Search This Blog

Sunday, March 29, 2015

இணைய தளங்கள்!

கணினி கண்டுபிடிக்கப்பட்டபின் நாம் செய்கிற பல விஷயங்களை அந்த இயந்திரத்தைக் கொண்டு செய்ய முடியும் என்கிற நிலை உருவானது. அதுமட்டுமல்ல, நாம் எழுதி வைத்திருக்கும் பல விஷயங்களைப் பத்திரமாக வைத்துப் பாதுகாக்க கணினி மிகப் பெரிய அளவில் உதவியது. இருந்தாலும், ஏதோ ஒரு காரணத்தினால், இந்தத் தகவல்கள் அழிந்துவிட்டால்..? இந்தக் கேள்விக்கு ஒரு தீர்வாக, நாம் எழுதி வைக்கும் அத்தனை விஷயங்களையும் இணையத்தில் வைத்துவிட்டால், யாராலும் அழிக்க முடியாது. வேண்டும் என்கிறபோது அந்தத் தகவலை நாம் பார்த்துக் கொள்ளலாம் அல்லவா?
 இந்த ஒரு நோக்கத்தில்தான் இணையங்களை உருவாக்கும் முயற்சிகள் 1980-களுக்குப் பிறகு அரங்கேறத் தொடங்கின. கணினிகள் பிரபலமான காலத்தில் டிம் பெர்னர்ஸ் மற்றும் லீ ஆகியோர் இணையதளங்களுக்கான ஆராய்ச்சியைத் துவங்கினர். தங்களது பெர்சனல் தகவல்களை எந்த இடத்தில் இருந்தபடியும் பயன்படுத்த வேண்டும் என்பதே அவர்கள் செய்த ஆராய்ச்சியின் நோக்கமாக இருந்தது.

பத்து வருடங்கள் முடிவில் அவர்கள் ஹைப்பர் டெக்ஸ்ட் டிரான்ஸ்ஃபர் புரோட்டோகால் (HTTP) மூலம் இணையதளங்களை உருவாக்கினர். 1990-ம் ஆண்டு முதல்முறையாக இது இலவசமாகப் பயன்பாட்டுக்கு வந்தது. இதன்மூலம் மக்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், ஒரு தகவல் உடனடியாகப் பதிவேற்றப்படவும், அதனைத் தெரிந்துகொள்ளவும் உதவியாக இருந்தது.

இதே காலகட்டத்தில் தேடுதல் தளங்களும் உருவாக்கப்பட்டன. இணையதளங்கள் தரும் செய்தியை ஓர் இணையதளம் தேடி தரும் அளவுக்கு இணையதளங்கள் வேகமாக வளர்ந்தன. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் செய்திகளையும், தகவல்களையும் பெறலாம் என்பதையும், நமக்குத் தேவைப்படும் செய்தியை தெரிந்துகொள்ளக் காத்திருக்கத் தேவையில்லை என்பதையும் இந்த இணையதளங்கள் சாத்தியப்படுத்தின.

இணையங்களின் வளர்ச்சியினால் உலகக் கோப்பை காலிறுதியில் இந்திய அணியின் வெற்றியைப் பார்க்க தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக காத்திருக்க வேண்டியதில்லை. நினைத்தபோது தெரிந்துகொள்ளலாம். ஒபாமா என்ன பேசினார் என்பதைத் தெரிந்துகொள்ள செய்தித்தாள்களுக்காக காத்திருக்காமல், உடனுக்குடன் இணையத்தில்  தெரிந்துகொள்ளாலாம். இந்த வாய்ப்புகள் இணைய தளம் இல்லாமல் சாத்தியம் இல்லை. ஒருவரை அப்டேட்டாக மாற்றியதில் இந்த இணையதளங்கள் இன்றியமையாதவை!

.ஸ்ரீராம்

1 comment:

  1. இணையதளங்கள் -- தொழில் நு ட்பத்தின் அடுத்த கட்டம்

    ReplyDelete