Search This Blog

Wednesday, August 18, 2010

வம்சம் - என் விமர்சனம்

பழிக்கி பழி, ஒரு கண்ணுக்கு மற்றொரு கண்ணை புடிங்கினால் மொத்த உலகமும் குருடாவது தான்..இது தான் படத்தின் மைய கரு..


ஒரு  இயக்குனருக்கு முதல் படமே மிக பெரிய  வெற்றிப்படமாக அமைந்து விட்டால்,  இரண்டாவது படம்  மேல் எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கும். சில பேர் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருப்பர். ஆனால், பல பேர் சறுக்கி விழுவர். பாண்டியராஜன் என்ன ஆனார் என்பதை கடைசியில் சொல்லுகிறேன்.


எந்த ஊரிலும் இல்லாத மாத்ரி அந்த ஊரில் திருவிழா அவ்வளவு விமர்சையாக கொண்டாட படுகிறது. அந்த ஊரில் நடக்கும் அதனை பகை மற்றும் வெறுப்பு ஆகியவைகளை போலீஸ் முலம் மிக குரிய நேரத்தில் சொல்லியது மிகவும் பாராட்டுக்குரியது.திருவிழாவும், அதை வைத்து அங்கு வருடா வருடம் நடக்கும் கொலைகளையும், அப்படி கொலை செய்வதற்கான காரணம். அப்படி செத்தவர்களுக்கு கிடைக்கும் மரியாதை என்று களம் விரிவு அடைகிறது.. திருவிழாவுக்கு போகிறது காட்சி.. இதில் எப்பாடு பட்டாலும் பிற்பாடு கேடதவர் என்ற வம்சா வழியில் வந்த அறிவுநதி பெயர் அறிவிக்கபடுகிறது. அப்போ நம்ம நாடோடிகள் ஜெய பிரகாஷ் " இன்னைக்கு இவன கொல்லுங்கட" சொல்லுகிறார். அப்போ ஓட ஆரம்பிக்கிற படம் இடைவேளை வரை விரைவாக செல்கிறது . 


ஊரில் எல்லா விஷயத்திலும் தான் முதலாவதாக இருக்க வேண்டும் என்பதற்காக நஞ்சுன்டான் மாஓசி வம்சத்தை    சேர்ந்த சீனிகண்ணு, தனக்கு போட்டியாய் இருக்கும் எப்பாடு பட்டாவது பிற்பாடு கெடாதவர் வம்சத்தை  சேர்ந்த கிஷோரை வஞ்சகமாக விஷம் வைத்து கொல்ல, இறந்து போன  கணவன் போல தன் மகனும் ரௌடியாக மாறி இறக்க கூடாதென  அஹிம்சையே போதித்து வளர்க்கிறார் அவன் அம்மா இப்படி நீள்கிறது படத்தின் பிளாஷ் பேக்.


இந்த கதை பேரரசு, ஹரி வகையறாக்களிடம் கிடைத்திருந்தால் ஸ்க்ரீன் முழுக்க ரத்த சிதறல்களாக இருந்திருக்கும் ஆனால் பாண்டிராஜ் இந்த கதைக்கு கொடுத்திருக்கும் வித்தியாசமான  ட்ரீட்மென்ட் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. முக்கியமாக  செல்போனை மையமாக வைத்து வரும்  காதல் காட்சிகள் எல்லாம் அருமை ( மடமை ). காதல் காட்சிகளில். “அசினை” அருளும், சுனைனாவும், மாற்றி மாற்றி தூதுவிட்டுக் கொள்ளும் இடங்கள் இளமை. இரண்டாம் பாதி, கொஞ்சம் நீளமான பிளாஷ் பேக்கும், துரதல்களுமாய் சென்றாலும் ஓகே ரகம்.

அருள்நிதி :  நல்ல உயரம்.. விஷால் மாத்ரி ஆக்சன் வருது.. வசன உச்சரிப்பு சரி இல்லை.

சுனைனா : இவர் நடித்ததில் நல்ல படம். அருமையாக நடித்துள்ளார். அதுவும் சாணி கரைத்து அடிக்கும் பொது, மற்றும் தந்தை இறக்கும் பொது நன்றாக நடித்துள்ளார். போன் இல்லமாலேயே, தூரத்தில் இருக்கும் தனது தோழியே  ஒரு   மாதிரி குரல் கொடுத்து கூப்பிடும் காட்சி அட்டகாசம். 

ஜெய ப்ரகாஷ் : மனசில் வன்மத்தை வைத்து கொண்டு, வெளியே புன்னகைக்கும் அவரது நடிப்பு அபாரம். மனுஷன் வாழ்த்திருக்கிறார் அந்த பாத்திரமாக..

பாண்டியராஜ் : துரத்தும் எதிராளிகளிடம் இருந்து தப்பிக்க, அவர்களை திசை திருப்பி வாய்காலில் இறங்க வைத்து, பின், வேலி முள் சுருளை தண்ணீரில்  போட்டு இன்னொரு பக்கத்தை மின்சார கம்பியின் மேல்  போட்டு விடுவதாக  ஹீரோ மிரட்டி தப்பிக்கும் இடத்தில் பாண்டிராஜின் புத்திசாலித்தனம் மிளிர்கிறது. 

இசை:  பாடல்கள் நல்லா இல்லை.. பின்னிணி இசை அருமை..  

படத்தின் பிடிக்காத விஷயம் அந்த கிளைமாக்ஸ் சண்டை.. அப்படியே சண்ட கோழி மாத்ரி.. தவிர்க்க முயற்சி பண்ணி இருக்கலாம்.

படத்தில் எனக்கு  பிடித்த வசனம் உங்களுக்காக இங்கே :

  • கிராமத்தில் வாழ்ந்த வாழ்கை கல்யாணம் மற்றும் சாவில் தான் தெரியும் அந்த மனிதன் எப்படி வாழ்த்தான் என.
  • திருவிழா என்பது சாதி, பேதம் மறந்து ஊரோட கொண்டாட வேண்டியது..
  • மன்னிகிறதும், மறக்கிறது மனித தன்மை..
  • ஒரு ஊர்ல சமுதாயம் சரியில்ல்னே அந்த ஊர் தலைவன், ஆசிரியர் சரி இல்லை என்று அர்த்தம் .
  • அடிக்குறது, வெட்டுறது மற்றும் கொலை பண்ணுவது மட்டும் வன்முறை இல்லை, மிரடுறதும் வன்முறை தான்.
  •  பொறுமையா இருந்த இந்த உலகத்துல பயந்தவன் என்று அர்த்தம். 
முதல் படத்தில் இருந்து வித்தியாசமான கதை சொல்லி,என்னை பொறுத்த வரை பாண்டியராஜன் சறுக்கியே உள்ளார்.


2 comments:

  1. எவ்வளு பார்திருப்பம் இதையும் பர்த்துடுவமே

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி தோழரே

    ReplyDelete