Search This Blog

Monday, April 11, 2016

கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப்

தேவையானவை:
கருவேப்பிலை: ஒரு கட்டு
புதினா: ஒரு கட்டு
கொத்துமல்லித் தளிர்:
ஒரு பெரியகைப்பிடி
பெரிய வெங்காயம்: 1
பச்சைமிளகா: 1
தக்காளி: 1
வேகவைத்த துவரம்பருப்பு:
1 டேபிள்ஸ்பூன்,
பட்டை: 1, கல்பாசிப்பூ: 1, சொம்பு:
1.2 டீஸ்பூன், சீரகம்: 1/2 டீஸ்பூன், மிளகு:
1/2டீஸ்பூன், மஞ்சள் தூள்: 1 சிட்டிகை, உப்பு:
1/2டீஸ்பூன், எண்ணெய்: 1 டீஸ்பூன், பால்:
1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள்: 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை
 நீளமாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாகக் கீறிக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து சொம்பு சீரகம் மிளகு, பட்டை, இலை, கல் பாசிப்பூ தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகா, ஆந்து கழுவிய தளிர் ஆகியவற்றைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு, வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றி, குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும். ஆறியதும் பச்சை மிளகாயை எடுத்துப் போட்டு விட்டு நன்கு மசித்து, அந்தச் சாறை வடிகட்டி எடுக்கவும். திரும்ப ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றி நன்கு மசித்து வடிகட்டவும். பருப்பும், வெங்காயமும், தக்காளியும், கரைந்து வரும்வரை இன்னும் அரை கோப்பை தண்ணீர் கூட ஊற்றி வடிகட்டி எடுக்கலாம். வடிகட்டிய இரண்டரைக் கோப்பை சூப்பில் உப்பு சேர்த்து சூடாக்கவும். பின்னர் இறக்கிப் பாலும், மிளகுத் தூளும் கலந்து அருந்தலாம். 
 
இது அசதி போக்கும்; சுறுசுறுப்பை அளிக்கும்; பசியைத் தூண்டும்; வயிறு மந்தமாவதைத் தவிர்க்கும்; கொழுப்புச் சத்தைக் கரைக்கும். கீரைகளின் பயன்
சிதைவுறாமல் கிடைக்கும். நீர்ச் சத்து அடங்கி உள்ளதால் தாகம் தணிக்கும்.

இந்த சூப்பில் இருக்கும் சத்துக்கள்:

*புதினா இலைகளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. ரத்தசொகையைத் தடுக்கும்.
*கருவேப்பிலையில் விட்டமின் ஏ உள்ளது. 1 சதம் கொழுப்புச் சத்தும், 6.1 சதம் புரதம், 4 சதம் தாது உப்பும், நார்ச்சத்துகளும் மாவுச்சத்துகளும், மக்னீசியம், இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம், கந்தகம், ஆக்ஸாலிக் ஆசிட் ஆகியனவும் உள்ளன.
*கொத்துமல்லியில் விட்டமின் ஏ, கே மற்றும் கால்சியம் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகின்றது. ஒமேகா-6 ஃபாட்டி ஆசிட் சிறிய அளவில் இருக்கிறது.
உடல் எடையைக் குறைப்பதோடு தேவையான ஊக்கச் சத்தையும் வழங்கும் இந்த சூப்பை பரீட்சை நாட்களில் அருந்திவந்தால் குழந்தைகளுக்கு சுறு
சுறுப்பும் படிப்பில் உற்சாகமும் ஏற்படும். பரீட்சைக்குப் படிக்கும் குழந்தைகளுக்கான எனர்ஜி சூப் என்றும்
சொல்லலாம். 

தேனம்மை லெக்ஷ்மணன்

No comments:

Post a Comment