Search This Blog

Tuesday, August 31, 2010

காமன்வெல்த், இந்தியா, பாகிஸ்தான் , பார்லிமென்ட், மதுரை - ஆதங்கம்

காமன்வெல்த்
  ************************************************************************************
இதோ அனைவரும் எதிர்பார்த்த ரஹ்மானின் காமன்வெல்த் பாடல் வெளியாகிவிட்டது.. அதனுடன் சேர்ந்து பாடலை குறித்து சர்ச்சையும் சேர்ந்து வந்து உள்ளது. நம் நாட்டின் மந்த்ரிகள் , விழா குழு நபர்கள் அனைவருக்கும் அந்த பாடல் பிடிக்க வில்லை.. இந்த பாடலில்  குறை  ஒன்றும் பெரிதாக தெரியவில்லை .. நான் ஒன்னு கேட்கிறேன், மற்ற பாடல்கள் உடன் இதனை ஒப்பிட்டு பார்த்து பிடிக்க வில்லை என சொல்லகிறோம்.. ஏன், நம்ம தேசத்தை வளர்ந்த நாடுகளுடன், அடிப்படை வசதிகளை ஒப்பிட்டு யாரும் பார்பதில்லை. போட்டி காண மைதானம் தயார் இல்லை, பேச வந்துட்டாங்க .. போயி தண்ணிய குடிங்க சார்..

************************************************************************************
மிக பெரிய போட்டியை நடத்தும் வாய்ப்பு நம் தேசத்திற்கு கிடைத்திருக்கு.. ஆனால், இதில் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு ஊழல். நம் பிரதமர் அவர்கள், இதனை நேரடிய போயி ஆய்வு செய்துள்ளார். சார், இதை நீங்க எட்டு மாதத்திற்கு முன்பு செய்து இருந்தால் இந்த அளவுக்கு சர்ச்சை இருந்து இருக்காது. தன் சக மந்திரி ஊழல் செய்துள்ளார். அதுவும் நிரூபணம் ஆகி உள்ளது. ஆனால், அவர் மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அப்போ, இந்த அரசு கையாலகாத அரசுதானே! ( என்னை பொறுத்த வரை )
**************************************************************************************

மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்கையில் இந்தியாவை தான் வயசான ஆட்கள் ஆண்டு உள்ளனர்.. தயவு செய்து ஒரு 35 வயது நபரிடம் ஆட்சியை ஒப்படைத்து ( வாய்ப்பு குடுத்து ) முயற்சி செய்து பாருங்கள்.. தமிழ் முதல்வன் படம் போல அல்லது தெலுகு லீடர் படம் போல எந்த மாற்றங்களும் நிகழாத என ஏங்கும் சக தோழன் நான்.

****************************************************************************************


மீண்டும் ஒரு கிரிக்கெட் ஊழல். அதுவும்  கிரிக்கெட் ஊழல்க்கு  பெயர் பெற்ற பாக்கிஸ்தான் மீது. எனக்கு எதுவுமே புரியலை. பணம் கொடுத்த நாட்டை காட்டி கொடுபாரோ.. தேச பற்று இல்லாமல் போய்விட்டதோ..  ஒழுங்காக பணம் கொடுத்தால் அவர்கள் ஏன் தர குறைவாக, மிக மட்டற்ற செயல்களை செய்ய போகிறார்கள்.. இது மாத்ரி ஆட்களின் தவறு நிரூபணம் ஆகும் போது  ஆயுள் தடை( விளையாட ) மற்றும் பாஸ்போர்ட் முடக்கம் செய்ய வேண்டும்.. செய்வார்களா..

***********************************************************************************
 
நம் நாட்டின் மந்த்ரிகளின் சம்பளம் உயர்ந்து விட்டது. சந்தோஷமான விஷயம்.. ஆனால், பார்லிமென்ட் நடக்காத நாட்களுக்கு எதற்கு சம்பளம். அது போக, சபை நடக்காமல் போனால் அதற்க்கு எதற்கு சம்பளம் கொடுக்க வேண்டும்.. என்ன சார், அரசு பொது துறையில் வேலை செய்பவர்களுக்கு தனி சட்டம், மற்றவர்களுக்கு தனி சட்டமா?

*******************************************************************************************
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக இந்தியா 25 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி செய்ய போகிறது. செய்ய வேண்டியது தான்.. உதவி செய்வது தேவை தான். ஆனால் இங்கேயே உண்ண உணவு, இருக்க இடம் இல்லாமல் எத்தனை மனிதர்கள் இருக்கிறோம்.. அவர்களை பற்றியும் சிந்தனை செய்யுங்கள்..

****************************************************************************************
எந்திரன் பிசினஸ் கிட்டதட்ட 250 கோடியை தாண்டும் என்கிறார்கள்..மதுரை ஏரியாவை சுமார் 13 கோடி! கொடுத்து வாங்கி ரிலீஸ் செய்ய போகிறார்கள். இந்த அளவுக்கு பணம் எப்படி வந்தது. யாராவது கேட்டு சொன்னால் நல்லா இருக்கும்.

****************************************************************************************
ப்ரியமுடன் 
ராஜா 

Monday, August 30, 2010

The illustrated guide to a Ph.D

Imagine a circle that contains all of human knowledge: 

By the time you finish elementary school, you know a little: 
By the time you finish high school, you know a bit more:
With a bachelor's degree, you gain a specialty: 
A master's degree deepens that specialty: 
Reading research papers takes you to the edge of human knowledge: 
Once you're at the boundary, you focus: 
You push at the boundary for a few years:
Until one day, the boundary gives way: 
And, that dent you've made is called a Ph.D:
  
Of course, the world looks different to you now: 

So, don't forget the bigger picture: 


Keep pushing.



Thanks to mattmight








Saturday, August 28, 2010

கௌதம் வாசுதேவ் மேனன்க்கு அஜித்தின் அட்டகாச பதில்கள்

'மங்காத்தா', 'பில்லா -2' என டபுள் டக்கர் ஆக்ஷனில் இருக்கிறா£ர் அஜீத்.

'இனிமேல் அஜீத் எனக்குத் தேவை இல்லை' என்ற கௌதம் மேனனின் கமென்ட் குறித்த கவலை தென்படுகிறதா? 

''சினிமாவில் நான் இல்லாமல் 10 படங்களை கௌதம் இயக்கிவிட்டார். அவர் இல்லாமல் நானும் 50படங்களை முடித்துவிட்டேன். இதுதான் என் சிம்பிள் பதில்!
கார் ரேஸில் ஆர்வம் இருப்பதால், அதற்காக வெளிநாடு போவதால், சினிமாவில் கவனம் செலுத்தலைன்னு சொல்றது அபத்தம். நான் எதில் ஈடுபட்டாலும் அதிலேயே கரைந்துவிடுவேன். அது என் இயல்பு. கார் ரேஸுக்குப் போனதால் ஓர் இடைவெளி ஏற்பட்டு இருக்கலாம். இதோ, அதே உற்சாகத்தோட நான் வந்துட்டேனே!

Thursday, August 26, 2010

"மக்கிப் போகலாம் மக்களுக்கு தரக் கூடாதா?"

வ்வொரு தானியத்திலும் கடவுளின் பெயர் எழுதப்பட்டு இருக்கிறது என்பார்கள்.
மத்திய அரசின் அலட்சியத்தால், அழுகி வீணாய்ப்போன கோடிக்கணக்கான தானியங்களில், அரசு மீதான குற்றச்சாட்டுகளும், பசியால் வாடும் மக்களின் கண்ணீர் ஓலங்களுமே எழுதப்பட்டு இருக்குமோ?

இந்தியா முழுக்க அரசின் உணவுக் கிடங்குகளில் தேங்கிக்கிடக்கும் உணவுப் பொருட்கள் ஒவ்வொரு வருடமும் மழையாலும் வெள்ளத்தாலும் சேதமாகி வீணாகிறது. இந்த உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என 2001-ல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் பி.யுசி.எல். அமைப்பின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் கவிதா ஸ்ரீவஸ்தவா. இப்போது வந்திருக்கும் அதன் தீர்ப்பில், 'போதிய பராமரிப்பு இன்றி வீணாகும் உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், விவசாயத் துறை அமைச்சர் சரத்பவாரோ, 'அப்படி எல்லாம் இலவசமாகத் தர முடியாது' என்று சொல்லி இருக்கிறார்.


2003-ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான கருத்தரங்கில், "48 மில்லியன் டன் உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான வசதி மட்டுமே நம்மிடம் உள்ளது. ஆனால், 2002-ம் ஆண்டு 63 மில்லியன் டன் உணவுப் பொருட்களைச் சேமிக்க வேண்டியிருந்தது. போதுமான சேமிப்பிடங்கள் இல்லாததால், சர்வதேசச் சந்தையில் விலையைக் குறைத்து, உணவு தானியங்களை விற்க வேண்டியிருந்தது" என்று தெரிவித்தது இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India). ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதும் அதே நிலைமைதான். 

அழுகிப்போகும் உணவுப் பொருட்களைக் குப்பையில் கொட்டுவோமே தவிர, ஏழைகளுக்கு வழங்க மாட்டோம் என அரசு பிடிவாதம் பிடிப்பது ஏன் என்பதுதான் எல்லோரது கேள்வியும். 

2010-ம் ஆண்டில் மட்டும் அரசின் கணக்குப்படி உத்திரப்பிரதேசம் காசியாபாத் மத்திய உணவுக் கழகக் கிடங்கில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் மழையின் காரணமாக வீணாகின. ஹரியானாவில் 3 லட்சம் கோதுமை மூட்டைகள் வெள்ளத்தால் பாழாகின. மகாராஷ்டிராவில் உள்ள கோண்டியா மாவட்டத்தில் 56,000 நெல் மூட்டைகள் மழையாலும் வெள்ளத்தாலும் நாசமாகின. இந்த அனைத்து இடங்களிலும் மழை, வெள்ளம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டும், அலட்சியம் காரணமாகவே இவ்வளவு நாசம். ஆக, ஆண்டுக்கு 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள், போதிய பராமரிப்பு இன்றியும், கிடங்குகளில் போதிய இடம் இல்லாமலும் வீணாகின்றன. ஆனால், இது மாதிரியான தகவல்கள் வெளிவருவது இது முதல் முறை அல்ல. சென்ற முறையும் இதுமாதிரியான புள்ளிவிவரங்கள் வெளியானபோது, ஒரு கமிட்டி அமைப்பதாக அறிவித்தார் சரத்பவார். பாவம், அதற்குப் பிறகு அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக கிரிக்கெட் போட்டிகளைக் கவனிப்பதிலேயே நேரம் செலவிட்டதால், இதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போய்விட்டது.

பி.யு.சி.எல்லின் தமிழகத் தலைவரான வழக்கறிஞர் வி.சுரேஷி "இங்கு விளைவதை அழுகவிட்டு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது அரசு. இதற்குக் காரணம், உலக வர்த்தக மையத்தின் (WTO) நிர்பந்தம். மேலும், வீணாகும் உணவுப் பொருட்களை ஏன் மத்திய அரசு ஏழைகளுக்கு விநியோகிக்க மறுக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில், வறுமையால் வாடுபவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட வேண்டும். அப்போதுதான், இந்தியா 'வளர்ச்சி' அடைந்துவிட்டது என்று பொய்யான பிம்பத்தைக் காட்ட முடியும். 

இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் எத்தனை சதவிகித மக்கள் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதற்காக, மத்திய அரசே மூன்று கமிட்டிகளை அமைத்தது. சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியின்படி 38.4% பேரும், என்.சி.சக்சேனா கமிட்டியின்படி 53% பேரும், அர்ஜுன்சென்குப்தா கமிட்டியின்படி 60% பேரும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளதாக சொல்லப்பட்டது. அரசின் கமிட்டிகளிலேயே இவ்வளவு புள்ளிவிவர முரண்பாடுகள்.
கடந்த கால ஆட்சிகளைவிட தங்கள் ஆட்சிதான் பொற்கால ஆட்சி என்று 'நிரூபிப்பதற்காக'ச் செய்யப்படும் தகவல் தகிடுதத்தங்கள்தான் இவை. மேலும், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களைக் குறைத்துக்காட்டினால், பட்ஜெட்டில் அவர்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கத் தேவை இல்லை. இப்படி ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பதாக நினைத்துக்கொண்டு, ஏழைகளின் வயிற்றில்தான் அடிக்கிறது மத்திய அரசு" என்கிறார் சுரேஷ். 

உலகம் முழுவதும் ஊட்டச் சத்து உணவு கிடைக்காத 102 கோடி மக்களில், ஏறத்தாழ 50 சதவிகிதத்தினர் இந்தியாவில்தான் இருக்கின்றனர் என்கிறது ஐ.நா-வின் உலக உணவுத் திட்டத்தின் (WFP) அறிக்கை. இந்தியாவில் உள்ள 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளில், 50 சதவிகிதம் பேரும்... கர்ப்பிணித் தாய்மார்களில் 90 சதவிகிதமும், சத்துக் குறைவாலும் ரத்த சோகையாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

"மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழகத்தில் பொது விநியோகம் சிறப்பாக இருக்கிறது. ஆனால், ஊட்டச் சத்து உணவு என்று பார்த்தால் ஜார்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலங்களின் தரத்தில்தான் தமிழகமும் இருக்கிறது. 'உணவுப் பாதுகாப்பு' என்பதில் முக்கியமான மூன்று அம்சங்கள் உண்டு. 

1. அனைவருக்கும் உணவு வழங்குதல்
2. வழங்கக்கூடிய உணவு சத்துள்ளதா என்று உறுதிசெய்தல் 
3. அரசிடம் இருந்து உணவுப் பொருட்களைப் பெறுவதைத் தங்கள் வாழ்வாதார உரிமையாகக் குடிமக்களை உணரவைத்தல்.

'அரசு ஏதோ நமக்குப் பிச்சை போடுகிறது' என்கிற உணர்வைக் குடிமக்களிடம் உருவாக்கிவிடக் கூடாது. அதேபோல், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தும் வகையிலான தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதும் ஓர் அரசின் கடமை. ஆனால், நம் இந்திய அரசோ உள்நாட்டுத் தொழில் வாய்ப்புகளை அழிக்கிறது. பின், பட்டினியால் வாடுபவர்களுக்கு உணவு அளிக்காமல் கொல்கிறது. உணவை விளைவிக்கும் விவசாயியே பட்டினியால் தற்கொலை செய்வதைவிடவும் வேறு கொடுமை உண்டா?" என்று கேட்கிறார் சுரேஷ்.

'ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்பது நம் ஊர் பழமொழி. ஆனால், எவ்வளவு பழிச்சொல் வந்தாலும் உணவுப் பொருட்களை வீணடிப்போமே தவிர, பசியால் வாடும் மக்களுக்கு விநியோகிக்க மாட்டோம் என்பது மத்திய அரசின் 'தாராள'மய மொழி!



Post-Doctoral Position in Mechanics of Brain and Eye Development at Washington University in St. Louis

An opening is available immediately for a postdoctoral research associate in the Department of Biomedical Engineering at Washington University in St. Louis.  The successful candidate will study the mechanics of early brain and eye development as part of a new NIH-funded project involving faculty in Biomedical Engineering, Mechanical Engineering, and the Washington University School of Medicine. 
 
The goal of this project is to determine the physical mechanisms that drive and regulate morphogenesis of the brain and eye in the early embryo. The research involves computational (finite element) modeling and laboratory experiments on chick embryos. The models include large deformation and growth of soft tissue. The experimental methods include tissue culture, optical coherence tomography, fluorescence staining, microdissection, microindentation, and cytoskeletal perturbation. 
 
Applicants must have a Ph.D. or equivalent in biomedical engineering, mechanical engineering, or a related field. A fundamental knowledge of solid mechanics and experience with finite-element modeling, as well as biological laboratory experimentation, are highly desirable. The appointment is anticipated to be at least two years duration, and salary will be commensurate with background and experience. 
 
Please email CV, a statement of research interests, and the names and e-mail addresses of at least three references to Professor Larry Taber (lat@wustl.edu). Additional information about our lab can be found at http://users.seas.wustl.edu/lat/

Washington University is an equal opportunity/equal access/affirmative action institution.
 

Wednesday, August 25, 2010

பிரபாகரன் இறந்தது வைகோக்கு தெரியும் - சொல்கிறார் கே.பி

விடுதலைப் புலிகளின் ஆயுத யுத்தம் நடக்கிறதோ இல்லையோ... அவர்களை முன்வைத்து காகித யுத்தம் அதிகமாகவே நடக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதலைப் புலிகளின் அனைத்து உலக செய்திப் பொறுப்பாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாபன் கொடுத்து வரும் பேட்டிகள் உலகத் தமிழர்கள் மத்தியில் அதிக சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன! 'இந்திய அரசு முன்மொழிந்த போர் நிறுத்தத்தைத் தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக வைகோவும் நெடுமாறனும் தடுத்துவிட்டார்கள்' என்று பகிரங்கமாகப் பேட்டி அளித்துள்ளார் கே.பி. 

இதோ  வைகோவின் பேட்டி : 

''கே.பி-யின் பேட்டி படித்தீர்களா?''

''இலங்கை அரசாங்கத்தின், ராணுவத் தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கே.பி. அளித்துள்ள பேட்டியைப் படித்தபோது, என்னைப்போலவே உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் கொதித்துப்போய் இருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தின் உலகத் தொடர்புப் பொறுப்பாளராக இருந்து, தலைவர் பிரபாகரனுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை காரணமாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்டவர்தான் இந்த கே.பி. இறுதிப் போர் நடந்த காலத்தில் அவர் எதிரிகளின் கையாளாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே, மீண்டும் அனைத்து உலகப் பொறுப்பாளர் பதவியை தலைவர் வழங்கினார். அதுவும் காஸ்ட்ரோவுக்கு கீழே இருந்து செயல்படவே அனுமதிக்கப்பட்டார். கே.பி. இன்று சொல்வது எல்லாம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, தன் உயிரைக் காப்பாற்ற உதிர்க்கும் தந்திரம். ஒரு கொத்தடிமையிடம் இருந்து உண்மையை எதிர்பார்க்க முடியாது!''

''மத்திய காங்கிரஸ் அரசு, ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தயாரித்ததாகவும் அதை நீங்கள் தடுத்துவிட்டதாகவும் சொல்கிறாரே கே.பி.?''

''போரை நடத்திய காங்கிரஸ் அரசாங்கமே போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டதாகச் சொல்வது கடைந்தெடுத்த பொய். இலங்கை ராணுவத்துக்கு காங்கிரஸ் அரசாங்கம் எந்த உதவியும் செய்யக் கூடாது என்று 16 முறை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து மன்றாடியவன் நான். அதையும் மீறி ராடார் கொடுத்தார்கள், ஆயுதங்கள் கொடுத்தார்கள், உளவு பார்த்து சொன்னார்கள். எல்லா உதவிகளும் செய்தார்கள். ஒரு முறையாவது மன்மோகன் சிங்கோ, சோனியா காந்தியோ, 'போரை நிறுத்துங்கள்' என்று வெளிப்படையாகச் சொன்னது உண்டா? உலக நாடுகள் எல்லாம் சொன்ன பிறகும் ஊமையாகத்தானே இந்த இரண்டு பேரும் இருந்தார்கள்.

முதல்வர் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், 'போர் நிறுத்தத்தை நீங்கள் வலியுறுத்துவீர்களா?' என்று கேட்டபோது, 'அது நமது வேலை இல்லை' என்றுதானே சொன்னார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து போர் நிறுத்தத் தீர்மானம் போட்டு அனுப்பிய மறுநாள், டெல்லிக்கு ராஜபக்ஷே வந்திருந்தார். மன்மோகனைச் சந்தித்தார். வெளியே வந்தவரை நிருபர்கள் கேட்டார்கள்... 'போர் நிறுத்தம் பற்றி பேசவில்லை. புலிகளை அழித்துவிட்டுத்தான் மறு வேலை' என்று கொக்கரித்தார் ராஜபக்ஷே. 'போர் நிறுத்தம் செய், அப்பாவிகள் மீது குண்டு வீசாதே' என்று வெளிப்படையாகச் சொல்லாத காங்கிரஸ் அரசாங்கம், ரகசியமாக இந்த வேலையைப் பார்த்தது என்று கே.பி. புதிதாகப் பூ சுற்றுகிறாரா?

'போரை நடத்த பசில் ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகியோரை நான் அனுப்புகிறேன். நீங்கள், எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், விஜய்சிங் ஆகியோரைத் தாருங்கள்' என்று ஒப்பந்தம் போட்டது உண்டா இல்லையா? கொழும்பில் இருந்து அவர்கள் மூவரும் டெல்லிக்கு ஐந்து முறை வந்தார்கள். இவர்கள் மூவரும் கொழும்புக்கு மூன்று முறை போனார்கள். இவர்களது நோக்கம் என்ன? சம்பந்தம் பேசப் போனார்களா? போரை எப்படி நடத்தலாம் என்றுதான் பேசப் போனார்கள். தினம் தினம் பேசி, வாரம்தோறும் எத்தனைத் தமிழன் செத்தான் என்று கணக்கெடுத்தவர்கள் போரை நிறுத்தத் துடித்ததாக சொல்வது போலித்தனம்.

உலகத்தின் முன்னால் ராஜபக்ஷேவுக்குப் பக்கத்தில் மன்மோகன் சிங்குக்கும் ஒரு கூண்டு தயாராகிக்கொண்டு இருப்பதைத் தெரிந்த பின்னால், 'நாங்கள் ஓர் ஒப்பந்தம் போடத் திட்டமிட்டோம். வைகோ தடுத்துவிட்டான்' என்று கதை கட்டுகிறார்கள்!''

''விடுதலைப் புலிகளின் தொடர்பாளர் நடேசனிடம், 'போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு நற்பெயர் ஏற்பட்டுவிடும்' என்று சொல்லி நீங்கள் தடுத்தீர்களா? கே.பி குறிப்பிடும் இந்த சம்பவம் உண்மையா?''

''தமிழீழ விடுதலையை என் உயிருக்கும் மேலாக நேசிப்பவன் நான். விடுதலைப் புலிகளை என்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு, உள்நோக்கத்துக்கு நான் எந்தக் காலத்திலும் பயன்படுத்தியவன் அல்ல. என்னுடைய அரசியல் எதிரிகளும்கூட இதை ஏற்றுக் கொள்வார்கள். காயம்பட்ட புலிப் போராளிகள் 37 பேரை ஒன்றரை ஆண்டு காலம் நானும் என் தம்பியும் பாதுகாத்துக் காப்பாற்றினோம். இதனாலேயே ஓர் ஆண்டு காலம் என் தம்பி தடா கைதியாக இருந்தான். போர்க் களத்தில் உயிரைத் துச்சமென மதித்துச் செயல்படும் புலிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை எப்போதும் செய்தேன். ஆனால், எந்தக் காலக்கட்டத்திலும் புலிகளிடம், இதைச் செய்யுங்கள் அதைச் செய்யுங்கள் என்று நான் சொன்னதே இல்லை.
'போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. தலைவர் பிரபாகரனின் உயிருக்கே ஆபத்து' என்று எனக்கு தொலைபேசித் தகவல் வந்தபோது, 'இந்தத் தகவலை முதல்வர் கலைஞரின் கவனத்துக்கும் கொண்டு போய்விட்டோம் அண்ணா' என்று சொன்னார்கள். 'கலைஞரிடம் சொன்னதுதான் சரி. இன்னும் முக்கியமானவர்களை அவரிடம் பேசச் சொல்லுங்கள்' என்றுதான் நான் சொன்னேன். என்ன செய்தாவது தாக்குதல் நின்றால் போதும் என்று நினைத்த என்னை, ராஜபக்ஷேவின் ரத்தச் சமையலைச் சாப்பிட்டு உயிர் வாழும் கே.பி-யா சந்தேகப்படுவது? கேவலம்!''

''நடேசன், அந்தக் காலகட்டத்தில் உங்களிடம் பேசினாரா?''

''கே.பி-யும், சில உளவு அதிகாரிகளும் ஒரு நாடகத்தை ஜோடிக்கிறார்கள். 'ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டுச் சரணடையத் தயார். தமிழீழ லட்சியத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வகையில் போராடத் தயார்' என்று புலிகள் எழுதிக் கொடுத்தால், போர் நிறுத்தம் செய்யலாம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சொன்னதாகவும்... அதை நடேசன்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-வான மகேந்திரனிடம் சொன்னதாகவும்... இதை என்னிடமும், நெடுமாறனிடமும் கூற வேண்டாம் என்று சொன்னதாகவும், அதை மீறி மகேந்திரன் என்னிடம் சொல்லிவிட்டதாகவும் போகிறது கே.பி-யின் திரைக்கதை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழீழ கொள்கையை ஏற்றுக் கொள்ளாதது. அக்கட்சியின் எம்.எல்.ஏ-விடம் நடேசன் எப்படி பேசியிருக்க முடியும்?

தொடக்கக் காலத்தில், பாலசிங்கம், அடுத்து தமிழ்ச்செல்வன் ஆகியோர் என்னிடம் தொடர்ந்து பேசுவார்கள். கடைசிக் கட்டத்தில் நடேசன் தொடர்பில் இருந்தார். 2009-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடேசன் என்னிடம் பேசினார். போர் கடுமையாக நடந்து வந்த சூழல் அது. அவராகவே அரசியல் நிலைமை குறித்துக் கேட்டார். 'எங்களுக்குத் தொகுதிகள் குறைவாகக் கிடைக்கும் நிலை இருப்பதால், நாங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுக்கலாம் என நினைக்கிறோம். அதற்காக அணி மாற முடியாது' என்று சொன்னேன். 'உங்களுக்கு சிவகாசி கிடைத்துவிட்டதா?' என்றார். 'ஆம்' என்றேன். 'நீங்கள் ஒருவர் போனால், 500 பேர் போவதற்கு சமம்' என்றார். மீண்டும் இரவு 7.30-க்கு பேசினார். 'நீங்கள் நிச்சயம் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று தலைவர் விரும்புகிறார். உங்களிடம் சொல்லச் சொன்னார்' என்றார். 'சரி' என்று சொன்னேன். 

மே 10-ம் தேதி இரவில், கடற்படைத் தளபதி சூசை என்னிடம் பேசினார். போர்ச் சூழல் குறித்துப் பேசிய சூசையிடம், 'நீங்களும் தலைவரும் பத்திரமாக இருக்க வேண்டும்' என்றேன். 'இத்தனை மக்கள் சாகிறார்கள். என்னையும் தலைவரையும் பத்திரமாக இருக்கச் சொல்கிறீர்களே' என்று கோபித்தார் சூசை. 'நான் எங்களது மனக் கஷ்டங்களைச் சொன்னேன்' என்றேன். இன்னும் நான்கு நாளில் கோரமான தாக்குதல் நடக்கப்போவதாக நான் சாத்தூர் கூட்டத்தில் பகிரங்கமாகவே தெரிவித்தேன்.

மே 13-ம் தேதி வாக்குப் பதிவு அன்று காலை 10.15 மணிக்கு நடேசன் பேசினார். 'நீங்க சிவகாசியில் ஜெயிச்சிடுவீங்களா?' என்று கேட்டார். 'கோடிக்கணக்கில் எனக்கு எதிராகப் பணம் செலவழிச்சிருக்காங்க. கொஞ்ச ஓட்டு வித்தியாசத்திலாவது ஜெயிச்சிடுவேன்' என்றதோடு, 'எனக்கு உங்களைப்பற்றியும் தலைவரைப்பற்றியும் போர்க் களத்தில் இருக்கும் மக்களைப்பற்றியும்தான் கவலை' என்று சொன்னேன். 'நாங்கள் வெல்வோம் அண்ணா' என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார் நடேசன். இதுதான் அவர் என்னிடம் சொன்ன கடைசி வார்த்தை. வெள்ளைக் கொடி ஏந்திப் போன நடேசன், உலகம் விழித்திருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். போர் நிறுத்தத்தை வலியுறுத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் இதைக் கண்டித்தாரா?

'நாங்கள் ஆயுதத்தைக் மௌனிக்கச் செய்துவிட்டோம்' என்று விடுதலைப் புலிகள் பகிரங்கமாகவே அறிவித்த பிறகுதான் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டார்கள் என்பதாவது கே.பி-க்குத் தெரியுமா?

கே.பி-யின் உடம்பில் தமிழீழ ரத்தம் ஓடுமானால், சிங்களவனால் பலாத்காரம் செய்த தமிழ்ப் பெண்களுக்கு அவர் சொல்லும் தீர்ப்பு என்ன? கண்ணை மூடிச் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞனுக்கு அவர் சொல்லும் காரணம் என்ன? இனத்தைக் கருவறுத்த கூட்டத்தின் கைப்பாவை ஒன்று, ராஜபக்ஷேவின் நாடகத்தில் நடிக்கிறது. போரை நிறுத்த இந்தியா முயற்சித்தது, இலங்கையும் சம்மதித்தது, ஆனால் வைகோ, நெடுமாறன் பேச்சைக் கேட்டு புலிகள் மறுத்ததால், வேறு வழி இல்லாமல் நாங்களும் போரைத் தொடர வேண்டியதாயிற்று என்று உலகத்தின் முன்னால் ஏமாற்ற நினைக்கிறார்கள்!''

''கே.பி-யைத் தலைவராகக் காட்டி ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறதே?''

''அதைச் சில ஆங்கில ஊடகங்களும், இனத் துரோகிகளும்தான் செய்கிறார்கள். உலகத் தமிழர் மத்தியில் கே.பி-யின் முகத்திரை 2009 மே இறுதியிலேயே கிழிந்துவிட்டது. 'தலைவர் இருக்கிறார்' என்று முதலிலும், 'அவர் இறந்து விட்டார்' என்று மூன்று நாட்கள் கழித்தும் அவர் சொல்லும்போதே டயலாக் ரைட்டர் பின்னால் இருக்கிறார் என்பதை உண்மைத் தமிழர்கள் உணர்ந்துவிட்டார்கள்.

இயேசுநாதரை எதிரிகளுக்குக் காட்டிக் கொடுத்த யூதாஸ்கூட 30 வெள்ளிக் காசுகளையும் வீசி எறிந்துவிட்டு உண்மையை உணர்ந்து தற்கொலை செய்துகொண்டான். உண்மையை உணர்ந்தாலும், யூதாஸை மன்னிக்க உலகம் தயாராக இல்லை. ஆனால், காட்டிக் கொடுத்தது மட்டும் இல்லாமல், தன் துரோகத்தை மறைக்க இன்னும் பல பொய்களை உதிர்க்கும் கே.பி. போன்றவர்களுக்கு மன்னிப்பே கிடையாது!''

''பிரபாகரன் இறந்துவிட்டார் என்று தெரிய வந்ததும் கதவை மூடிக் கொண்டு வைகோ கதறினார் என்றும்... ஆனால் அவரே வெளியில் வந்து பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொல்கிறார் என்று குற்றம் சாட்டுகிறாரே கே.பி?''

''பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற தகவல் கிடைத் ததும் நான் தனியறையில் கண்ணீர் விட்டதும், கதறியதும், அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் தவித்ததும் உண்மை. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் இது இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட வதந்தி, சதி என்று 24 மணிநேரத்தில் உறுதியான தகவல் கிடைத்ததும் தலைவர் இருக்கிறார், நலமுடன் இருக்கிறார் என்று சொன்னோம். இதில் என்ன குற்றம் கண்டுபிடிக்கிறார் கே.பி.?

எதிர் கேள்வியுடன் முடிக்கிறார் வைகோ!

விகடன்  


Tuesday, August 24, 2010

மதுரை , அழகிரியா (அல்லது) ஜெயலலிதாவா!!!!!

ம்மாவைப் பார்க்க திருச்சியில் திரண்ட கூட்டம் 'அவதார்' படத்தின் கிராஃபிக்ஸ் அல்ல! இந்த ஒரு வரிக்காகவே முரசொலி நம்மை முழுப் பக்கத்துக்குத் திட்டும். பார்ப்பன கேமராவோ, சூத்திர கேமராவோ மலைக் கோட்டை நகரில் கூடிய கூட்டத்தைப் பார்த்து மலைத்தே போயிருக்கும்.

கோவையில், ஜூலை 13-ம் தேதி மிகச் சாதாரணமாக ஆர்ப்பாட்டம் என்ற வகையில்தான் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், கோவை சுற்று வட்டார மாவட்டங்களை வளைத்து முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையனும் பொள்ளாச்சி ஜெயராமனும் திரட்டியதால் கோவையே அன்றைய தினம் திணறியது. குளவிக் கூட்டில் கை வைத்ததுபோல நாலாபுறம் இருந்தும் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டதைப் பார்த்து ஆச்சர்யமானார் ஜெயலலிதா. அவரைவிட ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தவர் முதல்வர் கருணாநிதி தான்.


போட்டிக் கூட்டம் என்று சொல்லாமல், ஆனால் அதே ஊரில், ஜெயலலிதா பேசிய அதே வ.உ.சி. மைதானத்தில் தி.மு.க-வும் திரண்டது. அதில் பேசியவர்கள் அனைவரும் இது 'போட்டிக் கூட்டம் அல்ல' என்றே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். என்றும் இல்லாத வகையில் ஜெயலலிதாவை நீ, வா, போ என்று ஒருமையில் அழைக்க ஆரம்பித்தார் கருணாநிதி. 'ஜெயலலிதாவைவிட வயதில் மூத்தவன் நான். எனவே, இப்படி அழைக்க எனக்கு உரிமை உண்டு' என்றும் சொன்னார். 'எங்களுக்குத் திரண்ட கூட்டத்தைப் பார்த்து ஆத்திரப்பட்டுதான் கருணாநிதி இப்படிப் பேசினார்' என்று அம்மா கட்சிக்காரர்கள் கோபத்தைத் தூண்டினார்கள்.

'அடுத்ததாக, திருச்சியில் கூடுவோம்' என்று அறிவித்தார் ஜெயலலிதா. 'கோவை கூட்டத்தை வைத்துதான் திருச்சியையும் கணிப்பார்கள். இங்கே கூட்டம் குறைந்தால் கோவையோடு அவுட் என்பார்கள். எனவே, அதைவிட அதிக கூட்டம் கூட்டியாக வேண்டும்' என்று ஜெயலலிதா கட்டளையிட்டார். ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயகுமார், பொள்ளாச்சி ஜெயராமனுடன் மாவட்டச் செயலாளர் மனோகரன் ஆகிய ஐந்து பேர் பரபரப்பானார்கள்.

தயாரிக்கப்பட்ட பேச்சை அப்படியே வாசித்துவிட்டுப் போகிற ஜெயலலிதாவே, மனம்விட்டுச் சில வார்த்தைகளை உதிர்த்தார்.

"நான் 28 ஆண்டு காலமாக அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளேன். தமிழ்நாட்டில் நான் போகாத ஊர் இல்லை. பேசாத கூட்டம் இல்லை. என் வாழ்நாளில் இதுபோன்ற கூட்டத்தை நான் கண்டது இல்லை. ஏறத்தாழ நான்கரை கிலோ மீட்டர் தொலைவுக்கு மக்கள் வெள்ளத்தில் மிதந்துகொண்டே மேடைக்கு வந்தேன்"- சொல்லும்போதே முகம் சிவந்தது ஜெயலலிதாவுக்கு.

ஆர்ப்பாட்ட, பொதுக் கூட்டம் நடந்த இடம் 'ஜி' கார்னர். அ.தி.மு.க. தொண்டர்களால் அது 'ஜெ' கார்னர் ஆனது. மூன்று லட்சம் பேர் திருச்சிக்குள் நுழைந்து இருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். "15 வருஷமா டி.வி. மீடியாவில் இருக்கிற நான் பார்த்த பெரிய பொதுக் கூட்டம் இதுதான்" என்கிறார் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ஒருவர். 'அம்மா அலை ஆரம்பிச்சிருச்சு!' என்பதுதான் அ.தி.மு.க-வினர் சொல்லிக்கொள்ளும் சந்தோஷ வார்த்தைகள். பொது வான நேரத்தில் இப்படிக் கூடினால் ஆளும் கட்சி இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாது. ஆனால், தேர்தல் நெருங்கி வரும் காலம் என்பதால் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

ஜெயலலிதாவைப் பார்க்கக் கூட்டம் கூடுகிறது, மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் திருச்சிக்கு வருவதால், அவரது பேச்சைக் கேட்கக் கூடிய கூட்டம் இது, அ.தி.மு.க-வில் இருந்து முக்கியத் தலைவர்கள் முகாம் மாறி வருவதால் கட்சி தேய்ந்து கொண்டு இருப்பதை மறைக்க எல்லா மாவட்டங்களில் இருந்தும் ஆட்களை அழைத்து வந்து காட்டுகிறார் கள், தங்கள் தலையைக் காப்பாற்றிக்கொள்ள முன்னாள் மாஜிக்கள் பணம் செலவழித்து கூட்டம் கூட்டுகிறார்கள், ஒவ்வொரு பொதுக் கூட்டம் நடத்துவதற்கும் 10 கோடி வரை செலவழிக்கப்படுகிறது, என்றெல்லாம் காரணங்கள் வாசிக்கப்படுகின்றன.

அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தபோது நடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது கருணாநிதி போகும் இடம் எல்லாம் இப்படித்தான் கூட்டம் கூடியது. அன்றைய ஆளும் கட்சிக்கு எதிரான எழுச்சியாகத்தான் அப்போது அது கணிக்கப்பட்டது. இன்று கூடும் கூட்டத்துக்கும் அதுவே நோக்க மாக இருக்கிறது. வைகோ ஊர் ஊராக நடத்தும் கொடி அணிவகுப்புக்கு கிராமங்கள் தோறும் கூடும் கூட்டமும், இரண்டு வாரங்களுக்கு முன்னால் கோவில்பட்டியில் இரவு 10.30-க்குத் தொடங்கி 12.45 வரைக்கும் அவருடைய பேச்சுக்காகப் பல்லாயிரக் கணக்கானவர்கள் கூடியிருந்த நிகழ்வும், விஜயகாந்த் கலந்துகொள்ளாமல் தே.மு.தி.க சார்பில் பல்வேறு ஊர்களில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு வரும் ஆட்களின் எண்ணிக்கையையும் வைத்துப் பார்த்தால், ஆளும் கட்சிக்கு எதிர் மனோபாவமாகவே இதை கணிக்கத் தோன்றுகிறது.


தலைவர்களுக்கு கூட்டங்கள் உற்சாகத்தைக் கொடுப்பது மாதிரியே மயக்கத்தையும் கொடுக்கும். 'ஆஹா! என்னா கூட்டம்... இனி கருணாநிதி அவ்வளவுதான்' என்று ஜெயலலிதா நினைத்தால் ஏமாந்துபோவார். கூட்டம் ஓ.கே, கூட்டணி யாருடன் என்று அவர் சிந்திப்பதில்தான் அனைத்துமே அடங்கி இருக்கிறது. கோவை, திருச்சியைப் பார்த்து 'தனித்தே' நின்று ஜெயித்துவிடலாம் என்று அவரே நினைக்கக் கூடும். அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கைகொண்டவர் அவர். ஆனால், அவர் அணியில் வைத்திருக்கும் கட்சிகள் தேர்தலைத் துணிந்து சந்திப்பதற்குப் போதாது.

மேலும், கோவையில் கூடியிருக்கலாம், திருச்சியில் திணறியிருக்கலாம், ஜெயலலிதாவுக்கான உண்மையான ஆசிட் டெஸ்ட் மதுரைதான். 'அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது' என்று சொன்ன மு.க.அழகிரி இருக்கிறார். எந்த மதுரை மண் அ.தி.மு.க-வின் வெற்றிக்கு அடித்தளம் இட்டதோ, அதே இடத்தில் நடந்த அத்தனை இடைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க. மரண தோல்வி அடைந்திருக்கிறது. எனவே, மதுரை கூட்டம் ஜெயலலிதாவுக்கு முக்கியத் துவம் வாய்ந்ததாகவே இருக்கும்.

அ.தி.மு.க. தொண்டனை உற்சாகப்படவைத்தது கோவை... எழுந்து உணர்ச்சிவசப்படுத்தியது திருச்சி... இது பழைய செல்வாக்கு படைத்த அ.தி.மு.க-தான் என்பதை நிரூபிக்குமா மதுரை?




Research Associate position on Multiscale Modelling of Thermal Barrier Coatings (Cardiff University)

A full time postdoctoral research associate position is available at Cardiff University under the supervision of Professor Bhushan L. Karihaloo and Dr Kulasegaram and Zhu, funded by FP7. http://www.engin.cf.ac.uk/research/resInstitute.asp?InstNo=13
 
The research aims to develop novel metal-ceramic materials for aerospace and automotive applications. 

Objectives: 

- To develop multi-scale computational models for alumnia-copper and alumina-Ni-Al inter-metallic functionally graded composites 

- To investigate the thermo-mechanical behaviour of the above composites under thermal cyclic loading, including the determination of residual stresses
 
Fixed term for 2 years 

£29853 0 £35646 per annum. 

Inquiries to be directed to Dr Sivakumar Kulasegaram: KulasegaramS@cf.ac.uk
 

பொய்களைத் திணிக்காதீர்கள் - ஞானியின் "ஒ" பக்கங்கள் - கல்கி 21.8.2010

அண்மையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி உமாசங்கரை கருணாநிதி அரசு தற்காலிக நீக்கம் செய்து அவர் மீது சாதிச் சான்றிதழ், சொத்துக் குவிப்புக் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதை பலரும் கண்டித்தார்கள். ஜெயலலிதாவும் கண்டித்தார். தன் ஆட்சியின் சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிக் கொண்டு வந்த உமாசங்கரை ஜெயலலிதா நேர்மையானவர் என்று ஒப்புக் கொள்வது தன் ஆட்சியின் குற்றத்துக்கே ஒப்புதல் வாக்குமூலம் தருவதற்கு சமம்தான்.

ஜெயலலிதாவின் கண்டனத்துக்கு பதில் சொன்ன தமிழக அரசு உமாசங்கரே எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு பதில் சொல்லவில்லை.. தன் மீதான அரசு நடவடிக்கைகளுக்கு தடை கோரி அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். எனவே அந்த விவரங்களுக்குள் நாம் போக வேண்டியதில்லை.

அதே சமயம் உமாசங்கர் தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையத்திடம்  தமிழக முதலமைச்சர், அவரது குடும்பத்தினர் ஆகியோரிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு கேட்டு புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில் அவர் தெரிவித்திருக்கும் விஷயங்கள் பொய்யாக இருந்தால் அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது (தன் மீது தானே!) நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
உமாசங்கர் சொல்லியிருக்கும் விஷயங்களின் அடிப்படையில் கீழ்க் கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதலமைச்சருக்கு இருக்கிறது.

கேள்வி 1: .தி.மு.க ஆட்சியின்போது நடந்த சுடுகாட்டுக் கூரை ஊழலில் உமாசங்கர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிட்டது. ஏன் இதுவரை அந்த ஊழலில் சிக்கியவர்கள் மீது தி.மு.க அரசு தொடர் நடவடிக்கை எடுக்கவில்லை ?

கேள்வி 2: 1996ல் தி.மு.க ஆட்சியில் உமாசங்கர் ஜாய்ண்ட் விஜிலன்ஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் பல ஊழல்கள் பற்றி உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி அறிக்கைகள் கொடுத்திருக்கிறார்
1.) சவுத் இந்தியா ஷிப்பிங் கார்ப்பரேஷன் பங்குகள் விற்பனையில் 200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட விவகாரம்
2.) கிரானைட் சுரங்க குத்தகைக்கு கொடுத்ததில் 1000 கோடி ரூபாய் இழப்பு
3.) தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரிய மனைகளையும் வீடுகளையும் கற்பனையான பெயர்களில் ஒதுக்கீடு செய்த விவகாரம்
4.)கோவை மருத்துவக் கல்லூரியின் 20 ஏக்கர் நிலத்தை மகளிர் குழதை நலம் என்ற போலி சாக்கில் தனியார் க்ளப்புகளுக்குக் கொடுத்த விவகாரம்
5.) மேகமலை வனப்பகுதியில் 7106 ஏக்கர் நிலத்தை ஒரு குடும்பத்துக்கு சட்ட விரோதமாக பட்டா போட்டுக் கொடுத்தது. இந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் என்று முன்னாள் தலைமைச்செயலாளர் உடபட பல ஐ..எஸ் அதிகாரிகள் மீது உமாசங்கர் அறிக்கை கொடுத்திருக்கிறார். ஒன்றின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் ?

கேள்வி 3: மறுபடியும் 2006ல் தி.மு.க ஆட்சியில் உமாசங்கர் தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அப்போது அவரை தன் ஆழ்வார்பேட்டை அலுவலகத்துக்கு வந்து சந்திக்கும்படி முதலமைச்சரின் துணைவி ராஜாத்தி அம்மாள் தெரிவித்ததாகவும், இரு முறை சந்தித்ததாகவும் உமாசங்கர் தெரிவிக்கிறார். அப்போது மீனவர்களுக்கான 45 ஆயிரம் வயர்லெஸ் செட்டுகள் வழங்கும் ஒப்பந்தத்தை தான் சொல்பவர்களுக்குத் தருமாறு ராஜாத்தி அம்மாள் வற்புறுத்தியதாகவும் தான் அதற்கு உடன்பட மறுத்துவிட்டதாகவும் உமாசங்கர் கூறியிருக்கிறார். அரசு அதிகாரிகள் யார் யாரை சந்திக்கலாம், எங்கே சந்திக்கலாம் என்று விதிகள் உண்டா? சந்திப்புகளுக்கு பதிவுகள் உண்டா? இந்த சந்திப்புகள் பற்றி அரசு கார் லாக் ஷீட்டுகளில் பதிவுகள் உண்டா? உளவுத்துறை, காவல் துறையிடம் தினசரி முதலமைச்சரை, அவரது நெருங்கிய உறவினர்களை அரசு அதிகாரிகளோ பிறரோ சந்திப்பது பற்றிய பதிவுகள் உண்டா? உமாசங்கர் - ராஜாத்தி அம்மாள் சந்திப்பு பற்றி அரசின் நிலை என்ன ?

கேள்வி 4: தமிழக அரசுக்கு சொந்தமான் எல்நெட்டின் தலைவராக உமாசங்கர் இருந்தபோது எல்நெட்டுக்கு சொந்தமான 700 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள ஈடிஎல் நிறுவனம் திடீரென்று வேறு தனியார் கைக்கு சட்டவிரோதமாக மாறியதை வெளிப்படுத்த உமாசங்கர் நடவடிக்கை எடுத்தபோது அவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டதாக சொல்லுகிறார். .டி.எல் நிறுவனம், எல்காட் கை விட்டுப் போனது எப்படி, ஏன், யாரால் என்பதை அரசு தெரிவிக்குமா?

கேள்வி 5: அடுத்தபடியாக 2008ல் அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷனைத் தொடங்கியபோது உமாசங்கரை அதன் நிர்வாக இயக்குநராக முதலமைச்சர் நியமித்தார். முன்னர் ஈஎல்டி முறைகேட்டில் தொடர்புடைய  ஐ..எஸ் அதிகாரி இங்கே தனக்கு மேலதிகாரியாக இருப்பதால், அவர் கீழ் தான் பணியாற்ற முடியாது என்று முதல்வரிடமே உமாசங்கர் சொன்னதாகக்க் கூறுகிறார். இந்த கோரிக்கையை ஏற்று, அந்த அதிகாரியை வேறு பொறுப்புக்கு மாற்றிவிட்டு உமாசங்கரை கேபிள் கார்ப்பரேஷன் பொறுப்பை முதல்வர் ஏற்கச் செய்ததாகவும் குறிப்பிடுகிறார். இது பற்றி அரசின் நிலை என்ன ?

கேள்வி 6: கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் பொறுப்பில் தான் இருந்தபோது, அரசுக்கு சொந்தமான கேபிள்களை வெட்டி நாசமாக்கி கிரிமினல் செயல்களில் ஈடுபட்டதற்காக தனியார் கேபிள் டி.வி அதிபர்களான மாறன் சகோதரர்கள், அமைச்சர்  பொங்கலூர் பழநிச்சாமி ஆகியோர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துக் கைது செய்யவேண்டுமென்று அரசுக்கு அறிக்கைகள் பல முறை அனுப்பியதாக உமாசங்கர் சொல்லியிருக்கிறார். அந்த அறிக்கைகள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ?

இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் யாரோ ஒரு அரசியல்வாதியால் எழுப்பப்படவில்லை. முப்பது வருடங்களாக அரசுப் பணியில் இருந்துவரும் ஓர் ஐ..எஸ் அதிகாரியால் எழுத்துப்பூர்வமாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன்பு  வைக்கப்பட்டிருக்கின்றன. இது மிகவும் கவலைக்குரிய , நம் ஆழ்ந்த அக்கறைக்குரிய விஷயம். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் அரசு மேலே எழுப்பப்பட்டிருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் விரிவான நேர்மையான பதில்களை மக்களுக்கு அளிப்பது அவசியம்.

மூடப்பட்ட அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை மறுபடியும் தொடங்குங்கள் என்று கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் அண்மையில் கோரினார்.அதற்கு பதில் அறிக்கை அளித்த முதலமைசர் , மூடினால்தானே மறுபடியும் திறப்பதற்கு என்று கேட்டார். அரசு கேபிள் டி.வி நிறுவனம் , அது அரசு நிறுவனம் என்பதால் அடக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சொன்னார். இதே அடக்கம் ஏன் அரசின் இதர நடவடிக்கைகளில் மட்டும் இல்லை என்பதை அவர்தான் விளக்கவேண்டும். தமிழில் அடக்கம் என்பதற்கு சமாதி என்றும் ஒரு அர்த்தம் உண்டு. முத்தமிழ் அறிஞர் என்பதால் சிலேடையாக சொல்லியிருக்கலாமோ என்னவோ...

அரசு கேபிள் டிவியிடம் மொத்தம் 50 ஆயிரம் இணைப்புகள் இருப்பதாகவும் சென்ற வாரம் முதலமைச்சர் தெரிவித்தார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை விட மோசமானது.   ‘தினமணிதினசரியின் பத்திரிகையாளர்  வி.அன்பழகன் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதே முதலமைச்சர் கீழ் இயங்கும் தமிழக அரசிடமிருந்து பெற்றிருக்கும் தகவல்கள் இதோ:

தஞ்சாவூர், கோவை, நெல்லை, வேலூர் ஆகிய நான்கு இடங்களில் அரசு கேபிள் டி.வி தொடங்கப்பட்டது. தஞ்சைக்கு ரூ 7.30 கோடி.கோவைக்கு: 6.78 கோடி. நெல்லைக்கு: ரூ 6.74 கோடி. வேலூருக்கு: ரூ 5.56 கோடி முதலீடுகள். இங்கெல்லாம் மாதாந்தர அலுவலக வாடகை: தஞ்சை- ரூ 57,730. கோவை: ரூ 38500. நெல்லை: ரூ 87358. நெல்லை: ரூ 42,450. நவம்பர் 10, 2009ல் இருந்த் நிலைப்படி, தஞ்சையில் எம்.எஸ்.ஓ எனப்படும் ஒரு சர்வீஸ் ஆபரேட்டர் கூட அரசு கேபிள் டிவியுடன் கிடையாது. தனி கேபிள் ஆபரேட்டர்கள் 32 பேர். மொத்த இணைப்புகள் : 7703. கோவையில் ஒரே ஒரு எம்.எஸ்.. ஆறு ஆபரேட்டர்கள். மொத்த இணைப்புகள் : 2300. நெல்லையில் எம்.எஸ்.ஓ இல்லை. மூன்று ஆபரேட்டர்கள். 351 இணைப்புகள். வேலூரில் எதுவும் இல்லை. ஆக மொத்தம் இணைப்புகள் வெறும் 10 ஆயிரத்து 354தான். எந்தக் காலத்திலும் 50 ஆயிரம் இணைப்புகள் அரசு கேபிள் டிவி வசம் இருந்ததே இல்லை. முதலமைச்சர் தெரிவித்த 50 ஆயிரம் என்பது முழுப் பொய் என்று அவருடைய அரசின் இன்னொரு துறையே நிரூபிக்கிறது.

இப்போதைய நிலை என்ன என்று அன்பழகன் துருவியதில் ஏப்ரலுக்குப் பின்னர் தஞ்சையில் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. சாதனங்களை சென்னை அலுவலகத்துக்கு அனுப்பியாயிற்று. நெல்லையிலும் எதுவுமில்லை. கோவையில் 3 ஆபரேட்டர்கள் . மொத்தம் வெறும் 600 இணைப்புகள். சென்ற வாரம் அரசு கேபிள் டி.வி நிறுவனத்திடம் இருக்கும் பனத்தை அரசுக்குத் திருப்பி அனுப்பும்படி உத்தரவு போயிற்றாம். சுமார் நூறு கோடி ரூபாய் வரை இதுவரையில் செலவழித்திருக்கும் நிறுவனம் 19 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுத்திருக்கிறது.

முதல்வர் அவர்களே, உண்மைகளைச் சொல்ல விரும்பாவிட்டால், மௌனமாக இருங்கள். நாங்கள் புரிந்து கொள்கிறோம். தயவுசெய்து அரை உண்மைகளையும் முழுப் பொய்களையும் எங்கள் மீது திணிக்காதீர்கள்.

இந்த வார விருதுகள்

தமிழ் பண்பாட்டுக்கான கலைஞர் விருது முரசொலி இதழுக்கும் அதன் நிறுவனர் கலைஞர் கருணாநிதிக்கும் வழங்கப்படுகிறது. சதிகாரி, சண்டாளி, சூழ்ச்சிக்காரி, மொட்டைச்சி, முண்டை முதலிய சொற்களை அறிக்கையிலும் கட்டுரையிலும் பயன்படுத்தி இளம் தலைமுறைக்கு வழக்கொழிந்துவரும் பண்பாட்டுக் கூறுகளை கற்பிக்கும் மாபெரும் பணிக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

தினசரி சுமார் 30 கோடி ரூபாய்க்கு மது குடிக்கும் தமிழர்கள் ஒரு நாள் குடிக்காமல் இருந்து துயரக்கடலில் மூழ்கி இறந்து விடக் கூடாது என்ற தாயுள்ளத்துடன் டாஸ்மாக் ஊழியர் வேலை நிறுத்தத்தை காவல் துறை உதவியுடன் முறியடித்ததற்காக , குடி காத்த கோமான் விருது முதல்வர் கலைஞருக்கு வழங்கப்படுகிறது.

இந்த வார சந்தேகம்

தொடர்ந்து தமிழகம் முழுவதும் மணிக்கணக்கில் மின்வெட்டு அன்றாட வாழ்க்கையை பாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் உயர் நீதி மன்றம், நேப்பியர் பாலம், அண்ணா மேம்பாலம் முதலியவற்றுக்கு லட்சக் கணக்கான ரூபாய் செலவில் மின் அலங்காரம் செய்யும் ஆட்சியை நீரோவின் வாரிசுகள் என்று அழைத்தால் குற்றமா ? இந்த சமயத்தில் இதையெல்லாம் செய்யவேண்டாம் என்று  அமைச்சரிடத்தில் சொல்லும் துணிவு ஒரு ஐ..எஸ் அதிகாரிக்குக் கூட இல்லையா?

இந்த வாரப் பூச்செண்டு:

விபத்து இழப்பீட்டுக்குக் கணக்கிடும்போது ,வீட்டு நிர்வாகம், இதர இல்லப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் வருமான மதிப்பை கணவர் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு என்று நிர்ணயித்திருக்கும் அபத்தமான மோட்டார் வாகன சட்டப்பிரிவை திருத்தவேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கங்குலி, சிங்வி ஆகியோருக்கு இ.வா.பூ.

ஞானியின் ஒ பக்கங்கள்  - கல்கி 21.8.2010

Monday, August 23, 2010

கிளிமாஞ்சாரோ சாதனை!

போர், அந்த மூன்று மனிதர்களின் உடல் உறுப்புகளை மட்டும்தான் சிதைத்தது. உள்ளத்தின் உறுதியை ஒன்றும் செய்ய முடியவில்லை! அமெரிக்காவைச் சேர்ந்த இந்த முன்னாள் ராணுவ வீரர்களின் சாதனையைக் கேட்டால் கண்ணீரும் வருகிறது; கம்பீரமாகவும் இருக்கிறது. 

ஆப்பிரிக்காவில் உள்ள மிகப் பெரிய மலை கிளிமாஞ்சாரோ. ('எந்திரன்' பாடல் கேட்டிருப்பீர்களே!) இதன் உயரம் 19 ஆயிரத்து 340 அடி. இது இமயமலை போன்று தொடர்ச்சியானது கிடையாது. எரிமலை வகையைச் சேர்ந்த இந்த மலையின் உச்சியை அடைவது மிகவும் கடினமானது. மிகவும் கரடு முரடான, ஆபத்தான பாதைகள், உயரம் செல்லச் செல்ல மாறும் வெப்ப நிலை போன்றவற்றால் ஆண்டுதோறும் மலையேறுபவர்களில் உயிர் இழப்பவர்களும் உண்டு. அந்த மலையின் உச்சியைத்தான் ஆறே நாளில் அடைந்துள்ளனர் கால்களை இழந்த இந்த ராணுவ வீரர்கள்.


நீல் டங்கன், டேன் நெவின்ஸ், கிரிக் பயூர் என்பது இவர்களின் பெயர்கள்!
ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் ஏற வேண்டும், எங்கு தங்க வேண்டும் என எல்லாவற்றையும் திட்டமிட்ட பிறகு, ஆகஸ்ட் 2-ம் தேதி இந்த குழுவினர் மலையேறத் தொடங்கினர். இவர்களுக்கு தான்சானியா நாட்டைச் சேர்ந்த குழுவினரும் உதவி புரிந்தனர். அந்த மலையில் ஏற ஆறேழு பாதைகள் உள்ளன. இதில் கொஞ்சம் எளிமையான 'ரோங்கை' பாதையைத் தேர்ந் தெடுத்தனர். முதல் நாள் எதிர்பார்த்தது போல மலையேறுதல் எளிதாக இருந்தது. ஒரே நாளில் 8,500 அடி உயரத்தை அடைந்தனர். கிட்டத்தட்ட 15 கிலோ எடைகொண்ட பொருட்களை சுமந்தபடி சென்றுள்ளனர். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் மலையேறுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கால்களில் வலி, செயற்கைக் கால் பொருத்தப்பட்ட இடத்தில் வீக்கம் என்று பிரச்னைகள் வந்தாலும் அவர்கள் மனம் தளரவில்லை. நிலை தடுமாறிக் கீழே விழுதல், சறுக்கி விழுதல், ஆங்காங்கே ஓய்வெடுத்து செயற்கை கால்களை சரிப்படுத்திக்கொள்ளுதல் என்று பயணம் தொடர்ந்தது.

கரடுமுரடான பாதையில் தொடர்ந்து பயணித்து, இரண்டாவது நாள் முடிவில் 11,800 அடி உயரத்துக்கு வந்தனர். இப்படி ஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி பயணம் தொடர்ந்தது. மேலே செல்லச் செல்ல பயணம் மிகக் கடினமானது. கிட்டத்தட்ட 19 ஆயிரம் அடி உயரத்தை நெருங்கியபோது, கிரிக்கின் செயற்கைக் கால் பனியில் இறுகிவிட்டது. அதனால் அவரால் மேற்கொண்டு நடக்க முடியாத நிலை. டேன் நெவின்ஸுக்கு காய்ச்சல், தலை வலி, மூச்சுத் திணறல், உடலில் வெப்பம் குறைதல் என்று பிரச்னைகள். மேற்கொண்டு தொடர்வதா என்று அவர்களுக்குப் புரியவில்லை. அந்த பகுதியில் யாரும் தங்குவதற்கு அனுமதி கிடையாது. ஒன்று, தொடர்ந்து மேலே செல்ல வேண்டும், இல்லையென்றால், இறங்கியாக வேண்டும். ஆனால், இவர்களுக்கு தான்சானிய அரசு அளித்திருந்த சிறப்பு அனுமதியைக்கொண்டு அவர்கள் 19 ஆயிரம் அடி உயரத்தில் கூடாரம் அமைத்து தங்கினர். 

ஆகஸ்ட் 7-ம் தேதி காலையில் சூரிய உதயத்துக்குப் பிறகு மறுபடி நடக்கத் தொடங்கியவர்கள் சில மணி நேரங்களிலேயே உச்சியை அடைந்தனர். அங்கு சிறிய கொண்டாட்டம் மற்றும் போட்டோ எடுத்தலுக்குப் பிறகு வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தனர். குறிப்பிட்ட தூரம் வரை வந்ததும் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் டேன் நெவின்ஸை ஸ்டிரெச்சர் மூலம் கீழே கொண்டு சென்று, அவசரம் அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுபற்றி கிரிக் சொல்லும்போது, 'மாற்றுத் திறனாளி களால் முடியாதது எதுவும் இல்லை என்ற கருத்தை உலகத்துக்குச் சொல்வதே எங்கள் நோக்கம். அமெரிக்க தேசம் நடத்திய மூன்று வெவ்வேறு போர்களில் உடல்உறுப்புகளை இழந்தவர்கள் நாங்கள். ஒரே ஒரு காலுடன் மவுன்ட் கிளிமாஞ்சாரோ உச்சியை அடைந்துள்ளோம்!'' என்றார்.

மூவரில் மிகவும் இளையவர் நீல் டங்கன். இவருக்கு 27 வயதுதான். 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, குண்டு வெடித்ததில் படுகாயமடைந்தார். மிகவும் மோசமாக பாதிக்கப்படவே கால்கள் இரண்டையும் அகற்றிவிட்டனர். ஆரம்பத்தில் செயற்கைக் குழாய் மூலம் சுவாசித்து, பேச முடியாமல் அவதிப்பட்டு வந்தவர் மெள்ள மெள்ள தேறினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, செயற்கைக் கால்கள் மூலம் நடக்கப் பழகினார். அமெரிக்காவில் ஊனமுற்ற ராணுவ வீரர்களுக்குத் தனியாக மறுவாழ்வு மையம் உள்ளது. நீல் அங்கு தங்கி சைக்கிள் ஓட்டுதல், கோல்ஃப் விளையாடுவது, படகு ஓட்டுவது என்று பல்வேறு பயிற்சிகள் பெற்றார். மேற்படிப்பையும் உற்சாகமாகத் தொடர்ந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே கிளிமாஞ்சாரோ மலை ஏற முயற்சித்தார். அப்போது தோல்வியில் முடிந்தது. இப்போது கூட்டணி போட்டு வெற்றி பெற்றுவிட்டார்! 

டேன் நெவின்ஸ் 14 ஆண்டுகள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவர். 2004-ம் ஆண்டு நவம்பரில் ஈராக்கில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டன. வலது காலை டாக்டர்கள் அகற்றிவிட்டனர். 2007-ம் ஆண்டு மற்றொரு காலிலும் நோய்த் தொற்று ஏற்படவே, அதையும் நீக்கியாக வேண்டிய நிலை. ஆனாலும் மனம் தளராத நெவின்ஸ் ராணுவ வீரர்கள் மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து பல்வேறு பயிற்சிகளை பெற்றார். 

வியட்நாம் போரில் பங்கேற்றவர் கிரிக் பயூர்! குண்டு வீச்சில் ஒரு காலை இழந்துவிட்டார். அதன் பிறகு அமெரிக்காவின் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு அமைப்பில் சேர்ந்தார். 28 ஆண்டுகளாக அதன் செயல் இயக்குநராகவும் இருந்து வருகிறார். இதுதவிர சிறிய தன்னார்வத் தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

ஊனம் என்பது உள்ளத்தில் இருந்தால்தான் குறைபாடு என்பதை மறுபடி நிரூபித்திருக்கிறது இவர்களின் சாதனை. அதே சமயம், ''எங்களின் இந்த சாதனை அமெரிக்கப் போர் வீரர்களின் உற்சாகத்தைப் பல மடங்கு கூட்ட வேண்டும்!'' என்று இவர்கள் சொல்லியிருப்பது கொஞ்சம் யோசிக்கவைக்கிறது. வீரர்களுக்கு உற்சாகம் தருவதற்கு பதிலாக, அமெரிக்க அரசுக்கு வெறியைத் தந்து, மறுபடி ஏதேனும் ஒரு நாட்டின் மீதான போருக்கு அமெரிக்கா தயாராகிவிடக் கூடாதே!

Sunday, August 22, 2010

Post-doctoral Position in Biomechanics at University of Texas

The Research Center for Mechanics of Solids, Structures and Materials at the University of Texas at Austin invites applications for an open position as Post-doctoral Fellow. The specific project involves collaboration with the University of Texas MD Anderson Cancer Center in Houston and requires the Fellow to work at both institutions.  The work involves experimental characterization of tissues and surgical remodeling, and development of computational modeling of surgical reconstruction. While specific background in Biomechanics is not necessary, candidates should have a strong background in nonlinear solid mechanics, and some experience in experimental, analytical, and numerical characterization. This position is available immediately; interested candidates are invited send their resume and a list of references to Prof. K. Ravi-Chandar (kravi@mail.utexas.edu) before September 10, 2010

Saturday, August 21, 2010

அரிக்கப்படும் விவசாயம்... அதிரவைக்கும் உண்மைகள்!

''நான் நின்று பேசிக் கொண்டு இருக்கும் இந்த இடம் இன்னும் 80 வருடங்களில் கடலுக்குள் இருக்கும். என் முன்னால் அமர்ந்திருக்கும் சென்னைவாசிகளாகிய உங்கள் வீடுகளை எல்லாம் கடல் மூழ்கடித்திருக்கும்!'' - 'சுற்றுச் சூழல் சூப்பர் ஹீரோ' என்று உலகமே போற்றும் ராபர்ட் ஸ்வான், சுதந்திர தினத்தன்று சென்னையில் உதிர்த்த எச்சரிக்கை இது!
 
25 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய எட்டு நண்பர்களுடன் தனிக் கப்பலில் அண்டார்டிக்கா சென்று, 'இதைப் பாதுகாப்பதே என் லட்சியம்' என்று தன் வாழ்நாளை அர்ப்பணித்த ராபர்ட் ஸ்வான்தான், சென்னை அழிந்துபோகும் என்று அபாய மணி அடித்திருக்கிறார். 

புவி வெப்பமயமாதல் காரணமாக, கடல் மட்டம் மெள்ள மெள்ள உயர்ந்துகொண்டே போவதுதான் இதற்குக் காரணம் என்கிறார் ராபர்ட். இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும்விதமாக, தன் பேச்சில் அண்டார்டிக்காவின் சுற்றுச்சூழல் விவகாரத்தை விலாவாரியாக எடுத்துரைத்தார் ராபர்ட். இவர் சொன்ன இன்னொரு அபாயம், 'இந்தியாவை நிலப் புற்றுநோய் பயங்கரமாகத் தாக்கத் துவங்கிவிட்டது' என்பது! அதாவது, விவசாய நிலங்களை மனிதர்கள் அழிப்பது துரிதகதியில் நடக்கிறது என்று வருந்தி இருக்கிறார். 

ஒரு மனிதனுக்குள் தோன்றி, அவனுக்குத் தெரியாமலேயே அரித்து உருத்தெரியாமல் செய்யும் புற்றுநோய்போல, தமிழக நிலங்களை இரண்டு விதமான புற்றுநோய்கள் தாக்கி இருக்கின்றன என்கிறார் ராபர்ட் ஸ்வான்! அவரை சந்தித்துப் பேசி, ஏற்கெனவே நிலப் புற்று நோய் குறித்த விழிப்பு உணர்வைத் தூண்டி வரும் 'எக்ஸ்னோரா' நிர்மல் கிஸானைச் சந்தித்தோம். 'எக்ஸ்னோரா' நிர்மல் தெரியும், அதென்ன நிர்மல் கிஸான்? இதைப்பற்றி பிறகு பார்க்கலாம். முதலில் இவர் சொல்வதைக் கேட்கலாம்!

அமெரிக்கா வன்முறை!

''பூமியைக் காப்பாற்ற ஒரே வழி இதுதான் என்ற நோக்கில், கோபன்ஹேகனில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் புவி வெப்பமயமாதல் குறித்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 200 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். நம் பிரதமரும் கலந்துகொண்டார். நானும் அதில் கலந்துகொண்டேன். மொத்தம் 20 ஆயிரம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திரண்டு தலைவர்களின் முடிவுகளைக் கேட்க ஆவலாக இருந்தோம். ஆனால், மாநாட்டைக் கூட்டி கேளிக்கைகள் மட்டுமே அமர்க்களப் பட்டதே தவிர, குறிப்பிடத்தக்க எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இது எதைக் காட்டுகிறது என்றால், உலகத்தில் யாருக்குமே சுற்றுச்சூழல் மீது ஆர்வம் இல்லை என்பதைத்தான்! 

இந்தியாவில் விவசாய நிலங்கள் தொழில் புரட்சி, தொழில் முன்னேற்றம், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயர்களால் சூறையாடப்படுகின்றன. கடந்த 10 வருடங்களில் தமிழகத்தின் விவசாய நிலத்தில் 13 சதவிகிதம் காணாமல் போய்விட்டது. கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே 10 சதவிகித விவசாய நிலம் காணாமல் போயிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் விவசாய நிலமே இருக்காது. இதைத்தான் ராபர்ட் ஸ்வான், 'நிலப் புற்றுநோய்' என்று வர்ணிக்கிறார். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இணையாக ரியல் எஸ்டேட் மூலமும் விவசாய நிலங்கள் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன. இப்போதே சென்னையைச் சுற்றியிருக்கும் விளை நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வசப்ப டுத்திக் கொண்டுவிட்டன. இப்போது அது அடுத்த கட்ட நகரங்களுக்கும் நகர ஆரம்பித்துவிட்டது. இதனால், வேலை வாய்ப்புகள் பெருகும்தான். அதே சமயம், விவசாயமே இல்லாமல் போய்விடுமே? 

இதை ஓரளவுக்குத் தடுக்கவும், விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும், விவசாயம் சார்ந்த தொழில்களை அரசாங்கம் ஊக்கப்படுத்தலாம். உழவனின் மகன் விவசாயம் செய்யவும், விவசாயம் சாராத குடும்பத்தில் இருந்து வரும் இளைஞன் விவசாயம் செய்யவும் அரசாங்கம் ஊக்கப்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.'' என்கிறார் நிர்மல். இப்போது இவர் தன் பெயருக்குப் பின்னால் 'கிஸான்' என்று சேர்த்திருப்பது 'மற்ற எல்லா அடையாளங்களையும்விட,என்னை ஒரு விவசாயியாகக் காட்டிக்கொள்வதில்தான் பெருமை அடைகிறேன்' என்பதற்காம்! 

கூடி வாழ்ந்தால் கோடி நிலம்!

எக்ஸ்னோரா அமைப்பு, இப்போது கூட்டுப் பண்ணை விவசாயத்திலும் ஆர்வம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது. அதன்படி இப்போது தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஏராளமான கூட்டுப் பண்ணைகள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. திருச்சியில், ஸ்ரீரங்கத்தில், மைசூருக்குப் பக்கத்தில் என கூட்டுப் பண்ணைகள் ஜோராகக் களைகட்டத் தொடங்கி இருக்கின்றன. இதில் ஆர்வம்கொண்ட இன்னும் பலரும் கூட்டுப் பண்ணை விவசாயத்தின் நன்மைகளை ஒரு பிரசாரமாகவே நடத்தி வருகிறார்கள். 

ஒரு விவசாயி தன்னிடம் உள்ள இரண்டு ஏக்கருக்கு தன் மூளையைக் கசக்கிப் பயிரிட வேண்டும். இதற்கென தனி நபராக பணம் செலவழிப்பதோடு, விளைந்த பொருளை விற்பதற்கும் பெரும்பாடு பட வேண்டும். சிறிய நிலத்தில் நவீன வேளாண் உத்திகளைப் பயன்படுத்துவதும் தனிநபருக்கு சாத்தியமான விஷயம் அல்ல. இதுவே 10 பேர் தலா 10 ஏக்கர் என்று வாங்கி, மொத்தமாக 100 ஏக்கரில் கூட்டுப் பண்ணை ஆரம்பித்தால், லேட்டஸ்ட் விவசாயத்துக்கு சர்வதேச ஆலோசனைக் குழுவைக்கூட அமர்த்திக்கொள்ளலாம். தண்ணீரைச் சேமிக்கும் லேட்டஸ்ட் பாசன வசதிகளை மேம்படுத்தலாம். இப்படி கூட்டுப் பண்ணையின் மூலம் விவசாயத்தின் மீது இருக்கும் தற்கால நம்பிக்கையின்மையைப் போக்கி, அந்த நிலங்கள் கைமாறி தொழிற்சாலைகளாகவோ, அடுக்குமாடிக் கட்டடங்களாகவோ மாறிவிடாமல் தடுப்பதும் நிலப் புற்றுநோய்க்கு எதிரான முக்கிய நடவடிக்கை! வனத்தைப் பாதுகாக்க, வன விலங்குகளைப் பாதுகாக்க அரசாங்கம் தனித் துறைகளை வைத்திருக்கிறது. ஆனால், நாட்டின் முதுகெலும்பான விவசாய நிலங்களைப் பாதுகாக்க தனித் துறையோ, தனி சட்டங்களோ இல்லாததும் நிலப் புற்றுநோய் முற்றிப்போக ஒரு காரணம். நஞ்சை நிலத்தில் வீடு கட்டக் கூடாது என்று ஒரு சட்டம் இருக்கிறது. ஆனால், இப்போது நஞ்சை நிலங்களில்தான் பரவலாக வீட்டு மனைகள் போடப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசரம்! நஞ்சை நிலத்தை வீட்டு மனைகளாக்க, தற்போது கிராம அதிகாரிகள் அளவில் அனுமதி பெற்றாலே போதுமானது. கிராம அளவில் இருக்கும் அதிகாரிகள், 'நஞ்சை நிலம் பல ஆண்டுகளாக விவசாயம் செய்யப்படாமல் இருக்கிறது. அந்த நிலத்தில் உழவும் இல்லை' என்று சான்றளித்து வீட்டு மனைகளாக்க பரிந்துரை செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது. ரியல் எஸ்டேட் பிசினஸில் முதலில் லஞ்சம் புகும் இடம் இங்குதான். நஞ்சை நிலங்களை வீட்டு மனை நிலமாக்கும் அதிகாரத்தை இனிமேல் மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைந்த ஒரு குழுவுக்குக் கொடுத்தால், விளை நிலங்களைக் காப்பாற்றலாம் என்பது இயற்கை ஆர்வலர்கள் நெடுநாட்களாக எழுப்பும் கோரிக்கை. இன்னொரு புறம், விளை நிலங்களை வீட்டு மனைகளாக்க, மாடர்னாக 'பண்ணை வீடு' என்ற பெயரில் விவசாய நிலத்தை முடக்குகிறார்கள். பல ஏக்கரில் ஒரே ஒரு பங்களா கட்டி, நீச்சல் குளம் அமைத்து உள்ளே போகும் கரன்ஸிகர்த்தாக்கள், பிறகு ரெசார்ட்ஸ் என்ற பெயரில் விளை நிலங்களை இல்லாமலேயே செய்துவிடுகிறார்கள். இதை எல்லாம் தடுக்கவேண்டிய அரசியல்வாதிகள் முகத்தில் கரன்ஸி மழை பொழிய, விளை நிலங்கள் கரைந்துகொண்டு இருக்கின்றன!

அப்ரூவரான அரசாங்கம்

தமிழக அரசு இலவசத் திட்டங்களிலும், புதுப் புது சட்டங்களிலும் இந்தியாவுக்கே வழி காட்டுகிறது. ஆனால், இந்த அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இரண்டு ஏக்கர் இலவச நிலத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தவே முடியவில்லை. காரணம், தமிழ்நாட்டில் விவசாய நிலம் இல்லவே இல்லை என்பதை அரசாங்கமே ஒப்புக்கொண்டதுதான்! இப்போதே சென்னையைச் சுற்றிலும் தேவையான அளவுக்கு சர்வதேச தொழிற்சாலைகள் வந்துவிட்டன. இதற்கே காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் முக்கால்வாசி விவசாய நிலங்கள் தாரைவார்க்கப்பட்டு விட்டன. இப்போதும் தினம் தினம் ஏதோ ஒரு பன்னாட்டு கம்பெனியுடன், முதல்வரோ, துணை முதல்வரோ புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்த நிறுவனங்களை விவசாய நிலங்கள் குறைந்த அளவு கொண்ட மாவட்டங்களான தர்மபுரி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கலாம்! 

விவசாயத்தை முடக்குவதே மத்திய அரசுதான்!

'பொதுவாகவே இந்தியாவில் விவசாயக் கூலிகள் கணிசமாகக் குறைந்துவிட்டனர்' என்று ஆந்திராவைச் சேர்ந்த விவசாயிகள் எடுத்த புள்ளிவிவரம் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. மத்திய அரசாங்கம் கொண்டுவந்த தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம்தான் விவசாயத்தைச் சாகடிக்கிறது என்று அதில் கூறப் பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களான விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளே வயிற்றுப் பிழைப்புக்காக தங்கள் விவசாயத்தை ஓரம்கட்டிவிட்டு மத்திய அரசின் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைக்குப் போகிறார்கள். இந்தத் திட்டத்தில் வேலை இல்லாத நாட்களில் சும்மா இருக்கும் தினக் கூலிகளை தங்கள் விவசாய நிலங்களுக்கு வேலைக்கு அழைத்துப் போய் ஓரளவே விவசாயம் செய்கிறார்கள். இதெல்லாமே விவசாயம் அழிவதற்கான கண்கூடு! 

கிட்டத்தட்ட இதே சம்பவம் கேரளாவில் நடந்தது. ஒரு விவசாயி தன் வயலில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிரை களத்துக்குக் கொண்டுவர கூலிகள் இல்லாமல் திண்டாடினார். கதிர் அறுக்கும் மெஷினைக் கொண்டுவந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்கத்தினர், 'வேலைக்கு ஆட்கள் இல்லை என்றால் ஏன் இவ்வளவு விவசாயம் செய்கிறாய்? உன் வீட்டில் இருக்கும் ஆட்களைக்கொண்டு செய்யும் அளவுக்கு விவசாயத்தைச் செய். மெஷினை வயலுக்குள் இறக்காதே, கெமிக்கலையும் வயலுக்குக் காட்டாதே' என்று எதிர்ப்புச் சொன்னார்கள். இந்த எதிர்ப்பைப் பார்த்து பயந்துபோன அந்த விவசாயியிடம், 'நீயும் எங்களோடு சேர்ந்து கொள் விவசாயத்தைக் காப்பாற்ற நாங்கள் இப்போது பெயர் வைக்காத புது இயக்கத்தை உருவாக்கி இருக்கிறோம்' என்று அவரையும் தங்களோடு சேர்த்துக்கொண்டார்கள். கடைசியில், அவர்களே இறங்கி நெல் அறுவடையை செய்து முடித்தார்கள். இதில் சில முரண்பாடுகள் இருந்தாலும், விவசாயத்தைப் பாதுகாக்க அரசாங்கத்துக்கு எதிராக அப்படியும் ஒரு போராட்டம் தேவைதான்!

இருக்கும் இடத்தைவிட்டு..!

நிலப் புற்றுநோய்க்குக் கடைசியான காரணம் பாசனம் இல்லாததும்தான். ஊரில் பெய்யும் மழையைக் கடலுக்குள் விட்டுவிட்டு, கடல் நீரைக் குடிநீராக்க இன்று பல கோடிகளை இறைத்துக் கொண்டு இருக்கிறோம். நதிகளை இணைக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே இணைந் திருந்த ஏரிகளைப் பிரித்து அழித்துக்கொண்டு இருக்கிறோம். பாசனத்துக்குத் தண்ணீர் கொடுக்கும் பல ஏரிகளில் இன்று வீடுகள் இருக்கின்றன. விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அமைந்திருக்கும் விசாலமான ஏரியாவே ஓர் ஏரிதான். இப்போதும் மழை வந்தால், அந்த அலுவலக வளாகம் தண்ணீரில் தத்தளிக்கிறது. ஏரிகள் மாவட்டம் என்று பழைய செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஒரு பெயர் உண்டு. இப்போது காஞ்சிபுரம் மாவட்டமாக உருமாறி இருக்கும் அந்த மாவட்டத்தில் எத்தனை ஏரிகள் இல்லை என்று கணக்கெடுத்தால் தலை சுற்றும். அடுத்து, இந்த மாவட்டத்தில் பெருகிவிட்ட தொழிற்சாலைகளால் விவசாயத்தைப்பற்றி நினைக்கவே முடியாது. அதைப்பற்றி நினைத்தால்தானே பாசனத்தையும் ஏரியையும் நினைப்போம்! 

மீண்டும் கட்டுரையின் ஆரம்பத்துக்கு வருவோம். 80 வருடங்களில் சென்னை இருக்காது என்று ராபர்ட் சொன்னதில் இன்னொரு உள்ளர்த்தமும் இருக்கிறது. அவர் சென்னை கடல் மட்டம் உயர்ந்து நகருக்குள் தண்ணீர் புகுந்தால்... அது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வரை தாக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். ஒரு முறை சென்னையைச் சுற்றி கடல் நீர் வந்துவிட்டாலே சென்னையைச் சுற்றி இருக்கும் கொஞ்ச நஞ்ச விவசாய நிலத்திலும் விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு மண் வளம் கெட்டுப்போகும் என்பது ராபர்ட் அடித்திருக்கும் எச்சரிக்கை மணி! 

நன்றி - விகடன் குழுமம்