Search This Blog

Monday, September 28, 2015

வருமான வரி கணக்குத் தாக்கல்: கெடு தேதி தவறியதால் என்னென்ன பாதிப்புகள்?

வழக்கமாக, ஆடிட்டரின் தணிக்கை தேவைப் படாத வரிதாரர்கள் அவர்களின் வருமான வரி கணக்கை, முடிந்த நிதி ஆண்டை தொடர்ந்து வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு (2015) வருமான வரி புதிய படிவங்கள் வெளிவர தாமதம் ஆனதால் கெடு தேதி ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகும் அதிகம் பேர் வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்பதால் செப்டம்பர் 7-ம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டது. அப்படியும் நம்மில் பலர் வரி கணக்கை தாக்கல் செய்யாமல் இருக்கிறார்கள்.

 

வரி கணக்கைத் தாக்கல் செய்யாததற்கு பல காரணங்கள் இருந்தாலும், இப்படி தாக்கல் செய்யாதவர்கள் எந்தத் தேதி வரைக்கும் வரி கணக்கை தாக்கல் செய்யலாம்.

“வருமான வரியை மிச்சப்படுத்த மார்ச் 31-ம் தேதிக்குள் முதலீடு செய்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் கெடு தேதிக்குமுன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது.

தற்போதைய சூழ்நிலையில் முடிந்த 2014-15-ம் நிதி ஆண்டுக்கு  2016 மார்ச் 31 வரைக்கும்  அபராதம் மற்றும் வழக்கு எதுவும்  இல்லாமல் வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும். வரி பாக்கி இருந்தால், அந்த வரி மற்றும்  2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு 1% தனி வட்டி சேர்த்து கட்ட வேண்டும்.  வரியைக் கட்டிவிட்டு அதன்பிறகு வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி எதுவும் கட்டத் தேவை இல்லை என்றால் நேரடியாக ரிட்டர்ன்  தாக்கல் செய்துவிடலாம்.

அப்படியும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், 2014-15ம் நிதி ஆண்டுக்கான வரி கணக்கை மார்ச் 31, 2017 வரை தாக்கல் செய்யலாம். இதை தாமதமாக வரி கணக்கு தாக்கல் செய்தல்   (Belated Return) என்பார்கள்.  இப்படி செய்யும்போது வருமான வரித் துறை அதிகாரிகள் அபராதம் விதிக்க கூடும் அல்லது வழக்கு தொடரக் கூடும்.

அபராதமா, வழக்கா என்பது சம்பந்தப்பட்ட வருமான வரி அதிகாரியைப் பொறுத்து இருக்கிறது. அபராதம் என்கிற போது ரூ.5,000 வரைக்கும் விதிக்கப்படலாம்.   கட்ட வேண்டிய வரி பாக்கி ரூ.25 லட்சத்துக்குள் இருக்கும் போது வழக்கு தொடரப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 மாதத்திலிருந்து 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப் படலாம்.
கட்ட வேண்டிய வரி ரூ.25 லட்சத்துக்கு மேல் இருந்தால் 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை இருக்கும். 2014-15-ம் நிதி ஆண்டுக் கான வரி கணக்கை  2017, மார்ச் 31-க்கு பிறகு தாக்கல் செய்ய முடியாது.





வருமான வரி கணக்கு தாக்கல் கெடுதேதியைத(2014-15 நிதியாண்டுக்கு செப்டம்பர் 7) தவறவிடும்பட்சத்தில் வரிக் கணக்கு ஐடிஆர் படிவத்தில் ஏதாவது தவறு இருந்தால் அதனைத் திருத்தி, திருத்தப்பட்ட வரி கணக்கு தாக்கல் (Revised Returns) செய்ய அனுமதிக்கப் படுவதில்லை. அதனால் செய்யப்பட்ட முதலீடு அல்லது செலவுகளுக்கான  வரி சலுகையை கோரி பெற தவறி இருந்தால், அதனைப் பெறமுடியாமல் போய்விடும்.

கெடு தேதிக்குள் வரி கணக்கை தாக்கல் செய்யும்பட்சத்தில், குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன இழப்பை அடுத்துவரும் 8 ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லமுடியும். இந்தக் கெடு தேதியைத் தவறவிட்டுவிட்டால் உங்களுக்கு முதலீடு மூலம் ஏற்பட்டிருக்கும் இழப்பை அடுத்துவரும் ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது.

வரி கணக்கு தாக்கலை தாமதமாகச் செய்யும்போது, கூடுதலாக வருமான வரி கட்டியிருக்கும் பட்சத்தில் ரீ-ஃபண்ட் கிடைக்க தாமதமாகும். ஒருவருக்கு ரீ-ஃபண்ட் இருக்கிறது என்றால், அவர் எப்போது வரி கணக்கு தாக்கல் செய்கிறாரோ அப்போதிலிருந்துதான்,  ரீ-ஃபண்ட் தொகைக்கு வட்டி கணக்கிடப்படும். எனவே,  தாமதமாக வரி கணக்கை  தாக்கல் செய்தால், ரீ-ஃபண்ட் வரவேண்டியிருந்தால் குறைவான வட்டிதான் கிடைக்கும்.

சில சமயங்களில் வரி சலுகைக்கான ஆவணங்களை பணிபுரியும் அலுவலகத்தில் சரியான நேரத்தில் கொடுக்க முடியாமல் போய் இருக்கும். அப்போது உங்களின் வரி சலுகைக்கான முதலீடு அல்லது செலவு விவரம் முழுமையாக ஃபார்ம் 16-ல் இடம் பெறாமல் போய்விடும்.

ஆனால், படிவம் 16 என்பது டிடிஎஸ் பிடிக்கப்பட்டதற்கான சான்றிதழ் மட்டுமே. ஒருவர் ஏதாவது வரி சலுகையை க்ளெய்ம் செய்ய மறந்துவிட்டால், அதனை வரி கணக்கு தாக்கல் செய்யும்போது கோரிப் பெறலாம்.

இந்த நிலையில் ஒருவர் கெடு தேதிக்குள் வரி கணக்கு தாக்கல் செய்யும்பட்சத்தில், விடுபட்ட முதலீடு அல்லது செலவுக்கான ஆதாரங்களை (ஆயுள் காப்பீடு பிரீமியம், ஆரோக்கிய காப்பீடு பிரீமியம், வீட்டுக் கடன் திருப்பக் கட்டும் அசல் மற்றும் வட்டி, மருத்துவச் செலவு, உள்ளிட்டவை) வரி கணக்கு தாக்கல் படிவத்துடன் இணைத்துக் கொடுத்து ரீ-ஃபண்ட் வாங்கிக் கொள்ளலாம்.

ஆனால், படிவம் 16 என்பது டிடிஎஸ் பிடிக்கப்பட்டதற்கான சான்றிதழ் மட்டுமே. ஒருவர் ஏதாவது வரி சலுகையை க்ளெய்ம் செய்ய மறந்துவிட்டால், அதனை வரி கணக்கு தாக்கல் செய்யும்போது கோரிப் பெறலாம்.

இந்த நிலையில் ஒருவர் கெடு தேதிக்குள் வரி கணக்கு தாக்கல் செய்யும்பட்சத்தில், விடுபட்ட முதலீடு அல்லது செலவுக்கான ஆதாரங்களை (ஆயுள் காப்பீடு பிரீமியம், ஆரோக்கிய காப்பீடு பிரீமியம், வீட்டுக் கடன் திருப்பக் கட்டும் அசல் மற்றும் வட்டி, மருத்துவச் செலவு, உள்ளிட்டவை) வரி கணக்கு தாக்கல் படிவத்துடன் இணைத்துக் கொடுத்து ரீ-ஃபண்ட் வாங்கிக் கொள்ளலாம்.

கெடுதேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், சில வரி சலுகைகளை கோரி பெற மறந்திருந்தால், ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவத்தில் அதனைக் குறிப்பிட்டு ரீ-ஃபண்ட் கோரலாம்.

இந்த ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவத்தை எத்தனைமுறை வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். முதல்முறை வரி கணக்கு தாக்கல் செய்த நிதி ஆண்டு இறுதியிலிருந்து இரு ஆண்டுகளுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவத்தை தாக்கல் செய்யலாம்.

வரி கணக்குத் தாக்கலை ஆன்லைனில் செய்திருந்தால் ஆன்லைனிலும், ஆஃப்லைனில் செய்திருந்தால் ஆஃப்லைனிலும்தான் ரிவைஸ்டு ரிட்டர்னை தாக்கல் செய்ய முடியும். ஆன்லைனிலே தாக்கல் செய்வது நல்லது

சரியான தேதியில் வரி படிவங்களை வெளியிட நீதிமன்றம் அறிவுறுத்தல்!

வணிகம், வர்த்தகம் நிறுவனங்களின் டேர்னோவர் ரூ.1 கோடிக்கு மேல் மற்றும் டாக்டர், வக்கீல், ஆடிட்டர் போன்ற நிபுணத்துவம் வாய்ந்த வந்தவர்களுக்கு தொழில் வருமானம் ரூ. 25 லட்சத்துக்கு மேல் இருந்தால், ஆடிட்டர் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கெடுதேதி செப்டம்பர் 30, 2015-ஆக இருக்கிறது. இவர்கள் ஐடிஆர் 4, 5 அல்லது 6 படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால், இந்த படிவங்கள் ஏப்ரல் முதல் தேதியில் வெளிவர வேண்டிய நிலையில், ஆகஸ்ட் மாத கடைசியில் நாலரை மாதம் தாமதமாக வெளியிடப்பட்டது. மீதியுள்ள ஒன்றரை மாதத்தில் அனைவரும் வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை. இப்போது வரை தேதி நீடிக்கப்படவில்லை.  இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம், இனிவரும் ஆண்டுகளில் ஏப்ரல்  முதலே வரி படிவங்களை அரசு கட்டாயம் வெளியிட வேண்டுமென மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
சி.சரவணன்







 

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன் 6எஸ் (Apple iPhone 6s)

 
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட லேட்டஸ்ட் ஐபோன் இது. டிஸ்ப்ளே–4.70 இன்ச் 750x1334 பிக்ஸல் 326 ppi.
பின்புற கேமரா–12 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா–5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – ஆப்பிள் A9 பிராசஸர்.
ரேம் – 2 GB.
பேட்டரி – 1715 mAh.
இயங்குதளம் – ஐஓஎஸ் 9
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16/64/128 GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – கிடையாது.
எடை- 143 கிராம்.
டூயல் சிம் வசதி கிடையாது.
பிளஸ்: கேமரா,  இயங்குதளம்,  டிசைன்.
மைனஸ்: விலை
விலை: ரூ 42,834, ரூ 49,434, ரூ 56,034


ஆல்காடெல் ஒன் டச் வாட்ச் (Alcatel OneTouch Watch)
Flipkart : http://bit.ly/1QExhJw


இது ஒரு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வாட்ச்.

1.22 இன்ச் TFT டச் ஸ்க்ரீன் கொண்டுள்ள இந்த வாட்ச்சை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளத்தால் செயல்படும் கேட்ஜெட்களோடு இணைத்துப் பயன்படுத்தலாம்.

IP67 ரைடிங்கை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச், தூசி மற்றும் தண்ணீரை தாங்கும் தன்மையை கொண்டுள்ளது.

210 mAh பேட்டரியைக் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சை பயன்படுத்தி கால்கள், எஸ்எம்எஸ், இ-மெயில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற அப்ளிகேஷன்களின் அறிவிப்புகளை தெரிந்துகொள்ளலாம்.

கறுப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் விற்கப்படும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் இந்திய விலை ரூபாய் 7,999.


மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் ப்ளே (Motorola Moto X Play)
Flipkart : http://bit.ly/1YGNjbN


இது மோட்டோரோலா நிறுவனம் வெளியிட்டு இருக்கும் போன்.
டிஸ்ப்ளே – 5.50 இன்ச் 1080x1920 பிக்ஸல் 403 ppi.
பின்புற கேமரா – 21 மெகா பிக்ஸல்; முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.7 GHz Octo-Core Qualcomm Snapdragon 615.
ரேம் – 2 GB, பேட்டரி – 3630 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1
இன்டெர்னல், எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ்16 – 128GB வரை.
எடை – 169 கிராம். டூயல் சிம் வசதி கிடையாது.
பிளஸ்: பேட்டரி,  கேமரா,  இயங்குதளம்.
மைனஸ்: டிசைன்
 விலை: ரூ. 18,499 (16 GB), ரூ.19,999 (32 GB)


சான்டிஸ்க் கனெக்ட் வயர்லெஸ் ஸ்டிக் (SanDisk Connect Wireless Stick)
Flipkart : http://bit.ly/1KB2Thy

இது கேட்ஜெட்களின் WiFi ஹாட்-ஸ்போட்டைக் கொண்டு இயங்கும் ஒரு ஸ்டோரேஜ் கருவி.
இதை சாதாரண USB ஃப்ளாஷ் டிரைவாகவும் பயன்படுத்தலாம்.
ஒரே நேரத்தில் மூன்று கருவிகளோடு இந்த ஸ்டிக்கை இணைத்துப் பயன்படுத்தலாம்.
பேட்டரியைக் கொண்டு இயங்கும் இந்த வயர்லெஸ் ஸ்டிக் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் ஆகிய அனைத்து இயங்குதளத்திலும் ‘SanDisk Connect’ அப்ளிகேஷனைக் கொண்டு பயன்படுத்தலாம்.
இதன் விலை:   ரூ..2,790 (16GB), ரூ..3,790 (32 GB),  ரூ..5,490  (64 GB),  ரூ..9,490 (128 GB)

Sunday, September 20, 2015

சவால்விடும் ‘ஆப்ஸ்’

உங்க கையில் செல்போன் இருந்தால் போதும். செம ஜாலியான மற்றும் அறிவுக்கு சவால்விடும் ‘ஆப்ஸ்’களை டவுண்லோடு செய்து விளையாடலாம்.  


Dr.Panda’s Ice Cream Truck

ஐஸ்க்ரீம் பிடிக்காத சுட்டிகள் உண்டா? எத்தனை ஃப்ளேவர் வந்தாலும் அத்தனையையும் ஒரு வாய் டேஸ்ட் பார்த்துட்டு, இது போதாதே என நினைப்போம். அப்படியானால், ‘உங்களுக்குப் பிடித்த ஃப்ளேவர்களில் நீங்களே ஐஸ்க்ரீமை உருவாக்குங்க’ என்கிறது, டாக்டர் பாண்டா ஆப்ஸ்.
டாக்டர் பாண்டா, ஒரு தள்ளுவண்டி மூலம் ஐஸ்க்ரீம் விற்பவர். அவரிடம் இருக்கும் பொருட்களைக்கொண்டு, விதவிதமான ஐஸ்க்ரீம்களை நீங்களே உருவாக்கலாம்.

ஐஸ்க்ரீம் மட்டுமல்ல, இன்னும் பலவற்றைக் கற்றுத்தரும்படியான பல அப்ளிகேஷன்ஸ், டாக்டர் பாண்டா ஆப்ஸில் இருக்கிறது.

Toca Lab

வேதியியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கான அசத்தல் ஆப்ஸ் இது.

தனிம வரிசை அட்டவணையில் உள்ள அனைத்துத் தனிமங்கள் பற்றியும் இதில் அறியலாம். முதலில், ஒரே ஒரு தனிமம் வழங்கப்படும். அதன் மூலம் பல சோதனைகள் செய்யும்போது, உங்களின் ஆய்வு முடிவுகள் வெளியாவது செம த்ரில்லிங்காக இருக்கும். அவற்றை அட்டவணையில் நிரப்பிக் கொண்டே வரலாம். உண்மையான ஆய்வகங்களைப் போல எதுவும் விபத்துக்கள் ஏற்படாது என்பதால், தைரியமாகச் செய்துபார்த்து, உங்கள் வேதியியல் அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.

Cloud Maker

வானத்தில் உலாவும் மேகங்களில், விதவிதமான உருவங்களைக் கண்டுபிடித்து ரசிப்பது, சுவாரஸ்யமான விளையாட்டு. அப்படி, உங்கள் கற்பனையை வளர்க்கும் அழகு ஆப்ஸ் இது. இதை டவுண்லோடு செய்தால், வானமும் மேகங்களும் காட்சியாக வரும். அந்த மேகங்களை உங்கள் இஷ்டப்படி மாற்றி,  பட்டாம்பூச்சி, பறவை, குதிரை என விதவிதமான  உருவங்களை உருவாக்கலாம். காற்று அடிக்கும் திசை மற்றும் வேகத்தைக்  கட்டுப்படுத்தி, ‘என் வானம்... என் மேகங்கள்’ என மகிழலாம்.

Peekaboo UFO

ஐந்து வயதுக்குக் குறைவாக இருக்கும்  சுட்டிகளின் கவனிப்புத்திறனை வளர்க்கும் விளையாட்டு ஆப்ஸ்.

வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்திருக்கும் கிரகவாசிகள், நமது சுற்றுப்புறத்தில் ஒளிந்திருப்பார்கள். மரங்கள், பறவைகள், விலங்குகள், கட்டடங்கள் மத்தியில் கலந்திருக்கும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இதன் மூலம், நமது பூமியில் உள்ள உயிரினங்கள் மற்றும் பொருட்களின் வடிவங்கள், எளிதாக மனதில் பதியும்.
- இனியன்

Saturday, September 19, 2015

சோப் என்றால்...


‘மேனி அழகு... சருமப் பாதுகாப்புக்கு எங்கள் சோப் உத்தரவாதம்!’ இதைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில், வெவ்வேறு பளிச் மாடல்கள் உதவியோடு பளீரிடுகின்றன விளம்பரங்கள். பல சோப்கள்... பல விளம்பரங்கள். எதை வாங்குவது... எதைத் தவிர்ப்பது? ஏதோ ஒன்றை வாங்கிப் பயன்படுத்துவதும் தவறு. நம் சருமத்தன்மைக்கு ஒவ்வாத சோப் நிச்சயம் உடலுக்கும் சருமத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். யாரோ சொன்னார்கள் என்பதற்காக வாங்குவதைவிட, சோப் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாமா?

சோப் என்றால்...

சருமத்தில் உள்ள அழுக்கை அகற்ற ஆல்கலி, கொழுப்பு அமிலம், மினரல் அமிலம், கிளென்சிங் கெமிக்கல்ஸ் போன்றவை கலந்து சோப் தயாரிக்கப்படுகிறது. சோப் வாங்கும்போது முக்கியமாக டி.எஃப்.எம் (TFM - Total Fatty matter), பி.ஹெச் அளவு, அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் மற்றும் மூலப் பொருட்களைப் பார்த்து வாங்க வேண்டும்.

பொதுவாக சோப், டி.எஃப்.எம் அளவைப் பொறுத்து, தரம் பிரிக்கப் படுகிறது. பி.ஐ.எஸ் தர நிர்ணயத்தின்படி, மூன்று நிலை சோப்கள் இருக்கின்றன.

கிரேடு 1: 76 சதவிகிதத்துக்கும் அதிகமாக டி.எஃப்.எம் இருக்கும். இதன் விலை சற்று அதிகம்.
கிரேடு 2: 70 - 75 சதவிகிதம் டி.எஃப்.எம் கொண்டது.
கிரேடு 3: 69 சதவிகிதத்துக்குக் குறைவான டி.எஃப்.எம் இருக்கும். குறைந்த விலைகளில் கிடைக்கும்.

அதிக அளவு பி.ஹெச் என்ன செய்யும்?

பி.ஹெச் அளவு என்பது ஒரு பொருளில் உள்ள ஹைட்ரஜன் சமநிலையைக் குறிப்பது. ஒரு பொருளில் உள்ள அமிலத்தன்மை (Acidic) காரத்தன்மை (Alkalic)இரண்டின் சமநிலை விகிதத்தின் குறியீடு. சருமத்தின் பி.ஹெச் அளவு 5.5.

சோப்பின் பி.ஹெச் அளவு பெரும்பாலும் 7-9 என்ற அளவில் இருக்கிறது. அதாவது, ஆல்கலின் அளவு அதிகம்.

இதனால் ஈரப்பசை குறைவாகவே இருக்கும். கிருமிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தாது. கிருமித்தொற்றும் ஏற்படலாம்.

இதனால் பருக்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம். சரும எரிச்சல் வரும்; சருமத்தில் வறட்சியையும் ஏற்படுத்தும்.

குழந்தைகளுக்கான சோப்பில்கூட பி.ஹெச் 7-9 என்ற அளவிலேயே உள்ளது.

கிரேடு 1 சோப்பின் பி.ஹெச் 5.5 என்ற அளவில்தான் இருக்கும். சருமத்தின் பி.ஹெச்-க்கு சமநிலையில் இருக்கும் இந்த சோப்பைப்  பயன்படுத்தலாம்.

இந்த வகை சோப், சருமத்தில் உள்ள கிருமிகளை அகற்றும். எரிச்சல் தன்மையைக் குறைக்கும். ஈரப்பசையை நீண்ட நேரம் தக்கவைக்க உதவும். பி.ஹெச் 7-9 கொண்ட சோப்பை, ஐந்து நிமிடங்கள் வரை சருமத்தில் பூசிக் கழுவினால், மீண்டும் சருமம் பழைய நிலைக்கு மாற இரண்டு மணி நேரமாகும். சருமம் ஆல்கலினாக மாறிக்கொண்டே போகும். அமிலத்தன்மையும் காரத்தன்மையும் சமநிலையில் இருப்பதுதான் சரி.

கிரேடு 2, 3 சோப் தரம்

கிரேடு 2, 3 சோப்பில் அதிக அளவு ரசாயனங்கள், எடையை அதிகரிக்க உதவும் பொருட்கள் (Hard substances) கலக்கப்பட்டிருக்கும். மேலும், இதன் சருமத்தைச் சுத்தம் செய்யும் திறன் குறைவாக இருக்கும். ஈரப்பசையைச் சருமத்தில் தக்க வைக்காது. நுரை குறைவாக வரும். மிக எளிதில் கரையக்கூடியதாக இருக்கும்.

சோப் பயன்படுத்துவது எப்படி?

சோப்பை சருமத்தில் நேரடியாகத் தேய்க்கக் கூடாது. கைகளில் சோப்பைத் தடவி, கைகளால் முகத்தை வட்டவடிவில் (Circular motion) மூன்று முறை சுற்றிக் கழுவுவதே சரி.

சிலர் 2-5 நிமிடங்கள் வரை சோப்பை மீண்டும் மீண்டும் தேய்த்து முகம் கழுவுவார்கள். இது தவறான பழக்கம். இதனால், சருமம் நிச்சயம் பாதிக்கப்படும்.





சாம்சங் கேலெக்ஸி நோட் 5: (Samsung Galaxy Note 5)


டிஸ்ப்ளே – 5.70 இன்ச் 1440x2560 பிக்ஸல் 515 ppi.
பின்புற கேமரா – 16 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.5 GHz Octo-Core Exynos 7420.
ரேம் – 4 ஜிபி.
பேட்டரி – 3000 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 (TouchWiz)
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 32 ஜிபி.
எடை – 171 கிராம்.
டூயல் சிம் வசதி இல்லை; 4ஜி ஜிஎஸ்எம் சிம் வசதி உண்டு.

பிளஸ்:
டிஸ்ப்ளே.
கேமரா.
மைனஸ்:
எஸ்டி கார்ட் வசதி கிடையாது.
இயங்குதளம்.
விலை: ரூ.53,900 (32 ஜிபி)
Amazon: http://amzn.to/1F16oOZ

லாஜிடெக் K380 ப்ளூ-டூத் கீ-போர்டு: (Logitech K380 Multi-Device Bluetooth Keyboard)


இந்த கீ-போர்டை கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன், டேப்லெட் ஆகிய கேட்ஜெட்களோடு ப்ளூ-டூத்3.0 மூலம் இணைத்துக் கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் பல கேட்ஜெட்டோடு ‘Easy-Switch’ பட்டனைக் கொண்டு சுலபமாகவும் வேகமாகவும் இணைத்துக் கொள்ளலாம்.

AAA பேட்டரிகளை கொண்டு இயங்கும் இந்த கீ-போர்ட், இரண்டு வருடங்கள் வரை இந்த பேட்டரியைக் கொண்டு உழைக்கும் என்கிறது லாஜிடெக் நிறுவனம்.

விலை ரூ.2,795


யூ பிக்ஸ் (YUPIX)

இது ஒரு ‘Portable’ போட்டோ பிரின்டர்.

வாடிக்கையாளர்கள் தங்களது கேட்ஜெட்டில் உள்ள போட்டோக்களை 2.1*3.4 இன்ச் என்ற அளவில் 60 வினாடிகளில் பிரின்ட் செய்து கொள்ளலாம்.

Wi-Fi/NFC/Wi-Fi Direct ஆகிய தொழில் நுட்பங்களை கொண்டு எந்த கேட்ஜெட்டையும் எளிதாக இணைத்து பிரின்ட் எடுக்கலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஸ் ஆகிய கேட்ஜெட்களை இந்த பிரிண்டரோடு இணைத்து பயன்படுத்தலாம்.

‘Ink Ribbon & Photo Paper’-யைக் கொண்டு இயங்கும் இந்த பிரிண்டரின் 291 dpi ரெஷலுயூசன் போட்டோக்கள் ‘Water and Finger proof’ என்று இந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

இதன் விலை (அமேசான் இணையதளத்தில்)  ரூ.6,999. இந்த பிரின்டருக்கென ஸ்பெஷல் அப்ளிகேஷனை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் ப்ளே-ஸ்டோரில் கிடைக்கிறது.

விலை ரூ.6,999

Amazon:  http://amzn.to/1UL61dB

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எக்ஸ்பிரஸ் 2: (Micromax Canvas Xpress 2)

டிஸ்ப்ளே – 5.00 இன்ச் 720x1280 பிக்ஸல் 294 ppi.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 2 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.4 GHz Octo-Core MediaTek MT6592M.
ரேம் – 1 GB; பேட்டரி – 2500 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 4.4.2
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 8 ஜிபி.
எஸ்டி கார்ட் வசதி – 32 ஜிபி வரை.
சிம் 1 – 3ஜி, சிம் 2 – 2ஜி.

பிளஸ்: டிஸ்ப்ளே, விலை, டிசைன்.

மைனஸ்: பேட்டரி, செயல்பாடு.
விலை: ரூ.5,999. (ஃப்ளிப்கார்ட்  இணையதளத்தில்)

விலை ரூ.5,999
Flipkart: http://bit.ly/1iiy8VC

‘கபாலி’

 
‘அரசியலில் ரஜினி இல்லை, ஆனால் அரசியல், ரஜினி இல்லாமல் இல்லை’ என்று பெருமைபொங்கப் பேசுவார்கள் ரஜினி ரசிகர்கள். ரஜினி எதைப் பேசினாலும், செய்தாலும் அதைத் தமக்கேற்ப வளைத்து அர்த்தம் கற்பிக்க அரசியல் தலைவர்கள் முயற்சி செய்வார்கள் என்பது கடந்தகால வரலாறு. சமீபத்தில் இரண்டு விழாக்களில் ரஜினி கலந்து கொண்டு பேசிய பேச்சுக்கள் அதிரடி ரகம்!
 
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் 90வது பிறந்தநாள் விழாவில் மிக இயல்பாகப் பேசினார் ரஜினி. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த திரைப் படங்களை உருவாக்கிய ஆர்.எம்.வீ.யின் தயாரிப்பில் தமக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததைப் பெருமை பொங்கப் பேசியவர், அவரது அசாத்திய திரைக்கதை திறமையை மெச்சினார். “ ‘பாட்ஷா’ படத்தில் அப்பாத்திரம் எப்போது வெளிப்பட வேண்டும் என்பதைப் பற்றி, ஆர்.எம்.வீ. சொன்ன ஆலோசனையே அதன் வேகத்துக்குக் காரணமாயிற்று. ‘கபாலி’, ‘பாட்ஷா’வை மிஞ்சுமா என்று கேட்கிறார்கள். ஒரு ‘பாட்ஷா’தான். ‘கபாலி’ அதன் அருகேகூட வர முடியாது” என்றார் ரஜினி.

இந்தக் கூட்டத்தில்தான், தான் மருத்துவமனையில் படுத்திருந்தபோது அடைந்த வேதனையை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார் ரஜினி. “ஆர்.எம்.வீ. மருத்துவமனைக்கே சென்றதில்லை என்பார்கள். அது எவ்வளவு பெரிய பாக்கியம். நான் மருத்துவமனைக்குப் போனவன், அதன் சிரமங்கள் அறிந்தவன்,” என்றபோது, அதன் நகைச்சுவைக்குப் பின்னே இருந்த வலியை எல்லோரும் புரிந்துகொள்ள முடிந்தது. ஐம்பது வயதுக்குப் பிறகு அனைவரும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது ரஜினி அட்வைஸ்.

அடுத்த கூட்டம்தான் இன்னும் சுவாரசியமானது. நீதிபதி பி.எஸ்.கைலாசத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய ரஜினி, “அரசியல்வாதிங்க கெட்டுப்போனா கூட நாடு உருப்படும். ஜனங்க கெட்டுப் போனாகூட நாடு உருப்படும். ஆனா நீதிமன்றங்கள் கெட்டுப் போனா மட்டும் நாடு உருப்படாது,” என்று பேசியிருந்தார். எளிமையான, மனத்தைத் தொடும் இந்தப் பேச்சுதான் விதவிதமான அர்த்தங்களுக்கு ஆளாகியிருக்கிறது.

“அவருடைய இந்தப் பேச்சு ஆழமான, அர்த்தச் செறிவான பேச்சு மட்டுமல்லாமல், இன்றைய சூழலில் மிகவும் பொருத்தமான பேச்சும் ஆகும்,” என்று கருணாநிதி தமது கேள்வி பதிலில் குறிப்பிட்டு நீதிமன்றங்கள் பற்றிய தன்னுடைய கருத் தையும் சேர்த்துப் பதிவு செய்தார். மற்றொருபுறம் டாக்டர் ராமதாஸ், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கோடு ரஜினி பேச்சைத் தொடர்புபடுத்தியே தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறை சட்டசபைத் தேர்தல் நெருங்கும்போதும் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வியும் அவரது ரசிகர்கள் அதன்படியே வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவிவருகிறது. ஆனால், 1996க்குப் பின்னர் அவருடைய கருத்து வெளிப்படையாக இருந்ததில்லை. மேலும் ‘இன்னாருக்கு வோட்டு போடுங்கள்’ என்று அவர் நேரடியாக கைகாட்டியதும் இல்லை.

ரஜினியை விமர்சிக்கும் அறிவுஜீவிக் குழு ஒன்று உண்டு. அவரது ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும் போதும், அதன் பப்ளிசிட்டிக்காக, ரஜினி ஏதேனும் பேசுவார். அதையொட்டி எழும் ஆதரவு - எதிர்ப்பலைகளில், படம் தப்பித்துக்கொள்ளும் என்பது இவர்களது தப்புக்கணக்கு. இப்போது ரஜினி வெளியே வந்து பேசத் தொடங்கியிருப்பதும் தமது அடுத்த படமான ‘கபாலி’க்கான புரமோஷனுக்குத்தான் என்பது இவர்களது கருத்து. ரஜினியின் வெற்றியை முனை மழுங்கச் செய்யச் சொல்லப்படும் நொண்டிச் சாக்கு இது என்பது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.
இன்றைக்கும் தியேட்டர் முதலாளிகள் மத்தியில் ரஜினி படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. அதுவும் ‘மெட்ராஸ்’ புகழ் பா.ரஞ்சித் இயக்கம், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பு என்றவுடன் ‘கபாலி’ யின் மார்க்கெட் வேல்யு பன்மடங்குக் கூடிவிட்டது.

இந்நிலையில் எதிர்த்தரப்பு விமர்சனங்கள், வளைத்தல்களைத் தாண்டி, ரஜினி ஆத்மார்த்தமாகச் சொல்ல விரும்பிய விஷயங்கள் காணாமலேயே போய்விட்டன. ஆர்.எம்.வீ. போன்ற மூத்த சினிமா தயாரிப்பாளர்களைக் கொண்டாடுவது மிக முக்கியம் என்பதை உணர்ந்தே ரஜினி அன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கக் கூடும். இன்றைக்குப் பெயர் சொல்லத்தக்க வெற்றிகர மான தயாரிப்பாளர்கள் என்ற குழு காணாமலே போய்விட்ட நிலை. தயாரிப்பாளர்களுக்கு இருக்க வேண்டிய கூர்ந்த மதிநுட்பம், கதைப் பற்றி, காட்சிகளைப் பற்றிய புரிதல், மக்கள் பல்ஸை உணர்ந்திருப்பது ஆகியவையே ரஜினி பேச்சின் சாரம்.

அதேபோல், நீதித்துறையின் நேர்மை குறித்த சாதாரண மக்களின் நம்பிக்கையே ரஜினி வார்த்தைகளில் வெளிப்பட்டது. எந்த நிறுவனம் பழுதுபட்டாலும் தாங்கிக்கொள்ளக்கூடிய மக்கள், நீதித்துறையின் சரிவுகளை ஏற்பதில்லை.

பொதுவாக ரஜினி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. கலந்துகொள்ளும் சந்தர்ப்பங்களில் பளிச்சென்று பேசத் தவறுவதில்லை. அவர் பேசிவிட்டு போன பின்னர் மற்றவர்கள் அதைப் பற்றிக் கொள்வார்கள். மேலும் விவாதிப்பார்கள். இந்த முறையும் அதுதான் நடைபெற்றது. பல்வேறு தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும் கடந்த சில நாட்களாக ரஜினியின் பேச்சை அலசித் தீர்த்தன.

அவர் வாய்ஸ் எடுபட்டுக்கொண்டே இருப்பதின் மர்மம், மக்கள் விரும்பும் சாய்ஸ்களையே அவர் எடுத்துப் பேசுவதால்தானோ!

துளசி
 

எளிய வாழ்க்கை



தனிமனிதர்களின் டின்னர், டீ பார்ட்டி, ஆடம்பரம் எதுவும் அப்போது கிடையாது. வசதியுடையவர்கள் எளிமையாக வாழ்ந்தவரையில் மற்றவர்களுக்கும் இவர்களிடம் துவேஷமில்லை. பிற்பாடு வேத ரக்ஷணத்தையும், கிரமத்தையும்விட்டு அவர்கள் பட்டணத்துக்கு வந்து பணவேட்டையில் விழுந்ததும்தான் சமூகத்தின் சௌஜன்யமே சீர்குலைந்து விட்டது. பழைய எளிய வாழ்க்கை முறைக்குத் திரும்ப எல்லோரும் பிரயாசைப்பட வேண்டும்.

காந்தி இருந்தவரைக்கும், ’எளிய வாழ்க்கை, எளிய வாழ்க்கை’ (Simple living) என்ற பேச்சாவது இருந்தது. இப்போது அந்த அபிப்பிராயமே போய்விட்டது. மறுபடி அந்த முறைக்கு மக்களைக் கொஞ்சத்தில் கொஞ்சமாவது திருப்ப வேண்டும். நிறைவு மனசில்தான் இருக்கிறது என்று உணர்ந்து, அவரவரும் கடமையைச் செய்து கொண்டு எளிமையாக இருக்க வேண்டும். அவரவரும் இப்படித் தேவைகளைக் குறைத்துக்கொண்டு மனசினால் நிறைந்து சுபிட்சமாக இருக்க சந்திர மௌளீசுவரர் அநுக்கிரகம் செய்வாராக!

Tuesday, September 15, 2015

அருள்வாக்கு - கணபதி உபாஸகி!


குமாரன்’ என்றால் ‘பிள்ளை’ என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி-பரமேசுவரர்களின் இளையபிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் ‘குமரக் கடவுள்’ என்கிறோம். ஆனால், அவரைக் ‘குமரனார்’ என்பதில்லை; ‘குமரன்’ என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் ‘பிள்ளையார்’ என்று பெயர் தந்திருக்கிறோம்.

முதல் பிள்ளை இவர்; குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரவஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்.

குழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற பிள்ளையார் குழந்தைபோல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகத் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார். ஔவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே போதும். ஔவையார் பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக்கொண்டு, ஔவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான ‘விநாயகர் அகவலை’ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

இஷாந்த் ஷர்மா - தலையில் அடித்துக் கொண்டதற்கு தண்டனையா?


சமீபத்தில் நடந்துமுடிந்த இலங்கை சுற்றுப் பயணத்தின்போது இறுதி டெஸ்டில் இஷாந்த் ஷர்மா விக்கெட் வீழ்த்தியபின் மிகவும் உணர்ச்சிகரமான வகையில் தன் தலையை கையால் அடித்துக் கொண்டதால் ஐ.சி.சி.யால் ஒரு டெஸ்ட் ஆட்டத்துக்குத் தடைசெய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணி என்ன?

இஷாந்தின் எதிர்வினை டி.வி.யில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது. இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் எதிரணித் தலைவர் மேத்யூஸ் ஒரு புது உத்தியை பயன்படுத்தினார். பந்து சற்றே பழசானது, அது மட்டையாளர்களுக்கு ஆட எளிதானது. இதைத் தடுப்பதற்கும் எதிரணியினரை காயப்படுத்துவதற்கும் அவர் வேகவீச்சாளர்களை மட்டையாளனைச் சுற்றி வந்து (Round the wicket) உடம்பில் படும்படியாய் எல்லா பந்துகளையும் உயரப் பந்துகளாய் வீச வைத்தார். இது ஆபத்தானது மட்டுமல்ல. எதிர்மறையான ஆட்டமும்கூட. கிரிக்கெட்டில் இப்படியான பந்து வீச்சுக்கு Bodyline பந்து வீச்சு என்று பெயர். உண்மையில் இதுதான் கிரிக்கெட்டின் கண்ணியத்துக்கு (Spirit of the game) எதிரான ஒன்று.

இப்படியான ஆபத்தான உத்தி பயன்படுத்தப்பட்டால் நடுவர்கள் அதைத் தடை செய்யலாம் என ஒரு விதிமுறை உள்ளது. ஆனால் இம்முறை நடுவர்கள் தம் கடமையில் இருந்து தவறினார்கள்.

இந்த ஆட்டத்தில் இஷாந்த் வீசிய உயரப்பந்தால் அப்போது மட்டையாடிக் கொண்டிருந்த இலங்கை வீச்சாளர் தமிக்க பிரசாதின் கையில் காயம்பட்டது. பிரசாத் பந்து வீசும் போது இஷாந்த் மட்டையாட வந்தார். அப்போது பிரசாத் அனைத்து பந்துகளையும் உயரப்பந்துகளாய் வீசியது மட்டுமில்லாமல் ஒவ்வொரு முறையும் முறைக்கவும் செய்தார். அது மட்டுமில்லாமல் இஷாந்தைத் தொடர்ந்து அச்சுறுத்து வதற்காய் ஓவரை நீட்டிக்கும் பொருட்டு அவர் வேண்டுமென்றே நோ பால் போட்டார். இதை நடுவர் கண்டித்தார்.

ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாத இஷாந்த் பிரசாதிடம் சென்று தன் தலையில் நேரடியாய் பந்து வீசும்படி கேட்டார். இதை அடுத்து தினேஷ் சந்திமல் ஓடிவந்து இஷாந்திடம் வம்புக்கிழுத்தார். அவர் வேண்டுமென்றே இஷாந்தை இடித்தபடி கடந்தார். அது மட்டுமல்ல, இஷாந்த் அவுட் ஆகி வெளியேறியதும் அவரைத் தொடர்ந்து பிரசாத் பின்னாலே ஓடினார். டிரெஸ்ஸிங் ரூமின் அருகே அவர் இஷாந்தைச் சந்தித்து மோதலைத் தொடர முயல இரு அணி நிர்வாகிகளும் தலையிட்டு சமாதானப்படுத்தினர்.

இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியதும் மிகுந்த கோபத்துடன் பந்து வீச வந்த இஷாந்த் தன் களைப்பையும் உடல்வலியையும் மறந்து பழிவாங்கும் வெறியும் உச்சவேகத்தில் வீசினார். தன் உத்தி சொதப்பியதை உணர்ந்த மேத்யூஸ் மட்டையாட வந்ததும் இஷாந்திடம் கனிவாகப் பேசி இறுக்கத்தைத் தளர்த்தினார். இஷாந்தின் பந்து வீச்சில் இருந்த வெறித்தனமும் மூர்க்கமும் குறைந்து போயிற்று. ஆனால் அடுத்த நாளே இஷாந்த் ஒரு டெஸ்ட் ஆடத் தடை செய்யப்பட்டார். அவரைத் தூண்டிய பிரசாத்தும் நேரடியாய் உடலில் மோதிய சந்திமலும் சொற்ப தண்டனைகளுடன் தப்பித்தனர்.

இப்பிரச்சனைக்கு மூன்று தீர்வுகள். ஒன்று இலங்கைப் பயன்படுத்திய பாடிலைன் பந்து வீச்சு தடைசெய்யப்பட வேண்டும். இரண்டு, கோபமாய் எதிர்வினையாற்றும் ஒரு வீரரைத் தண்டிக்கும்முன் அவரை அவ்வாறு தூண்டியவர்களையும் அதே போல் தண்டிக்க வேண்டும். மூன்றாவது இது போன்ற எதிரணித் தந்திரங்களை எப்படி கையாள்வது என வீரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆர்.அபிலாஷ்

Sunday, September 06, 2015

ஏசஸ் ஜென்போன் 2 லேசர் ZE550KL:(Asus ZenFone 2 Laser ZE550KL)


டிஸ்ப்ளே – 5.5 இன்ச் 720x1280 பிக்ஸல் 267    PPI.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.2 GHz Quad-Core Qualcomm Snapdragon 410.
ரேம் – 2 ஜிபி.
பேட்டரி – 3000 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 (ZenUI)
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 ஜிபி.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 ஜிபி வரை.
எடை – 170 கிராம்.
சிம் 1 & சிம் 2ஜி – 4ஜி மைக்ரோ சிம்.
பிளஸ்:
லேஸர் ஃபோக்கஸ் கேமரா.
டூயல் 4ஜி சிம்.
பேட்டரி.
மைனஸ்:
செயல்திறன்.
விலை: ரூ.9,999
இந்த கேட்ஜெட்டை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்க:
Flipkart - http://bit.ly/1LaJcuF


ஏலியன்வேர் 13(Alienware 13)

இது ஒரு பிரத்யேகமான கேமிங் லேப்டாப்.
டிஸ்ப்ளே – 13.3 இன்ச் 1366*768 Twisted Nematic (TN) டிஸ்ப்ளே.
இது தவிர, 1920*1080 IPS டிஸ்ப்ளே மற்றும் 3200*1800 IGZO IPS டிஸ்ப்ளே மாடல்களும் உள்ளன.
பிராசஸர் – இன்டெல் கோர் i5-5200U 2.7GHz டூயல் கோர் அல்லது இன்டெல் கோர் i7-5500U 3.0GHz டூயல் கோர்.
கிராபிக்ஸ் பிராசஸர் – NVIDIA GTX 960M 2GB GPU.
ரேம் – 8 ஜிபி / 16 ஜிபி DDR3L.
இயங்குதளம் – விண்டோஸ் 10
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 500 ஜிபி 5400RPM.
பிளஸ்:
தொழில்நுட்பம்
மைனஸ்: 
டிசைன்.
விலை: ரூ.63,000
இந்த கேட்ஜெட்டை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்க:

Amazon - http://amzn.to/1IQ2VxR


ஸ்வைப் ஏஸ்(Swipe Ace)

இது ஒரு வாய்ஸ் காலிங் டேப்லெட்.
டிஸ்ப்ளே – 6.95 இன்ச் 600x1024 பிக்ஸல்.
பின்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 2 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.3 GHz Quad-Core.
ரேம் – 1 ஜிபி.
பேட்டரி – 2800 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 4.4
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 8 ஜிபி.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 32 ஜிபி  வரை.
டூயல் சிம் வசதி உண்டு.
சிம் 1 – 3ஜி.
சிம் 2 – 2ஜி.
பிளஸ்:
டூயல் சிம்.
வாய்ஸ் காலிங் வசதி.
மைனஸ்:
இயங்குதளம்.
பேட்டரி.
விலை: ரூ.7,299
இந்த கேட்ஜெட்டை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்க:
Flipkart - http://bit.ly/1N9bHgK
Amazon - http://amzn.to/1NTT3v1


சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் 900 SSD(Sandisk Extreme 900 SSD)
இது ஒரு போர்ட்டபிள் SSD.
இது உலகத்தின் மிக வேகமான USB 3.1 Type-C போர்ட்டபிள் SSD என்று சான்டிஸ்க் நிறுவனம் கூறுகிறது.
இதன் டிரான்ஸ்ஃபர் ஸ்பீட்  (transfer speed) 850MB/s.
இதை மூன்று மாடல்களில்   சான்டிஸ்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
480 ஜிபி – ரூபாய் 35,990.
960 ஜிபி – ரூபாய் 53.990.
.92 டிபி – ரூபாய் 89,990.
விலை: ரூ.89,990
இந்த கேட்ஜெட்டை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்க:
Amazon - http://amzn.to/1EGX3fx

Saturday, September 05, 2015

ஆசிரியர் தினம்

 
திருத்தணிக்கு அருகில் இருக்கும் சர்வபள்ளி என்னும் கிராமத்தில், ராதாகிருஷ்ணன் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் பிறந்தார். இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான ராதாகிருஷ்ணன் மாபெரும் கல்வியாளர். தத்துவ ஞானியும்கூட. ஆரம்பத்தில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆனார். தத்துவத்தில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார். பல டாக்டர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் இந்து மதத் தத்துவங்கள் பற்றி விரிவுரை ஆற்றி இருக்கிறார். ஆந்திரப் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்துமதப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும் பணியாற்றி இருக்கிறார். பின்னர் யுனெஸ்கோவின் தூதுவராகச் செயல்பட்டார். பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகவும் உயர்ந்தார். சோவியத் யூனியன் தூதராகப் பணி புரிந்தார். 1952ல் இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954ல் பாரத ரத்னா விருது பெற்றார். 1962ல் குடியரசுத் தலைவரானார்.
 
இவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக இந்தியாவில் கொண்டாடுகின்றனர். காரணம் இவர் ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தார் என்பதுதான். ஆசிரியப் பணியில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு இன்றைய தினம் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆசிரியர்கள் கௌரவிக்கப்படுகிறர்கள். 

ஷண்முகவடிவு சுப்புலட்சுமி (16.9.1916 11.12.2004) விருதுகளும் பட்டங்களும்!


எம்.எஸ். என்ற மணிமகுடத்துக்கு அழகுசேர்த்த வைரக்கற்களாய் ஜொலித்தன அவர் பெற்ற விருதுகளும், பட்டங்களும். அவற்றுள் குறிப்பிடத்தக்க சில.

1940 - கும்பகோணம் வாணி விலாச சபையால் வழங்கப்பட்ட இசைவாணி பட்டம்
1954 - மத்திய அரசின் பத்மபூஷண்
1956 - சங்கீத நாடக அகாடமி விருது
1967 - கல்கத்தா ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
1968 - சென்னை மியூஸிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது
1970 - தமிழிசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர் விருது
1973 - டெல்லி பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் மற்றும் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம்
1974 - பிலிப்பைன்ஸ் நாட்டின் ரோமன் மகசேசே விருது
1975 - மத்திய அரசின் பத்மவிபூஷண்
1980 - தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தனிப்பெரும் கலைஞர் விருது
1980 - பனாரஸ் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம்
1981 - விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் ‘தேசிகோத்தமா’ விருது
1986 - ரசிக ரஞ்சனி சபாவின் கலா ரத்னா
1987 - சென்னை பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம்
1988 - மத்தியப்பிரதேச அரசு வழங்கிய காளிதாஸ் சம்மான் தான்சேன் விருது
1990 - இந்திராகாந்தி விருது
1997 - ஸ்வரலய புரஸ்கார் விருது
1996 - ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது
1998 - பாரத ரத்னா
2000 - எஸ்.வி.என்.ராவ் விருது
2002 - சென்னை மியூஸிக் அகாடமியின் 75-வது ஆண்டு சிறப்பு விருது
2004 - புதுதில்லி அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது

பொய்யும் பயமும்!




சாதாரணமாக ஒரு தப்புச் செய்தபோது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அது ஓர் அழுக்கு மாதிரி உங்கள் மனசையே உறுத்துகிறது. உடனே இந்த அழுக்கை யாரும் தெரிந்து கொண்டு விடக்கூடாது என்று அதை மூடி மறைக்கத் தோன்றுகிறது. நியாயமாக, தவறுதல் உண்டானவுடன் பிரார்த்தனை பண்ணினால், அந்தப் பிரார்த்தனையே சோப்பைப் போல் அந்தத் தப்பை அகற்றிவிடும். அப்படிச் செய்யாமல் தப்பை மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமல் மூட வேண்டும் என்கிறபோது, பொய் சொல்ல வேண்டியதாகிறது. அழுக்கைத் தேய்த்துக் கழுவாமல், மூடி மூடி வைத்தால் சீழ் பிடித்துச் சிரங்காகிவிடும். அது மாதிரி, தப்பை மூடியவுடன் அது பொய் என்ற சிரங்காக ஆகிவிடுகிறது. உள்ளத்தை ரொம்பவும் கெடுக்கிற பயங்கரமான சிரங்கு பொய்தான்.

எதனால் தப்பை மறைக்கப் பார்க்கிறோம்? ஒன்று, நம்மை மற்றவர் நல்லவன் என்றே நினைக்க வேண்டும் என்ற பொய் எண்ணத்தினால்; அல்லது இன்னொருத்தரிடம் பயத்தினால் மறைக்கப் பார்க்கிறோம். பொய் என்பது சிரங்கு என்றால் பயம் என்பது சொரி மாதிரி.

பெரியவர்களிடமெல்லாம் உங்களுக்கு நிறைந்த மரியாதையும் மதிப்பும் இருக்கத்தான் வேண்டும். ஆனாலும் அர்த்தமில்லாத பயம் கூடாது. பயம் உள்ளத் தூய்மையைக் கெடுக்கிற அழுக்கு. தப்பு செய்தால் கூட, அதை உணர்ந்து, பணிவுடன் உள்ளபடி பெரியவர்களிடம் சொல்ல வேண்டுமே ஒழிய, பொய்யால் மூடி மறைக்கக் கூடாது. தப்பு செய்தது போதாது என்று, பொய்யும் சொன்னோம் என்பது வெளிப்பட்டு நமக்கு மேலும் அவமானம், கஷ்டம்தான் ஏற்படும். உள்ளபடி சொன்னால் பெரியவர்கள் மன்னித்துவிடுவார்கள். மன்னிக்காமல் அவர்கள் தண்டித்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு அந்த உரிமை உண்டு. ‘நாம் தப்பு செய்தோம்; அதனால் அதற்குரிய தண்டனையைப் பெறுகிறோம்’ என்று தைரியத்துடன் தண்டனையை ஏற்க வேண்டும். தைரியம், சத்தியம் இவை எல்லாம் மன அழுக்கைப் போக்குகிற சோப், சீயக்காய் மாதிரி.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

இந்தியா 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது

இந்தியா 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. நாம் கங்குலியின் தலைமையில் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளோம். இங்கிலாந்திலும் மேற்கிந்திய தீவுகளிலும் நியுசிலாந்திலும் வென்றுள்ளோம். ஆனால், இலங்கையில் இவ்வளவு காலம் வென்றதில்லை.

ஏனென்றால் தொண்ணூறுகளில் நாம் இலங்கையை ஒரு அணியாகவே பொருட்படுத்தவில்லை. 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜெயவர்த்தனே, சங்கக்காரா போன்ற அற்புத மட்டையாளர்களும், முரளிதரன் எனும் ஒரு சாதனையாளரும் சேர்ந்து இலங்கையை தரமான டெஸ்ட் அணியாக மாற்றினார்கள்.

ஆனால், சமீபமாக இலங்கை அணியில் சிறந்த சுழல்பந்து வீச்சாளர்கள் இல்லை. அவர்கள் அதனால் தம் பாரம்பரியமான வலிமையான சுழலைத் துறந்து விட்டு வேகபந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுதளங்களை அமைக்கத் தொடங்கினர். இதனால் நியுசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் தொடர்களை இழந்தனர். இந்தியாவுக்கு எதிராகச் சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இலங்கை பழைய வியூகத்துக்குத் திரும்பியது. மீண்டும் சுழலும் ஆடு தளத்தை அமைத்தனர்.

ஆனால் முதல் போட்டியில் இந்தியச் சுழலர்களான அஷ்வின், மிஷ்ராவின் அபாரமான வீச்சுக்கு முன் இலங்கை மட்டையாளர்களால் தாக்குப்பிடிக்க இயலவில்லை. இந்த ஆட்டத்தை இந்தியா இறுதி நாளில் மோசமாய் ஆடி இழந்தாலும் 90 சதவிகிதத்துக்கு மேல் ஆதிக்கம் செலுத்தியது. இதை உணர்ந்த இலங்கை இரண்டாவது டெஸ்டில் சற்றே வேகவீச்சுக்கு ஆதரவான ஆடுதளத்தை அமைத்தனர். அப்போது நம் சுழலர்களுடன் சேர்ந்து வேகவீச்சாளர்களும் இலங்கைக்குத் தலைவலி கொடுக்க அந்த ஆட்டத்தை இலங்கை இழந்தது.

மூன்றாவது டெஸ்டில் முழுக்க வேகவீச்சுக்கான ஆடுதளம். சுத்தமாய் பந்து சுழலவில்லை. இது இத்தொடரில் இலங்கை வீரர்களுக்கு அச்சுறுத்தலாய் விளங்கியது. அஷ்வினை மழுங்கடிப்பதற்காக அவர்கள் வகுத்த வியூகம். ஆனால் எதிரணியினரைப் பற்றிக் கவலைப்பட்டு அதற்கு ஏற்றபடி ஆடுதளம் தயாரித்த இலங்கையினர் தம் சொந்த வீச்சாளர்களின் நிலை பற்றி யோசிக்கவில்லை. இலங்கை வேகவீச்சாளர்களான பிரசாத் மற்றும் பிரதீப் முழுமையான உடற்தகுதியுடன் இல்லை.

ஆல்ரவுண்டர் மேத்யுவுசுக்கு முதுகு வலி; ஐந்து ஓவர்களுக்கு மேல் வீச முடியாத சிக்கல். இந்நிலையில் இந்த ஆடுதளத்தை இந்திய அணியின் வேகவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் உமேஷ் யாதவும் அபாரமாகப் பயன்படுத்தி இத்தொடரை இந்தியாவுக்கு வென்றளித்தனர்.

இத்தொடரை இந்தியா வென்றதற்கு முதன்மைக் காரணம், தொடக்கத்தில் இருந்தே கோலி வெற்றி நோக்கில் செயல்பட்டது. இலங்கையோ தோல்வியைத் தவிர்க்கும் எதிர்மறை, சுயபாதுகாப்பு நோக்கிலேயே இயங்கியது. இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க, இலங்கை ஏழு மட்டையாளர்களைத் தேர்ந்தது. ஆனால் ஏழு மட்டையாளர்களாலும் தொடர்ந்து நன்றாக ஆட இயலவில்லை.

இந்தியா ஆறு மட்டையாளர்களுடன் ஆடும்போது அனைவருக்கும் பொறுப்புணர்வு கூடுகிறது. உதாரணமாக தொடக்க மட்டையாளர்கள் மற்றும் 3, 4 இடங்களில் ஆடின ரஹானே, கோலி ஆகியோர் மிகுந்த கவனம் மற்றும் பொறுப்புடன் ஆடினர். இதற்குமுன்பு 7 மட்டையாளர்கள் இருக்கையில் இவர்கள் சற்று மனம்போன போக்கில் ஆடி ஆட்டம் இழப்பதுண்டு. இம்முறை ஒரு மட்டையாளர் குறைவு எனும் எண்ணம் நம் மட்டையாட்டத்துக்கு உதவியது.

அதேபோல 5 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும்போது நிச்சயம் “வெற்றி ஒன்றே நோக்கம், டிரா அல்ல” எனும் சேதியை கோலி வலுவாக உணர்த்தினார். முன்பு தோனியின் கீழ் இஷாந்த் போன்றோ 130 கி.மீ.க்கும் குறைவான வேகத்தில் ஒரே ஸ்பெல்லில் 8 ஓவர்கள் வீசுவார்கள். விக்கெட் வீழ்த்துவதைவிட ஓட்டங்களை கட்டுப்படுத்துவதே நோக்கமாய் இருக்கும். ஆனால் கோலி ஒரு ஸ்பெல்லி 4 ஓவர்கள் மட்டுமே முழு ஈடுபாட்டுடன் வீசக் கேட்க இஷாந்தின் வேகம் அதிகரித்தது. அதுவரை மெத்தனமாய் வீசி வந்த இஷாந்த் திடீரென 142 கிலோமீட்டர் வேகத்தில் ஒவ்வொரு பந்தையும் ஆவேசமாய் வீசினார். ஏனென்றால் நிறைய ஓவர்கள் வீசும் அவசியம் இப்போது இல்லை என்பதால் வீச்சாளர்கள் தம்மை பாதுகாக்கும் மனப்பான்மையுடன் ஆடுவதில்லை. ஐந்து வீச்சாளர் கொண்ட வியூகத்தின் சிறப்பு இதுதான்.

அதேபோல் கோலி அஷ்வினைப் பயன்படுத்திய விதமும் சிறப்பானது. அவர் ஹர்பஜனைத் தேர்ந்தெடுத்து அஷ்வினுடன் ஆட வைத்ததும் ஒரு மறைமுகச் செய்தியை அஷ்வினுக்கு உணர வைத்தது. முன்பு ஜடேஜாவும் ஓஜாவும் கூட ஆடும்போது அஷ்வின் மட்டுமே ஆதிக்கம் செலுத்தக்கூடிய சுழலராக இருப்பார். பிறர் ஓட்டங்களைக் கட்டுப்படுத்த, அஷ்வின் பெரும்பாலான விக்கெட்டுகளை எடுப்பார்.

ஆனால் கோலியோ தான் அஷ்வினை மட்டுமே நம்பி இருக்கப் போவதில்லை என உணர்த்தினார். முதல் டெஸ்டில் அஷ்வினுடன் ஹர்பஜன் களமிறக்கப்பட்டார். அவரது இருப்பே அஷ்வினை இன்னும் சிறப்பாய் வீசச் செய்தது. ஆனால் ஹர்பஜன் தன்னளவில் சொதப்ப, கோலி அடுத்த டெஸ்டில் மற்றொரு அதிரடிச் சுழலரான மிஷ்ராவைத் தேர்ந்தெடுத்தார். அஷ்வினுடன் அவருக்கு இணையாக பந்து வீசக் கூடியவர் என்பது அவரது போட்டியுணர்வை தூண்டியது.

கோலியின் கீழ் அஷ்வின் உன்னதமான ஆட்ட நிலையில் இருப்பதற்கு அவருக்கு கோலி ஒரு சின்ன அளவில் நெருக்கடி கொடுத்ததும் ஒரு காரணம்.
கடந்த பத்து வருடங்களாய் இந்திய அணி டெஸ்டில் ஆடும்போது சற்று அலுப்பாய் செயல்படும். குறிப்பாக வெளிநாடுகளில் ஆடும்போது வேகவீச்சாளர்கள் திங்கட்கிழமை பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப்போல் தோன்றுவார்கள். காரணம் தலைவர் தோனி டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தியதில்லை. ஆனால் இம்முறை முதன்முறையாய் ஐந்து நாட் களில் ஒருமுறை கூட இந்திய அணி மெத்தனமாய் ஆடவில்லை. ஆர்வமின்றி மனம் போன போக்கில் செயல்படவில்லை.

எப்படியாவது தொடரை வெல்ல வேண்டும் எனும் வெறியை கோலி ஒவ்வொரு வீரருக்குள்ளும் சுடர்விட்டு எரியச் செய்தார். இத்தொடர் வெற்றி ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கப் போகிறது.

ஆர்.அபிலாஷ்