Search This Blog

Saturday, November 20, 2010

ரக்த சரித்திரம் - I ( Rakta Charitra - I)

இந்த படத்தை ரொம்ப நாள் பார்க்கணும் முயற்சி செய்து கொண்டே இருந்தேன். கடும் முயற்சி செய்து இப்போ அந்த ஆசை நிறைவேறியது. பொதுவாக படத்தை தரை விறக்கம் செய்து உடனே பார்த்து அதனை அழித்து விடுவேன், என் மடி கணினியில்  இருந்து.. ஆனால், ஐந்து நிமிடம் பார்த்து கொண்டு இருக்கும் பொது பிற வேலைகள் காரணமாக என்னால் கிட்ட தட்ட பத்து முறை இந்த படத்தை பார்க்க முடியாமல் போய் விட்டது.. இப்போ பார்த்து முடித்த வுடன் ஐயோ, தியேட்டரில் போய் படம் பார்த்து இருந்தால் இன்னும் அருமை ஆகா இருந்து இருக்கும் என எண்ணுகிறேன்.

வழக்கமான பங்காளி சண்டை தான் கதை கரு .இதற்க்கு முன் எத்தனையோ  பழி வாங்கும் படத்தை நான் பார்த்து இருந்தாலும் இந்த படம் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது. .. அதனை ராம் கோபால் வர்மா சொல்லிய விதம் அழகு. அதுவும் ஒரு உண்மை கதையை வைத்து கொண்டு, மிரட்டலான திரை கதை மற்றும் அதிரடியான  பின்னணி இசை உடன் ஒரு அதி பயங்கரமான மிரட்டல் படம் தந்து உள்ளார் வர்மா .. 

கதை :

அனந்தப்பூர் தொகுதி  நரசிம்ம ரெட்டி பெரிய அரசியல் வாதி , அவருக்கு செம்பு அடிக்கும் அரசியல் வாதியாக நாகமணி ரெட்டி, ஜாதிபெயர் சொல்லி அந்த ஊரில் சில நல்ல விஷயம் செய்பவர் வீரபத்ரய்யா. வீரபத்ரய்யா வளர்ச்சி பிடிக்காமல் நரசிம்ம ரெட்டி இடம்  நாகமணி ரெட்டி இல்லாததை சொல்லி  வீரபத்ரய்யாவை  அவமான படுத்தி வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் நரசிம்ம ரெட்டி . 

நல்ல பெயருடன்  இருக்கும் வீரபத்ரய்யாவை அழிக்க நரசிம்ம ரெட்டியை தூண்டுகிறார் நாகமணி. வீரபத்ரய்யாவை அவரிடம்  பணி புரியும் ஆசிஸ் வித்யார்த்தியை கொலை செய்கிறார்கள் . இதனை தெரிந்த  வீரபத்ரய்யாவின் மூத்த மகன் , நரசிம்ம ரெட்டி மற்றும் நாகமணி ஆட்களை கொள்கிறார். அவனின் கொட்டத்தை அடக்க லோக்கல் இன்ஸ்பெக்டரை வைத்து  கொன்று விடுகின்றனர் நரசிமம் ரெட்டியும், நாகமணி ரெட்டியும்.  நாகமணி இளைய மகன் சரியான ரவுடி, பென் மோகம் கொண்டவன்..

வீரபத்ரய்யாவின் இளைய மகன் பிரதாப் ரவி நகரத்தில் வசித்து வருபவன். அவன் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு அவளின் தந்தை யுடன் பேசி திருமணதிற்கு சம்மதம்  வாங்குகிறான் . தன் தந்தைக்கும் மற்றும் அண்ணனுக்கு  நேர்ந்த மரணத்தை கேள்வி பட்டு கோபம் அடைந்து, அதற்க்கு காரணம் ஆனவர்களை பலி வாங்குவதே ரக்த சரித்திரம் - I .

என்.டி.ஆரின் தெலுகு தேசம் கட்சியில் இருந்த பரிதால ரவி என்பவரின் நிஜ வாழ்க்கை கதை தான் ரக்த சரித்திரம்.

நடிகர்கள் தேர்வு மிக அற்புதம். அதற்க்கு காரணம் ராம் கோபால் வர்மா.. ஒவ்வொரு வரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மிக அருமை. அதுவும் படத்தில் காமெராவை சுற்ற/ ஆட  விட்டு அவர் படம் பிடித்த விதம் அழகு.. ஆரம்ப காட்சியில் இருந்தே கதை சொல்லி, இருபதாவது நிமிடத்தில் நிமிர்ந்து வீர நடை போட்டு செல்கிறது கதை களம்.

ஒவ்வரு ரவுடியும் தன்னை பாது காத்து  கொள்ள அரசியலில் இறங்கியதை தோல் உரித்து காட்டிய திரைப்படம் இந்த ரக்த சரித்திரம். இந்த பாகம் முடியும் தருவாயில் பிரதாப் ரவியை பழிவாங்க சூர்யாதிட்டம் தீட்டுவதை முன்னோட்டமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். அது தான் ரக்த சரித்திரம -II ( ஹிந்தி )..

முதல் பாகமான இந்த எபிசோடை தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆகா வில்லை . ஆனால் தமிழ் பதிப்பில் முதல் மற்றும் இரண்டு பாகத்தையும் சேர்த்து ஒரே படமாய் ரத்த சரித்ரம் என்று வெளியிட இருக்கிறார்கள்..

No comments:

Post a Comment