Search This Blog

Tuesday, January 20, 2015

பல் நோய்கள்!


பனிக்கால நோய்களில் முக்கியமானது பல், ஈறு பிரச்னை. பொதுவாக பெண்களின் உடலில் ஹார்மோன்களின் தாக்கம் அதிகம் இருக்கும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் இது இன்னும் அதிகமாகவே இருக்கும். அப்போது பல், ஈறு அதிகமாகப் பாதிக்கப்படும். இதற்கு அவர்களின் வாய் பராமரிப்பின்மையும் ஒரு முக்கிய காரணமாகும்.

கர்ப்பகால ஈறு நோய்க்கு பிரக்னென்ஸி ஜின்ஜிவிடிஸ் (Pregnancy Gingivitis) என்று பெயர். ஈறுகளில் ரத்தம் கசிதல், ஈறுகளில் வீக்கம், வலி போன்றவை இருக்கும். கர்ப்ப காலத்தில் பயன்படுத்தும் கர்ப்பத் தடை மாத்திரைகளாலும் ஈறு நோய்கள் ஏற்படுவதுண்டு.

பொதுவாக கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமானவை. பல் சிகிச்சைகளைப் பொறுத்த வரை முதல் மூன்று மாதங்கள் (Ist Trimester) மற்றும் கடைசி மூன்று மாதங்களில் (3rd Trimester) எந்த சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. அவசியமேற்படின் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரையிலான (3rd Trimester) சிகிச்சைகள் மேற்கொள்ளலாம். குழந்தைப் பேறுக்குப் பின் இந்த ஈறு நோய்கள் குறைந்துவிடும்.

பாதுகாப்பு முறைகள் என்ன?

பற்களையும் வாயையும் சுத்தமாகப் பராமரித்தல், இரண்டு முறைகள் மிருதுவான பிரஸ்ஸால் பல் துலக்கவேண்டும். பின் ஈறுகளை விரல்களால் நன்கு மசாஜ் செய்யவேண்டும். இரவில் வெந்நீரில் உப்பிட்டு வாய் கொப்புளித்தல், இனிப்பான உணவு வகைகளைத் தவிர்த்தல் வேண்டும். உணவுக்குப் பின் வாய் கொப்புளித்தல் வேண்டும். மேலும் சரிவிகித உணவான (Balance diet) பால், முட்டை, காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை அதிகளவு உட்கொள்ளவேண்டும். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வர வாய்ப்புண்டு. அவர்கள் கண்டிப்பாக மேற்கண்ட பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

- டாக்டர் த. கோபாலகிருஷ்ணன்

No comments:

Post a Comment