Search This Blog

Tuesday, May 19, 2015

உலகை மாற்றிய புதுமைகள்! - செயற்கைக்கோள்

மனிதர்களால் செல்ல முடியாத இடத்தில் என்ன இருக்கும் என்ற ஆர்வம் மனிதர்களுக்கு எப்போதுமே இருந்து வந்தது. இதனை பற்றிய தேடல்களும் அதிகமாக மனிதனுக்கு இருந்துவந்தது.

இதற்கான ஆராய்ச்சி 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வேகமெடுத்தன. 1903-ம் ஆண்டு கான்ஸ்டனின் சையோகோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky) முதன்முதலில் பூமியில் இருந்து 8 கி.மீ தொலைவில் வட்டமடித்து அங்குள்ள தகவல்களைப் பதிவு  செய்தார். ஆனால், அதன் மூலம் பெரிய அளவிலான தகவல்களைப் பெறமுடிய வில்லை. அதேசமயத்தில் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றன.

1957-ம் ஆண்டு சோவியத் யூனியன் விண்வெளிக்கு ராக்கெட் மூலம் ஸ்புட்னிக் 1 எனும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக அனுப்பியது.

ஸ்புட்னிக் 1 விண்வெளிக்கு அனுப்பப்பட்ட அடுத்த மாதமே ஸ்புட்னிக்-2 லைக்கா என்ற நாயுடன் விண்வெளிக்கு பாய்ந்தது. அதுதான் ஒரு உயிரினத்தோடு விண்வெளிக்கு சென்ற முதல் விண்கலம். இந்த விண்கலன்கள் வானில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களில் உயிர்்கள் வாழ்கின்றனவா, தட்பவெட்ப நிலை எப்படி உள்ளது என்பது போன்ற பல விவரங்களைத் தந்தன.


பிற்பாடு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி சாதனை படைத்தன. மனிதர் களும் விண்வெளிக்குச் செல்ல முடியும் என்பதை இந்த செயற்கைக்கோள்கள் நிரூபித்தன. விண்வெளியில் ஒரு நிலையத்தை அமைத்து, அங்கு ஆறு மாதம் தங்கிப் பணிபுரியும் அளவுக்கு செயற்கைக்கோள்கள் வளர்ந்து விட்டன.

செயற்கைக்கோள்கள் விண்வெளியில் உலா வரத் தொடங்கியபின்புதான் புயல் கொடுமைகளில் இருந்து காத்துக்கொள்ளும் வழிபிறந்தது. பூமியின் வளங்களை ஆராய்ந்தறிய முடிந்தது. தகவல் தொடர்பு பல மடங்கு வளர்ந்தது. உலகமே ஒரு கிராமமாக மாறியது.

இன்றைக்கு பூமிக்கு ஏற்படப் போகும் சிறு பாதிப்பையும் முன்கூட்டியே அறிவிக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கும் இந்த செயற்கைக்கோள்கள் உலகை மாற்றிய புதுமைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்!

No comments:

Post a Comment