Search This Blog

Sunday, October 31, 2010

அங்காடித்தெரு.

சினிமா இரண்டு வகை படும். புதிதாக  படம் எடுக்கிறேன் என்று முயற்சி  செய்து  நம்மை சோதிப்பது. இரண்டாவது, நம் வாழ்க்கையும், நம்மை சுற்றியுள்ளவ்ர்களின் வாழ்க்கையை பார்த்தாலே நிறைய கதைகள் கொட்டி கிடக்கிறது என்று அதனை சாதரணமாக விட்டு விடாமல் அதனை திரைப்படமாக எடுப்பது. உ.த : காதல், நாடோடிகள்......... அப்படி வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட கதை தான் அங்காடித்தெரு.

இந்த படத்தை பார்க்க ஆவலை தூண்டிய விஷயங்கள்,

1  படத்தின் பாடல்கள்.
2 இந்த படத்தின் டைரக்டர் எங்கள் மண்ணின் மைந்தன். இவர் குடுத்த ஆல்பம் படத்திற்கே கட் அவுட் வாய்த்த ஊர். அதிலும் குறிபாக வெயில் படத்தின் முதல் காட்சியில் தியேட்டரில் எம் மக்கள் நிற்க குட இடம் இல்லாமல் தரையில் நின்று மற்றும் உட்கார்த்து படம் பார்த்தது... இன்னும் என்னால் அந்த நினைவுகளில் இருந்து மீள முடியவில்லை. 

ரங்கநாதன் தெருவின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் ஒரு வணிக நிறுவனத்தை குறித்துதான் இயங்குனரின் பார்வை விரிந்திருக்கிறது. லேபர் சட்டங்களை வேஸ்ட் பேப்பர் போல கிழித்தெறியும் அதன் அதிகார பார்வையில், கண்கூசி நெளிகிற எத்தனையோ தொழிலாளர்களின் துயரத்தை சொல்ல, அவர்களை விடவும் கடுமையாக உழைத்திருக்கிறார்.

படம் சென்னை இல் தொடங்குகிறது. நள்ளிரவு. பஸ் ஸ்டாண்டில் கால்களால் உரசிக் கொள்ளும் காதலர்களாக காண்பிக்கப்படுகிறார்கள் மகேஷம், அஞ்சலியும்( ஒரு அருமையான பாட்டுடன் ). அந்த சமயம் ஒரு சிறு விபத்து நடக்கிறது. இடையில் நடப்பது என்ன? 

கிராமத்திலிருந்து கொண்டுவரப்படும் இத்தகைய தொழிலாளர்கள் நாள் முழுக்க நின்று கொண்டே வேலை பார்க்கிறார்கள். மதிய உணவுக்காக ஓடோடி செல்லும் அவர்கள் திரும்பி வர தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ரூபாய் கட். படத்தில் நிறைய கேரக்டர். ஆனால், அனைவரும் தம் தம் பத்திரங்களை அருமையாக செய்து உள்ளார்கள்.

நாயகன் புதுமுகமாம். ஆனால் மிக அருமையான நடிப்பு. படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டே நாயகி அஞ்சலிதான். கனி யாக வாழ்ந்திருக்கிறார். சின்ன சின்ன பாடி லேங்குவேஜில், கலக்குகிறார்.  கிளைமாக்ஸ் காட்சியில் அவளின் கண் மொழியும் க்ளாஸ்.

ஐயோ, படத்தின் கிளைமாக்ஸ் இல் நெஞ்சு பதறுகிறது... (பருத்திவீரன் படம் போல வித்தியாசமான கிளைமாக்ஸ்). அதனை இங்கு கூறினால் படத்தின் சுவாரசியம் குறைந்து விடும்.

இந்த படத்தை பார்க்க வேணடிய காரணம்,

1 . செளந்திர பாண்டி – ராணியின் கதாபாத்திரங்கல். 

தட்டிக் கழிக்க முடியாத குடும்ப பொறுப்புகளும், வறுமையும், வேலையின்மை குறித்த அச்சமும் செளந்திரபாண்டியை இயலாமையின் உச்சத்தினுக்கு நகர்த்திவிட்டிருக்கிறது. தன்னுடைய காதலை ஒத்துக் கொண்டால் இருவருக்குமே வேலை போய்விடும், குடும்பம் தெருவிற்கு வந்துவிடும் என்கிற பலவீனம் பலரின் முன் தன் காதலை ஒத்துக் கொள்ள அவனை மறுக்க வைக்கிறது. இரண்டு வருடங்களாய் பின்னால் அலைந்த ஆண் காதலிப்பதாய் உருகிய காதலன் பொதுவில் தன்னை வேசி யென்றும் தன்னை அவன் காதலிக்கவே இல்லையென்றும் சொன்ன அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாது ராணி மாடி கண்ணாடி சன்னலை உடைத்துக் கொண்டு தரைக்குப் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். வேலை, காதலி வாழ்க்கை என சகலமும் இழந்து பைத்தியமாகும் செளந்திரபாண்டி ஆண்களுக்கு ஆத்மார்த்தமாகவும். காதலுக்காக உயிர் நீத்த ராணி பெண்களுக்கான ஆதர்சமாகவும் மாறிப்போகிறார்கள்.

2. கனியின் பதிமூன்று வயது தங்கை - அவள் பணிபுரியும் வீடு - சடங்காதல் -தீட்டு என கொல்லையில் நாய்கள் கட்டும் இடத்தில் தங்க வைத்தல் – இந்தாடி அம்பது ரூபா என்பதை உதறிவிட்டுப் போதல் - சடங்கான பெண்ணை கூட்டிக்கொண்டு எங்கே போவதெனத் தெரியாமல் நடுத்தெருவில் கதறுதல் – தீட்டு மனுசங்களுக்குதான் சாமிக்கு இல்ல என மனித நேயமிக்க மனிதர்கள் சிலர் அரவணைத்துக் கொள்ளுதல். 

3. வளர்ச்சிக் குன்றிய மனிதருக்கு பிறக்கும் குழந்தை அவரைப் போலவே இருக்கிறதென மகிழும் முன்னாள் பாலியல் தொழிலாளித் தாய்.

* எட்டு வருடங்களாய் பனிரெண்டு மணி நேரங்கள் நின்றபடியே வேலை பார்த்ததில் இரண்டு கால்களும் முழுதாய் வெரிக்கோசு நோய் தாக்கி அதே ரங்கநாதன் தெருவில் மடியும் நடுத்தர வயதுக்காரர்.

*முப்பது வருடங்களாய் மனிதர்களை மட்டும் நம்பி ரங்கநாதன் தெருவில் கடைபோட்ட கண் தெரியாத முதியவர்.

* பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காமல் நகராட்சிக் கக்கூஸை ஆக்ரமித்து செல்வந்தனாகும் நடுத்தர வயதுக்காரர்.

* பழைய சட்டைகளை துவைத்து புதிதாக லேபிள் ஒட்டி பேக்கிங் செய்து பத்து ரூபாய்க்கு விற்கும் இளைஞர்.

* வெளியூரில் அண்ணன் வேலை செய்யும் கடையின் பெயர் போட்ட பையை தயக்கத்தோடு கேட்டு வாங்கி குதூகலிக்கும் சிறுமி..

அங்காடித் தெரு - வாழ்வின் பிரதிபலிப்பு.

1 comment:

  1. வித்தியாசமான பகிர்வு மற்றும் விமர்சனம்.. அங்காடித்தெருவில் வாழ்கிறது... எழுத்துக்கள்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete