Search This Blog

Monday, February 21, 2011

நடுநிசி நாய்கள்


கவுதம் வாசுதேவ் மேனன்..காதல் காட்சிகளை படமாக்குவதில் அவருடைய ஸ்டைலே தனி.அவரின் அனைத்து படங்களும் ஆங்கிலபட காப்பி என்று கூறுவர். அவர் எடுத்து இருக்கும் த்ரில்!! படம் தன இந்த நடுநிசி நாய்கள்.


கதை

 
சிறு வயதில் குழந்தைகளை பாதிக்கும் சம்பவங்கள் அவர்களின் வாழ்க்கையில் சில  மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதனால்  அவர்களது மனநிலை  பாதிப்படைகிறது  என்பதை மைய கருத்தை  கொண்டு படத்தை எடுத்து இருக்கிறார்.



சமர்  எட்டு வயதில் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படும் ஒரு சிறுவன்.யார் மூலமாக என்றல் தன் தந்தையின் காம இச்சைகளால் பாதிக்கப்பட்டு அருகில் குடியிருக்கும் மீனாட்சி என்பவரால் காப்பாற்றப்படுகிறான். அவனை மீனாட்சி வளர்கிறார். அவனும் பாசத்துடன் மீனாட்சிஅம்மா என்று அழைக்கிறான்..  தனது மனப் பிரச்சனை அவன்  மனதில் இருந்து மீளவில்லை. அதனால் ஏற்படும் சம்பவம்களும் பாதிப்புகளுமே மீதிக்கதை...



படத்தில் பிடித்த விஷயம் ஒளிபதிவு மட்டும் தான்.  இந்த படத்தில் பாடல்களுமில்லை,பிண்ணனி இசையுமில்லை. படத்தில் சில காட்சிகள் நெருட வைக்கிறது.. இதுக்கு மேல ஒரு  பெண்ணை கேவல படுத்த முடியாது , அந்த ஆளவுக்கு மோசமாக சித்தரித்து உள்ளார் இந்த படத்தில் ..

முதல்பாதியில் - செக்ஸ், கொலை 
இரண்டாம் பாதி - நீளம் மற்றும் எரிச்சல் 

 

1 comment: