Search This Blog

Thursday, September 22, 2011

புதிய தலைமுறை வீரர்கள் - இந்திய கிரிக்கெட் அணி

கனவில் கூட நினைக்காத தோல்விகள், அவமானங்கள், குழப்பங்கள் எல்லாம் சந்தித்தும், ஒருநாள் தொடரிலும் தோற்றபோதும், இந்திய அணி மீது நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். குறிப்பாக ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தோல்வியை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. புதிய தலைமுறை வீரர்கள், ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடி, இந்திய கிரிக்கெட் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். யார் அவர்கள்?

ரெஹானே: 23 வயது மும்பை வீரர். மும்பையின் ரஞ்சி ஆட்டங்களில் இவர்தான் நாயகர். ஆனாலும், புஜாரா, பத்ரி போன்ற மாமலைகளைத் தாண்டி, ரெஹானேவை முன்னிறுத்துவது கடினமாகவே இருந்தது. இங்கிலாந்து தொடரில் பல வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது. இதே சமயத்தில், ரெஹானே இந்தியா ஏ அணிக்காக ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். உடனடியாக, இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இப்போது ரெஹானேவுக்கு ஏராளமான ரசிகர்கள். உடனடியாக டெஸ்ட் அணியிலும் ரெஹானேவைச் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கைகள்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரெஹானே, இப்போது ஓப்பனராகவும் முத்திரை பதித்துவிட்டதால் விஜய், முகுந்த் போன்ற தொடக்க ஆட்டக்காரர்களுக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்துவிட்டார். தகுந்த வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் ரெஹானே இன்னொரு திராவிடாக உருவெடுக்க வாய்ப்புகள் அதிகம்.

அஸ்வின்: 24 வயது தமிழக வீரர். சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திரம், இப்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் கவனம் பெற்றுவிட்டார். ஹர்பஜன் சறுக்குகிற சமயம் பார்த்து, அஸ்வின் இந்திய அணிக்குள் நுழைந்திருப்பது மிகப் பொருத்தமாக அமைந்துவிட்டது. எல்லா கிரிக்கெட் நிபுணர்களும் அஸ்வினின் திறமையிலும் போட்டி மனப்பான்மையிலும் மிகத் திருப்தியாக இருக்கிறார்கள். இங்கிலாந்து வீரர்களால், இறுதிவரை அஸ்வினின் பந்துவீச்சை வீழ்த்த முடியவில்லை. சாம்பியன்ஸ் லீக் முடிந்த பிறகு, அக்டோபரில், ஒரு நாள் போட்டிக்காக இந்தியா வரப்போகிறது இங்கிலாந்து அணி. அதற்கு ஹர்பஜன் தேர்வு செய்யப்படுவாரா? அல்லது அஸ்வின் முன்னிறுத் தப்படுவாரா? 


“முன்னெப்போதும் விட நான் மிக உற்சாகமாக இருக்கிறேன். இனி என் மறுபிறப்பைக் காணலாம்,” என்று வேறு அதிரடியாகப் பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார் ஹர்பஜன். தோனி யார் மீது நம்பிக்கை வைக்கப் போகிறார்? இங்கிலாந்தில் அஸ்வின் காட்டிய பங்களிப்புக்கு என்ன பிரதிபலன் கிடைக்கப் போகிறது? ஹர்பஜனைத் தவிர்த்து டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம்பெறுவாரா? அஸ்வினை மையமாகக் கொண்டு இத்தனை கேள்விகள் உள்ளன.

p26.jpg 

பார்தீவ் படேல்: 26 வயது பார்தீவ், சச்சின் போல மிக இளம் வயதில் (17) இந்திய அணிக்குள் நுழைந்தவர். மிகக் குறைந்த வயதில் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இந்திய விக்கெட் கீப்பர். முதல் டெஸ்டிலேயே இந்திய அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றியவர். ஆனால், தோனியின் வரவால் காணாமல் போன விக்கெட் கீப்பர்களில் படேலும் ஒருவர். மற்றவர்களைக் காட்டிலும் படேல் தனித்து நிற்கக் காரணம், பேட்டிங். சச்சின், சேவாக், கம்பீர் ஆடாத நிலையில், முரளி விஜய் சரியான ஃபார்மில் இல்லாத இந்தக் காலக்கட்டத்தில், அணிக்குள் நுழைந்து தன் இருப்பை ஸ்திரப்படுத்திக் கொண்டார் படேல். வழக்கமாக, இந்திய அணி வீரர்கள் பவுன்சர்களுக்குத் தொடை நடுங்குவார்கள். ஆனால், படேல், சிக்ஸருக்கு விரட்டுகிறார். எப்போது இந்திய அணியைத் தேர்வு செய்தாலும் தம் மீது ஒரு கண் இருக்கும்படி பார்த்துக் கொண்டதே இவருடைய சமீபத்திய சாதனை.

1.jpg 

ஜடேஜா: ஒருகாலத்தில் இவரை வெறுத்தவர்கள் நிறைய பேர். யூசுப் பதானுக்கு இந்திய அணி முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்த பிறகு, ஜடேஜா இந்திய அணிக்கு அவசியமில்லாமல் போனார். ஆனால், 2011 ஐ.பி.எல்.லில், தம்மை யார் என்பதை நிரூபித்தார் ஜடேஜா. தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்தின் வழக்கமான சொதப்பல்களால், இங்கிலாந்து ஒரு நாள் தொடருக்கு முதலில் ஜடேஜா தேர்வாக வில்லை. 

திடீரெனத் தேர்வாகி, அவசர அவசரமாக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட அடுத்த நாளே மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ஆடினார் ஜடேஜா. பயணக் களைப்பு, ஜெட்லாக் போன்ற நெருக்கடிகளைத் தாண்டி அட்டகாசமாக பேட்டிங், பௌலிங் செய்தார் ஜடேஜா. மேன் ஆப் தி மேட்ச் பரிசும் பெற்றார். 


இந்திய அணிக்குத் தேவைப்படுகிற ஆல்ரவுண்டர் இவர்தான் என்று கிரிக்கெட் நிபுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள். பின்னாலேயே நின்று யூசுப்பதான் மிரட்டிக் கொண்டிருந்தாலும் ஜடேஜாவின் ஃபீல்டிங்குக்கு முன்னால் பதான் நிற்கக்கூட முடியாது. 22 வயதில், இந்திய ஒருநாள் அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறார் ஜடேஜா.



No comments:

Post a Comment