Search This Blog

Sunday, October 26, 2014

ஸமத்வம்! சரணாகதி!


‘புருஷ ப்ரஜைக்கு உபநயனம் எப்படியோ அப்படியேதான் ஸ்த்ரீ ப்ரஜைக்கு விவாஹம்’ என்பதற்கு இது போன்ற அம்சங்கள் நிரூபணம். ஒரு ஆண் குழந்தை குருவிடம் சரணாகதி செய்து அவன் கைப்பிடிப்பில் லக்ஷ்ய மார்க்கத்தில் போகிறது போலவே ஒரு பெண் குழந்தை பதி என்ற குருவின் மூலம் பண்ண வேண்டும் என்பதுதான் சாஸ்த்ர அபிப்ராயம். இந்த இரண்டிலுமே, Shake - hand போல் பரஸ்பரம் இரண்டு பேருமே ஒருத்தர் கையை மற்றவர் பிடித்துக் கொண்டிருப்பதாக இல்லை.

ஆசார்யன் தான் - உபநயனத்தில் ஆசார்யன் என்றே இருப்பவர்; விவாஹத்தில் வரன் என்ற பெயரில் உள்ள ஆசார்யன்; அவனொருத்தன் தான் - அந்த வடுவின் கையையும், வதூவின் கையையும் தன் கையால் அழுந்த மூடிக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவன். அங்கே (கை குலுக்கலில்) ஸமத்வம்; அதனால் பரஸ்பரம் ஒரே போலப் பண்ணுவது. இங்கேயோ (உபநயன, விவாஹங்களிலோ) சரணாகதி; சிஷ்யனாக உள்ள வடுவும், சிஷ்யையாக உள்ள வதூவும் விநயமாகக் கீழ் ஸ்தானத்திலிருந்து கொண்டு சரணாகதி செது, தன் செயலே இல்லை என்று இருக்கிறவர்கள். தன் செயலே இல்லாததால் பதிலுக்குக் கையைப் பிடித்துக் குலுக்குகிற கார்யமும் இல்லை!
மனோ-வாக்-காயங்களை குருவுக்கே அர்ப்பணிப்பதற்கு அடையாளமாகக் கார்யத்திற்கெல்லாம் கருவியாயுள்ள கையை, ஆசார்ய ஸ்தானத்திலிருக்கிறவரிடம் ஒப்புவித்துவிட்டு அதைச் சும்மாயிருக்க விடுகிறார்கள். சரணாகதனை ரக்ஷித்துப் பூர்ணமாக அங்கீகரித்துக் கையைப் பிடித்து வழி நடத்திப் போவதற்கு அடையாளமாக ஆசார்யனே, அவன் மட்டுமே, சிஷ்ய ஜீவனின் கையைப் பிடித்துக் கொள்கிறான்.

No comments:

Post a Comment