Search This Blog

Tuesday, July 29, 2014

கீரையும் சத்துக்களும்!


ஆரோக்கிய உணவில் முதலிடம் வகிப்பது கீரைதான். இதை உணவில் தினமும் சேர்த்து வந்தால் நோய் நொடி அண்டாது. ஒவ்வொரு கீரைக்கும் உள்ள சத்துக்களை காண்போம்.

முருங்கைக் கீரை - விட்டமின் ஏ,பி,சி, கணிசமான அளவு இரும்புச் சத்து உள்ளது. செரிமானம் குறைந்த குழந்தைகள், இதய நோயாளிகள் இரவில் சாப்பிடக் கூடாது. கண் பார்வையைத் தெளிவாக்கும் குணம் கொண்டது. தாது பலம் பெருகும்.

வெந்தயக் கீரை- இரும்புச் சத்து, விட்டமின் ஏ,சுண்ணாம்பு சத்து கொண்டது. வளரும் குழந்தைகளுக்கும் மூல வியாதிக்காரர்களுக்கும் நீரிழிவு நோயாளிக்கும் ஏற்றது. சூட்டைத் தணித்து உடலுக்கு வலுவூட்டும்.

அகத்திக் கீரை- விட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்பு சத்து கொண்டது. வாய் மற்றும் வயிற்றில் புண் உள்ளர்வர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உடனடி நிவாரணம் கிடைக்கும். மற்ற மருந்துகள் சாப்பிடும் போது இதைச் சாப்பிடக் கூடாது. வயதானவர்கள் சூப் பதத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும்.

மணத்தக்காளி- விட்டமின் பி12, மற்றும் ஏரி போப்வின் கொண்டது. வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு நல்லது, உடல் சூட்டைக் குறைக்கும். காயத்தை ஆற்றும். வயிற்றில் பூச்சிகள் உருவாகாமல் தடுக்கும்.

வல்லாரை- செரடோனியம் கொண்டது. பள்ளிக் குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறையாவது செய்து தர வேண்டும். மூளைக்கு வலுவூட்டி நினைவாற்றலைப் பெருக்கும் தன்மை கொண்டது.

புதினா- இரும்பு, சுண்ணாம்பு சத்து, விட்டமின்சி, விட்டமின் டி கொண்டது, ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது. மூல நோய், தொண்டையில் ரணம். குடல் புண் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது. பசியையும் நாக்கின் ருசியையும் தூண்டக் கூடியது. செரிமானத்துக்கு உதவும்.

கொத்துமல்லி- விட்டமின் பி, பி2 மற்றும் விட்டமின் சி கொண்டது. எல்லோருக்கும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். நாவின் ருசியைத் தூண்டும்.

முளைக்கீரை- தாது உப்புகள் மற்றும் விட்டமின் ஏ கொண்டது. உடல் தளர்ச்சியைப் போக்கும். சதைப் பிடிப்பு இல்லாதவர்கள் அடிக்கடி சாப்பிடலாம். ஆஸ்துமா நோயாளிகள். தலையில் நீர் கோத்து இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

சந்திரா

No comments:

Post a Comment