Search This Blog

Monday, March 03, 2014

பெண்கள் - புதிய தொழில் முனைவோர்களுக்கு..?

இது பெண்களுக்கான காலம். மத்திய, மாநில அரசாங்கங்களும் பொதுத் துறை வங்கிகளும் பெண்களின் முன்னேற்றத்தை மனதில்கொண்டு தொழில் கடன் தருவதிலிருந்து உரிய மானியம் பெற்றுத் தருகிறவரை பலவிதமான சலுகைகளையும் முன்னுரிமைகளையும் நிறையவே வழங்கி வருகின்றன. ஆனால், என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பது பல பெண்களுக்குத் தெரிவதில்லை.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டு நிறுவனம்  (எம்.எஸ்.எம்.இ), சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களைச் செய்ய விரும்பும் பெண்களுக்குப் பொதுத்துறை வங்கிகளில் தொழில் கடன் வாங்க உதவுகிறது. அப்படி வாங்கும்போது பெண்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் !

புதிய தொழில் முனைவோர்களுக்கு..?

''புதிதாகத் தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு புதிய தொழில்முனைவோர் அபிவிருத்தித் திட்டம் மிக உகந்ததாக இருக்கும். இந்தத் திட்டத்தில் கடன் பெற ஆண்களுக்கு 21 - 35 வயது எனில், பெண்கள் 21 - 45 வயது வரம்பில் கடன் பெறலாம். இந்தத் திட்டத்தில் 50 சதவிகிதம் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடன் தொகையாக ரூ.5 லட்சம் முதல் 1 கோடி வரை வழங்கப்படுகிறது. தொழில் தொடங்குபவர்கள் தங்கள் பங்காக (மார்ஜின் தொகை) 5 சதவிகித பணத்தைத் தரவேண்டும். 

வேலையில்லாதவர்களுக்கு..!
வேலையில்லா இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி சார்ந்த வாய்ப்புகளுக்கு ரூ.5 லட்சமும், சேவை சார்ந்த வாய்ப்புகளுக்கு ரூ.3 லட்சமும் கடன் தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்களுக்கு வயது வரம்பு 18 - 35 வயது எனில்,  பெண்களுக்கான வயது வரம்பு 18 - 45 ஆகும். தொழில் தொடங்குபவர்கள் தங்கள் பங்காக (மார்ஜின் தொகை) 5 சதவிகித பணத்தைத் தரவேண்டும்.  

 

சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்! 

பாரதப் பிரதமர் சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்துக்கு ரூ.5,000 முதல் 25 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்படுகிறது. இதுவே சேவைத் துறைக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்துக்கு ரூ.10 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்படுகிறது. இந்த சுயவேலை வாய்ப்புத் திட்டத்துக்கு 18 வயதுக்கு மேல் இருக்கவேண்டும். தொழில் தொடங்கும் பெண்கள் தங்கள் பங்காக 5 சதவிகித தொகையைச் செலுத்த வேண்டும்'.

பெண்களுக்கான கடன் திட்டங்கள்!  

 

இரண்டாவதாக, சமையலறையை நவீனமாக்க வழங்கப்படும் பி.எம்.பி கிச்சன் மார்டனைசேஷன் லோன், நிரந்தரச் சம்பளம் வாங்கும் பெண்கள், சுயதொழில் செய்யும் பெண்கள், தொழில் செய்யும் பெண்களுக்குத் தரப்படுகிறது (ஆண்டு நிகர வருமானம் 3 லட்சத்துக்கு அதிகமாக இருக்க வேண்டும்). குறைந்தபட்ச வயது 21, அதிகபட்சம் வரம்பு, சம்பளம் வாங்கும் பெண்களுக்கு 60 வயது. மற்றவர்களுக்கு 55 வயது. மார்ஜின் தொகை 15% முதல் 20%. குறைந்தபட்ச கடன் தொகையாக ரூ.50,000மும் அதிக பட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும். வட்டி விகிதம் 12.25%

மூன்றாவதாக, காப்பகங்களை விரிவுபடுத்தவும் கடன் வழங்கப் படுகிறது. இந்தக் கடன்பெற பட்டதாரியாக இருக்கவேண்டும். வயது வரம்பு 21-55. குறைந்தபட்ச கடன் தொகை ரூ.50,000. கிராமம் மற்றும் சிறு நகரங்களுக்கு ரூ.2.50 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. மேலும், நகரம் மற்றும் மெட்ரோ நகரங்களுக்கு ரூ.5 லட்சம் வரையில் வழங்கப்படுகிறது. மார்ஜின் தொகை ரூ.1 லட்சத்துக்கு 15 சதவிகிதமும், ரூ.1 லட்சத்துக்குமேல் வழங்கப்படும் தொகைக்கு 23 சதவிகிதமுமாக உள்ளது.  வட்டி 12.25%.

நான்காவது திட்டமாக, பியூட்டி பார்லர்கள், சலூன்கள் அமைக்க கடன் வழங்கப்படுகிறது. இதற்கு வயது வரம்பு 20-60 வயது. குறைந்தபட்ச கடன் தொகை ரூ.50,000. அதிகபட்ச கடன் தொகையாக ரூ.10 லட்சம் வரையில் வழங்கப்படும். அதேசமயம் கிராமம் மற்றும் சிறிய நகரங்களுக்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. மார்ஜின் தொகையாக ரூ.2 லட்சம் வரையிலான கடனுக்கு 15 சதவிகிதமும், ரூ.2 லட்சத்துக்கு மேலான கடன் தொகைக்கு 25 சதவிகிதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் 12.25 சதவிகிதமாகும்.

சே.புகழரசி

No comments:

Post a Comment