Search This Blog

Sunday, April 01, 2012

விஷன் 2023!

நிஜமாகும் கனவு!


அரசியல் காரணங்களையும் தாண்டி கடந்த வாரங்களில் தமிழகம் மிகவும் பரபரப்பாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள்.

முதலாவது, 2023-ம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டம். இரண்டாவது, தமிழக பட்ஜெட். பட்ஜெட் என்பது ஆண்டுதோறும் நடக்கும் சடங்கு என்றாலும், 'விஷன் 2023’ தமிழக மக்களுக்குக் கொஞ்சம் புதிதாகவே இருந்தது.

'விஷன்’ என்ன?

முதலாவது, தமிழக அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ இத்திட்டத்தைக் கொண்டு வராமல், 'ஏசியன் டெவலப்மென்ட் வங்கி’ மற்றும் 'இக்ரா மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்’- வுடன் சேர்ந்து கொண்டு வந்திருப்பதால் மக்களிடம் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.இந்த தொலைநோக்குத் திட்டத்தின் மூலம், 2023-ம் ஆண்டு நடுத்தர மக்களின் வருட வருமானம் 4.5 லட்சமாக ஆக்குவது; அடுத்த 11 வருடங் களுக்கு ஆண்டுக்கு 11 சதவிகித வளர்ச்சி பெறுவது; அனைவருக்கும் வேலைவாய்ப்பு தருவது உள்ளிட்ட பல லட்சியங்களையும், குறிப்பிட்ட பல இலக்குகளையும் நிர்ணயித்து இருக்கிறது தமிழக அரசு.அடுத்த 11 ஆண்டுகளில் இத்திட்டங்களை நிறைவேற்ற  15 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். இதில் மின் துறைக்கு மட்டும் 4.5 லட்சம் கோடி ரூபாய். இப்படி ஒவ்வொரு துறைக்கும் என்ன செய்ய வேண்டும், அதற்கு எவ்வளவு தேவை என இதில் சொல்லப்பட்டு இருக்கிறது.


68 பக்கமுள்ள இந்த அறிக்கை மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது. எத்துறையையும் விட்டுவிடாமல் அனைத்து துறை சார்ந்தும் இந்த தொலைநோக்குத் திட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்த 11 ஆண்டுகளில் செலவழிக்கப் போகும் மொத்த தொகையில் 30 சதவிகிதம் அளவுக்கு மின் துறைக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். அடுத்துவரும் ஆண்டுகளில்  தனியார் முதலீட்டை            42 சதவிகிதமாக அதிகரிக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி தனியார் முதலீட்டை அதிகப்படுத் தினால் அந்த பிஸினஸ் நஷ்டத்தில் இயங்காது. தவிர, அந்நிறுவனத்தின்  சேவையில் பிரச்னையும் இருக்காது.
இன்னொரு வரவேற்கத்தக்க அறிவிப்பும் இதில் இருக்கிறது. தமிழக ஜி.டி.பி.-யில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை அதிகரிக்க முடிவு செய்திருக் கிறார்கள். அதாவது, தற்போதைய நிலையில் தமிழக ஜி.டி.பி.யில் உற்பத்தித் துறையின் பங்கு 16 சதவிகிதம் மட்டுமே. இதை 22 சதவிகிதமாக ஆக்கப்போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். உற்பத்தித் துறையின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்போது வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இந்த விஷனை நிச்சயம் வரவேற்கலாம். தவிர, இது முதல் நிலை அறிக்கைதான். இதற்கடுத்து ஒவ்வொரு துறை வாரியாக என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமும், இதை எப்படி செயல்படுத்த போகிறார்கள் என்பதற்கான அறிக்கையும் விரைவில் வெளியாக இருக்கிறது'இத்திட்டங்களுக்கு எப்படி நிதி திரட்ட போகிறார்கள் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள். அதாவது, தனியார் துறை முதலீடுகளை அதிகரிக்கப் போகிறார்கள். இப்போதைக்கு பப்ளிக் பிரைவேட் பாட்னர்ஷிப்பில் தனியார் 15 சதவிகிதமும், மத்திய அரசு 25 சதவிகிதமும், மாநில அரசு 60 சதவிகிதமும் முதலீடு செய்கிறார்கள்.
 
நந்த குமார் 
அகில இந்திய தொழிற்துறை சம்மேளனத்தின் (பிக்கி) எரிசக்தி குழு மெம்பெர்
 
விகடன் 

 

No comments:

Post a Comment