Search This Blog

Wednesday, August 18, 2010

'தேநீர் விருந்து' - சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கோலாகலமாக நடந்து
முடிந் திருக்கின்றன.இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் 'தேநீர் விருந்து' நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது!

இந்த 'தேநீர் விருந்து'நிகழ்ச்சிகள்,சுதந்திரம் மற்றும் குடியரசு தினத்தில் அரசின் சார்பில் நடத்தப்படுவது வழக்கம்.இந்த தினங்களில் மத்திய அரசில் ஜனாதிபதியும், மாநில அரசுகளில் கவர்னரும் 'தேநீர் விருந்து' நிகழ்ச்சியை நடத்துவார்கள். எப்போது இந்த நடைமுறை அமலுக்கு வந்தது என்பது தெரியவில்லை.மத்திய அரசின் வழிகாட்டுதலில் இந்த விருந்து நிகழ்ச்சிகள்,எல்லா மாநிலங்களிலும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் இந்த 'தேநீர் விருந்து' களை கட்ட... 'இது எதற்கு? இதனால் என்ன பயன்? இதற்காக எவ்வளவு செலவு?'

எல்லாம் நம்ம வரி பணம் தான்.முன்று வேலை உண்ண உணவு இல்லாமல், கழிப்பறை வசதி இல்லாமல்,படுக்க இடம் இல்லாமல்,நல்ல குடிநீர் இல்லாமல் எத்தனை பேர் நம்ம தேசத்தில் இருப்பார்கள் என தெரியவில்லை. என்னை பொறுத்த வரை இது மாதரி ஒரு வெங்காயமும் தேவை இல்லை.

மேலே கொடுத்துள்ள படம் நம்ம தமிழ் நாட்டின் செலவு கணக்கு.இது போல அனைத்து மாநிலங்கள் சேர்த்தால் அம்மாடியோ !நாடு தாங்காது..அது போக நம்ம பிரதமர் குடுக்கும் விருந்து தனி ..

நன்றி : விகடன் குழுமம்

1 comment:

  1. நம்ம தமிழ் நாட்டுக்கு மட்டும் இவ்வளவுன்னா.. மொத்த இடியாவுக்கும்.. யப்பா.. நினச்சாலே தலைய சுத்துதே..

    ReplyDelete