Search This Blog

Saturday, November 21, 2015

நல்ல பிள்ளை ஆக வேண்டும்!




கெட்ட பிள்ளையாவது எளிது. ஆனால் அந்தப் பெயர் எடுத்து விட்டால் அப்புறம் நமக்கு எத்தனை அவமானம், கஷ்டம்! வாழ்க்கையில் முன்னுக்கு வரவே முடியாது. நல்ல பிள்ளையாவது கடினம் என்று தோன்றலாம். ஆனால் கடவுளின் அருளைத் துணைகொண்டால் இதையும் எளிதாகச் சாதித்து விடலாம். நல்ல பிள்ளை என்று பெயர் வாங்கினால்தான் வாழ்க்கையில் முன்னேற நல்ல நல்ல வாய்ப்புக்கள் வரும். ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் கெட்டவன் தண்டனை பெறத்தான் செய்வான்.

ஸ்வாமியின் பாதக் கமலங்களை விடாமல் பிடித்துக்கொண்டு, “எனக்கு வேறு கதியில்லை; நீதான் நல்ல வழிகாட்ட வேண்டும்” என்று வேண்டிக்கொள்ள வேண்டும். பிஞ்சான உங்கள் குழந்தை உள்ளத்திலிருந்து உண்டாகிற வேண்டுகோளுக்கு ஸ்வாமி நிச்சயம் பலன் தருவார். உள்ளத் தூய்மையை இவ்வாறு இளவயதிலேயே பெறுவதுதான் எளிது. பிற்பாடு அழுக்கு ரொம்பவும் தடித்துப் போக விட்டால் நல்ல வழி தேட வேண்டும் என்ற எண்ணம்கூடப் போய்விடும். எனவே, இன்றிலிருந்து பகவானைப் பிரார்த்தியுங்கள். உங்களை அழுக்கேயில்லாமல் பளிச்சென்று வைத்து உங்களுக்கு ஒரு குறைவும் வராமல் ஸ்வாமி காப்பாற்றுவார்!

No comments:

Post a Comment