Search This Blog

Friday, October 29, 2010

'விண்ணைத் தாண்டி வருவாயா'

ஒரு காதல் படம் என்பது, பாடல்களிலும் , 'ஐ லவ் யு' சொல்வதிலும் மட்டும் இல்லை. அப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், காதல் ததும்பி வழியவேண்டும். படத்தின் ஒவ்வொரு அணுவிலும், நமது வாழ்வில் நாம் அனுபவித்த காதல் நிமிடங்களை நமது உள்ளத்தின் அடியாழத்திலிருந்து தோண்டியெடுத்து, மூளையில் ஒரு மாற்றத்தைப் புரிய வேண்டும். படம் பார்த்து முடிகையில் , நமது இழந்த அல்லது தற்போதைய காதலின் சிறந்த நிமிடங்கள், கண்களில் பெருகி வழிய வேண்டும். இன்னும் நிறைய உணர்ச்சிகளின் கலவையாய் நாம் மாறிவிட வேண்டும். இவையெல்லாமும் எனக்கு நடந்த ஒரு படமே 'விண்ணைத் தாண்டி வருவாயா'. சிம்புவின் கை விதை மற்றும் பஞ்ச் டயலாக் இல்லை, த்ரிஷா உதடு சுளிக்கும் நடிப்பு இல்லை.


உனக்கு 22 வயது எனக்கு 23 வயது...
உனக்கு சினிமா எடுப்பது லட்சியம் எனக்கு சினிமா பார்ப்பதே பாவம்...
நீ இந்து பையன்... நான் கிருஸ்துவ பெண்
என்றெல்லாம் த்ரிஷா ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் அத்தனைக்கும் சிம்புவின் பதில், ஐ லவ் யூ என்பதாக இருக்கிறது!

அத்தகைய குழப்பங்களில் அறிவுரை (!) கூறி காதலை வளர்க்கிறார் கேமராமேன் நண்பர். இப்படியாக ஜெஸ்ஸியின் மேல் கிரேஸியாய் அலைகிறான் கார்த்திக். ஜெஸ்ஸி தன்னைத் தம்பியென சொல்லும் தருணத்தில் பயந்து போய் “I am in Love with you" என்கிறார் ஹீரோ..


த்ரிஷா பத்து நாட்கள் விடுமுறைக்கு ஆலப்பே போயிருப்பதாக சொல்கிறாள் தங்கை... “அவனவன் காதலியைத் தேடி அமெரிக்காவுக்கே போறான். ஆலப்பே தானே” என ஆலப்பேக்குக் கேமராமேன் நண்பருடன் பயணமாகிறான் கார்த்திக். நான்கு நாட்கள் தேடி ஜெஸ்ஸியை சந்திக்கிறான். காதலை சொன்னதற்கான மன்னிப்புக் கேட்பதற்காக வந்ததாக சொல்லி, நட்பாகக் கைகோர்க்கின்றனர் இருவரும். சென்னை திரும்பியதும் மீண்டும் தடுமாற்றம் கொஞ்சம் பயம் என படம் மெதுவாக செல்கிறது. வழக்கமான தமிழ் சினிமா முடிச்சுகளுடன் படம் நகர்கிறது. துணை இயக்குனராக முயற்சிக்கும் கார்த்திக்குக்கு வாய்ப்பு கிடைத்து படப்பிடிப்பிற்காக கோவா செல்கிறார். அங்கு மீண்டும் சிறிய குழப்பம் அதை சார்ந்த முடிவான இறுதிக் காட்சிகளில் எதிர்பாராத,ஏங்க வைக்கும் திருப்பம். ( DVD இல்லை தியேட்டர்ல போயி பாருங்க.)



‘உன் கண்ணாலேயே என்னை யாரும் பார்க்கலை போல இருக்கு’ என்பது போன்ற வசனங்களில் கௌதம் மேனனின் பேனாவில் காதல் வழிகிறது.படத்தில் பாடல்களும்,பின்னணி இசையும் ஹீரோ சிம்புவையும்,கதாநாயகி த்ரிஷாவையும் பின் தள்ளி விடுகின்றன.மன்னிப்பாயா தான் படத்தின் பாடல்களின் ஹைலைட்.உருகவைக்கிறது. ஆனாலும் வி.தா.வ பல காட்சிகள் நகரும் தன்மை மணிரத்தினத்தின் படம் பார்க்கும் உணர்வைத் தருவது நெருடலாக இருக்கிறது..



'விண்ணைத் தாண்டி வருவாயா' - Lovable Movie


No comments:

Post a Comment