Search This Blog

Sunday, September 28, 2014

‘மேக் இன் இந்தியா’

‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் உற்பத்தி செய்வோம்!) என்கிற புதிய கருத்தாக்கத்தை முன்வைத்து, உலக அளவில் நம் நாட்டை ஒரு பெரிய உற்பத்திக் கேந்திரமாக ஆக்கி, அதன்மூலம் வேலைவாய்ப்பை பெருக்கி, பொருளாதார வளர்ச்சியைக் காண வைக்கும் முயற்சியை வெற்றிகரமாக விதைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. முந்தைய காங்கிரஸ் அரசாங்கம், நாட்டில் தொழில் வளர்ச்சியைப் பெருக்க முக்கிய நடவடிக்கைகளை எடுக்காதபோது, இந்த அரசாங்கமாவது உற்பத்தித் துறையில் முத்திரை பதிக்க முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே.
உற்பத்தித் துறையை வளர்த்தெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை வெகுவாக உயர்த்த முடியும் என்பதை கடந்த அறுபது ஆண்டுகளில் நாம் உணரத் தவறினோம். ஐம்பதுகளில் ஜப்பான் செய்ததை, எழுபதுகளில் தென் கொரியாவும் சிங்கப்பூரும் செய்ததை, எண்பதுகளில் சீனா செய்ததைத்தான் இன்றைக்கு நாம் செய்ய நினைக்கிறோம். இனியாவது சேவைத் துறையை மட்டும் வளர்த்தால் போதும் என்று நினைக்காமல், உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தினால் தான் வேலைவாய்ப்புகள் பெருகும்.

கேட்பதற்கு சிறப்பாக இருக்கும் இந்த கருத்தாக்கத்தை நடைமுறையில் செயல்படுத்த அடிப்படையான பல மாற்றங்களை நாம் செய்தாக வேண்டும். தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்சாரத்தைத் தருவதில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். புதிய மின் உற்பத்தித் திட்டங்களை உருவாக்கி, தடையில்லா மின்சாரம் தருவதுடன், சாலை, தண்ணீர், கட்டுமான வசதிகளையும் தந்தால்தான், புதிதாக பலரும் தொழில் தொடங்க முன்வருவார்கள்.

தொழிற்சாலைகளைத் தொடங்கத் தேவையான நிலங்களை கையகப்படுத்து வதிலும் பெரும் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர, திறமையான தொழிலாளர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கு தொழிலாளர் தொடர்பான பல சட்டங்கள் இன்றைய தேவைக்கேற்ப மாற்றம் காணப்பட வேண்டும். தொழில் தொடங்கத் தேவையான நிதியையும் பெரிய அளவில் உருவாக்கியாக வேண்டும்.

இது தொடர்பாக மத்திய அரசு செய்ய நினைக்கும் ஒவ்வொரு செயலை யும் மாநில அரசின் உதவியோடு நிறைவேற்ற வேண்டும். எல்லா மாநிலங்களும் ஒன்று கூடி செயல்பட்டால்தான், உலக உற்பத்திக் கேந்திர மாக இந்தியா மாறும். பிரதமர் மோடி இதை எப்படி செய்யப்போகிறார்?

No comments:

Post a Comment