Search This Blog

Friday, June 24, 2011

ஐந்தே ரூபாயில்...'ஹாட் பேக்' !

விதம் விதமான சமையல் உப கரணங்கள் உதயமாகிக் கொண்டேதான் இருக் கின்றன. அவற்றின் விலையைக் கேட்டால் தான் 'ஷாக்' அடித்துப் போய் உட்கார்ந்துவிடுகி றோம் பல சந்தர்ப்பங்களில். ஆனால், எளிய புதுவரவான 'வைக்கோல் பெட்டி'... தன் செயல்பாட்டில் மட்டுமல்ல... விலை யிலும் ஆச்சர்யப்படுத்துகிறது. சொல்லப் போனால்... அதன் விலை, நீங்கள் நிர்ணயிப்பதுதான்!

என்ன... கேட்கும்போதே ஆச்சர்யமாக இருக்கிறதா... முதலில் மேட்டருக்குள் புகுவோம்.மதுரை, வேளாண்மை கல்லூரியில் இயங்கி வரும் மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் குடும்ப வள மேம் பாட்டுத் துறையினர்தான், 'வைக்கோல் பெட்டி' என்கிற எளிய, குறைந்த செலவிலான அந்த எரிபொருள் சேமிப்புச் சாதனத்தைப் பிரபலப்படுத்தி வருகின்றனர் .இந்தப் பெட்டியில் வெப்பம் உள்ளி ருந்து வெளியேறுவது தடுக்கப்படுவதால், வெப்ப ஆற்றல் உள்ளேயே சேமிக்கப்பட்டு, உணவுப் பொருட்களைச் சமைப்பதற்கும், அவற்றின் சூட்டை அப்படியே பல மணி நேரங்களுக்குத் தக்க வைப்பதற்கும் உதவுகிறது. 'ரைஸ் குக்கர் மற்றும் ஹாட் பாக்ஸ்' என்றே இதை அழைக்கலாம்!

''வேலைக்குப் போகிற பெண்களுக்கும், சுற்றுலா செல்பவர் களுக்கும் மிகவும் பயன் தரக்கூடியது இந்த வைக்கோல் பெட்டி. இதைப் பயன்படுத்தி எளிதாக சாதம் தயாரிக்க முடியும். கழுவிய அரிசியை பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி, வழக்கம்போல அடுப்பில் வைத்து சூடு ஏற்ற வேண்டும். அரிசி சாதமாக மாறும் வரை காத்திருக்காமல், சுமார் 10 நிமிடத்திலேயே அந்த பாத்தி ரத்தை எடுத்து வைக்கோல் பெட்டியின் மத்தியில், அதற்கென உள்ள இடத்தில் வைக்க வேண்டும். பிறகு, பிரத்யேகமாக இருக்கும் வைக்கோல் நிரம்பிய தலைய ணையை வைத்து, காற்றுப் புகாதபடி பெட்டியை மூடிவிட வேண்டும். அடுத்த 45 நிமிடத்துக்குள் சாதம் தயாராகி விடும்.இந்தப் பெட்டியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சாதமானது... மற்ற முறையில் சமைக்கப்படும் உணவைவிட அதிக மணம், நிறம், சுவையுடன் இருக்கும். சமைக்கப் பயன்படுத்தும் நீர் முழுமையாக பயன்படுத்தப்படுவதால்... ஊட்டச்சத்து இழப்பும் அதிகமாக இருக்காது''

'ஹாட் பாக்ஸாக' பயன்படுவது எப்படி  

''இந்த பெட்டியில் வைக்கப்படும் பொருள், அதிகபட்சம் 56 மணி நேரம் வரை சூடாக இருக்கும். இதனுள் வைக்கப்படும் சாதம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் 5 மணி நேரம் வரை 61 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கும். அதன்பிறகு படிப்படி யாக வெப்பம் குறையும். என்றாலும், 56 மணி நேரம் வரை சூடு இருக்கும். அதாவது, நாம் சாப்பிடும் அளவுக்கான சூட்டை அது தக்க வைத்துக் கொண்டே இருக்கும்'' என்ற பிரேமலதா,'வைக்கோல் பெட்டியைப் பயன்படுத்துவது மூலம் எரி பொருள், பணம், நேரம், ஆள் செலவு ஆகியவற்றை சேமித்து, சுகாதாரக் கேடுகளும் தடுக்கப்படுவதுடன், 58% சமைக்கும் நேரமும், 44% எரிபொருளுக்கான பணமும் சேமிக்கப்படுகிறது. பாதுகாப்பானதும்கூட..


இந்த வைக்கோல் பெட்டி, 'ஹே பாக்ஸ்’  என்ற பெயரில் வெளிநாடுகளிலும் பயன்பாட்டில் இருக்கிறது. இதைத் தேடி கடை வீதியில் அலைந்தால் கிடைக்காது. வீட்டில் நாமே தயாரித்துக் கொள்ளலாம். அது ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல. காலியான அட்டைப் பெட்டி, கொஞ்சம் வைக்கோல் இருந்தாலே போதும்...


இப்படித்தான் தயாரிக்க வேண்டும்!

மரப்பெட்டி, கார்ட்போர்டு பெட்டி, மூங்கில் கூடை, சிமென்ட் தொட்டி போன்றவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். உதாரணமாக 'கார்ட்போர்டு' எனப்படும் அட்டைப்பெட்டியில் தயாரிக்க நினைத்தால், ஒன்றரை அடி (45 செ.மீ.) நீள, அகல, உயரமுள்ள கார்ட்போர்டு பெட்டியின் மத்தியில் பாத்திரம் வைக்கும் அளவுக்கு இடத்தை விட்டுவிட்டு, மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வைக்கோலை அடைத்தால், வைக்கோல் பெட்டி தயார். நாம் பயன்படுத்தும் பெட்டியை சரியாக மூடும் அளவுக்கு வைக்கோல் நிரம்பிய ஒரு தலையணையை தயாரித்துக் கொண்டால் ஹாட் பேக் ரெடி! இப்படி, 20 லிட்டர் கொள்ளளவு வரைக்கும் பெட்டியைத் தயாரித்துப் பயன்படுத்தலாம். அதற்கு மேலும் பெரிய சைஸுக்கு தேவை இருந்தால், தயாரிப்பதில் தவறு ஏதும் இல்லை.

முனைவர் பிரேமலதா  
தலைவர்
மனையியல் கல்லூரியின் ஃபுட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிஷியன்

No comments:

Post a Comment