Search This Blog

Sunday, August 31, 2014

ஹென்றி ஃபோர்டு

எல்லோருக்குமே காரில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், இவருக்கோ எல்லோரும் காரில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை! அப்படிப்பட்ட ஆசைதான் இவர் மிகப் பெரிய கார் நிறுவனத்தை உருவாக்க காரணமாக இருந்தது. ஹென்றி ஃபோர்டு எனும் அந்த மனிதர் இந்தச் சாதனையை செய்வதற்குமுன், தாண்டிவந்த தடைகள் பல ஆயிரம்.

ஹென்றி ஃபோர்டு 1863-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் பிறந்தார். சிறுவயதில் இவரது தந்தை, பண்ணையில் வேலைக்குச் செல்வது பிடிக்காமல், இவரே ஒரு மோட்டார் கம்பெனியில் வேலைக்குச் சென்றார். மோட்டார் கம்பெனியில் வேலை பார்க்க உனக்குத் தகுதியில்லை என ஃபோர்டை சிறிது காலத்திலேயே அந்த நிர்வாகம் வெளியேற்றியது. அடுத்தடுத்த வாய்ப்புகளும் இவருக்குத் தோல்வியைத்தான் கொடுத்தன. ஆனால், ஃபோர்டுக்கு இயந்திரங்கள் மீதும், மோட்டார்கள் மீதும் இருந்த காதல் குறையவே இல்லை.


ஒரு கண்காட்சியில் பெட்ரோலில் இயங்கும் நீராவி பம்பை பார்த்தார். இதனை ஏன் வாகனங்களில் பொருத்தக்கூடாது என்று யோசித்தார். உதிரிபாகங்கள், பழைய உலோகங்களையும் கொண்டு அவரது வீட்டிலேயே ஒரு வாகனத்தை வடிவமைத்தார். இந்த வாகனத்தை ஓட்டி பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்க, கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து வீட்டின் சுவற்றை இடித்துத் தள்ளி வேகமாகத் தன் வாகனத்தை இயக்கினார்.

எளியவர்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் டி மாடல் காரை தயாரித்தார். அமெரிக்காவில் குறைந்த விலையில் கார்களை விற்று, கார் இல்லாதே அமெரிக்கரே இல்லை என்ற நிலையை உருவாக்க முதல் முயற்சியை வெற்றிகரமாக எடுத்தார்.

கார் தயாரிப்பில் அடுத்தடுத்து பலபேர் சேர்ந்து ஒவ்வொரு பகுதியாக இணைக்கும் அதிவேக அசெம்ப்ளி லைன் முறையின் மூலம் பல லட்சம் கார்களை உருவாக்கி சாதித்தார். இதன் மூலம் மற்ற நிறுவனங்களைவிட குறைந்த விலையில், குறைந்த நேரத்தில் கார்களை தயாரித்து அளிக்க முடிந்தது.

கோடி கோடியாக பணத்தை சேர்த் தவர், ஃபோர்டு அறக்கட்டளையை நிறுவி மக்களுக்கு உதவினார். உங்கள் கனவும் விடாமுயற்சியும் பலமாக இருந்தால் ஹென்றி ஃபோர்டு மாதிரி, நீங்களும் தடைகளைத் தாண்டி வரலாற்றில் நிலைத்து நிற்கலாம்!

No comments:

Post a Comment