முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை என்பது என்ன?
தமிழக - கேரள எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டி 116 
வருடமாகிவிட்டது. இந்த அணை பலவீனமாகிவிட்டது. எனவே உடைந்தால் கேரள 
மக்களுக்கு ஆபத்து. புதிய அணை கட்ட வேண்டும். இப்போதுள்ளதை உடைக்க 
வேண்டும்’ என்பது கேரள அரசின் நிலை. ‘அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. 
புதிய 
அணை தேவையில்லை. இருக்கும் அணையை அழித்து புது அணை கட்டுவதில் இறங்கினால், 
தமிழ்நாட்டில் பாசன வசதி பெறும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, 
இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரிலும் 
விவசாயம் பாதிக்கப்படும்’ என்பது தமிழக அரசின் நிலை.
இரண்டில் எது உண்மை? 
அணை பலவீனமாகிவிட்டது என்று  1979ல் கேரள அரசு சொல்ல ஆரம்பித்தது. மெல்ல 
மெல்ல இந்தப் பிரச்னை வளர்ந்து உச்ச நீதிமன்றத்தின் முன்பு வழக்காக 
வைக்கப்பட்டது.
 நிபுணர் குழுவை அமைத்து, பிரச்னையை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் அணை பலவீனமாக
 இல்லை என்றும் தற்காலிகமாகக் குறைத்துத் தேக்கிய நீரின் அளவை, பழையபடி 
 அதிகரிக்கலாமென்றும் 2006ல் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை 
எதிர்த்து, கேரளத்திலிருந்து தாக்கல் செய்த மனுக்கள் எல்லாம் உச்ச 
நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.
அப்படியானால் விஷயம் ஏற்கெனவே முடிந்து போய்விட்டதே? ஏன் மறுபடியும் பிரச்னை?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு எதிர்த்துத் தோல்வியடைந்தபின், 
அணைகள் பாதுகாப்புக்கென்று ஒரு தனிச் சட்டம் கொண்டு வந்து உச்ச 
நீதிமன்றத்தின் 
உத்தரவை செயல்படவிடாமல் தடுத்தது. காவிரி நீர் பிரச்னையிலும் இதே போல உச்ச 
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகம் சட்டம் கொண்டு வந்தபோது, அந்தச் 
சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதைச் 
சுட்டிக் காட்டி கேரள 
அரசின் சட்டமும் செல்லாது என்று தமிழக அரசு போட்ட வழக்கில் தொடர்ந்து 
இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் நீதிமன்றம் 
நியமித்த உயர்நிலைக் 
குழுவின் அறிக்கை வருவதற்கு, சற்று முன்னதாக கேரளத்தைச் சேர்ந்தவர்களால் 
எடுக்கப்பட்ட ‘டேம் 999’ படம் வெளியானது. அணை உடைந்து மாபெரும் விபத்து
 ஏற்படுவது பற்றிய படம் இது. கேரளத்தில் ஆட்சியில் இருக்கும் கூட்டணியின் 
எதிர்காலத்தை, தீர்மானம் செய்யக் கூடிய இடைத் தேர்தல் நடக்கும் சமயம். 
எல்லாமாகச் 
 சேர்ந்து கொண்டு கேரள மக்களின் பயத்தைக் கிளப்பிவிட்டு அரசியல் லாபமடையும்
 நோக்கத்தில் மறுபடியும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமானது என்ற பிரசாரம் 
 எழுப்பப்பட்டிருக்கிறது.
இந்த அணை யாருக்குச் சொந்தம்? கேரளாவுடையதா? தமிழ்நாட்டுடையதா?
முல்லைப் பெரியாறு அணை ஒரு விசித்திரமான அணை. கட்டப்பட்ட அணை தமிழக 
அரசுக்கு சொந்தமானது. ஆனால் கட்டியிருக்கும் இடம் கேரளாவுடையது என்ற 
அடிப்படையில்
 தமிழக அரசுக்கு 999 வருட குத்தகையில் தரப்பட்டிருக்கிறது.
அணை கட்டி நூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டதால், அது பலவீனமாகியிருக்க வாய்ப்பு உண்டுதானே?
பராமரிப்பு இல்லையென்றால் கட்டி இரண்டே வருடத்தில் கூட ஒரு வீடு நாசமாகப் 
போகும். தொடர்ந்து சீரான பராமரிப்பு இருந்தால் பல நூறு வருடம் கழித்தும் 
ஒரு கட்டுமானம்
 பலமாகவே இருக்க முடியும். கரிகாலன் கட்டிய கல்லணை 1900 வருடமாகியும் 
பலமாகவும் பயன்பாட்டிலும் இருந்துவருகிறது. காரணம் தொடர்ந்து 
பழுதுபார்த்துப் பராமரித்து
 வருவதுதான். பென்னிகுயிக் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய சமயத்தில் 
கவர்னராக இருந்தவர் சர் ஆர்தர் காட்டன். அவர் ஆட்சியில் முல்லைப் 
பெரியாறுக்கும் முன்னதாகக்
 கட்டப்பட்ட, கோதாவரி, தௌலேஸ்வரம், கிருஷ்ணா அணைகள் எல்லாம் தொடர்ந்த 
பராமரிப்பினால் பலமாகவே இருந்து வருகின்றன. முல்லைப்பெரியாறு அணையையும் 
 அவ்வப்போது பலப்படுத்தும் பராமரிப்பு வேலையை தமிழகப் பொறியாளர்கள் 
செய்துவந்துள்ளனர். உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு இந்த 
வட்டாரத்தின் நில அதிர்ச்சித்
 தன்மை உட்பட எல்லா அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே அணைக்கு ஆபத்தில்லை என்று
 கூறியிருக்கிறது.
அப்படியானால் ஏன் கேரளம், முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் இப்படி பீதியைக் கிளப்பிவிடுகிறது?
இந்தப் பிரச்னையின் வேர் தொடக்கத்திலேயே இருக்கிறது. பென்னிகுயிக் அணை கட்ட
 திட்டம் போட்டபோது, அங்கே திருவிதாங்கூர் அரசும் இங்கே பிரிட்டிஷ் அரசும் 
இருந்தன.
 அணைப் பகுதி அமையவேண்டிய தேவிகுளம் - பீர்மேடு பகுதிகள் 90 சதவிகிதம் 
தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகள். ஆனால் பிரிட்டிஷ் அரசு தவறாக அந்தப் 
பகுதிகளை, 
 திருவிதாங்கூருக்குச் சொந்தமானது என்று கருதியது. அந்த அடிப்படையில் 
ஒப்பந்தம் போட்டது. ஆனால் திருவிதாங்கூர் மகாராஜா இருமுறை பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதம் 
எழுதியிருப்பதாக ஆய்வாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். அணை 
இருக்கும் 
இடம் சென்னை ராஜதானிக்குச் சொந்தமானது. எனவே சுற்றிலும் இருக்கும் 
பகுதிகளையும் சென்னையே எடுத்துக் கொண்டு தனக்கு
6 லட்ச ரூபாய் தந்தால் போதுமானது என்று மன்னர் சொல்லியிருக்கிறார். 
அஞ்சியோ, தங்கச்சேரி, பாலம் ஆகிய மூன்று பகுதிகளை, 
சென்னை தனக்குக் கொடுத்துவிட்டு, பதிலுக்கு முல்லைப் பெரியாறைச் 
சுற்றியுள்ள பகுதிகளையும் எடுத்துக் கொள்ளட்டும் என்று சொல்லியிருக்கிறார்.
 இதை பிரிட்டிஷ் அரசு
 பொருட்படுத்தவே இல்லை. அப்போதே அப்படிச் செய்திருந்தால், பின்னாளில் மொழி 
வாரி மாநிலம் அமைக்கும்போது, 90 சதவிகித தமிழர்கள் இருக்கும் தேவி குளம் - 
பீர்மேடு 
 பகுதிகள் தமிழகத்தோடே இருந்திருக்கும்.தங்கள் நிலத்தில் அணையை வைத்துக் கொண்டு தண்ணீரை எடுத்துக் கொள்ளும் 
தமிழகம் கையில் அணை தொடர்பான எல்லா அதிகாரமும் இருப்பதை கேரள அரசு 
விரும்பவில்லை. 
படிப்படியாக ஒவ்வொரு அதிகாரமாக அது பறித்துக் கொண்டது.  1979 எம்.ஜி.ஆர் - 
அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் 
இருந்தது. அது 
மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது.  அணைப் பாதுகாப்பு, தமிழக காவல் 
துறையிடமிருந்து கேரள காவல் துறைக்குப் பிடுங்கித் தரப்பட்டது.  ஆனால் கேரள
 போலீசுக்கான 
சம்பளத்தை, தமிழகமே தருகிறது. அணையில் படகு விடும் உரிமை 
தமிழகத்திடமிருந்து பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை 
வரையிலான சாலையும் 
தமிழக அரசிடமிருந்து பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும்
 அணைக்குச் செல்ல, பொறியாளர்கள் உட்பட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற 
வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக  இப்போது 
அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் 
கவலையென்றால்
 புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும்? தான் கட்டித் தன் 
கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஏன் சொல்ல வேண்டும்?
ஒரு வாதத்துக்காக, அணை பலவீனமாகிவிட்டதாகவும் ஒரு பூகம்பத்தில் 
உடைந்துவிடுமென்றும் வைத்துக் கொண்டால், 30 லட்சம் கேரள மக்கள் உயிருக்கும்
 உடமைக்கும் 
ஆபத்து ஏற்படத்தானே செய்யும்?
“இல்லை. இந்தக் கருத்தே கேரளத்தில் மலையாளிகள் ஆதரவைத் திரட்ட அவர்களிடையே 
பீதியைக் கிளப்ப சொல்லப்படும் கருத்துதான். அணை உடைந்து எந்த மக்களாவது
 பாதிக்கப்பட்டால், அதில் பெரும்பாலோர் தமிழர்கள்தான். இந்த வட்டாரத்தில் 
அவர்கள்தான் இப்போதும் பெரும்பான்மையாக 
வசிக்கிறார்கள். தவிர அணை உடைந்தால் அந்தத் தண்ணீர் நேராகக் கீழே உள்ள 
இடுக்கி அணைக்குத்தான் போய்ச் சேரும். இடுக்கி அணையே முல்லைப் 
பெரியாறிலிருந்து வரும் 
உபரி நீரைத் தேக்கக் கட்டப்பட்டதுதான். வழியில் இருக்கும் ஊர்கள் குமுளி, 
ஏலப்பாறா இரண்டு மட்டுமே. குமுளி கடல் மட்டத்திலிருந்து 3350 அடி 
உயரத்திலும் ஏலப்பாறா 
4850 அடி உயரத்திலும் உள்ளது. முல்லைப்பெரியாறு அணை இருப்பது கடல் 
மட்டத்திலிருந்து 2890 அடி உயரத்தில்தான். எனவே அதிலிருந்து வெள்ளம் இந்த 
ஊர்களுக்கு 
மலையேறிச் செல்ல முடியாது.
இந்தப் பிரச்னையைத் திரும்பவும் பேசித் தீர்த்துக் கொள்ளமுடியாதா?
பேச்சுகளின் மூலம் தீர்க்க முடியாத நிலையில்தான் நீதிமன்றத்தை இரு தரப்புமே
 அணுகுகின்றன. அதன்பின்னர் 
நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்வதுதான் முறை. ஆனால் கேரள அரசு, உச்சநீதிமன்ற
 உத்தரவை ஏற்க மறுக்கிறது. மேல் முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட பின்னரும் 
உத்தரவை ஒப்புக்கொள்ள மறுத்து, அணைக்கு ஆபத்து என்று மக்களிடையே கலவரத்தைத்
 தூண்டிவிட்டு, தான் விரும்புவதை சாதிக்க நினைக்கிறது.
அப்படியானால் என்னதான் தீர்வு?
நிச்சயம் வன்முறை உதவாது.  இங்கே நாயர் டீக்கடையையோ, மேனன் நகைக் கடையையோ 
தாக்குவது தீர்வல்ல. பதிலுக்கு கேரளத்தில் இருக்கும் ஆயிரக் கணக்கான 
தமிழ் தொழிலாளர்கள், வணிகர்கள் மீதான தாக்குதல் அங்கே ஆரம்பிக்கும். இதற்கு
 முடிவே இல்லை. கேரளத்திலேயே உண்மை நிலையை அறிந்தவர்கள் உண்டு.  
இலக்கியவாதி 
பால் சக்கரியா, மத்திய நீரியல் கழகத் தலைவர் தாமஸ் போன்றோர் உண்மை நிலையைப்
 பகிரங்கமாகப் பேசியவர்கள். ஜெயலலிதா போல மலையாளத்தில் நன்றாகப் பேசத் 
தெரிந்த தமிழகத் தலைவர்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் தேவையானால் நேரில் 
கேரள நகரங்களுக்குச் சென்றும் மலையாளத்திலேயே பேசி மலையாளிகளிடையே 
தூண்டிவிடப்பட்டிருக்கும் பயத்தை நீக்க முயற்சிக்கலாம்.
தமிழக 
சினிமா கலைஞர்களுக்கு, கேரளத்தில் சாதாரண மக்களிடையே பெரும் செல்வாக்கு 
இருக்கிறது. தமிழ் திரைப்படங்கள் அங்கே பெரும் வசூலைக் குவிக்கின்றன. தமிழ்
 சினிமா
 பாடல்கள் இல்லாத கேரள ஊரே இல்லை. எனவே தமிழ் சினிமா பிரமுகர்கள் கேரள 
சுற்றுப்பயணம் மேற்கொண்டு  பயத்துக்கெதிரான பிரசாரம் செய்ய வேண்டும். உச்ச
 நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு தொடர்ந்து ஏற்க மறுத்தால், அந்த அரசை 
அரசியல் சட்டத்தின் கீழ் டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. 
அதைப் பயன்படுத்த 
 முன்வரும்படி மத்திய அரசை நாம் வற்புறுத்த வேண்டும்.
தமிழகம் காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினாலே கேரளம் தாங்காது. கேரளத்துக்கு உணவுப் பொருட்களையோ மின்சாரத்தையோ மணலையோ 
ஒரு வாரத்துக்கு வழங்காமல்  ஒத்துழையாமை செய்தால், கேரளம் பெரும் சிக்கலில் ஆழ்ந்துபோகும்.         



 
 
தமிழகம் காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினாலே கேரளம் தாங்காது. கேரளத்துக்கு உணவுப் பொருட்களையோ மின்சாரத்தையோ மணலையோ ஒரு வாரத்துக்கு வழங்காமல் ஒத்துழையாமை செய்தால், கேரளம் பெரும் சிக்கலில் ஆழ்ந்துபோகும். ///
ReplyDeleteசரிதான்:)
அருமையான பதிவு.
ReplyDeleteஆழ்ந்து படிக்க வேண்டும்.
கேரளத்திலேயே உண்மை நிலையை அறிந்தவர்கள் உண்டு. இலக்கியவாதி பால் சக்கரியா, மத்திய நீரியல் கழகத் தலைவர் தாமஸ் போன்றோர் உண்மை நிலையைப் பகிரங்கமாகப் பேசியவர்கள்//
ReplyDeleteமலையாள பத்திரிக்கைக்கு சக்கரியா அளித்த பேட்டியை வாசித்து இருக்கிறேன்...
அது...
கேரளாவுக்கு, கறிவேப்பிலையில் இருந்து குருவாயூரப்பாவுக்கு சாத்தும் பூக்கள் முதற்கொண்டு தமிழ்நாட்டில் இருந்தான் வருகிறது, பின்னே ஏன் இவர்கள் தமிழ்நாட்டிற்கு முல்லைப்பெரியார் தண்ணீரை தர மறுக்கிறார்கள், என கேள்வி எழுப்பியிருந்தது நியாபகம் வருகிறது...!!!
மிக நல்ல பதிப்பு ... எனது பல சந்தேகங்களுக்கு அருமையான பதில்கள் கிடைத்தது நன்றி...
ReplyDeleteஇதுக்கு ஒரே வழி பாரளும்மன்றத்துல உட்காந்துகிட்டு இருக்குற எம்.பிக்களை கல்லைக்கட்டி தண்ணில எறக்கி விடுங்க எல்லா பிரச்சனைக்கும் வழி பிறக்கும்
ReplyDeletenice post
ReplyDeleteநல்ல பதிவு ! அரசியல் சாரா இயக்கங்கள் முன் வந்து பிரச்சாரம் செய்தால் உண்மை நிலையை கேரளா மக்கள் உணர்ந்திட வாய்ப்பு உண்டு!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதமிழகம் காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினாலே கேரளம் தாங்காது. கேரளத்துக்கு உணவுப் பொருட்களையோ மின்சாரத்தையோ மணலையோ ஒரு வாரத்துக்கு வழங்காமல் ஒத்துழையாமை செய்தால், கேரளம் பெரும் சிக்கலில் ஆழ்ந்துபோகும். /
ReplyDeleteஅணை 'வீக்' இல்லை... கேரள அரசியல் கட்சிகள்தான் 'வீக்'! - கே.எம்.அப்பாஸ் அதிரடி
மதுரையில் முல்லைப் பெரியாறு அணை விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கினார் வைகோ (படங்ககள )
ReplyDeleteஇரு மாநிலங்களுக்கிடையே வன்முறையைத் தூண்டும் கேரள அரசை டிஸ்மிஸ் செய்க- தமிழக பாஜக கோரிக்கை
ReplyDeleteபெரியாறு அணையில் மத்திய போலீஸ் பாதுகாப்பு உண்டா? ஜெயலலிதா, வைகோ கோரிக்கைக்கு பதில் இல்லை
ReplyDeleteஎனக்கு நண்பர் தினேஷ் குமார் சொன்ன கருத்துக்களில் முழு சம்மதம்.
ReplyDeleteமுல்லை பெரியார் பிரச்னை மட்டும் இன்றி அதுதான் நம் நாட்டில் நிலவும் சகல சண்டைகளையும் முடிவுக்கு கொண்டு வரும்.
அருமையான பதிவு.
ReplyDelete