Search This Blog

Wednesday, December 17, 2014

செல்போன்

இன்றைக்கு செல்போன் இல்லாமல் ஒரு மணிநேரம் கூட இருக்க முடியாது என்கிற அளவுக்கு நாம் மாறிவிட்டோம். இந்த செல்போனுக்கான விதையானது விதைக்கப்பட்டது 1880-ம் ஆண்டில்! அந்த ஆண்டில் தான், கம்பியில்லா தொலைபேசி என்கிற தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

மனித வரலாற்றில் தகவல் பரிமாற்றம் என்பது பலவகையில் வளர்ந்து வந்திருக்கிறது. மனிதன், ஆரம்பத்தில் செய்தி அனுப்ப புறாக்களைப் பயன்படுத்தினான். புறாக்களின் வேகம் மனிதனுக்கு திருப்தித் தரவில்லை. உடனுக்குடன் செய்தியை பரிமாற ஆசைப்பட்டான்.


இந்த ஆசைக்கு உருவம் கொடுத்தார் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல். 1876ம் ஆண்டு தொலைபேசியைக் கண்டு பிடித்த கிரஹாம்பெல், தனது கண்டுபிடிப்பைக் காப்புரிமை செய்தார். கம்பிகளின் மூலமாக செய்திகளைக் கொண்டு செல்லும் தொலைபேசி பழக்கத்துக்கு வந்தது.

என்றாலும், பிரச்னை தீரவில்லை. இயற்கை சீற்றத்தால் திடீரென கம்பிகள் அறுந்துபோய் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. தவிர, கம்பிகள் மூலம் இணைக்க முடியாத பிராந்தியத்தில் வாழும் மனிதர்களுடன் எப்படி தொடர்புகொள்வது என்கிற கேள்வி பிறந்தது. இந்தக் கேள்விக்கு பதிலாக உருவானதுதான் கம்பியில்லாத் தொலைபேசிகள்.

மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி சிறிது தூரத்தில் இருக்கும் ஒருவருடன் எந்த கம்பியின் உதவியும் இல்லாமல் பேசும் போட்டோ போனைக் கண்டுபிடித்தார் கிரஹாம் பெல். நீண்ட தொலைவில் இருக்கும் ஒருவருடன் பேச  அடிப்படையாக அமைந்திருந்தது இந்தக் கண்டுபிடிப்பு. இன்றைக்கு ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையைக் கண்டுபிடிக்க காரணமாகவும் அமைந்தது இந்தக் கண்டுபிடிப்பு. 

இன்று மெரினா பீச்சில் இருந்தபடி மியாமி பீச்சில் இருக்கும் ஒருவருடன் செல்போன் மூலம் பேச அடிப்படையாக இருந்தது இந்தக் கம்பியில்லா போன் தொழில்நுட்பம்தான். இதற்காகவாவது காலையில் எழுந்து செல்போனை எடுக்கும்முன் கிரஹாம் பெல்லுக்கு ஒருமுறை நன்றி சொல்லுங்கள்!
 
ச.ஸ்ரீராம்

No comments:

Post a Comment