Search This Blog

Saturday, April 21, 2012

அருள் மழை ----------- 55

 
*வளைகுடா நாடொன்றில் நிறைய பணம் ஈட்டிய என் நண்பர் ஒருவர், காஞ்சி 
பெரியவரை வணங்கப் போயிருந்தார்.பெரும் தொகை ஒன்றை அவர்முன் 
வைத்து ஏதாவது தர்ம காரியத்துக்கு சுவாமிகள் பயன்படுத்திக் 
கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
 
 வைதீக மரபில் வந்த அவரைப் பார்த்து மகா சுவாமிகள்,"கடல் கடக்கக்கூடாது என்கிற
தர்மத்தை மீறி நீ போய் சம்பாரிச்ச காசை வச்சு என்னை தர்மம் பண்ணச் சொல்றியா..
தர்மத்தை மீறி வந்த காசை வைச்சு தர்மம் பண்ண முடியுமா?" என்று 
கடுமையான குரலில் கேட்டார்கள்.
 
 காலில் விழுந்து கதறிய நண்பர் "இப்பவே பெரியவா உத்தரவுன்னா வளைகுடா நாட்டு
உத்தியோகத்தை விட்டுடறேன்"என்றார்.சிரித்தபடி பெரியவர்,உலகப் படத்தைக் 
கொண்டுவரச் சொல்லி தரை வழியாகவே அந்த நாட்டுக்கு தொடர் வழி உண்டு 
என்று விளக்கி,"அப்படி இருந்தால் போகலாம்குத்தமில்ல!" என்று சாஸ்திர 
விளக்கம் அளித்தார்கள்.
 
 "கடல்கடந்து போறதுன்னா..முன்னெல்லாம் கப்பல்தான்..குளிக்கிறது, அனுஷ்டானம் 
பண்ரது..இதெல்லாமவிட்டுப்போயிடும்.அதனால வேண்டாம்பா..
இப்ப என்ன மூணு மணிநேரம்தான்..போ..போ..தப்பில்ல" 
என்று சொல்லிச் சிரித்தார்கள்.அதற்குப் பிறகு சொன்ன விஷயம்தான் முக்கியம்.

"தர்மம் பண்றபோது காசைக் கொடுத்துட்டு ஒதுங்கிக்கிறேன்னா, அது தர்மம் இல்ல..
நாம கொடுத்த காசில தர்மம் நடந்தாத்தான் நல்லது. அதனால் நீயே முன்ன
 தர்மம் பண்றதுதான் ஒசத்தி.. ஒரு இன்வால்வ்மென்ட் வேண்டாமோ..
காசு குடுத்துடறேன் அப்படின்னா போதுமா...நீயே செய்..நன்னா தர்மம் 
நடக்றதான்னு பாத்துப் பாத்து செய்" என்றார்கள்.அந்த நண்பர் இன்னும்
செய்கிறார்.

-- 
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர

1 comment: