Search This Blog

Friday, October 03, 2014

எபோலா என்றால் என்ன?


எபோலா (Ebola) என்பது ஒரு வைரஸ் கிருமி. இது உண்டாக்கும் நோய்க்கு எபோலா வைரஸ் நோய் என்று பெயர். 1976ம் ஆண்டு சூடான் மற்றும் காங்கோ நாடுகளில் ஒரே நேரத்தில் இது தோன்றியது. காங்கோ நாட்டின் எபோலா நதிக் கரையில் முதன்முதலில் இது பரவிய காரணத்தால், இந்தக் கிருமிக்கு ‘எபோலா வைரஸ்’ என்று பெயரிடப்பட்டது. இந்த நோ இப்போது கினி, லைபேரியா, நைஜீரியா, சியாரா லியோன் ஆகிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருகிறது. பார்ப்பதற்கு நாகப்பாம்பு படம் எடுத்த மாதிரி இருக்கிற எபோலா வைரஸ், பழம் தின்னும் வௌவால்கள் மூலமும், ஆடு, மாடு, பன்றி, மான், எலி, குரங்கு போன்ற விலங்குகள் மூலமும் மக்களுக்குப் பரவுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிப் பழகினால், அவருடைய இருமல், சளி, தும்மல், உமிழ் நீர், சிறுநீர், ரத்தம், மலம், வியர்வை போன்ற உடல் திரவங்கள் மூலம் மற்றவர்களுக்கும் இது எளிதில் பரவிவிடும். கடுமையான காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, தசைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, அம்மைக் கொப்புளங்கள், நெஞ்சுவலி, ரத்தக்கசிவு போன்றவை இதன் அறிகுறிகள். இந்த நோய்க்கு சிகிச்சை எதுவுமில்லை. உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆகவே, சுய சுத்தம் காப்பது, பொது சுகாதாரம் பேணுவது போன்றவற்றின் மூலமே இதைத் தடுக்க முடியும். கைகளை சோப்பினால் அடிக்கடி சுத்தமாகக் கழுவ வேண்டும். நோய் பரவும் காலத்தில் விலங்குகளின் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. நோயாளியுடன் நெருங்கிப் பழகக் கூடாது.

No comments:

Post a Comment