Search This Blog

Tuesday, June 30, 2015

விஜய் டி.வி.யிலிருந்து விலகலா?

 
தமது பேச்சுத் திறமையால் உலக முழுவதும் தமக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் விஜய் டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளர் டி.டி. என்கிற திவ்யதர்ஷினி. ஆரம்பத்தில் சினிமா, சின்னத்திரை சிறு வேடங்களில் நடித்து ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சி மூலமாக இந்த உயரத்தை எட்டியவர். தற்போது விஜய் டி.வி.க்கும் இவருக்குமான உறவுக்கு முற்றுப்புள்ளி வந்திருக்கிறது. விஜய் டி.வி. நிர்வாகம் டி.டியை கழற்றி விட்டதா? அல்லது அவரே கழன்று கொண்டாரா? எதுதான் உண்மை? 
 
டி.டி. ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் என்றால் அவர் பேசுவதுதான் அதிகம். வந்திருக்கும் வி.ஐ.பி. பேசுவது வெகு குறைவு. சமீபத்தில் விஜய் அவார்ட்ஸ் விழாவில் கோபிநாத்துடன் சேர்ந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஒரு கட்டத்தில் அவர் என்ன பேசுகிறார் என்று யாருக்குமே புரியவில்லை. இதனை அப்படியே மேடையில் போட்டு உடைத்தார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.  

சௌந்தர்யா ரஜினிகாந்த் சார்பாக விருது வாங்க மேடை ஏறிய கே.எஸ்.ரவிக்குமாரிடம், டி.டி. பேச்சு கொடுக்க, “மைக் இருந்தால் பேசுவது சத்தமாக கேட்கும். ஆனால் மைக் இருந்தாலும் கத்துவது டி.டியாக மட்டுமே இருக்க முடியும்” என விஜய் டி.வியில் அதிகாரிகள் முன்னிலையில் டி.டி. பற்றி கடுப்பாகப் பேசினார். இதனால் டி.டி மீதுள்ள எண்ணம் மாறியது. உடனே அதிகாரிகள் அவரை அழைத்து கண்டிக்க தமது டுவிட்டரில் இனி நான் தேவையில்லாமல் பேச மாட்டேன் என மன்னிப்பு கேட்டார் டி.டி.
 
மேலும் சமீபத்தில் பேட்டிக்காக வந்த வி.ஐ.பி. ஒருவரைக் கேள்வி கேட்டு சரமாரியாகப் போட்டுத் தாக்க அவர் விஜய் டி.வி. நிர்வாகத்திடம் இதுபற்றி புகார் தெரிவித்தாராம். இதனால் விஜய் டி.வி நிர்வாகத்தின் குட்புக்கில் இடம்பிடித்த டி.டி. நிலை மாறியது. டி.டி.யின் கணவர் ஸ்ரீகாந்தும் விஜய் டி.வி.யுடன் இணக்கமாக நடந்துகொள்ள அறிவுறுத்தினாராம். விஜய் டி.வி. நிர்வாகம் சமீபமாக தனக்கு போதிய ஒத் துழைப்பு அளிக்காத காரணத்தால், நாம் கழன்று கொள்வது பிரச்னைக்கு ஒரே தீர்வாக இருக்கும் என முடிவுக்கு வந்து அவராக வெளியேறியதாகவும் சொல்கிறார்கள்.  

தற்போது கர்ப்பமாக இருக்கும் டி.டி. வீட்டில் ஓய்வெடுத்தபடியே நகைக்கடை மற்றும் அழகு நிலைய விளம்பரங்களில் தோன்றினால் போதும். எதற்கு தேவையற்ற பிரச்னை என்று நினைப்பதாகவும் சொல்கிறார்கள். இப்போதைக்கு டி.டி.யின் பேச்சு மழைக்கு ஒரு விடுமுறை! 
 
 

1 comment: