Search This Blog

Tuesday, August 12, 2014

ஃப்ளிப்கார்ட் vs அமேஸான்!

அயர்ன்பாக்ஸிலிருந்து ஃப்ரிட்ஜ் வரை எந்தப் பொருளாக இருந்தாலும், அதை வாங்கும்முன் கடை கடையாக ஏறியிறங்கி, ஒன்றுக்கு பத்துமுறை விசாரித்து வாங்குவதுதான் நம் வழக்கம். ஆனால், இன்றைக்கு இ-காமர்ஸ் வந்தபின் வீட்டில் இருந்தபடியே எல்லா பொருட்களையும் வாங்குகிற நிலைமை உருவாகிவிட்டது. இனிவரும் காலத்திலும் பலரும் இ-காமர்ஸ் மூலமே பொருட்களை வாங்க வாய்ப்பிருப்பதால், இந்தத் துறையில் இருக்கும் நிறுவனங்களிடம் பெரும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, ஃப்ளிப்கார்ட் - அமேஸான் நிறுவனங் களிடையே ஜெயிக்கப் போவது நீயா, நானா என்கிற விஷயத்தில் கடும்போட்டி நடக்கிறது.  
 
ஃப்ளிப்கார்ட் ஒரு பில்லியன் டாலர் (ரூ.6,000 கோடி) நிதியைத் திரட்டியுள்ளது என்ற செய்தி மக்களை சென்றடை வதற்குள், அமேஸான் 2 பில்லியன் டாலர் (ரூ.12,000 கோடி) முதலீட்டை இந்திய வர்த்தக விரிவாக்கத்துக்காக ஒதுக்கிவிட்டது. இ-காமர்ஸ் நிறுவனங்களிடையே ஏன் இந்தப் போட்டி, இந்த நிறுவனங் களில் ஏன் இத்தனை பணத்தை முதலீடு செய்கிறார்கள், இந்தப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார் ?


 

‘‘இ-காமர்ஸ் நிறுவனங்களில் எக்கச்சக்கமாக நிதி திரண்டாலும், மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் அனைத்துமே தனது கடைசி காலாண்டு அறிக்கையில் நஷ்டத்தையே கண்டுள்ளன. இருந்தும் ஏன் இந்த நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிற  கேள்விக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் தரும் விளக்கங்கள் ஆச்சர்யமானவை.

ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற நிறுவனங்கள் நிதி திரட்டும்போது மொத்த வாடிக்கையாளர்கள் இத்தனை லட்சம் பேர் உள்ளனர்; அவர்கள் சராசரியாக ஆண்டுக்கு இவ்வளவு தொகையை எங்களிடம் செலவிடு கிறார்கள்; இவர்களது செலவு விகிதம் வரும் 5 ஆண்டுகளில் இவ்வாறு மாறலாம்; அப்படி மாறினால் எங்கள் நிறுவனம் இவ்வளவு லாபம் சம்பாதிக்கும் என்று சொல்லித்தான் நிதி திரட்டுகின்றன.

இ-காமர்ஸ் நிறுவனங்களின் இந்த விளக்கத்தை முழுக்க நிராகரித்துவிடவும் முடியாது. 1999 - 2000 ஆண்டுகளில் டாட் காம் என்ற இணையதள சேவையை ஆரம்பித்த பல நிறுவனங்கள் நஷ்டத்தில் காணாமல்போயின. ஆனால், இன்று இ-காமர்ஸ் துறையும் அப்படி நொடிந்துபோகும் என்று சொல்லிவிட முடியாது.

காரணம், மக்களின் வேலை, அவர்களால் ஷாப்பிங்குக்கு என்று தனி நேரம் ஒதுக்க முடியாத சூழல் போன்ற காரணங்களால் ஆன்லைன் வர்த்தகம் முக்கிய பங்காற்றுகிறது.

ரீடெயில் நிறுவனங்களும் இதைத்தான் செய்கின்றன. அவைகளும் அடக்க விலையில் சுமார் 3-4 சதவிகித லாப வரம்பில்தான் பொருட்களை விற்கின்றன. ஆனால், அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ரீடெயில் நிறுவனங்களைவிட 20% குறைவான விலையில் விற்கின்றன.

இதனைதான் நன்றாக கவனிக்க வேண்டும். இவர்கள் திரட்டும் நிதியில் இருந்துதான் இதுபோன்ற ஆஃபர்களை அள்ளி வழங்குகின்றன. இவர்களது நோக்கமே தொலைநோக்கில் லாபத்தை அடைவதுதான்.

தற்போது 1 பில்லியனை திரட்டியுள்ள ஃப்ளிப்கார்ட்டுமே இந்தப் பணத்தை அப்படிதான் செலவு செய்யும். 10,000 ரூபாய்க்கு விற்கும் ஒரு பொருளை இந்த நிறுவனம் 9,500 ரூபாய்க்கு தருகிறது எனில், இதுபோன்று அவர்கள் திரட்டிய நிதிகளால் மட்டுமே முடியும். அவர்கள் இதற்கு, நாங்கள் கடைகள் என்ற அமைப்புக்கு செலவு செய்வதில்லை; இதற்கு பயன்படும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவு என பல காரணங்கள் கூறினாலும் இதற்கு ஆகும் செலவு குறைவுதான். ஆனால், அதற்கும் அதிகமாக ஆஃபரில் பொருட்களை விற்பதற்கு இதுபோன்று திரட்டப்பட்ட நிதிதான் உதவுகிறது.

அமெரிக்க அமேஸானை இந்திய ஃப்ளிப்கார்ட்டால் சமாளிக்க முடியுமா என்பது அடுத்த சுவாரஸ்யமான கேள்வி. அமேஸானும் ஃப்ளிப்கார்ட்போல ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம்தான். அது சர்வதேச அளவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள, குறைந்த விலையில் ஆஃபர்களை வழங்கி வருகிறது.
இரு நிறுவனங்களுமே இந்தியாவின் மீது இலக்கு வைத்துள்ளன. ஏனெனில், உலகின் இரண்டாவது மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடு இந்தியா. இங்குதான் அவர்களால் அதிக வாடிக்கையாளர்களைத் தொடர முடியும்.

அமேஸான் போன்ற பெரிய சர்வதேச நிறுவனம் பணத்தால் இந்தியாவில் தன்னை விரிவுபடுத்தி கொண்டதால், ஃப்ளிப்கார்ட்டை வீழ்த்திவிடும் என்று இல்லை. இங்குள்ள போட்டியை சமாளிக்கும் உத்திகளை ஃப்ளிப்கார்ட் கையாளும்பட்சத்தில், அமேஸானுக்கு ஃப்ளிப்கார்ட் சவாலாக இருக்கும். உதாரணமாக, ஃப்ளிப்கார்ட் இப்போது எஃப்கார்ட் எனும் கொரியர் வசதியைக் கொண்டுள்ளது. இதுவும்கூட வாடிக்கையாளரின் நம்பிக்கையை அதிகரிக்கும் விஷயம்தான். இன்னமும் வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது பணம் தருவதைதான் அதிகம் விரும்புகிறார்கள். மற்ற வழிகளில் பணம் செலுத்தும் வசதிகள் இருந்தும், அதிகமானோர் நம்பிக்கை இன்மையால் இந்த முறையைத்தான் தொடருகிறார்கள். இது மாறினாலே இ-காமர்ஸ் துறையின் நம்பிக்கை அதிகரித்து, நிறுவனங்கள் லாபப் பாதைக்குள் பயணிக்கத் தொடங்கிவிடும்.

ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேஸான் மட்டும் இந்தப் போட்டியில் இல்லை. இதுபோன்று பல நிறுவனங்கள் உள்ளன. நீங்கள் ஃப்ளிப்கார்ட்டிலோ அல்லது அமேஸானிலோ ஆர்டர் செய்தால் அவர்களது இருப்பிலிருந்து டெலிவரி செய்வார்கள். ஆனால், ஸ்நாப்டீல் போன்ற சில நிறுவனங்கள் உங்கள் ஆர்டரை பொருள் தயாரித்த கம்பெனி களுக்கு அனுப்பிவிடும். அதற்கான கட்டணத்தை மட்டும் பெற்று கொள்ளும். பொருள் தயாரித்த கம்பெனிகளே உங்களுக்்கு பொருளை டெலிவரி செய்யும். அப்படி செய்வதில் ரிஸ்க் குறைவு. அதனால் இதுபோன்ற நிறுவனங்களும் நாளை தன்னை நிலைநிறுத்தி நிதி திரட்டும் வாய்ப்பு உள்ளது.

ஆன்லைன் வர்த்தகம் என்று வரும்போது உள்நாட்டு நிறுவனமா, வெளிநாட்டு நிறுவனமா என்று வாடிக்கையாளர்கள் பார்க்க மாட்டார் கள். குறைந்த விலை, அதிக சேவை தரும் நிறுவனம் எதுவோ, அதையே மக்கள் அதிகம் விரும்புவார்கள். ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வாடிக்கை யாளர்கள் விரும்புகிற வகையில் நடக்கும்பட்சத்தில், அமேஸான் நிறுவனத்துக்கு நிச்சயம் பெரிய போட்டியைக் கொடுக்கும்! 



No comments:

Post a Comment