Search This Blog

Thursday, February 21, 2013

அருள்வாக்கு - விலக்க வேண்டிய சபை!


எந்த ஸபையை விலக்க வேண்டும்?
வயது முதிர்ந்த மந்திரிகளில்லாத ஸபையை.

இவ்வுலகில் மனிதன் எவ்விஷயத்தில் ஜாக்கிரதையுடனிருக்க வேண்டும்?
ராஜ ஸேவை செய்வதில்.

ப்ராணனைவிட ப்ரியமானது எது?
குலதர்மமும் ஸாதுக்களின் சேர்க்கையும்.

ரக்ஷிக்கத் தக்கது யாது?
கீர்த்தியும், கற்புடையமாதும், ஸ்வபுத்தியுமாம்.

லோகத்தில் கற்பக் கொடியாகவுள்ளது எது?
ஸத்சிஷ்யனுக்கு அர்ப்பணம் செய்யும் படிப்பு. படித்தவன் ஒவ்வொருவனும் முன்னாளில் தான் படித்த படிப்பைச் சிஷ்யர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

எந்த ஆயுதம் எல்லோருடைய கையிலும் உள்ளது?
யுக்தி. (நியாயபூர்வமாக நிரூபணம் செய்யக் கூடிய சக்தி.)

எது ஸேனை
தைர்யம்.

எது யமன்?
கவனமில்லாதிருந்துவிடல்.

விஷம் எங்கிருக்கிறது?
துர்ஜனங்களிடத்தில் இருக்கிறது.

அபயம் எது? (பயப்பட வேண்டாத நிலைமை)
வைராக்யம் (ஆசையை விட்டுவிடின், அதுவே அபயம்.)

எது பயம்?
பணம்தான்.

எது பாதகம்?
ஹிம்ஸித்தல்.

பகவானுக்கு யாரிடத்தில் பரம ப்ரியம்?
தானும் மனதில் உபத்திரவப்படாமல் பிறருக்கும் உபத்திரவத்தை நினைக்காதவனிடத்தில்.

(ப்ரச்னோத்தர ரத்னமாலை - என்ற நூலிலுள்ள வடமொழி கேள்வி-பதிலை தமிழாக்கம் செய்து 27.1.33-ல் சென்னையில் மகா பெரியவர் பேசியது)

No comments:

Post a Comment