Search This Blog

Saturday, November 27, 2010

நான் ஆவலுடன் எதிர்பார்த்த நந்தலாலா...

மிஷ்கின் - எனக்கு   மிகவும்  பிடித்த  இரண்டு தமிழ் படத்தை இயக்கியவர். சித்திரம் பேசுதடி மற்றும் அஞ்சாதே என இரண்டு அற்புதமான சினிமாவை வழங்கியவர். இவரின் படத்தில் ஒரு மெலிதான காதலும் , அதனுடன் சிறந்த திரைகதையும் இருக்கும்.  

நீண்ட நாட்களை நான்  ஆவலுடன் எதிர்பார்த்த நந்தலாலா.. 

பொதுவாகவே ரொம்ப நாள் பெட்டிக்குள் தூங்கி கொண்டு இருக்கும் படிப்புகள்  மிக பெரிய வெற்றியை ஈட்டி உள்ளது நம் தமிழ் சினிமாவில்.. இந்த படமும் அந்த வகையை சேர்ந்தது தான்.. எத்தனை நண்பர்கள் இந்த படம் ஜப்பானிய மொழி ( கிகுஜிரோ  (1999)  தழுவல் என்றாலும் மிஷ்கின் திரைகதையில் கையாண்ட விதம் அந்த ஒரிஜினல் படத்தில் இருந்து விலகி உள்ளது...
கதை :

பாஸ்கர் மணி (மிஷ்கின்), அகில்(அஸ்வத் ராம்) – இந்த இருவரை சுற்றி நடக்கும் படம் தான் நந்தலாலா . பள்ளியில் படிக்கும் அகில் சிறு வயதிலேயே தன்னை விட்டுச்சென்ற தன் அம்மாவைத் தேட  பயணிக்கிறான். அதேபோல்,சிறுவயதிலேயே மனநல மருத்துவமனையில் தன்னை விட்டுவிட்ட தன் தாயை தேடி வெளியே வருகிறான் பாஸ்கர் மணி. ஒரு சமயத்தில் இந்த இருவரும் சந்திக்கிறார்கள் மற்றும் ஒன்று சேர்ந்து செல்கிறார்கள் தன் அம்மாவைத் தேடி. இடையில் நடக்கும் திருப்பம் மற்றும் அவர்களின் பயணத்தில் அவர்கள் கற்று கொண்டது என்ன என்பதே மிஷ்கின்னின் நந்தலாலா ..

அஸ்வத் & மிஷ்கின் :


படத்தில் முக்கிய கதாபாத்திரமே 10வயது சிறுவனாக வரும் அஸ்வந்த். இந்த சின்ன வயசில் என்ன ஒரு முதிர்ச்சியான நடிப்பு.. அந்த ஏக்கம் பரிதவிப்பு என்று கிடைத்த வாய்ப்பை  நன்றாக
செய்து உள்ளான். 

மிஷ்கின் தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்தை இந்த அளவிற்கு  சிறப்பாக   செய்திருப்பார்களா என்று தெரியவில்லை. இவரின் நடிப்பு கச்சிதம். அதற்கு ஒரே காட்சி தான் உதாரணம்.. இறுதி கட்ட காட்சியில் திட்டிக்கொண்டே வந்து வீட்டின் பின்புறம் இருக்கும் தன் அம்மாவின் நிலையைப் பார்த்து கதறி தூக்கிக் கொண்டே ஓடி அழுகும் அந்த ஒரு காட்சிய அவர் பாஸ்கர் மணி ஆகா வாழ்ந்து இருக்கிறார் என்பதை உணர்த்தி உள்ளார்.


இளையராஜா



படத்தை தூக்கி நிறுத்தி வைத்தது ராஜா இசை. இந்த படத்தின் மூலம்   இளையராஜா  பின்னணி இசை உலகின் மகா  ராஜா என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லி  விட்டார் . கண்டிப்பா தேசிய விருது நிச்சயம்.. இளையராஜா பாடல்கள் என் படத்திற்கு தடையாக இருக்கிறது என்று சொல்லி, சில பாடல்களை நிராகரித்த தைரியமும், தன் கதைக்கு என்ன வேண்டும் என்பதில் அவர் காட்டி இருக்கும் உழைப்பு தன் இந்த நந்தலாலா..


கடைசியில் மிஷ்கின் தன் அம்மாவை பார்த்த அந்த நொடியில் ஒலிக்கும் இளையராஜாவின் குரலைக்கேட்டு கண்கலங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.  ஐங்கரனின் இன்னும் ஒரு ஐந்து வருடத்திற்கு  இந்த படத்தின் பெயரை சொல்லி மார் தட்டி பெருமையாக சொல்லலாம்  இந்த படத்தை .
 
 தமிழ் சினிமாவின் ஒரு தரமான படம் நீண்ட இடை வேளைக்கு  பிறகு. எந்த அரசியல் தலைவனை தலையீடு இல்லாமல் இருந்தால் குறைந்தது நான்கு விருதை பெரும் இந்த நந்தலாலா .

டிஸ்கி: 



“எங்க வீட்ல என்னோட மூத்த சகோதரர் இப்படி மனநிலை பாதிக்கப்பட்டவரா இருந்தார். அதைதான் இந்த படத்தில் கொண்டு வந்திருக்கேன்” என்றார் மிஷ்கின்.

மிஷ்கினின் இந்த படம் அவர் மீதிருந்த அத்தனை விமர்சனங்களையும் கழுவி துடைத்தெறிந்து விட்டது என்பதுதான் உண்மை

2 comments:

  1. கிகுஜிரோ படத்தை தழுவி எடுத்தது பற்றி நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்? பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டும் படமாகவே உள்ளது நந்தலாலா. நல்ல பதிவு! (madrasbhavan.blogspot.com)

    ReplyDelete
  2. இதெல்லாம் ஒரு விசயமே இல்லை.. ஆனால், மிஷ்கின் ஒத்துகொள்ள வேண்டும் நான் அந்த படத்தை பார்த்து தான் இதை எடுத்தேன் என்று

    ReplyDelete