Search This Blog

Wednesday, September 05, 2012

இளம் சாதனையாளர் - அசத்தும் விசாலினி!

உலகிலேயே அதிக நுண்ணறிவுத்திறன் கொண்ட சிறுமி என்கிற அங்கீகாரம் பெற்றிருக்கிறாள், திருநெல்வேலியைச் சேர்ந்த விசாலினி. வயது 12. படிப்பது ஒன்பதாம் வகுப்பு. அடுத்த ஆண்டு ஐ.ஐ.டி.யில் நடைபெறும் ஜாயின் என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கு மனு செய்யவிருக்கிறாள். தற்போது அவள் பல பொறியியல் கல்லூரிகளில் பி.ஈ., மற்றும் பி.டெக்., இறுதியாண்டு படிப்பவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறாள். பல்கலைக்கழகங்கள் நடத்தும் சர்வதேசக் கருத்தரங்குகளில் இந்தியாவின் சார்பாக உரையாற்றுகிறாள். பன்னிரண்டு வயதுச் சிறுமி விசாலினி, நம் முன் நீட்டுகின்ற அவரது விசிட்டிங் கார்டு நம்மை மேலும் வியக்க வைக்கிறது.
திருநெல்வேலி, IIPE லெட்சுமிராமன் மெட்ரிக் மேனிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவியான விசாலினியின் விசிட்டிங் கார்டு, அவருக்கு நுண்ணறிவுத் திறன் எனப்படும் IQ 225 இருப்பதாகப் பதிவுசெய்துள்ளது. அப்பா கல்யாண குமாரசாமி எலெக்ட்ரிகல் காண்டிராக்டர். அம்மா சேதுராகமாலிகா, அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராக இருந்தவர். தங்கள் ஒரே மகளின் சுய நுண்ணறிவுத்திறன் சார்ந்த மேம்பாடுகளுக்காக, சிறுமி விசாலினியுடன் இணைந்து பயணித்து வருபவர்.
பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே வேலைவாய்ப்புகளுக்காகப் பங்கேற்கும் இணையதளத் தேர்வுகளில், விசாலினி கடந்த இரண்டு வருடங்களாகப் பங்கேற்று மிக அதிக மதிப்பெண்கள் பெற்று உலகளவில் சாதனை புரிந்து வருகிறாள். MCP(2011) 87 சதவிகிதம், CCNA (2011) 90 சதவிகிதம், CCNA Security (2011) 98 சதவிகிதம், OCJP (2011) 95 சதவிகிதம், (பாஸ்போர்ட் எடுத்திருந்தால்தான் தேர்வு எழுதவே அனுமதி) IELTS (2012)ல் Band-6, CCNP (2012) 81 சதவிகிதம், Exin Cloud Computing (2012) 100 சதவிகிதம், IST!B-ISEB(ஜூன் 2, 2012) 100 சதவிகிதம் எனத் தேர்ச்சி பெற்றிருக்கிறாள் விசாலினி.

2 comments:

  1. அனைவரையும் வியக்க வைக்கும் விசாலினி...

    ReplyDelete
  2. சகோதரி விசாலினிக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் பதிவுக்கு நன்றி நண்பரே..

    இனியவன்...

    ReplyDelete