Search This Blog

Wednesday, August 31, 2011

ரோசய்யா.. உஷாரய்யா! - தமிழகத்தின் புதிய ஆளுநர்

'செக்' வைக்க வருகிறாரா சிதம்பரத்தின் நண்பர்?


தோ இதோ என இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆந்திராவின் ரோசய்யாவை நியமித்து இருக்கிறார், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.  சுர்ஜித்சிங் பர்னாலாவின் ஆளுநர் பதவிக் காலம் கடந்த ஜூன் 20-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. அதற்கு முன்ன தாகவே, 'ஆளுநர் பதவியில் அமரப்போவது மார்க்ரெட் ஆல்வாதான்’, ' முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாதான்’ என பல பெயர்கள் அடிபட்டன. ஆனால்,  ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ரோசய்யா, தமிழக ஆளுநர் ஆகிவிட்டார்!

ரோசய்யா, ஆந்திர முதல்வர் ஆனது ஒரு திடீர் நிகழ்வு. முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி, 2009-ம் ஆண்டு செப்டம்பரில் விமான விபத்தில் இறந்தபோது, தற்காலிக முதல்வராகப்  பொறுப்பு ஏற்றார் ரோசய்யா.ராஜசேகர் ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிதான் அடுத்த முதல்வர் என அனைத்துத் தரப்பினரும் உறுதியாக நம்பிய நேரத்தில்... காங்கிரஸ் கட்சி மேலிடம் அதிரடி முடிவை எடுத்தது. தற்காலிக முதல்வர் ரோசய்யாவே முதல்வர் நாற்காலியில் தொடர்ந்தார்!1968-ல் சட்டமன்ற உறுப்பினர் ஆன ரோசய்யாவுக்கு, முதல்வர் ஆவதற்கு 43 ஆண்டுகள் ஆனது. ஆந்திரத்தின் முதல்வர் பதவி வகித்தவர்களில், பெரும்பாலும் ரெட்டி, நாயுடு போன்ற மெஜாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்த நிலையில், ஆர்ய வைஸ்ய சமூகத்தைச் சேர்ந்த ரோசய்யா முதல்வர் ஆனது அதிசயம்!ரோசய்யா பழுத்த காங்கிரஸ்காரர் என்றாலும், சுதந்திரா கட்சித் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான என்.ஜி.ரங்காவின் அத்யந்த சிஷ்யராகத்தான் அரசியலில் நுழைந்தார். குண்டூர் மாவட்டம் தெனாலி அருகில் உள்ள வெமுரு... சொந்த ஊர். குண்டூர் இந்துக் கல்லூரியில் படித்தவர், முதல் முறையாக 68-ல் ஆந்திர சட்ட மேலவை உறுப்பினர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 74, 80, 2009 ஆகிய ஆண்டுகளிலும் மேலவை உறுப்பினராக ஆனவர், 89, 2004-ம் ஆண்டுகளில் சட்டப் பேரவை உறுப்பினராக ஆனார். 98-ம் ஆண்டு நரசராவ் பேட்டை மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி-யாகவும் பணியாற்றினார்.

79-ல் சென்னாரெட்டி முதல்வராக இருந்தபோது, முதல் முறையாக அமைச்சரான ரோசய்யாவுக்கு, போக்கு வரத்துத் துறை தரப்பட்டது. அடுத்து வந்த அஞ்சய்யா அமைச்சரவையிலும் அதே துறை மீண்டும் வழங்கப் பட்டது. விஜய பாஸ்கர் ரெட்டி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக முக்கிய இடத்தைப் பிடித்தார். மீண்டும் 89-ல் சென்னாரெட்டி முதல்வராக வந்தபோது, ரோசய்யா நிதி அமைச்சர் ஆனார். ஜனார்த் தன் ரெட்டி, விஜயபாஸ்கர் ரெட்டி, ராஜசேகர ரெட்டி என முதல்வர்கள் மாறியபோதும், நிதித் துறைரோசய்யாவிடம்தான்! இப்படி நம்பர் டூ-வாகவே நெடுங்காலம் இருந்து, 16 முறை பட்ஜெட் சமர்ப்பித்தவர் இவர். அதில் தொடர்ந்து ஏழு முறை பட்ஜெட் சமர்ப்பித்தது, இவருக்கு வரலாற்றுப் பெருமை தந்தது. ஆனால், முதல்வர் பதவியில் ரோசய்யாவால் ஒன்றரை வருடம்கூட நீடிக்க முடியவில்லை. 2009 செப்டம் பர் 3-ம் தேதி முதல்வர் பொறுப்பேற்ற ரோசய்யா, 2010 நவம்பர் 24-ம் தேதி பதவி விலக நேர்ந்தது!

ஆந்திராவையே இரண்டாகப் பிரித்த தெலுங் கானா விவகாரம், ராஜசேகர் ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியின் அடங்க மறுக்கும் பிடிவாதம் இரண்டையும் சமாளித்து, அவரால் ஆட்சியை நகர்த்திச் செல்ல முடியவில்லை. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ரோசய் யாவுக்கு, பின்னால் திரளக்கூடிய அளவுக்கு சமூக ஆதரவு இல்லாதது, அவருக்குப் பலவீனம். உட்கட்சிப் பிரச்னைகளைக் கூட அவரால் சமாளிக்க முடியவில்லை!காங்கிரஸ் தன் வழக்கப் படி ரோசய்யாவைக் கழற்றி விட்டது. பதவி விலகியபோது மற்ற அரசியல்வாதிகளைப் போலவே, பணிச் சுமையைக் காரணமாகச் சொன்னார்.10 மாதங்களாகத் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவருக்கு, தமிழகத்தில் கிடைத்திருக்கும் ஆளுநர் பதவி, அரசியல் வாழ்க்கை யில் இரண்டாவது இன்னிங்ஸ்!அவரைத் தமிழகத்துக்குத் தேர்வு செய்ததில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு அதிகம். பர்னாலா பதவி காலியாகும் முன்பே பரிசீலிக்கப்பட்ட பெயர்களில் இவரது பெயர்தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால், மார்க்ரெட் ஆல்வா, நவீன் சாவ்லா போன்றவர்கள் ஜெ-வுக்கு நண்பர்கள் என்று சொல்லப்பட்டதால்... இறுதியாக, முதல் சுற்றில் இருந்த ரோசய்யாவின் பெயரே ஓகே ஆனது!ஆந்திராவின் 'நம்பர் டூ’ என்று அழைக்கப்படும் ரோசய்யா, தமிழக ஆளுநராக எப்படி செயல்படப் போகிறார் எனப் பார்ப்போம்!


விகடன் 

No comments:

Post a Comment