Search This Blog

Sunday, March 29, 2015

பல்பு! - உலகை மாற்றிய புதுமைகள்!

சூரிய ஒளியை வைத்து பகல் பொழுதை ஓட்டிய ஆதிமனிதன், இரவில் இருட்டுக்கு பயந்து மரப்பொந்துகளில் ஒளிந்துகொண்டான். இரவில் வெளிச்சம் இருந்தால் மட்டுமே தன்னால் எதையும் செய்ய முடியும் என்கிற கட்டாயத்தை உணர்ந்தான்.

ஆரம்பக் காலத்தில் தீயிலிருந்து கிளம்பும் வெளிச்சத்தைப் பயன்படுத்தி, இருட்டை விரட்டினான். பிறகு சிம்னி விளக்கை வைத்து சமாளித்தான். ஆனால், அறிவியல் வளர்ச்சி அடைந்த பின்புதான், மனிதன் தொழில்நுட்ப உதவியைத் தேடினான். இரவில் வெளிச்சம் தரும் ஒரு கருவியைக் கண்டுபிடித்தாக வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டதன் விளைவுதான், ஒளிரும் பல்புகள் உருவாக காரணம்.


1802-ம் ஆண்டு முதல் முதலில் ஹம்ப்ரி டாவி என்பர்  ஒளிரும் பல்பு ஒன்றைக் கண்டறிந்தார். ஆனால் அது நீண்ட நேரம் உழைக்கிற மாதிரியில்லை. அதன்பின்னர் இருபது ஆராய்ச்சியாளர்கள் பல்பு குறித்த ஆராய்ச்சியில் இறங்கினர். ஒவ்வொருவரின் கண்டுபிடிப்பிலும் சில விஷயங்கள் முழுமையடையாமலே இருந்தது.

1879-ம் ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசன் கண்டிபிடித்த பல்புதான் அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக அமைந்தது. இந்தக் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை வாங்கினார் எடிசன். அந்த பல்பு ஏறக்குறைய 1,200 மணி நேரம் ஒளிரக்கூடிய பல்பாக இருந்தது.

1880-க்கு பிறகு எடிசன் கம்பெனி வர்த்தக ரீதியில் பல்புகளைத் தயாரிக்கத் துவங்கியது. பின்னர் பல்புகள் காலத்துக்கு ஏற்றவாறு உருமாறத் துவங்கின. ஃப்ளோரசன்ட் பல்புகள், டங்க்ஸ்டன் இழை பல்புகள் துவங்கி, இன்று எல்இடி பல்புகள் வரை அனைத்தும் உருவாக அடிப்படை காரணமாக இருந்தது தாமஸ் ஆல்வா எடிசன் கண்டிபிடித்த பல்புதான்.

கம்பிகளின் வழியே மின்சாரம் பாய்ந்து ஒளியை உமிழ்ந்த காலம் மாறி, இன்று கையில் உள்ள செல்போனில் கம்பியில்லாமல் ஒளியை தரும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. மேலும், சூரிய ஒளியை வாங்கி எரியும் சோலார் பல்புகளும் வந்துவிட்டன.

இன்றைக்கும்கூட மின்சாரம் தடைபட்டு, பல்புகள் செயல்படாமல் இருட்டில் தவிக்கும் மனிதர்கள், ஆதிகாலத்தில் மனிதன் பட்ட அவஸ்தையை உணரத் தவறுவதில்லை.

ச.ஸ்ரீராம்

No comments:

Post a Comment