Search This Blog

Saturday, April 19, 2014

அருள்வாக்கு - மூட்டைத் தூக்கி யார்?


உங்கள் வீடு ஒரு குடும்பம். இதற்கு அப்பாவும் அம்மாவும் தலைவர்கள். உங்கள் குடும்பத்துக்கு நடுவில் பள்ளிக்கூடம் என்கிற ஒரு குடும்பம் இருக்கிறது. உங்களுடன் படிக்கிறவர்களெல்லாம் உங்கள் குடும்பத்தில் உடன் வாழ்கிற சகோதரர்கள் மாதிரி. இந்தப் பள்ளிக் குடும்பத்தின் தலைவர் உபாத்தியாயர் ‘வாத்தியார்’ என்கிற ஆசிரியர். அவரையும் ஓர் அப்பா அம்மாவாக நீங்கள் மதித்து வணங்க வேண்டும்.

பள்ளிக் காலத்தில் உங்கள் கடமை படிப்பது ஒன்றுதான். உங்களுடைய கவனம் முழுவதும் படிப்பதிலேயே இருக்க வேண்டும். மற்ற விஷயங்களிலெல்லாம் நீங்கள் ஈடுபட இது சமயம் அல்ல. வேறு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும்கூட அவற்றையும் நீங்கள் படிப்பு முடிந்த பின்தான் கவனித்து ஈடுபடலாம். ‘இப்போதே எனக்கு அவற்றில் ஈடுபடச் சிறிது சக்தியும், புத்தியும் இருக்கிறதே; எனவே உலகத்துக்கு நல்லது செய்கிற அந்தச் சமாசாரங்களில் இப்போதே பிரவேசிப்பேன்’ என்று போகக்கூடாது.

சின்ன வயசில் உங்கள் உள்ளத்துக்குப் போதிய சக்தி ஏற்படுகிற முன்பே, படிப்பு தவிர மற்ற விஷயங்களை மேற்கொண்டால், உள்ளத்துக்கு வியாதிதான் உண்டாகும்.

ஏற்கெனவே நம் உள்ளத்தில் ஆசை, கோபம் முதலிய பல வியாதிகள் இருக்கின்றன. முன்பு நாம் எல்லோரும் ஒரு விதத்தில் மூட்டை தூக்கிகளாக இருந்ததால்தான் இந்த வியாதிகள் வந்திருக்கின்றன. நாம் செகிற ஒவ்வொரு தப்புக் காரியமுமாகச் சேர்ந்து மூட்டையாகி விடுகிறது. இந்தப் பிறப்புக்கு முன்னால் இன்னொரு பிறப்பில் தப்புக் கள் செதோம். அதனால்தான் இப்போது இந்த உடம்பு என்கிற மூட்டை வந்திருக்கிறது. இதில் பழைய தப்புகளின் வாசனையும் இருக்கிறது. அதனால்தான் ஆசை, கோபம் எல்லாம் நமக்கு இருக்கின்றன. அது போவதற்காகத்தான் குழந்தையாக இருக்கும்போது பள்ளிக் கூடத்துக்குப் போகிறோம். அறியாமை என்கிற வியாதி, படிப்பு என்கிற மருந் தினால் போகிறது. அதோடு நம் கெட்ட குணங்களும் போக வேண்டும்.

இதற்குப் படிப்பு மட்டும் போதாது. பணிவு வேண்டும். பணிந்து கிடந்தால் கெட்ட குணங்கள் ஓடிப் போகும். தா, தந்தை, ஆசிரியர், தெவம் ஆகியவர்களிடம் பக்தியோடு, படிப்பில் கவனம் செலுத்தி வந்தால் அறிவும் வரும், குணமும் வளரும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்


 

No comments:

Post a Comment