Search This Blog

Sunday, July 13, 2014

தடைக்கல்லும் படிக்கல்லே - ஆல்ட்ரின்!

உலகம் எப்போதும் முதலில்  வருபவரையே ஞாபகத்தில் வைத்திருக்கும். இரண்டாவதாக வருபவரை எளிதில் மறந்துவிடும். என்றாலும், சாதித்த விஷயத்தில் கிஞ்சித்தும் குறையாதவர்களாகவே அவர்கள் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு சாதனை மனிதர்தான் ஆல்ட்ரின்.

930-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் பிறந்தார் ஆல்ட்ரின். படிப்பில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய ஆல்ட்ரினுக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என ஆசை. ஆனால், அவரது அப்பா அவரை பொறியியல் படிப்பில் சேர்த்துவிட்டார். பொறியியல் படித்து முடித்துவிட்டு, விமானப் படையில் சேர்ந்தார். கொரிய போரில் தனியாக விமானத்தில் பறந்து எதிரி விமானங்களைத் தூள்தூளாக்கினார்.


அதன்பின் நாசாவில் சேர்ந்த ஆல்ட்ரின்,  விண்வெளிக்குச் செல்லும் பயணக் குழுவில் பல மாத சோதனைக்குப் பின் தேர்வு செய்யப்பட்டார். 1966-ம் ஆண்டில் 5 மணிநேரம் விண்வெளியில் நடந்தார் ஆல்ட்ரின். விண்வெளியில் ஒரு மனிதர் நடந்த அதிகபட்ச தூரமாக அப்போது அது கருதப்பட்டது.

பின்னர் அப்போலோ 2 விண்கலத்தில் ஆம்ஸ்ட்ராங்குடன் நிலவுக்குச் செல்லும் வீரராகத் தேர்வானார்.  ஆல்ட்ரின்தான் முதலில் நிலவில் கால்வைத்து இறங்குவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவரது ஆடையில் ஏற்பட்ட பழுது காரணமாக இரண்டாவது நபராக நிலவில் கால் வைத்தார். ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்வைத்த அடுத்த சில நொடிகளில் ஆல்ட்ரினும் கால் வைத்துவிட்டாலும், உலகம் ஆம்ஸ்ட்ராங்கை நினைவில் வைத்துக்கொண்ட அளவுக்கு ஆல்ட்ரினை வைத்துக்கொள்ளவில்லை.

இதனால் ஆல்ட்ரின் மனமுடைந்து போனாலும், சாதனையாளன் என்றும் முடங்கிப்போக மாட்டான் என்று அதிலிருந்து மீண்டு வந்தார். ரிட்டர்ன் டு எர்த் என்ற சுயசரிதை மூலமும், பல சுயமுன்னேற்ற நூல்கள் மூலமும் சோம்பிக்கிடந்த அமெரிக்க இளைஞர்களை புதிய சாதனை படைக்கத் தட்டியெழுப்பினார்.

நீங்கள் முதலாவதாக வருகிறீர்களோ, மூன்றாவதாக வருகிறீர்களோ, சாதனை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஆல்ட்ரின் வாழ்க்கை நிச்சயம் ஆல் இஸ் வெல் சொல்லும்!

No comments:

Post a Comment