Search This Blog

Thursday, January 16, 2014

ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம்...

ஏடிஎம் குறித்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்தால், டெக்னாலஜி வந்தும் அதனால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாத நிலை உருவாகும். 

இனிமேல் நீங்கள் நினைத்த நேரத்திலெல்லாம் ஏடிஎம்-க்குப் போய்ப் பணத்தை எடுக்க முடியாது. ஒரு மாதத்தில் ஐந்து முறைக்குமேல் நீங்கள் ஏடிஎம்-ல் பணம் எடுத்தால், அதற்குத் தனியாகப் பணம் கட்டவேண்டும். இப்படிச் செய்தால்தான் வங்கிகளின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என மத்திய ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்திருக்கின்றன இந்தியா முழுக்க உள்ள பல வங்கிகள்.

தற்போது எல்லா வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்குத் தனது ஏடிஎம் மூலம் எத்தனைமுறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், வாடிக்கையாளர் அல்லாதவர்களுக்கு ஐந்துமுறை மட்டும் இலவசமான பணப் பரிவர்த்தனை (பணம் எடுப்பதல்லாத செயல்பாடுகள் உள்பட) செய்யலாம் என்றும், அதற்குமேல் செய்தால் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தையும் வசூலித்து வந்தன. பணம் எடுக்க சுமார் 17 ரூபாயும் (வங்கிக்கு வங்கி இந்தக் கட்டணம் வித்தியாசப்படும்), பேலன்ஸ் தொகையைச் சோதித்தறிய சுமார் 6 ரூபாயும் கட்டணம் வசூலித்தன வங்கிகள்.

இந்த நடைமுறையை மாற்றி, இனி எந்த வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும் அவர் ஐந்துமுறை மட்டுமே கட்டணம் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். ஆறாவது முறை பணப் பரிவர்த்தனை செய்தால், ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் சுமார் 18 ரூபாய் கட்டணம்  வசூலிக்க வேண்டும் என்கிற புதிய நடைமுறையைக் கொண்டுவருவதில் எல்லா வங்கிகளும் தீவிரமாக இருக்கின்றன.


நஷ்டத்தில் இயங்குகின்றன! 

//''ஏடிஎம் இயந்திரங்களைப் பாதுகாக்க, பராமரிக்க அதிகம் செலவாகிறது. பெங்களூரு ஏடிஎம்-ல் பெண் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு இன்னும் கூடுதல் கவனத்தை ஏடிஎம் மையங்களின் மீது வங்கிகள் செலுத்தவேண்டி இருக்கிறது. இந்தியா முழுக்க உள்ள ஒரு லட்சம் ஏடிஎம் மையங்களைப் பராமரிக்க நான்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. இவ்வளவு செலவு செய்தும் சில ஏடிஎம்-கள் மூலம் நாள் ஒன்றுக்கு ஐந்து பணப் பரிவர்த்தனைகள் நடப்பதே அரிதாக இருக்கிறது. இதனால் வங்கிகள் பெரிய அளவில் நஷ்டப்படுகின்றன''//

No comments:

Post a Comment