Search This Blog

Monday, June 08, 2015

ஜீவசக்தி


லோக வாழ்க்கை என்பது நன்றாக நடப்பதற்கு அறிவுத் துறைகள் என்றே - அதாவது ஆத்ம ஸம்பந்தமில்லாமல் இருக்கப்பட்டவையாகவே - இருக்கிறவையும் தேவைப்படத்தான் செய்கிறது. வாழ்க்கைக்கு நேரே ப்ரயோஜனப்படுவதாகத் தெரியாவிட்டாலும் அல்லது மனஸுக்கு ஒரு நிறைவைக் கொடுத்து, அதனால் ஸந்தோஷம் ஏற்படுத்துவதாகவும் அநேகத் துறைகள் இருக்கின்றன- ஸங்கீதம், சில்ப - சித்ரம், சரித்ரம், பாஷா சாஸ்திரம் இப்படி அநேகம். திருட்டும், சூதாட்டமும் மாதிரியில்லாமல், தனிப்பட நல்லது, கெட்டது என்று இல்லாமல் நாம் எப்படி ப்ரயோஜனப்படுத் திக்கொள்கிறோமோ அதனாலேயே நல்லதோ கெட்டதோ விளைவிப்பதாகவுள்ள ஸயன்ஸ் ஸப்ஜெக்ட்கள் தற்போது தினந்தோறும் பெருகி வருகின்றன. இன்றைய வாழ்க்கைக்கு - பௌதிகமாக, மெடீரியலாக த்ருப்தி தருகிற வாழ்க்கை மட்டுமில்லை, அறிவுக்கும் மனஸுக்கும் ஸந்தோஷம் தந்து வாழ்க்கையையே உத்ஸாகப் படுத்துகிறவற்றையும் சேர்த்தே சொல்கிறேன், அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு - இந்த வித்யைகள் எல்லாமே வேண்டித்தான் இருக்கின்றன. நாகரிக ஸமுதாயங்கள் ஏற்பட்ட நாளிலிருந்தே அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது.

நம் தேசத்தில் இந்த அறிவு வித்யைகளைக் கற்பிக்கிறவர்களும் உத்தம ஹ்ருதயமுள்ள யோக்யர்களாக, நல்ல சீலமுள்ள வர்களாக இருந்து வந்தார்கள். திருட்டு, சூதாட்டம் மாதிரியான கெடுதலான வித்யைகளைக் கற்றுக் கொடுக்கிறவர்களைத் தவிர, மற்ற ஆசாரியர்கள், ஆசிரியர்களெல்லாம் நல்ல morals-ம் அதாவது நன்னெறியும், அத்தனை நெறிக்கும் ஆதாரமான தெய்வபக்தியும் கற்றுக் கொடுக்கவும் செய்தார்கள். அதனால், அவர்களிடம் கற்றுக் கொண்டவர்கள், பக்தி விச்வாஸம் வைக்க வேண்டிய குருமார் களாகவே அவர்களுக்கு ஸ்தானம் கொடுத்தார்கள். அவர்கள் கற்றுக் கொடுக்கும் பலதுறை பாடத்தால் மூளை வளர்ச்சி பெறுகிறதோ? பாடமான நீதிபோதனை, பக்தி போதனை முதலியவற்றுக்கு ஜீவசக்தி ஊட்டிய அவர்களுடைய வாழ்க்கை உதாரணத்தாலும், பெர்ஸனல் ரேடியேஷனாலும் ஹ்ருதய வளர்ச்சியும் பெற்றார்கள்.

No comments:

Post a Comment