Search This Blog

Friday, September 16, 2011

கேட்கும் முறை! - அறிவோம் ஆங்கிலம்


சந்தோஷ், சுரேஷ், மூர்த்தி: Good morning, sir.


ஆசிரியர்:Yes. Good morning, sir.. என்ன மூர்த்தி ஏன் ரொம்ப டல்லா இருக்கே. Any Problem?

மூர்த்தி: ஸார் இன்னிக்கு என்னைப் பத்தி அறிமுகப்படுத்திக்கணும்னு சொல்லியிருக்கீங்க, அதுதான் கொஞ்சம் பயமா இருக்கு. 

ஆசிரியர்: இதுல பயப்படறதுக்கு என்ன இருக்கு? முதல்ல உன் பேரை சொல்லு. நீ எந்த ஸ்கூல்ல எத்தனையாவது படிக்கறேன்னு சொல்லு. அப்புறம் உன் தந்தையின் பெயர், அவர் எங்கே வேலை செய்யறார்னு சொல்லு. எல்லாம் உனக்கு தெரிஞ்ச விஷயங்கள் தானே.  

மூர்த்தி: எல்லாம் தெரிஞ்ச விஷயங்கள்தான்; ஆனா அதையெல்லாம் இங்கிலீஷ்ல சொல்லத்தான் பயமா இருக்கு.

ஆசிரியர்: நீ பயப்படாம start பண்ணு. நான் உனக்கு help பண்றேன்.


மூர்த்தி: Sir, my name is S. Murthy. I am ............... I am study ..................sorry. I am studying in 6th Standard......... சரியா ஸார்.


ஆசிரியர்: கரெக்ட். ஆனால் I am Studying in 6th Standard னு சொன்னே இல்லியா, இதை I am studying in the 6th Standardனு, the சேர்த்து சொல்லணும் என்ன புரியுதா? சரி, நீ எந்த ஸ்கூல்ல படிக்கறே?


மூர்த்தி: Sir, I am studying in S.R Higher Secondary School.


ஆசிரியர்: ok. இப்போ எல்லாத்தையும் சேர்த்து சொல்லு.


மூர்த்தி: Sir, my name is S.Murthy. I am studying in the 6th Standard. I am studying in S.R. Higher Secondary School.


ஆசிரியர்: Good................. மூர்த்தி நீ இப்போ சொன்னது எல்லாம் சரிதான், ஆனால் ஒரு சின்ன மாற்றம் மட்டும் செய்துகொள். My name is S.Murthy. I am studing in the 6th Standard in S.R Higher Secon-dary School னு சொன்னால் போதும்.


மூர்த்தி: OK, sir...அவ்வளவுதானே ஸார்?

ஆசிரியர்: ம்ம்......... என்ன மறந்துட்டியா? உன் தந்தையின் பெயர் என்ன, அவர் என்ன வேலை செய்கிறார், என்று சொல்லணுமே. சரி, சந்தோஷ் நீ மூர்த்தியிடம் அவனுடைய அப்பாவின் பெயர் என்ன? அவர் என்ன வேலை செய்கிறார் என்று கேள். மூர்த்தி, நீ இப்போ சந்தோஷ் கேட்கற கேள்விகளுக்கு பதில் சொல். என்ன சரியா?


மூர்த்தி: சரி, ஸார். ட்ரை பண்றேன்.


சந்தோஷ்: Murthy, what is your father name?


ஆசிரியர்: ஏய் ... சந்தோஷ், நீ கேட்ட கேள்வி சரியில்லை. ஏதோ ஒரு சின்ன தப்பு பண்ணியிருக்கே. நல்லா யோசனை பண்ணி கேளு ......


சந்தோஷ்: ஸார், சரியாத்தான் கேட்டிருக்கேன். தப்பு பண்ணின மாதிரி தெரியலையே?


ஆசிரியர்: உன் தந்தையினுடைய பெயர் என்ன என்பதை what is your father name? என்று கேட்பது சரியல்ல,what is your father's name? (உன் தந்தையினுடைய பெயர் என்ன?) என்றல்லவா கேட்க வேண்டும்.


சந்தோஷ்: ஸாரி .. ஸார் ...


ஆசிரியர்: மூர்த்தி, what is your father's name?


மூர்த்தி: Sir, my father name is R. Shanmugam.


ஆசிரியர்: சந்தோஷ் பண்ணின தப்பையே நீயும் பண்ணியிருக்கே. My father name இல்ல, My father's name னு சொல்லணும்.


மூர்த்தி: Ok, sir. My father's name is R.Shanmugam.

தெரிந்து கொள்ளுங்கள்!  

a, e, i, o, u இந்த ஐந்து எழுத்துகளையும் vowels அதாவது உயிரெழுத்து என்கிறோம். இந்த ஐந்து எழுத்துகளில் ஏதேனும் ஒரு எழுத்து இல்லாமல் ஒரு வார்த்தை உருவாகாது என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் a, e, i, o, u இவற்றில் ஒரு எழுத்தைக்கூட உபயோகிக்காமல் சில வார்த்தைகளை உருவாக்கலாம். அவை எவை என்பதை சொல்லுங்கள் :)
Veta ராஜகோபாலன்





No comments:

Post a Comment