Search This Blog

Thursday, February 04, 2016

லெனோவா வைப் K4 நோட்...

லெனோவா நோட் இந்தியாவில் ஹிட் அடித்ததை தொடர்ந்து, லெனோவா தனது அடுத்த தயாரிப்பான லெனோவா வைப் K4 நோட்டை வெளியிட்டுள்ளது. இது என்.எஃப்.சி தொழில்நுட்பத்துடன் வெளியாகி யுள்ளது. ஆப்பிள் போன்களில் உள்ளதைப் போன்ற ஃபிங்கர் சென்ஸார் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.


இந்தியாவில் சுமார் 12 லட்சம் k3 நோட் செல்போன்களை விற்று சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து லெனோவா அதன் அடுத்த வெர்ஷனை களமிறக்கியுள்ளது. இது 5.5 இன்ச் டிஸ்ப்ளே அளவு கொண்டதாகவும், பின்புற கேமரா 13 MP மற்றும் செல்ஃபி கேமரா 5 MP என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3300 mAh பேட்டரி திறன் கொண்ட இந்த தயாரிப்பு K3 நோட்டைவிட அதிக பேட்டரி திறன் கொண்டது. இந்த மாடல் பாதுகாப்பு திறன் அதிகம் கொண்டதாகவும், 4 அடுக்கு பாதுகாப்பு வசதி கொண்ட பேப்லெட் (Phablet) வகை என கூறப்பட்டுள்ளது. (Pin, Pattern, Password, Finger print). Octa- core பிராசஸர் கொண்ட இந்த பேப்லெட் 3 ஜிபி RAM மற்றும் 16 ஜிபி இன்டர்னெல் மெமரியைக் கொண்டுள்ளது. 

4ஜி, இரண்டு சிம் வசதி கொண்ட இந்த பேப்லெட்டின் விலை ரூ.11,999. இந்த கேட்ஜெட் மார்ச் மாதத்துக்குள் K3 நோட்டைவிட அதிக விற்பனையாகும் என லெனோவா எதிர்பார்க்கிறது. குறைந்த விலை கேட்ஜெட்டில் K3 நோட் ஹிட் அடித்ததை போல, இது ஹிட் அடித்தாலும் இதற்கும் இதன் முந்தைய மாடலுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதால், அடுத்த மாடலுக்கு அப்டேட் செய்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது.

சாம்சங் கியர் S2 VR...

சாம்சங் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பமான விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதுதான் சாம்சங் கியர் S2. இதன் முந்தைய மாடலுடன் 19% எடை குறைவாக வெளியாகி இருக்கும் இந்த கேட்ஜெட், 318 கிராம் எடையுள்ளதாகவும், 201.9x116.4x92.6mm அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 96 டிகிரி அளவுக்கு பார்க்க முடியும். இதில் ஆடியோவை கன்ட்ரோல் செய்யும் பட்டன், ஃபோகஸ் போன்றவற்றை மாற்றி அமைக்க முடியும். 


360 டிகிரி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை இதன் மூலம் 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும். ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு அளவை மாற்றி அமைத்து கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் இணையதளங்களில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டின் விலை ரூ.8,200 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் ஃபேஸ்புக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. இந்தியாவிலும் இந்த வீடியோக்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதனை தயாரிக்கும் அக்குலஸ் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியுள்ளது. அக்குலஸ் நிறுவனத்தின் உதவியுடன்தான் சாம்சங் இந்த தயாரிப்பை தயாரித்துள்ளது. இனி ஒரு ஃப்ரேமில் மட்டுமல்லாமல் இதனைக் கொண்டு 360 டிகிரியில் வீடியோக்களை ரசிக்க முடியும்.

ச.ஸ்ரீராம்

No comments:

Post a Comment