Search This Blog

Sunday, July 27, 2014

ஸியோமி எம்.ஐ.3

குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் என்கிற தாரக மந்திரத்தை வைத்து பெரும் நிறுவனங்களுக்கு போட்டி தர வந்திருக்கிறது ‘ஸியோமி’ (Xiaomi) என்னும் சீன நிறுவனம். இது சீனாவின் ‘ஆப்பிள்’ என்று அழைக்கப்படுகிறது. காரணம், ‘ஆப்பிள்’ போல தனது ஸ்மார்ட் போன்களில் சிறந்த தரத்தையும் தோற்றத்தை யும் தருவதனால் சீனர்கள் இப்படி பெருமையாக அழைக்கிறார்கள். ஆனால், ஒரு ஆப்பிள் போனின் விலையில் குறைந்தபட்சம் நான்கு ஸியோமி ஸ்மார்ட் போன்களை வாங்கிவிடலாம்.

இப்படிப்பட்ட ஸியோமி நிறுவனம் தனது மார்க்கெட்டை இந்தியாவில் தொடங்க இருக்கிறது. முதல்கட்டமாக தனது ‘எம்ஐ3’ என்கிற ஸ்மார்ட் போனுக்கான முன்பதிவைத் தொடங்கி இருக்கிறது. இந்த போன் 5 இன்ச் அகலமான 1080X1920 பிக்ஸல் 441 ppi என்னும் மிகத் துல்லியமான HD டிஸ்ப்ளேயைக் கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட் போன் குவால்காம்
(Qualcomm) MSM8274AB Snapdragon 800 Quad-core 2.3GHz Krait 400 பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது.


மேலும், ‘Adreno 330’ என்ற கிராஃபிக்ஸ் பிராசஸரைக் கொண்டுள்ள இந்த போன், 2GB ரேமைக் கொண்டு இயங்குகிறது. 16GB இன்டர்னல் மெமரி வசதியோடு, ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘MIUI’ வெர்ஷன் 5-யைக் கொண்டு இயங்குகிறது. ‘MIUI’ என்பது ஸியோமி நிறுவனத்தின் பிரத்யேக ஓஎஸ் ஆகும்.


 
ரூபாய் 13,999 விலையில் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் போன், 13 மெகா பிக்ஸல் பின்புற கேமராவை LED ப்ளாஷ் வசதியோடு பெற்றுள்ளது. இந்த கேமரா மூலம் முழுநீள HD வீடியோவை ரிக்கார்டு செய்யலாம். தவிர, 2.0 மெகாபிக்ஸல் முன்புற கேமராவையும் பெற்றுள்ளது.
3G, GPRS/EDGE, WiFi, ப்ளூடூத் போன்ற அடிப்படை வசதிகளோடு வரும் ஸியோமி எம்ஐ3, 3050mAh மிகச் சக்திவாய்ந்த பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. 25 மணிநேரம் வரை டாக்டைம் மற்றும் 500 மணி நேரம் வரை ஸ்டாண்ட்-பையைத் தரும். இந்த போன் மூலம் 21 மணி நேரம் 3G நெட்வொர்க் மூலம் பிரவுஸிங் செய்யலாம்.

தற்போதே ஒரு லட்சம் முன்பதிவுகளைத் தொட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் பல சலசலப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment