களைவிட பல மடங்கு பெரிய நிறுவனங்கள் நம் வணிகர்களை விழுங்கும் வாய்ப்பே அதிகம். இதனால் நமது இந்திய வாழ்க்கை முறையே மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது'' 
 
 

ஆனாலும், ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீட்டை நமது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரவேற்கவே செய்கின்றன. காரணம், வெளிநாட்டு நிறுவனங்கள் 51 சதவிகிதம்தான் வைத்திருக்க முடியும். மீதியை ஏதாவது ஒரு இந்திய நிறுவனத்திடமிருந்துதான் வாங்க வேண்டி இருக்கும். ஏற்கெனவே நஷ்டத்தில் இருக்கும் அவர்கள் இதை விரும்புவதில் ஆச்சர்யமில்லை.
 

சமையல் எரிவாயு... சிக்கனமா பயன்படுத்துவது எப்படி?

னி ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்தான் மானிய விலையில் கிடைக்கும் என மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள் குடும்பத் தலைவிகள். ஆறு கேஸ் சிலிண்டருக்கு மேல் தேவைப்படுமெனில், ஒரு கேஸ் சிலிண்டர் 733 ரூபாய் தந்துதான் வாங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் எப்படி போதும்; குறைந்தது பத்து கேஸ் சிலிண்டராவது வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியா முழுக்க எழுந்துள்ளது. சிலிண்டர்களின் எண்ணிக்கையை எட்டாக உயர்த்தலாமா அல்லது ஆறு சிலிண்டர் என்கிற அறிவிப்பையே வாபஸ் வாங்கிவிடலாமா என மத்திய அரசு யோசித்து வருவது ஒருபக்கமிருக்க, சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்துவது எப்படி..? மாறிவிட்ட கலாசார சூழலில் இனி விறகு அடுப்புக்கு மாறுவது சாத்தியமே இல்லை என்கிறபோது, சமையல் எரிவாயுக்கு வேறு என்னதான் மாற்று என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.  

மின்சார அடுப்பு!
மின்சார அடுப்பை பயன்படுத்துவது கேஸ் சிலிண்டருக்கு ஒரு சிறந்த மாற்று. ஒரு கேஸ் சிலிண்டர் குறைந்தது 45 நாள் வருகிறது என வைத்துக் கொள்வோம். ஒரு கேஸ் சிலிண்டர் ரூ.386.50 விலை எனில், சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.8.50 செலவாகும். அதே ஒரு கேஸ் சிலிண்டர் 733 ரூபாய்க்கு வாங்கினால் ஒரு நாளைக்கு ரூ.16.28 செலவாகும்.

மின் அடுப்பின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்திற்குத் தேவையான சாதம், சாம்பார், பொரியல், டீ, பால் காய்ச்சுவது, இட்லி அல்லது தோசை என மூன்று வேளையும் செய்ய ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு மணி நேரம் ஆகும். ஒரு மணி நேரத்திற்கு மின் அடுப்பில் 1,000 வாட் பவரில் வைத்து தொடர்ந்து ஒரு மணி நேரம் சமைத்தால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். அதாவது, ஒரு நாளைக்கு 2 யூனிட் மின்சாரம் செலவாகும்.

உங்களின் வீட்டில் அதிகபட்சமாக 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தினால், நீங்கள் ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் மின் கட்டணம் கட்ட வேண்டியிருக்கும். அதாவது, மின் அடுப்பிற்காக ஒரு மாதத்திற்கு ரூ.180 உங்களுக்குச் செலவாகும். ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக ரூ.2,160 செலவாகும். ஆனால், மானியம் மற்றும் மானியமில்லாத விலையில் ஆண்டுக்கு 10 கேஸ் சிலிண்டர் வாங்கினால் 5,251 ரூபாய் செலவாகும். இதனோடு ஒப்பிட்டால் மின் அடுப்புக்கு நீங்கள் செய்யும் செலவு  மிகக் குறைவுதான்.

ஆனால், நீங்கள் சொந்த வீட்டில் இருந்தால் மட்டுமே இந்த கணக்கு சரிவரும். நீங்கள் வாடகை வீட்டில் இருந்து, ஒரு யூனிட்டுக்கு 6 முதல் 8 ரூபாய் தரும்பட்சத்தில், அதற்காகும் செலவை நீங்கள் கேஸ் வாங்கி பயன்படுத்திவிடலாம்.

எலெக்ட்ரிக் குக்கர்!

சாதம், பிரியாணி, பொங்கல் செய்ய மட்டுமே எலெக்ட்ரிக் குக்கர் பயன்படுத்தப்படுகிறது. இதில், சாதம் வேக குறைந்தபட்சம் 30 முதல் 45 நிமிடங்கள் ஆகின்றன. மின் அடுப்புக்குச் செலவாகும் அதே அளவு மின்சாரம்தான் இதற்கும் தேவைப்படும். ஆவியில் வேக வைக்கும் பொருட்களை இதில் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.

மைக்ரோவேவ் அவன்!

மைக்ரோவேவ் அவன் - இன்று கணிசமான குடும்பங்களில் இதைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதில் டீ, காபி போட்டுக்கொள்ளலாம். ஃபிரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை சூடுபடுத்தவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான நேரம் என்பது மிக மிக குறைவாக இருக்கும். ஆனால், இதற்கென இருக்கும் பிரத்யேகமான பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.


மாற்று வழிகளைப் பற்றி யோசிப்பது ஒருபக்கமிருக்க, சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகளை பார்ப்போம். காரணம், சில எளிமையான நடைமுறைகளை பயன்படுத்தினாலே அரசு தரும் ஆறு சிலிண்டர்களை வைத்து, ஆண்டு முழுவதையும் ஓட்டிவிடலாம் என்கிறார்கள் ஆயில் நிறுவன அதிகாரிகள். அவர்கள் தரும் டிப்ஸ்கள் இதோ உங்களுக்கு:

சமையலுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் தயார் செய்து வைத்துக்கொண்டு அடுப்பை ஆன் செய்வது அவசியம். 

அடிக்கடி ஆஃப், ஆன் செய்வதால்  அதிக கேஸ் செலவாகும். எனவே, அதை தவிர்ப்பது நல்லது.

அகலமான பாத்திரத்தை வைத்து சமைத்தால் எரிபொருள் வீணாகாது. 

தண்ணீரை கொதிக்க வைத்து சாதம் வடிக்காமல், குக்கரில் சமைப்பது ஒரு வழி. அதோடு ஒரே குக்கரில் காய்கறி, பருப்பு, அரிசி என தனிதனிப் பாத்திரத்தில் வைத்து சமைக்கலாம். கேஸ் அதிகமாக மிச்சமாகும்.

வெந்நீர் வைப்பதற்கு கேஸ் அடுப்பை பயன்படுத்தக்கூடாது. வெந்நீர் தயாரிக்க என எலெக்ட்ரிக் கொதிப்பான்கள் உள்ளன. அதையே வாங்கி பயன்படுத்தலாம்.

 டீ, காபி அடிக்கடி போடுவதற்குப் பதில்,  மொத்தமாகப் போட்டு ஃபிளாஸ்கில் வைத்து குடிக்கலாம்.

ஃபிரிட்ஜில் வைத்திருந்த பால் மற்றும் பொருட்களை சிறிது நேரம் வெளியே வைத்து அறை வெப்ப நிலைக்கு வந்தபிறகு சூடுபடுத்தலாம்.

Saturday, September 22, 2012

எனது இந்தியா ( சிந்துசமவெளியும் லோதலும்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

ரலாற்றைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளவும், முடியாதபோது அதை அழித்து ஒழித்துவிடவுமே அதிகாரம் விரும்புகிறது. வரலாற்றைத் திருத்தி எழுதும் முயற்சிகளுக்குத் தடையாக இருப்பவை புராதனச் சின்னங்களும், கல்வெட்டுக்களும், அகழாய்வுச் சான்றுகளுமே ஆகும். ஆகவே, அவற்றை அழித்துவிட்டால் விரும்பியபடி ஒரு வரலாற்றை உருவாக்கிக்கொள்ளலாம் என்ற எண்ணம் அரசியல் உலகில் இருக்கிறது. ஆனால், ஊதினால் உடைந்துவிடும் நீர்க்குமிழி போல, வரலாறு எளிதாக மறைந்துவிடாது.

வரலாற்றை ஆய்வு செய்வது என்பது உண்மையைக் கண்டறியும் ஒரு பரிசோதனை. வரலாற்றைப் புரிந்துகொள்ள அறிவியல்பூர்வமான சிந்தனையும், திறந்த மனதும், கூர்மையான அவதானிப்புகளும், தொடர்ந்த தேடுதலும் வேண்டும். வரலாற்றுச் சின்னங்களை அறிந்துகொள்வதிலும் பராமரிப்பதிலும் எப்போதுமே அலட்சியமாகவே இருக்கிறோம். வரலாறு என்பது பெருமை அடித்துக்கொள்வதற்கு மட்டுமே நமக்குத் தேவைப்படுகிறது.

மனிதப் பண்பாட்டின் வளர்ச்சி பற்றியோ, இந்தியாவின் சமூக, கலாசார, பொருளாதார நிலைகள் எப்படிக் காலம்தோறும் மாறி வந்திருக்கின்றன என்பதைப் பற்றியோ, பண்பாட்டு வரலாற்றைப் புரிந்துகொள்ளுதல் குறித்தோ, பெரும்பான்மையினர் அக்கறை காட்டுவதே இல்லை. கலைப் பொருட்களைத் திருடி விற்பது, கல் குவாரிகள், முறையற்ற பராமரிப்புப் பணிகள், ஆக்கிரமிப்பு, அலட்சியமாக உடைத்தெறிவது எனப் பல்வேறு மோசமான செயல்பாடுகளால் நம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரிய ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள், பட்டயங்கள், கலைப் பொருட்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை கண் முன்னே அழிக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அகழ்வாய்வுத் துறை, இந்தியா முழுவதும் 3,685 இடங்களைப் புராதன நினைவுச் சின்னங்களாகப் பராமரித்துவருகிறது. தமிழகத்தில் 411 இடங்கள் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் இருக்கின்றன. ஆனால், இவற்றை முறையாகப் பாதுகாக்க போதிய காவலர்கள் கிடையாது. நேரடியாகப் பார்வையிடச் செல்பவர்கள் அங்கே அடிப்படைத் தகவல்களைக்கூட அறிந்துகொள்வது சிரமம். தொல்லியல் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்துதல், பகுப்பாய்தல், பேணிக் காத்தல் ஆகியவையே தொல்லியல் துறையின் முக்கியப் பணிகள். கட்டடக் கலை, தொல் பொருட்கள், தொல்லுயிர்களின் எச்சங்கள், மனித எலும்புகள் மற்றும் நிலத் தோற்றங்கள் உள்ளிட்ட எஞ்சிய பொருட்களை முறையாக வெளிக்கொணர்ந்து ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன் மூலம் மனிதப் பண்பாட்டு வளர்ச்சியை அறிந்துகொள்வதற்கு அகழ்வாய்வுத் துறை உதவி செய்கிறது.

இன்னமும் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்படாத புராதன இடங்கள், இந்தியாவில் நிறைய இருக்கின்றன. அவற்றில் அகழ்வாய்வு மேற்கொள்ளப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்று தொல்லியல் துறை கூறுகிறது. அதே நேரம், கண்டறியப்பட்ட வரலாற்று உண்மைகள் பலவும் இன்றும் முறையாகக் கவனப்படுத்தப்படவில்லை. உதாரணமாக, சிந்து சமவெளி பற்றிக் குறிப்பிடும்போது மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா மட்டுமே முன்னிறுத்தப்படுகின்றதே அன்றி ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த லோதல், அடையாளம் காட்டப்படுவது இல்லை.

இதற்கு முக்கியக் காரணம் மார்டிமர் வீலர். அவர்தான் சிந்து சமவெளி பற்றிய வரலாற்றுக் கவனத்தை ஏற்படுத்தியவர். மொகஞ்சதாரோ, ஹரப்பா இரண்டை மட்டுமே பிரதானமாகக்கொண்டு சிந்து சமவெளி நாகரிகம் பற்றி மார்டிமர் வீலர் ஆய்வு செய்தார். ஆகவே, அவரது ஆய்வுகளின் வழியாக முன்வைக்கப்பட்ட கருதுகோள்களை அப்படியே பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்தியக் கல்வித் துறை தனதாக்கிக்கொண்டது. அதுதான் முக்கியக் கோளாறு.

சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியத் தொல்லியல் துறை சிந்து சமவெளி நாகரிகம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கியது. காரணம் மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற தொல் நகரங்கள் இந்தியப் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குப் போய்விட்டன. ஆகவே, இந்தியா தனது புராதனத்தை அடையாளம் காட்டும் நினைவுச் சின்னங்களை தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கியது. ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் நடந்த இந்தக் கள ஆய்வில் கனேரிவாலா, ராக்கிகார்ஹி காலிபங்கன், ரூபர், தோலவீரா, லோதல் என ஆறு முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டன. இவை, ஹரப்பா காலகட்டத்தைச் சேர்ந்தவை. சிந்து நதிக் கரையில்தான் நாகரிகம் பிறந்தது என்ற பொதுக் கருத்துருவாக்கத்தை இந்தக் கண்டுபிடிப்புகள் மாற்றி அமைத்தன. காரணம், இவை சிந்து நதிக் கரையில் இல்லை. சபர்மதி மற்றும் நர்மதா ஆற்றில் அமைந்து இருக்கின்றன. ஹரப்பா நாகரிகம் பல ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு விரிந்து பரந்து இருந்திருக்கிறது என்ற புதிய வெளிச்சத்தை இந்தக் கண்டுபிடிப்புகள் உலகுக்கு அறிவித்தன.

குஜராத்தில் காணப்படும் இந்த ஆய்விடங்கள், ஒரு தொன்மையான நாகரிகம் சிந்து சமவெளிக்கு அப்பாலும் இருந்திருக்கிறது என்பதையே அடையாளம் காட்டுகின்றன.

இந்த ஆய்விடங்களில் லோதல் மிகவும் தனித்துவமானது. காரணம், இது ஒரு துறைமுக நகரம். கப்பல் கட்டுமானம் மற்றும் கடற்சார் வணிகத்தில் இந்தியா முன்னோடியாக விளங்கியதற்கு லோதலை சாட்சியாகக் கூறுகிறார்கள். அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோல்கா தாலுகாவின் சரகவாலா கிராமத்தின் அருகே லோதல் உள்ளது. லோதல் என்றால், மரண மேடு என்று அர்த்தம். 1955-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள லோதலில் எஸ்.ஆர்.ராவ் தலைமையில் ஒரு குழு அகழ்வாய்வு  அப்போது, அங்கே ஒரு பழைமையான மேடு, அழிந்துபோன நகரத்தின் மிச்சங்கள் மற்றும் ஒரு சந்தை இருந்த இடம் ஆகியவை கண்டறியப்பட்டன.

லோதல், அன்றே ஒரு தொழில் நகரமாக இருந்திருக்கிறது. மணி மாலை செய்வது, கடல் சிப்பி, சங்குகளில் கலைப் பொருட்களைச் செய்தல், அணிகலன்களை உருவாக்குவது, இரும்புக் கருவிகளைச் செய்வது, சுடுமண் கலயங்கள் உருவாக்குவதுபோன்ற பணிகள் நடைபெற்று இருக்கின்றன. வெண்கலம் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட அம்புகள், கத்திகள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் யாவும் வெண்கலத்தில் செய்யப்பட்டு இருக்கின்றன.

லோதலின் முக்கிய இடம் அதன் படகுத் துறை. மிக நீளமான படகுகளை லோதல் மக்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். அங்கே இருந்து, கப்பலில் வணிகப் பொருட்கள் சுமேரியா வரை சென்றிருக்கிறது. கடலில் இருந்து நீரோடை வழியாகப் படகுகள் நகருக்குள் வந்து செல்லும்படி நகரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கடலின் ஏற்ற இறக்கத்தைச் சாதகமாகக்கொண்டு படகுகள் உள்ளே வருவதும் வெளியேறுவதற்கும் வழி செய்யப்பட்டு இருப்பதே இதன் தனித்துவம்.

மொகஞ்சதாரோ, ஹரப்பா இரண்டின் அழிவுக்குப் பிறகும், பல ஆண்டு காலம் லோதல் செழுமையாக வளர்ந்தோங்கி இருந்திருக்கிறது. இயற்கைச் சீற்றமே அதன் அழிவுக்குக் காரணமாக இருந்திருக்கும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். லோதலில் கண்டறியப்பட்ட சுடுமண் கலயங்கள் தனித்துவம்கொண்டவை. அவை, லோதலுக்கு என்றே ஓவியம் தீட்டப்பட்ட சுடுமண் கலயம் உருவாக்கும் முறை ஒன்று இருந்திருப்பதைக் காட்டுகிறது. லோதலில் கண்டெடுக்கப்பட்ட பாத்திரம் ஒன்றில் ஒரு மரத்தில் காகம் இருப்பதுபோன்றும், அதன் அடியில் நரி காத்துக்கிடப்பது போலவும் ஓவியம் இருக்கிறது. இது, பஞ்ச தந்திரக் கதையின் ஒரு வடிவமாக இருக்கக்கூடுமோ என்று கருதுகின்றனர். லோதலில் செய்யப்பட்ட பாசி மாலைகள், அணிகலன்களுக்கு வெளிநாட்டில் பெரிய வரவேற்பு இருந்திருக்கிறது.

லோதல் பகுதியில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட காரணத்தால்,  வெள்ளத்தில் சேதம் அடையாத வண்ணம் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. செங்கல் கட்டடங்கள்கொண்ட இந்த ஊர், மூன்று பிரிவாக அமைந்துள்ளது. நகரை ஆள்பவர்கள் ஒரு புறத்தில் தனியாக வசித்து இருக்கின்றனர். இன்னொரு பக்கம், சந்தை போன்ற வணிகப் பகுதி. சந்தையை ஒட்டி இரு பக்கமும் குடியிருப்புகள் காணப்படுகின்றன.

துறைமுகப் பகுதியே நகரின் பிரதானம். அங்கே, பொருட்களை ஏற்றி இறக்கவும் பாதுகாத்துவைக்கவும் உரிய வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. நகர வீதிகள் அளவு எடுத்தாற் போல கச்சிதமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இது, முறையான நகர நிர்வாகம் இருந்திருப்பதைக் காட்டுகிறது. வீடுகளில் குப்பைகளைப் போட்டுவைப்பதற்கு எனத் தனித் தொட்டிகள் இருந்திருக்கின்றன. அலை எழுச்சியின்போது நகருக்குள் புகுந்துவிடும் தண்ணீரை வெளியேற்றும் வசதிகள், பொதுக் குளியல் அறை மற்றும் முறையான சுகாதார ஏற்பாடுகள் காணப்படுகின்றன. சிந்து சமவெளியில் காணப்படுவது போலவே இங்கும் செங்கற்களின் அளவு ஒன்று போல இருக்கிறது. அதுபோலவே, எடைக் கற்கள், கருவிகள், முத்திரைகள், அணிகலன்களின் அளவு போன்றவையும் சிந்து சமவெளியின் தொடர்ச்சியே லோதல் என்பதை நிரூபணம் செய்கின்றன.




Friday, September 21, 2012

எனது இந்தியா ( காட்டுக்குள் புகுந்த ராணுவம்! ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

அதுவரை, பழங்குடி மக்கள் என்றால் கொத்​தடி​மைகள், குரலற்றவர்கள் என்று நினைத்துக்​கொண்டு இருந்த பிரிட்டிஷ் அரசு, இந்த எழுச்சியைக் கண்டு பயந்துபோனது. உடனே இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் மற்ற பழங்குடி இனங்களும் இதில் சேர்ந்துவிடுவார்கள் என்று பயந்தது. பிரிகேடியர் ஜெனரல் லியோட் தலைமையில் துப்பாக்கிகள், பீரங்கிகளுடன் ராணுவம் காட்டுக்குள் புகுந்தது. இவர்​களுக்குத் துணையாக நவாப் அனுப்பிய யானைப்படையும் சென்றது.

சந்தால் மக்கள் தேர்ந்த வில்லாளிகள். ஒளிந்து தாக்கும் கெரில்லா போர்முறையைக் கையாளக்கூடியவர்கள். ஆகவே, காட்டுக்குள் சென்று அவர்களைத் தாக்கி வெல்ல முடியாது என்பதை உணர்ந்த பிரிட்டிஷ் படை, காட்டைவிட்டு அவர்களை வெளியே கொண்டு வந்து சண்டையிடத் திட்டமிட்டது. அதற்காக, அவர்களுடைய குடியிருப்புகளை தீவைத்துக் கொளுத்தி யானைகள் உதவியுடன் குடிசைகளைத் துவம்சம் செய்தது.

காட்டைவிட்டு வெளியே வந்த சந்தால் வீரர்களை, பிரிட்டிஷ் படை சுற்றி வளைத்துத் தாக்கியது. ராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு முன், வில் அம்புகள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனாலும், கடைசி சந்தால் இருக்கும் வரை தாங்கள் போரிட்டு மடியப்போவதாக நெஞ்சுரத்துடன் அவர்கள் எதிர்த்துச் சண்டை​யிட்டனர்.

ஆவேசமாகப் போராடிய இவர்களை அடக்க, 7-வது படைப் பிரிவின் துருப்புகளும் 40-வது படைப் பிரிவின் துருப்புகளும் கூடுதலாக வரவழைக்கப்பட்டன. இந்த மோதல், 1855 ஜூலை முதல் 1856 ஜனவரி வரை நடந்தது. ககால்கோன், சூரி, ரகுநாத்பூர் மற்றும் மங்கதோரா ஆகிய இடங்களில் நடந்த போராட்டங்கள், இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கப்பட்டன. மூர்ஷிதாபாத் நவாப் அனுப்பிய யானைகள், சந்தால் இன மக்களின் கிராமங்களைத் துவம்சம் செய்தன. தொடர்ந்த பீரங்கித் தாக்குதல் மூலமாக காடு பற்றி எரிந்தது. ஓயாத தாக்குதலின் முடிவில் சந்தால் இன எழுச்சி ஒடுக்கப்பட்டது. முர்மு சகோதரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வை ஓர் எச்சரிக்கை மணியாக உணர்ந்த பிரிட்டிஷ் அரசு, உடனே ஒரு சட்டத்தை இயற்றியது. அதன்படி, சந்தால் இன மக்கள் வசிக்கும் பகுதியைத் தனி மாவட்டமாகப் பிரித்து அதைத் தன் நேரடிக் கண்காணிப்பில் வைத்துக்கொண்டது. அதே நேரம், ஜமீன்தார்களின் வரி வசூல் செய்யும் உரிமையை மாற்றி பழங்குடி மக்களின் உள்ளூர்த் தலைவரே வரி வசூல் செய்வார் என்ற நடைமுறையும் அமல்படுத்தப்பட்டது.
 சந்தால் இன மக்களின் நீதி பரிபாலனம் மிகக் கடுமையானது. அவர்கள் தங்களுக்கான முறையான சட்டத் திட்டங்களை வகுத்து இருந்தனர். குற்றத்தை விசாரித்து தண்டனை அளிக்கும் பொறுப்பு கிராமத் தலைவனிடம் இருந்தது. சந்தால் மக்களின் எழுச்சிக்குப் பிறகு, அந்த நீதிமுறைகள் பிரிட்​டிஷ் அதி​காரிகளால் ரத்து செய்யப்​பட்டன. குற்றங்களை விசாரிப்​பதற்கு அவர்களுக்கு எனத் தனியாக நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

சந்தால் மக்களை ஒடுக்கிய சண்டையைப் பற்றி குறிப்பிடும் மேஜர் ஜெர்விஸ், 'சந்தால் இன மக்கள் துப்பாக்கி மற்றும் பீரங்கிகளைக் கண்டு அஞ்சவில்லை. முரசு அடித்துக்கொண்டே அவர்கள் கூட்டமாக வந்து, துப்பாக்கி தங்களைத் துளைக்கட்டும் என்று உறுதியாக நின்றனர். பிரிட்டிஷ் வீரர்களின் துப்பாக்கிகள் அவர்களைக் கொன்று குவித்தபோதும் பின்வாங்கி ஓடவில்லை’ என்கிறார்.

காட்டின் அடி வயிறு வரை புகுந்த ராணுவம், சந்தால் இன மக்களைப் பிடித்து வந்து, கை கால்களில் விலங்கிட்டு ரயில் பாதை அமைக்கும் பணிக்குச் சம்பளம் இல்லாத கூலிகளாகப் பயன்படுத்தியது. நூற்றுக்​கணக்கான சந்தால் மக்களைக் கைது செய்து கப்பலில் ஏற்றி பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் அடைத்தனர். நோயுற்று பலர் பர்மா சிறையிலேயே இறந்தனர். இந்த எழுச்சிக்குத் தலைமை வகித்தது சந்தால் மக்கள் என்றபோதும் முண்டா, ஒரான், பாரியா இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களும் இதில் கலந்துகொண்டு போராடினர். ஆனால் பிரிட்டிஷ் அதிகாரிகள், சந்தால் என்று ஒற்றை அடையாளத்துடன் அவர்களைச் சிறையில் அடைத்து ஒடுக்கியது.

1855-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தால் கைதிகளை அடைத்துவைத்திருந்த பாகுல்பூர் சிறையில் காலரா பரவியது. ஒரே வாரத்தில் 52 கைதிகள் இறந்தனர். அடுத்த சில நாட்களில் சாவு இரண்டு மடங்கானது. ஆகவே கைதிகளை எங்கே வைத்திருப்பது எனத் தெரியாமல் திறந்த வெளியில் அடைத்துவைத்தார்கள். அப்படியும் சிறைக்குள் 300 கைதிகள் காலராவால் இறந்துபோனார்கள்.

1835-ம் ஆண்டு ஒரிஸ்ஸாவில் உள்ள கோண்டு இன மக்கள் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பை எதிர்க்கிறார்கள் என்று அவர்களில் 180 பேரைக் கைதுசெய்து நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்றது. அவர்களில் 43 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 47 பேர் தீவாந்திரம் விதிக்கப்பட்டு அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். மீதம் உள்ளவர்கள், சென்னை ராஜதானியில் இருந்த பெல்லாரி, திருச்சி, செங்கல்பட்டு, கஞ்சம் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். அப்படி சிறைப்பட்ட கோண்டுகளில் 10 பேர் சிறைக்கு வந்த சில நாட்களிலேயே இறந்துபோயினர்.

சந்தால் எழுச்சியின் தொடக்கம் பழங்குடி மக்களிடம் ஒரு விழிப்பு உணர்வை உருவாக்கியது. அதில் உருவானதுதான் பிர்சா முண்டாவின் போராட்டம். இதுவும் பிரிட்டிஷ் அதிகாரத்துக்கு எதிராக உருவான எழுச்சியே. முண்டா இனத்தைச் சேர்ந்த பிர்சா என்ற 25 வயது இளைஞன் இந்தப் போராட்டத்தை வழிநடத்தினார்.

அடர்ந்த காட்டுக்குள்ளாக
கை தட்டுவது யார் ?
அடர்ந்த காட்டுக்குள்ளாக
பிர்சா கை தட்டுகிறான்.
பிர்சாவின் கை தட்டலை
மான்கள், யானைகள், காட்டெருதுகள்கூட
புரிந்துகொள்கின்றன
மனிதர்களுக்கு மட்டும் அது புரியவேயில்லை
என்ற முண்டா இனப் பாடல் இன்றும் சோட்டா நாகபுரி பகுதியில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.
பிர்சா முண்டா, பீகாரில் 1875 நவம்பர் 15-ம் தேதி பிறந்தவர். வறுமையின் காரணமாக மாமா வீட்டில் வளர்க்கப்பட்ட பிர்சா, ஜெர்மனியக் கிறிஸ்துவ நிறுவனத்தின் பள்ளியில் ஆரம்பப் படிப்பைக்  கற்றுக்கொண்டார்.

சோட்டாநாகபுரி பகுதியில் உருவான பழங்குடி இனம் முண்டா, ஆஸ்ட்ரோ ஆசியாடிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த முண்டாரி இவர்களின் மொழியாகும். முண்டா இன மக்கள்தொகை இரண்டு மில்லியன். மரங்கள், பறவைகள், காட்டு விலங்குகளின் பெயர்களையே அவர்கள் சிறப்புப் பெயர்களாகச் சூட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் கடவுள் சிங்போங்கா. அவர் முண்டா மக்களின் சூரியக் கடவுள். முண்டா இன மக்களை நல்வழிப்படுத்துகிறேன் என்று சொல்லி, ஜெசுவிட் சபையைச் சேர்ந்த ஜான் ஹாப்மேன் அவர்களுடன் பழகி பழங்குடியினரை கொஞ்சம் கொஞ்சமாகக்  கிறிஸ்துவமதத்துக்கு மாற்றினார். மேலும் அவர்களின் மரபான பழக்கவழக்கங்கள், அசைவ உணவுமுறை, பலிச் சடங்குகளை தடுத்து நிறுத்தி, அவர்களின்  திருமணமுறையையும் மாற்றி அமைத்தார். கிறிஸ்துவ​மயமாக்கம் காரணமாக முண்டா இன மக்களில் பெரும் பகுதி கிறிஸ்துவர்களாகி தங்களின் பூர்வக் கடவுளான சிங்போங்காவை வழிபடுவதை கைவிட்டு​விட்டார்கள்.

'கிறிஸ்துவ மத மாற்றம் தங்கள் மக்களின் நம்பிக்கை​களை, மரபுகளை ஒடுக்கிவருகிறது. இன்னொரு பக்கம் அரசு தனது கெடுபிடியான நடவடிக்கைகளால் மக்களை இன்னல்படுத்தி வருகிறது. இதில் இருந்து மீட்க கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவன் நான்’ என்று சொல்லிக்கொண்ட பிர்சா முண்டா, அரசையும் மிஷினரியையும் எதிர்த்து பிரசாரம் செய்யத் துவங்கினார்.

'பழங்குடி மக்களின் நிலங்களை மீட்க வேண்டும், கிறிஸ்துவமயமாவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், மண்ணின் மைந்தர்களான தங்களை காட்டைவிட்டு விரட்ட நடக்கும் சதியை அனைவரும் ஒன்று கூடி எதிர்க்க வேண்டும்’ என்று பிர்சா அணி திரட்டத் துவங்கினார். இடைத்தரகர்கள், நிலப்பிரபுகள், கிறிஸ்துவ மிஷனரி, பிரிட்டிஷ் அதிகாரம் என்று நான்கு எதிரிகளைக் குறிவைத்து இந்த இயக்கம்  செயல்பட்டது.

1840-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் உள்ள வனப் பகுதிகள் யாவும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி இந்திய வனப் பகுதி முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கட்டுப்பட்டதாக அறிவிக்கப்பட்டதுடன்  வனவாசிகள் பிரிட்டிஷ் அறிவிக்கும் வரிகளைச் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டார்கள்.

1864-ம் வருடம் இம்பீரியல் வனத் துறை எனத் தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது. அத்துடன் 1865-ல் இந்திய வனச் சட்டம் ஒன்றினையும் பிரிட்டிஷ் அறிமுகம் செய்தது. 1878-ல் இந்த வனச் சட்டம் இந்தியா முழுவதுமுள்ள வனங்களை ஒரே மைய ஆளுகையின் கீழே கொண்டுவந்தது.

மகாராணி ஆட்சியைத் தூக்கி எறிந்து பழங்குடி மக்கள் ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்ற பிர்சா முண்டாவின் எதிர்ப்புக் குரல் சோட்டாநாகபுரி எங்கும் வேகமாகப் பரவியது. எல்லாப் பழங்குடி மக்களையும் ஒரே குடையின் கீழே கொண்டுவருவதற்கு பிர்சா முயற்சித்தார். பழங்குடி மக்கள் மது அருந்தக்  கூடாது, மாயம் மாந்திரீகம் போன்றவற்றில் ஈடுபடக் கூடாது, தங்கள் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல சீர்திருத்தக் கருத்துகளை பிர்சா முண்டா பிரசாரம் செய்தார்.

பிர்சா முண்டாவுக்கு ஆதரவு வலுப்படுவதைக் கண்ட பிரிட்டிஷ் அரசு அவரைத் தந்திரமாக சதிசெய்து, ஆகஸ்ட் 23, 1895 அன்று கைதுசெய்தது. இரண்டு ஆண்டுகள் ஜெயில் வாசத்துக்குப் பிறகு 1897-ல் பிர்சா முண்டா விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு 1900-ல் மீண்டும் கைதுசெய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா முண்டா,  ஜூன் 9-ம் தேதி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது சாவுக்கு காலராதான் காரணம் என்றது பிரிட்டிஷ் அரசு. ஆனால் விஷம் கொடுத்துக் கொல்லபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது.

பிர்சா முண்டாவின் சாவு அவரது இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியது. ஆனால், கந்து வட்டிக்காரர்கள், மற்றும் நிலப்பிரபுகள், பழங்குடி மக்களின் நிலத்தை அபகரிப்பதற்கு எதிராக புதிய சட்டம் கொண்டுவர வழிவகை செய்தது. பிர்சா முண்டாவின் எழுச்சியை முதன்மைப்படுத்தி வங்காளத்தின் பிரபல நாவலாசிரியர் மகாஸ்வேதா தேவி 'ஆரண்யேர் அதிகார்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். அதில் பிர்சா முண்டா பழங்குடி மக்களின் போராளியாகச் சித்திரிக்கப்படுகிறார்.

* பிர்சா, உன்னைக் கைதுசெய்துவிட்டார்கள்
* பிர்சா, உன் கைகளில் இரும்பு சங்கிலி மாட்டிவிட்டார்கள்
* பிர்சா, உன்னை ராஞ்சி சிறைக்குக் கொண்டுபோகிறார்கள்
* பிர்சா, எந்த மண்ணுக்காக நீ கஷ்டப்பட்டுப் போராடினாயோ அதைப் பிடுங்கிக்கொண்டார்கள்
* பிர்சா, அடுத்த பிறவியெடுத்து நீ பிறந்துவர வேண்டும்
* பிர்சா, உன்னைப் பிரிந்துவிட்டதற்காக வருந்துகிறேன்
- என்று முண்டா இன மக்கள் இன்றும் பாடுகிறார்கள்.

கனடா அரசு தனது தேசத்தில் வாழும் பூர்வக்குடிகளைக் கௌரவிக்கும்விதத்தில் முதல் குடிமக்கள் என்று அவர்களை அழைக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. அவர்கள் வசிக்கும் இடங்களை முதல் தேசம் (first Nation) என அழைக்க வேண்டும் என்றதோடு, எஸ்கிமோ என்ற சொல் பச்சை மாமிசம் சாப்பிடுகின்றவன் என்று தவறான பொருள்கொண்டிருப்பதால் அவர்களை இனிமேல் இனியூட் என்று அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. இப்படி பழங்குடி மக்களை ஒரு தேசம் பெருமைப்படுத்தி வருகிறது.

ஆனால் இந்தியா, பழங்குடிகளை அடக்கி ஒடுக்கிவருவதோடு கானகத்தைவிட்டு அவர்களை விரட்டி வெளியேற்றத் தீவிர முயற்சி எடுத்துவருகிறது. பழங்குடியினருக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் ஒடுக்குமுறைகள், வன்கொடுமைகள் யாவும் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது.


எனது இந்தியா ( சந்தால் எழுச்சி ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

இந்தியாவில் உள்ள ஆறு கோடிக்​கும் அதிகமான பழங்குடி மக்கள் இன்றும் இரண்டாம் தரக் குடிமக்க​ளாகத்​தான் நடத்தப்படுகின்றனர். நூற்றாண்டுகளாகவே அவர்களுக்கு அடிப்​படை உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன.

கோலி இனத்தின் போராட்டம், தோமார்களின் எழுச்சி, மிசிமி, சிங்போ இனங்கள் பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்துச் செய்த கலகம் மற்றும் காசி, முண்டா, நாகா, மக்களின் போராட்டங்கள், கோண்டு, லூசி இனத்தவர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் என்று, காலனிய ஆட்சிக்கு எதிராகப் பழங்குடி இன மக்கள் நடத்திய 50-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் மிக முக்கியமானவை.

முதல் இந்திய சுதந்திரப் போர் எனப்படும் சிப்பாய் எழுச்சிக்கு 100 ஆண்டு​களுக்கு முன்பே, பிரிட்டிஷ் அதிகாரத்துக்கு எதிராகப் பழங்குடி மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுவிட்டது. 1771-ல், சந்தால் இனத்தைச் சேர்ந்த தில்கா மஞ்ஜியின் போராட்டம், அன்று நிலவிய ஜமீன்தார்களின் வன்கொடுமைகளுக்கு எதிராக மட்டுமின்றி அவர்களுக்குத் துணை நின்ற பிரிட்டிஷ் அதிகாரத்துக்கும் எதிராகவே நடந்தேறியது. பிரிட்டிஷ் அதிகாரிகளால் தில்கா மஞ்ஜி கைது செய்யப்பட்டு குதிரை வாலில் கட்டித் தொங்கவிடப்பட்டு  ஓடஓட விரட்டிக் கொல்லப்​பட்டார். இந்தச் சம்பவம், சந்தால் மக்களிடையே பிரிட்டிஷ் அதிகாரத்​துக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியது.



1885-ல் ஏற்பட்ட சந்தால் பழங்குடி மக்களின் எழுச்சியும், 1899-ல் ஏற்பட்ட பிர்சா முண்டாவின் தலைமையிலான முண்டா எழுச்சியும் இந்திய சுதந்திரப் போரின் முக்கிய அடித்தள நிகழ்வுகள்.

இந்தியாவில் 68 மில்லியன் பழங்குடி மக்கள் வசிப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில், 31 பேர் மட்டுமேகொண்ட ஜார்வா பழங்குடியும் இருக்கிறது. 70 லட்சம் மக்கள்கொண்ட கோண்டு பழங்குடி இனமும் இருக்கிறது. இந்தியா​வின் எல்லா மாநிலங்களிலும் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். வனத்தில் விளையும் பொருட்களைக் கொள்ளை​யடிப்பது, மரங்களை வெட்டி விற்பது, நில அபகரிப்பு, ஆதிவாசிப் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் என அதிகார வர்க்கம் தனது சுயநலத்துக்காக பழங்குடி மக்களின் வாழ்க்கையை சூறையாடிவருகிறது.

நிலக்கரி, அலுமினியம், தாமிரம் மற்றும் இரும்புத் தாதுக்களைத் தோண்டி எடுத்து விற்பதற்காக, பன்னாட்டு நிறுவனங்கள், பழங்குடி இன மக்களைக் காட்டில் இருந்து வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. வெளியேற மறுப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குகின்றனர். இந்த வாழ்வுரிமைப் போராட்டங்களால், பழங்குடி மக்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரிக்கப்படும் சூழல்.

இந்தியப் பழங்குடி மக்களில் 55.2 சதவிகிதம் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். 40.1 சதவிகிதம் பேர் காட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். 76 சதவிகித மக்களுக்கு முறையான வீடுகள் கிடையாது. 53.1 சதவிகிதம் பேர் முறை​யான குடிநீர், மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்​படுகின்றனர். 53 சதவிகிதம் பேருக்கு இன்னமும் கல்வி கிடைக்கவில்லை என்கிறது பழங்குடி இன மக்களைப் பற்றிய ஓர் ஆய்வு அறிக்கை.

இந்திய வரலாற்று நூல்களில்கூட, சமூக மேம்​பாட்டுக்குப் பழங்குடி மக்கள் அளித்த பங்களிப்பு பற்றிய முறையான பதிவுகள் இல்லை. அவர்களைக் காட்டுமிராண்டிகளைப் போல சித்திரிக்கும் மேற்கத்திய வரலாற்று ஆய்வுகளையே நாமும் தொடர்ந்து பயன்படுத்திவருகிறோம். இந்தியாவில் உள்ள பழங்குடி இனத்தில் மூன்றாவது பெரிய இனம் சந்தால். அஸ்ஸாம், பீகார், ஜார்கண்ட், ஒரிஸ்ஸா, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளத்தில் சந்தால் இன மக்கள் வசிக்கின்றனர். இதில், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் ஜார்கண்ட். இந்த மாநிலத்தில் சந்தால், ஒரான், முண்டா, கரியா, கோண்டு எனப் பல்வேறு இனங்களைச் சேர்ந்த பழங்குடிகள் வசிக்கின்றனர். 18 மாவட்டங்களைக்கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில், சந்தால் பர்கானா எனப்படும் மாவட்டத்தில்தான் இவர்கள் அதிகம் வசிக்கின்றனர். அந்த மாவட்டமே அடர்ந்த வனப் பகுதி, பாரம்பரியமாக சந்தால் இன மக்கள், வேட்டை​யாடுதல் மற்றும் விவசாயம் செய்பவர்கள். இவர்களின் பரம்பரை நிலங்களை 1793-ம் ஆண்டில் ஜமீன்தார்கள் பறித்துக்கொண்ட காரணத்தால், ராஜ்மகால் மலைப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். அந்த நிலம், சாயம் பயிரிடத் தேவை என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அங்கிருந்தும் துரத்தினர். அதோடு, ரயில் பாதை அமைப்பதற்காக பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமங்கள் காலி செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இன்னொரு பக்கம், பழங்குடி மக்களை நாகரிகம் ஆக்குவதாகச் சொல்லி மத மாற்றம் செய்வதற்காக கிறிஸ்துவ மிஷனரிகள் மலைக்குள் வந்து தங்கி, அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். எந்தக் காட்டு மிருகத்துக்கும் பயப்படாத பழங்குடி இன மக்கள், நகரங்களில் இருந்து காட்டுக்குள் வந்த மனிதர்களைப் பார்த்து பயந்து நடுங்கினர். காரணம், எந்த மிருகமும் நம்பிக்கைத் துரோகம் செய்வது இல்லையே!

மொகலாயர்கள் ஆட்சியின்போது, வரி வசூல் செய்வதற்காக ஜமீன்தாரி முறை அறிமுகம் செய்யப்​பட்டது. இரண்டு கிராமங்களில் இருந்து 200 கிராமங்கள் வரை உரிமை பெற்ற 500-க்கும் மேற்பட்ட ஐமீன்தார்கள், இந்தியா முழுவதும் இருந்தனர். அவர்களில் பலர் தாங்களாகவே ராஜா எனப் பட்டம் சூட்டிக்கொண்டனர். சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் மன்னரால் ஆளப்பட்ட ராஜ்ஜியங்கள் 572 இருந்தன. ஜமீன்தார்கள், உயர் சாதி நிலப்பிரபுகள் மற்றும் கந்து வட்டிகாரர்களின் கொடுமை, இடைத்தரகர்களின் வன்முறை, நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை எனப் பலமுனைத் தாக்குதல்களுக்கு உள்ளான பழங்குடி மக்கள், அடிமைகளைப் போல வாழும் நிலை உருவானது.

ஜமீன்தார்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளின் விசு​வாசி​களாக இருந்த காரணத்தால், அவர்கள் செய்யும் முறைகேடுகளை பிரிட்டிஷ் ஆட்சி கண்டு​கொள்ளவில்லை. மேலும், பழங்குடி மக்கள் நீதிமன்றத்தை அணுகி நியாயம் கேட்க முடியாது என்பது ஜமீன்தார்களுக்கு சாதகமாக அமைந்தது. சோட்டா நாகபுரியில் உள்ள அமரபாரா என்ற இடத்​தில் கேனா ராம் பகத் என்ற வட்டிக் கடைக்காரன், பழங்குடி மக்களை உறிஞ்சி வாழ்ந்து வந்தான். அவனது கொடுமைகளைத் தாங்க முடியாமல் பீர்சிங் என்பவர், இனிமேல் தன்னால் வட்டி தர முடியாது என்று மறுக்கவே, அவரை குரூரமாக அடித்து உதைத்து சங்கிலியால் கட்டி சித்ரவதை செய்தான் ராம்பகத். இந்தச் சம்பவத்தால் கொதிப்படைந்த சந்தால் இன மக்கள் திரண்டு, ராம் பகத்தைத் தாக்கினர். அதுதான், சந்தால் எழுச்சியின் முதல் புள்ளி. இந்தச் சம்பவம் அதுவரை உள்ளுக்குள் கோபத்துடன் ஒடுங்கிக்கிடந்த சந்​தால் மக்களை ஆவேசத்துடன் எழுச்சிகொள்ளச் செய்தது.
 தங்கள் நிலத்தை அபகரித்துக்கொண்டவர்களை, தங்களது மனைவி பிள்ளைகளை கொத்தடிமை ஆக்கிய​வர்களை, வரி கேட்டு வதைக்கும் நிலப்​பிரபுக்களை, தாங்களே நேரடியாகத் தண்டிக்க வேண்டும், இழந்த உரிமைகளை மீட்க வேண்டும் என்று பழங்குடிகள் வீறுகொண்டு எழுந்தனர். அதன் விளைவு, சந்தால் மக்களை அடிமைப்படுத்திவைத்திருந்த ஜமீன்தார்கள், வட்டிக் கடைக்காரர்கள், நிலப்பிரபுக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்றன. ரயில்வே கான்ட்ராக்டர்கள் தாக்கப்பட்டனர். ஜமீன்தார்கள், வட்டிக் கடை முதலாளிகள் மற்றும் போலீஸ்​காரர்கள் கொல்லப்பட்டனர். தங்கள் இனத்துப் பெண்​களைப் பாலியல் கொடுமை செய்த ரயில்வே இன்ஜீனியர்​களைத் தேடித் தேடிக் கொன்றனர். இதனால், தபால் மற்றும் சாலைப் போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.

இந்த எழுச்சிக்கு, ராஜ்மகால் மாவட்டத்தில் உள்ள பாகா தீகி கிராமத்தைச் சேர்ந்த முர்மு சகோதரர்கள் தலை​மை வகித்தனர். சிந்து முர்மு தலைமையில் அவரது தம்பிகள் கானு முர்மு, பைரவ் முர்மு, சாந்த் முர்மு ஆகியோர் சேர்ந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்தால் இன மக்களைத் திரட்டினர். 1885-ம் ஆண்டு ஜுன் 30-ம் தேதி போராட்டம் தொடங்கியது. அது, இரண்டு மாதங்களில் காட்டுத் தீ போல வேகமாகப் பரவியது. சாந்தால் இன மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நிலப்பிரபுகளுக்கும் பிரிட்டிஷ் அதிகாரத்துக்கும் எதிராகப் போராடினர். ஜமீன்தார்கள் தங்களது அடியாட்களைக்கொண்டு, சந்தால் மக்களை எளிதாக ஒடுக்கிவிடலாம் என்று நினைத்தனர். ஆனால், வில்லும் அம்பும் ஏந்திப் போரிடும் சந்தால் மக்களின் முன், ஜமீன்தார்களின் அடியாட்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.  ஆகவே, ஜமீன்தார்கள் தங்களைக் காப்பாற்றும்படி பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் முறையிட்டனர். வனவாசி​களின் எழுச்சியை ஒரு சிறிய கலகம் என்று நினைத்த பிரிட்டிஷ் அரசு, அதை ஒடுக்குவதற்காக சிறிய படைப் பிரிவு ஒன்றை அனுப்பியது. ஆனால், சந்தால் மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத அந்தப் படை, காட்டைவிட்டுத் தப்பி ஓடி வந்தது.

1855-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி தொடங்கப்பட்ட சந்தால் எழுச்சியை ஒடுக்க 1855-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி பிரிட்டிஷ் அரசு ராணுவச் சட்டம் ஒன்​றைப் பிரகடனம் செய்தது. இந்தச் சட்டம், 1856-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி வரை கிழக்கு இந்தியாவில் நடைமுறையில் இருந்தது.