Search This Blog

Tuesday, July 23, 2013

நெல்சன் மண்டேலா !

அந்தச் சிறுவனை எல்லாரும் 'ரோலிலாலா’ என்று அழைத்தார்கள். கறுப்பின மொழியான க்சோஸா மொழியில் ரோலிலாலா என்றால், நிறையத் தொல்லைகொடுப்பவன் என்று அர்த்தம்.
 
ஆப்பிரிக்க மோராரோ இனக் குழுவின் கறுப்பின மண்டேலா பிரிவில் பிறந்த அவன், நான்கு வயதில் ஆடு, மாடுகள் மேய்த்தபடி வெள்ளை எஜமானர்களுக்கு பல தொல்லைகளைக்கொடுத்தான். வெள்ளையர் பெயர்களைத் தெரிந்துகொண்டு, தான் வளர்த்த நாய்களுக்கு அந்தப் பெயர்களைச் சூட்டி, ஊரையே மிரளவைத்தான்.
அந்தக் காலத்தில் தென் ஆப்பிரிக்க கறுப்பினக் குழந்தைகள் பள்ளிக்கூடம் போக முடியாது. எந்த சுதந்திரமும் கிடையாது. அந்தச் சிறுவனின் அம்மா பெயர் நோசாக்கேனி ஃபானி. அவர், சர்ச் ஒன்றில் வேலைபார்த்தார். மிஸ் மிடின்கேன் என்பவர் அந்த சர்ச்சில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தினார். அம்மா உடன் சென்ற அந்தச் சிறுவன், அந்தப் பள்ளிக்கூடத்தில் வெள்ளைக்காரப் பையன்கள் படிப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்து, தானும் நன்றாக எழுதவும் சத்தமாகப் படிக்கவும் கற்றான்.

 

இதைப் பார்த்துப் பெரிதும் ஆச்சர்யப்பட்ட மிடின்கேன், அந்தச் சிறுவனுக்கு 'நெல்சன்’ என்று பெயர் சூட்டினார். அந்தப் பகுதியில் கறுப்பினக் குழந்தைகளில் முதலில் பெயர் சூட்டப்பட்டதே நெல்சனுக்குதான். பே... மூ... என்றுதான் அதுவரை கறுப்புக் குழந்தைகள் அழைக்கப்பட்டனர். நெல்சன் தனது நண்பர்களுக்குத் தானே பெயர் வைக்கத் தொடங்கினான்.நெல்சனின் தந்தை பெயர் கால்டா. அவர், இனக் குழுவின் பிரதிநிதியாக இருந்தார். வெள்ளை நீதிபதி ஒருவருக்கும் அவருக்கும் ஒரு பிரச்னையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நெல்சன் நடந்த சம்பவங்களை உற்றுநோக்கினான். அவனுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்ததால், நீதிபதி தனது தந்தைக்கு நேர்மையற்ற தீர்ப்புக் கூறியதை அறிந்துகொண்டான். ஏதேதோ புத்தகங்களை மேற்கோள்காட்டி தனது தந்தையை அவர் குழப்பியதையும் கண்டான். அதன்பின், புத்தகங்களை எப்படியோ கண்டடைந்து வாசிப்பதை வாழ்வாக்கிக்கொள்ளத் தீர்மானித்தான் அந்த ஒன்பது வயதுப் போராளி.

விரைவிலேயே அவன் தனது தந்தையை இழந்தான். அந்த நிகழ்ச்சி, வெள்ளையர் சர்வாதிகாரத்துக்கு எதிரான போருக்கான விதையை நெல்சன் உள்ளத்தில் விதைத்தது. ஆங்கிலம், க்சோஸா மொழிகளைக் கற்றான்.ஆப்பிரிக்க வரலாற்றை விரும்பிப் படித்தான். உலகெங்கிலும் நடந்த சுதந்திரப் போராட்ட வரலாறுகளை வாசித்தான். உள்ளூர் நண்பர்களை ஒன்றுகூட்டி, எழுதப் படிக்கக் கற்பித்தான். அப்போது அவனுக்கு 10. ஓரிரு வருடங்களில் அவனைப் பற்றிய செய்திகள் கறுப்பின மக்களிடையே தீயாகப் பரவியது.அவனால் எழுத்தறிவு கண்ட தோழர்கள், போராட்டங்களில் இறங்கினார்கள். தந்தைக்கு தவறான தீர்ப்பு அளித்த அதே நீதிபதி முன் நிறுத்தப்பட்டான் நெல்சன்.  அவனுடைய வாதத்தைக் கேட்டு அசந்துபோன அந்த வெள்ளைக்கார நீதிபதி, ''உன்னை எங்காவது அனுப்பிவிட வேண்டும். எங்கே போக விரும்புகிறாய்?'' எனக் கேட்டார்.

'இந்தியா செல்வேன். அங்கே காந்தியோடு இணைந்து வெள்ளையரை எதிர்ப்பேன்'' எனத் தனது 11 வயதில் முழங்கினான் அந்தச் சிறுவன்.

பிற்காலத்தில் தனது கறுப்பின விடுதலைக்காக 29 ஆண்டுகள் சிறையிலிருந்தபடி போராடி, இனம் விடுதலை பெற்றபோது, தனது நாட்டின் முதல் அதிபராகவும் பொறுப்பேற்று நெல்சன் மண்டேலாவாக வரலாறு படைத்தார்.

No comments:

Post a Comment